அவள் மீதான கோவத்தோடே செட்டிற்குள் நுழைந்தவனுக்கு செட்டில் இருந்த அனைவரும் திருமண வாழ்த்து சொல்ல, இதழ்களில் மென்சிரிப்புடன் வாழ்த்தை ஏற்று கொண்டவனுக்கோ உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தது சற்றுமுன் அவன் தாய் குறித்து அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி.
முதல் காட்சியே காதல் காட்சியாக ஷீட் செய்யபட, எப்போதும் முதல் டேக்கிலேயே அவர்கள் எதிர்பார்ப்பை தாண்டி நடித்து கொடுப்பவன் இன்று ஏனோ இரண்டு மூன்று டேக்குகள் வாங்க, படக்குழுவினருக்குமே அதிர்ச்சி தான்.
“என்ன ஏ.டி மிஸ்ஸஸ் சொல்லி அனுப்பியிருக்காங்களா..? இனி காதலிக்கற மாதிரி நடிக்க கூட கூடாதுன்னு” என்று சிரித்துகொண்டே கேட்ட தொண்டமானுக்கு, பதிலுக்கு புன்னகை புரிந்தானே தவிர வேறெதும் சொல்லவில்லை.
சொல்லவில்லையென்றாலும் உள்ளுக்குள் அவளைத்தான் அவன் காய்ந்து கொண்டிருந்தான். இதற்கும் காரணம் அவள்தான் என்று.
தேவ் எப்போதும் தொழிலையும், பர்சினல் வாழ்க்கையையும் போட்டு குழப்பிகொள்பவன் அல்ல.
அவனை பொறுத்தவரை தொழில் வேறு.. பர்சனல் வேறு.. அதனால் தானே இன்று அவ்வளவு நெருக்கடியிலும் அவன் ஷீட்டிற்கு ஏற்பாடு செய்ய சொன்னது கூட.
இந்த பத்து வருடகாலத்தில் எத்தனையோ பிரச்சனைகளை திறம்பட கையாண்டு இருக்கிறான்தான். ஏன் தருண் பலவகைகளில் அவனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியபோது கூட இலகுவாக அவைகளை கடந்து சென்றவனால் ஏனோ இன்று அவ்வாறு கடந்து செல்ல முடியவில்லை.
முதன் முறையாக தடுமாறினான். மனதில் ஒன்றை வைத்து கொண்டு, முகத்தில் ஒன்றை காட்ட அதிகமாகவே சிரமப்பட்டான்.
ஸ்கிரிப்டில் இருக்கும் வசனங்கள் எதுவுமே அவன் மனதில் பதியவில்லை. பதியவைக்க முடியாத அளவிற்கு அவன் உள்ளம் செந்தணலாய் கொதித்து கொண்டிருந்தது.
அவனின் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் ஒரு சேர கோவத்தை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருக்க, இதில் எங்கிருந்து அவனால் முகம் முழுவதும் காதல் தாபத்தை கொண்டு வர முடியும்..?
“ஷிட்” என்று முன்னுச்சியை கோதிவிட்டவன் கையில் இருந்த ஸ்கிரிப்பிட் பேப்பர் மீது தன் கவனத்தை செலுத்த முயற்சித்தான்.
இருந்தும் கடந்த இரண்டு நாட்களாக அவன் எதிர் கொண்ட பிரச்சனைகளும், சற்று முன் அவன் தாய் குறித்து அவள் பேசிய அவதூறு பேச்சிகள் மட்டுமே அவன் மனதிற்குள் ஓடிகொண்டிருக்க,
“பேக்கப்” என்று கத்தியவன் யாரையும் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பியும் இருந்தான். உச்சம் தொட்ட அவனை அங்கு கேள்வி கேட்பார் எவர்.
அவர்களின் திருமணம் குறித்து யாருக்கும் எந்த விதத்திலும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், நடந்து முடிந்த அவர்களின் திருமணத்தை ஊர்ஜிதப்படுத்துவதற்காகவும் அன்று மாலையே வெகு பிரம்மாண்டமாக வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யும் படி தேவ் சொல்லிவிட்டு சென்றிருக்க, தேஜி-ம் அதற்கான வேலைகளைதான் பார்த்து கொண்டிருந்தான்.
மாலை பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் அவர்களின் வரவேற்பிற்கான ஏற்பாடுகளையும், வரவேற்பிற்கு திரைப்பிரபலங்களை அழைப்பதென்று தேஜ் பிஸியாகி இருக்க, அத்ரித்தாவோ மூவருக்கும் என்ன ஆனதோ என்று யோசித்தவாறே குறுக்கும் மறுக்குமாக அந்த அறையை அளந்து கொண்டிருந்தாள்.
போனிலாவது தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் அவளிடம் போனும் இல்லை.
இங்கு உள்ள யாரிடமாவது போன் கேட்கலாம் என்றாலோ அவளுக்கு இந்த வீட்டில் யாரை தெரியும்..? அப்படியே கேட்டாலும் அவன் வேலையாட்கள் அவளுக்கு எப்படி உதவுவார்கள்..?
எப்படி அவர்களை தொடர்பு கொள்வது என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தவளுக்கு, காலையில் பூஜை அறைக்கு செல்லும் வழியில் பார்த்த லேண்ட் லைன் நினைவிற்கு வரவே, மெல்ல அறை கதவை திறந்து எட்டி பார்த்தாள் யாராவது அங்கு இருக்கிறார்களா என்று.
யாரும் இல்லாமல் போகவே பூனைபோல மெல்ல அடி மேல் அடிவைத்து லேண்ட்லைன் அருகில் சென்றாள்.
சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவள் ரீசிவரை எடுத்து காதில் வைத்து, வேகவேகமாக சோமசுந்தரத்தின் எண்ணிற்குதான் அழைத்தாள்.
இரண்டு மூன்று முறை முழு ரிங் சென்றும் போனை யாரும் எடுக்காமல் போகவே, அதுவே அவளுக்கு உள்ளுக்குள் இன்னும் பீதியை ஏற்படுத்தியது.
“கடவுளே பிளீஸ்…” என்று வேண்டிகொண்டவளின் கண்களிலிருந்து எட்டி பார்த்தது கண்ணீர்.
“அப்பா எடுங்கப்பா.. ப்ளீஸ் எடுங்கப்பா..” என்றவாறே ஒரு வித கலக்கத்துடன் யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் மீண்டும் அவரின் எண்ணிற்குதான் டயல் செய்தாள்.
மூன்றாவது ரிங்கில் அழைப்பை ஏற்ற சோமசுந்தரம் சுரமேயில்லாமல், “ஹலோ” என்க,
“ஆ.. அப்பா நான் தான் அத்ரி பேசுறேன்” என்றவளின் அழுகை அடைத்த வார்த்தைகள் அவரை சேரும் முன்பே லைனை துண்டித்திருந்தான் தேஜ்.
அவனை அங்கு அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். விழிகளில் ஒருவித கலக்கத்துடன் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க,
“என்ன பண்ணிட்டு இருக்க நீ..?” என்றான் கோவம் தெறிக்கும் குரலில் தேஜ்.
அவனுக்கு என்ன பதில் செல்வதென்று தெரியாமல் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவள், கைகளை பிசைந்தபடி மலங்க மலங்க அவனை பார்த்தாள்.
“இது மட்டும் அவன் காதுக்கு போச்சி நடக்கறதே வேற. போ.. போ உன் ரூம்-க்கு” என்று அதட்டிவனிடம்,
“ஒரே ஒரு தடவை என் அப்பா-கிட்ட பேசிக்கிறேனே பிளீஸ்” என்று இரு கரம் கூப்பி கெஞ்சி பார்த்தாள் அவன் எப்படியும் இளகுவான் என்ற நப்பாசையால்.
ஏனெனில் இங்கு வந்ததது முதல் அவன் ஒருவன் மட்டும்தானே அவளுக்காக பேசியது. அதை மனதில் வைத்துகொண்டுதான் அவனிடம் அவள் இப்போது இறைஞ்சிவது கூட.
தன் நண்பனை காயப்படுத்தியவள் மீது தேஜ்-ற்கும் உள்ளூர கோவம் இருக்கதான் செய்தது.
என்னதான் தேவ் பிடித்தமில்லாமல் அவளை திருமணம் செய்திருந்தாலும், அவன் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருக்கும் போது தேஜ்-ஆல் எப்படி அவளை கடிய முடியும்.
எப்படி பார்த்தாலும் அவள் இப்போது அவன் நண்பனின் மனைவி அல்லவா.. அந்த ஒரு காரணத்திற்காகத்தான் காலையில் அவளுக்காக தேவ்-விடம் அவன் பேசியது கூட.
அதற்காக அவள் என்ன செய்தாலும் அதை அவன் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் என்றும் அர்த்தமாகி விடாதே…
ஆள்காட்டி விரலை நீட்டி, “நோ” என்று அதிகாரமாய் சொன்னவன், மீண்டும் அவள் யாருக்கும் போன் செய்யா வண்ணம் லேண்ட் லைன் வொயரை கட் செய்துவிட்டு நகர, அவள்தான் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்
“நீங்க நினைச்சமாதிரிதான் எல்லாம் நடந்துடுச்சே.. அப்புறமும் ஏன் டார்ச்சர் பண்றீங்க..? அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்கன்னாவது சொல்லுங்க.” என்று கத்தியவளின் வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல் அவன் சென்று மறைய, அவளோ மேலும் உடைந்துதான் போனாள்.
ஷீட்டிங் ஸ்பாடிலிருந்து கிளம்பியவன் நேராக சென்றது என்னவோ அவனின் ஆடை வடிவமைப்பாளரின் அலுவலகத்திற்குதான்.
அவன் முன்னமே சொல்லியிருந்ததது போலவே அவர்கள் இருவருக்குமான வரவேற்பிற்கான ஆடைகள் தயாராகி இருக்க, அதை சரிபார்த்து கொண்டிருந்தவனின் பார்வையில் எதேச்சையாகத்தான் பட்டது அங்கு பார்வைக்கு வைக்கபட்டிருந்த அழகிய புடவைகள்.
காலையில் அவள் புடவை இல்லாமல் நின்றது வேறு அந்நேரம் அவன் நினைவிற்கு வர, அவளுக்காக சில புடவைகளை வாங்கி கொண்டுதான் வீட்டிற்கு கிளம்பினான் தேவ்.
கையில் புடவையுடன் வந்த தேவ்-ஐ பார்த்து தேஜ் மௌனமாய் சிரிக்க,
அவன் சிரிப்பை கவனித்தவனோ “எதுக்கு இந்த கேவலமான சிரிப்பு..?” என்றான் சற்றே எரிச்சல் மிகுந்த குரலில் தேவ்,
“இல்ல… அவளுக்காக புடவைலாம் வாங்கியிருக்க போல..?” என்று சிரித்துகொண்டே கேட்டவன்,
”என்ன தேவ்… மஞ்சள் கயிறு மேஜிக் செய்து போல” என்க,
“ஷட் அப் தேஜ். நான் ஒன்னும் விருப்பபட்டு வாங்கிட்டு வரல, என் டிரஸ்-அ அந்த டிராமா குயின் கூட ஷேர் பண்ண எனக்கு விருப்பமில்லை” என்றான் தேவ்-ம் கோவமாய்.
“ம்க்கும். தாலி-அ கட்டி வாழ்க்கையையே ஷேர் பண்ணிக்கிட்டான். இதுல டிரஸ்-அ ஷேர் பண்ண மாட்டானாம்..” என்று முனுமுனுத்தவனின் முனுமுனுப்பை கவனித்த தேவ், “என்ன சொன்ன..?” என்க,
“இல்ல… நான் கூட உன்ன துயிலுறியற துர்ச்சாதணன்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீ வாரி வழங்குற கண்ணன்-னு நிரூபிச்சிட்ட” என்று சமாளித்தவனிடம்,
அவன் கூறியதை கேட்டு, “ஆனா துரியோதனன் ஜெயிச்சதா வரலாறு இல்லையே.. தேவ்?” என்றவனின் கேள்விக்கு,
“அந்த வரலாற நான் உருவாக்குவேன்.” என்று ஆணித்தனமாய் சொன்னவன், “ஷேல் வீ பெட்..” என்று சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவன் வார்த்தைகளிலிருந்த சீரியசை பெரிதாக எடுத்துகொள்ளாமல் “லெட் வீ சீ..” என்றான் தேஜ்-ம் சிரித்துகொண்டே.
பின் அந்த புடவைகளை அவளிடம் கொடுக்கும்படி தேவ் சொன்ன போது,
“நான் என்ன உங்க இரண்டு பேருக்கும் மீட்யேட்டர்-ஆ..? நீதன வாங்கிட்டு வந்த.. நீயே போய் கொடு” என்று தேஜ் சொல்லி முடிக்கவில்லை…
நீ கொடுத்தால் கொடு என்பது போல் புடவையை அவன் முகத்தில் தூக்கியெறிந்திருந்தான் தேவ்.
அவனின் செயலால் அதிர்ந்த தேஜோ, “டேய்” என்க,
அடுத்து அந்த புடவைகளுக்கான விலை இரசீதையும் வீசியவன்,
“அவ அப்பன செட்டில் பண்ண சொல்லு” என்றதோடு வேக எட்டுகளுடன் தன் அறை நோக்கி செல்ல,
“ஹலோ கடவுளே.. என்ன மூட் சுவிங்-ல இவன மேனிஃபேக்சர் பண்ணீங்க..?” என்று ஆச்சரியபட்டுதான் போனான் தேஜ்.
அவன் சொல்லியிருந்தது போலவே அழகு கலை நிபுணர்கள், வரவேற்பிற்காக அவளை தயார் படுத்திகொண்டிருக்க, அந்த அறைக்குள் அப்போதுதான் அதிரடியாக நுழைந்திருந்தான் ஆதித்யதேவ்.
அவனை பார்த்த அனைவரும் அவளை விட்டு ஒதுங்கி நிற்க, இரு விரல் உயர்த்தியவனோ “பொண்ண தவிர எல்லாருக்கும் கெட் அவுட்” என்றான் அதிகாரமான குரலில்
அவன் சொன்ன அடுத்தகணமே அனைவரும் வெளியேறி இருந்தனர் அவளை தவிர,
அதிகம் ஒப்பனைகள் இல்லாமல் கைகளை பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தவளின் அருகில் சென்றவன் தன் கூரிய விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்தான் தனக்கு நிகராய் அவள் ரெடியாகி இருக்கிறாளாயென்று.
காரணம் நடக்க இருப்பது திரையுல காதல் அரசன் தேவ்-ன் வரவேற்பல்லவா.
அதில் யாரும் எந்த விதத்திலும் குறை கண்டுவிட கூடாதே.. அதற்காகத்தானே ஒவ்வொன்றையும் அவன் பார்த்து பார்த்து செய்தான். அவளின் மேக்கபிலும் கூட.
அவன் அணிந்திருந்த சில்வர் நிற ஷர்வானிக்கு ஏற்றார்போலவே இருந்தது அவள் உடுத்தியிருந்த அந்த விலையுயர்ந்த சிலவர் நிற பட்டு புடவை.
உச்சி முதல் பாதம் வரை வைரநகைகளால் ஜொலித்து கொண்டிருந்த அவளை பார்வையாலேயே அவன் அளக்க, அவனின் துளைத்தெடுக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தான் தலையை தாழ்த்தி கொண்டாள்.
அவனை விட அவள் சற்று மாநிறமாக இருந்தாலும் பௌர்ணமி நிலவை போல் ஒளிர்ந்த அவளின் வட்ட வடிவ முகத்தில், நட்சத்திரம் போல் ஜொலித்துகொண்டிருந்தது அவளின் கூர்மையான நாசியின் மீதிருந்த அந்த வைர மூக்குத்தி.
வில் போல் வளைந்திருந்த புருவத்தின் கீழே ஜீவனே இல்லாமல் கலங்கிபோய் இருந்தன பாவையவளின் அழகிய மான்விழிகள்.
செதுக்கபட்டிருந்த அவளின் அதரங்களிலோ புன்னகை சுத்தமாய் துடைக்கப்பட்டிருக்க அந்த சோகம் கூட அவள் முகத்திற்கு அத்தனை அழகாய் இருந்தது.
உச்சி முதல் பாதம் வரை அனுஅனுவாய் அவளை பார்த்தவனின் விழிகள் கழுத்தோரம் அப்பட்டமாய் தெரிந்து கொண்டிருந்த அந்த மஞ்சள் நிற மங்கள நாண் மீது படிய, அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் அவனுக்குள் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.
அதன் வெளிப்படையாக “எந்த வேஷம் போட்டாலும் உனக்கு பொறுத்தமாதான் இருக்கு டிராமா குயின்” என்று வார்த்தை என்னும் அம்பை கொண்டு அவன் அவளை தாக்க, அவளோ விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த ஆனந்தத்தின் அடுத்தபடியாய் மேலும் அவளை நெருங்கியவன்,
“குப்பையில இருந்தாலும் வைரம் வைரம் தான்” என்றான் அவள் காதில் ஜொலித்துகொண்டிருந்த வைர ஜிமிக்கியை அவன் சுண்டிவிட்டவாறு.
தன்னை குப்பையோடு ஒப்பிட்டு பேசும் அவன் வார்த்தைகள் மேலும் அவளுக்குள் சுருக்கென்றுதான் தைத்தது.
என்ன நினைத்து கொண்டான் அவன் அவளை பற்றி..? என்னவோ இதற்கு முன்னால் வரை இதையெல்லாம் அவள் பார்க்காதது போலல்லவா பேசுகிறான்.
அவனாவது பத்து வருடகாலமாகதான் இந்த மாதிரியான சுகபோகங்களையெல்லாம் அனுபவித்து வருகிறான். ஆனால் அவள் பிறந்ததே தங்க ஸ்பூனுடன் தான்.
வழமையாக அவள் அணியும் தோடு, மூக்குத்தி, கழுத்து ஜெயின் டாலர், மோதிரம் எல்லாமே அவள் வைரத்தில்தான் அணிந்திருப்பாள் அதுகூட சோமசுந்தரத்தின் கட்டாயத்தி பேரில்தான்.
என்ன தான் கார், பங்களா என்று சகல வசதிகளுடன் அவள் பிறந்திருந்தாளும், அந்த வசதி வாய்ப்புகளை எண்ணி ஒரு நாளும் அவள் கர்வம் கொண்டதும் இல்லை தன் வசதிக்கு ஏற்றார் போல் நட்பு வட்டங்களை உருவாக்கிகொண்டு பார்லர், பப், சினிமா என்று பணத்தை வாரி அவள் இறைத்ததும் இல்லை.
ஏனென்றால் அவளை பொறுத்தவரை ஆனந்தம் என்பது ஆடம்பரங்களில் இல்லை. அன்பானவர்களின் அருகாமையில் தான் இருக்கிறது என்பாள்.
ஆம் அவள் உலகம் அன்பால் மட்டுமே ஆக்கிரமிக்கபட்டிருந்தது.
ஒரு உண்மையான அன்பு கொடுக்கும் மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் கார் பங்களாவால் நிச்சயம் கொடுக்க முடியாது என்பது அவள் கருத்து.
அதனால் தானே தங்களை விட வசதி வாய்ப்பில் குறைந்தவன் என்று தெரிந்த பின்னும் இனியனை அவள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தது.
ஆனால் இது எது பற்றியும் தெரியாமல் அவள் என்னவோ திட்டம்போட்டு சூழ்ச்சி செய்து, இந்த ஆடம்பரங்களுக்கெல்லாம் ஆசைப்பட்டு அவனை திருமணம் செய்துகொண்டது போலல்லவா பேசுகின்றான்.
குப்பையோ.. கோபுரமோ வைரத்தின் இயல்பு ஜொலிப்பது மட்டுமே என்று சொல்ல துடித்த நாவை சிரமப்பட்டு அடக்கிகொண்டாள் அத்ரித்தா.
காரணம் அவளுக்கு இப்போது அவனிடமிருந்து பதில் வேண்டுமே.
அவர்கள் மூவரின் நிலை என்னவென்று அவன் வாய்திறந்து சொன்னால்தானே உண்டு. அதனாலேயே அவன் குத்தல் பேச்சிகளை சகித்துகொண்டு அமைதியாகவே நின்றாள்.
இப்போதைக்கு இது போதும் என்று அங்கிருந்து நகரமுற்பட்டவன் அப்படியே நின்றுவிட்டான்
திரும்பி அவளை மேலும் கீழுமாக ஏளனபார்வை பார்த்தவன் பதில் எதுவும் சொல்லாமல் நகர, அவன் செயல் அவளுக்கு கோவத்தைதான் ஏற்படுத்தியது.
“நீ நினைச்ச மாதிரிதான் எல்லாமே நடந்துடுச்சே. அப்புறமும் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.? அவங்க மூணு பேரையும் என்னதான் பண்ண..?” என்றாள் இப்போது ஆத்திரம் அடைக்கும் குரலில்.
“தெரிஞ்சிகணுமா..?” என்று கேட்டு அவள் அருகில் சென்றவன்,
அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி “கொன்னுட்டேன்” என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்
அழுகையும் ஆத்திரமும் அடைக்க “ஏ.டி..” என்று கத்தியவாறு அவன் சட்டையை கொத்தாக பற்றியிருந்தாள் அத்ரித்தா.
மிக நெருகத்தில் தன் ஆடையை பற்றி கொண்டிருப்பவளின் கரத்தை கேஷ்வலாக ஒரு பார்வை பார்த்தவன், பின் அவளின் அணல் பறக்கும் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த விழிகளில்தான் எத்தனை கோவம் அவன் மீது.
கோவத்திலும் அவள் விழி முழுவதும் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் உருண்டு திரண்டு அவள் கன்னத்தில் ஊர்ந்து செல்ல, அவளின் கண்ணீரை பார்த்தவனோ வெண்பற்கள் தெரிய அந்த அறை அதிர சத்தம் போட்டு சிரித்தான்.
அவன் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்னவென்று புரியாமல் புருவ முடிச்சிகளுடன் அவனையே குழப்பாய் பார்த்துகொண்டிருந்தவளின் கரங்களோ மெல்ல அவன் ஆடைமீதிருந்த தன் பிடியை விலக்கிகொள்ள,
அதுவரை அவள் விழிகளையே ஆழ்ந்து பார்த்திருந்தவன், “வலிக்குதா…? ரொம்ப வலிக்குதா…?” என்று கேட்க, அவளோ மௌனத்தையே பதிலாக தந்தாள் அவன் கேள்வி புரியாமல்.
“இப்படி தன எனக்கும் வலிச்சியிருக்கும்.” என்று சொல்லும் போதே அவன் முகம் இறுகி போனது பழைய நினைவுகளின் தாக்கத்தால்.
“கேவலம் ஒரு பூனை-அ கொன்னுட்டேன்னு என்மேல கேஸ் ஃபைல் பண்ணி என்னோட ஒட்டு மொத்த சாம்பிரஜாயத்தையும் நீ அழிச்சப்போ எனக்கும் இப்படிதாண்டி வலிச்சிது. என்ன தேடி வந்த சீட் என் கை-அ விட்டு போனப்பவும் எனக்கு இப்படித்தாண்டி வலிச்சிது” என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன் அவன்.
“அப்பன் காசு-ல உன்ன மாதிரி சொகுசா காலட்டிக்கிட்டு இருக்கறவன்னு நினைச்சியா.. இந்த தேவ்…?” என்று அவளை எரிப்பது போல பார்த்தவன்.
“இந்த இடத்துக்கு வர நான் எவ்வளோ வலிகளை கடந்து வந்து இருக்கண்ணு எனக்கு மட்டும் தான் தெரியும். என் சாம்ராஜியத்தை அசைச்சி பார்க்கணும்னு நினைச்சாலே நான் சும்மா விட்டமாட்டேன். அதுல கல் எறிஞ்ச உன்ன அவ்வளோ லேசு-ல விட்டுடுவனா..?” என்றவன்,
“ஹேய் என்ன சொன்ன… நீ..? நான் நினைச்சது நடந்துடுச்சா..? உன்ன கல்யாணம் பண்ணது உன் கூட சொகுசா வாழறதுக்கு இல்ல. உன்ன அனுஅனுவா சித்தரவதை படுத்துறதுக்கு. எனக்குள்ள வலிச்சிக்கிட்டு இருக்கற அந்த வலி-அ ஒவ்வொரு நிமிஷமும் நீ அனுபவிக்கணும். அனுபவிக்க வைப்பான் இந்த ஆதித்யதேவ்” என்று உறுமியவனை இமைக்காமல் விழிகள் விரித்து பார்த்து கொண்டிருந்தாள் அத்ரித்தா.
எல்லையற்ற அவன் கோவம் அவளையுமே நிசப்தமடைய செய்திருந்தது.