“உங்க போலீஸ் ஃபோர்ஸ் அவன கூட்டிட்டு போகட்டும்… வாங்க நாம போகலாம்” என்க,
“எங்க சார்” என்றார் அவர்.
“என் காஸ்டியூம் பார்த்துமா உங்களுக்கு புரியல..” என்று கேட்டவன், பின் முன்னுச்சியை கோதிவிட்டவாறு “கல்யாணத்துக்கு.. என்னோட கல்யாணத்துக்கு” என்று சொல்ல, அவரோ அதிர்ந்து போய் அவனை பார்த்தார்.
“இதுக்கே ஷாக்-ஆன எப்படி சார்.. பொண்ணு யாருன்னு கேட்க மாட்டீங்களா..?” என்று கேட்டு மீண்டும் மர்மமாக சிரித்தவன்,
“எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான்… பேர் கூட எதோ… தா..” என்றவன் இழுக்க,
“அத்ரித்தா..” என்று எடுத்து கொடுத்தான் தேஜ்.
அவளின் பெயரை கேட்டவருக்கோ அதிர்ச்சியில் சில கணங்கள் மூச்சே விட முடியவில்லை.
இப்படி ஒரு பேராபத்தில் அவள் சிக்க கூடாது என்றுதானே அன்று அவரும் அவளுக்கு புரியவைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். என்ன முயற்சி செய்து என்ன பலன்.
“சார்.. அவ சின்ன பொண்ணு சார்.. எதோ தெரியாம பண்ணிட்டா.. நான் அவ கிட்ட பேசி கேஸ்-அ வாபஸ் வாங்கசொல்றேன் சார்.” என்று அவனிடம் கெஞ்சிபார்த்தார் அவளை காப்பாற்றும் பொருட்டு.
ஆனால் அவனோ, “டூ லேட்” என்றான்.
“சார் இந்த ஒரே ஒரு தடவை மட்டும்..” என்று மேற்கொண்டு பேச முயன்றவரை,
“என்ன ஐ.ஜி காப்பாத்த முயற்சி பண்றீங்க போல..?” என்று கேட்ட தேஜ்,
“நீங்க அந்த பொண்ண காப்பத்துனா.. ஊட்டி-ல இருக்கற உங்க வொய்ஃப்யும், பொண்ணயும் யார் காப்பாத்துவா…? இப்ப கூட சூசைட் பாயிண்ட் மேல தான் நின்னுட்டு இருக்காங்களாம்.. எப்படி வசதி..?” என்றவனின் வார்த்தைகளை கேட்டு மேலும் அதிர்ந்து போனார் வாசு.
பயத்தில் முகத்தில் வழிந்த வியர்வைதுளிகளை துடைத்து கொண்டவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒரு பக்கம் தன் குடும்பம், இன்னொரு பக்கம் தன் நண்பனின் மகள்.. இதில் யாரை விடுவது..? யாரை காப்பாற்றுவது..? என்று இரு தலை கொல்லியாக உள்ளுக்குள் அவர் தவித்து கொண்டிருக்க,
அவர் முகத்திற்கு முன் சொடுக்கு போட்ட தேவ், “போகலாமா..?” என்று கேட்டவாறே கார் சாவியை அவரிடம் தூக்கி எறிய, அதை இலாவகமாக கேட்ச் பிடித்தவரோ வேறு வழியின்றி அவர்களுக்கு பின்னாலேயே சென்றார்.
அரவிந்தை அழைத்துகொண்டு காவலர்கள் முன் பக்கம் வழியாக செல்ல, ஐ.ஜி-யை அழைத்து கொண்டு தேவ் மற்றும் தேஜ் பின்பக்கம் வழியாக மண்டபத்திற்கு கிளம்பினர்.
இருவரும் பாந்தமாக பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள ஐ.ஜி தான் காரை ஓட்டி சென்றார்.
முகூர்த்த புடவையை வாங்கி கொண்டு அறைக்கு வந்தவளின் முகமோ பூரித்து போயிருந்தது டி.வி-யில் லைவ்-ஆக ஒளிபரப்பாகிகொண்டிருந்த தேவ்-ன் அரஸ்ட்-ஐ பார்த்து.
அவனை கைது செய்து அழைத்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தவளின் கண்களோ மெல்ல கலங்கின ஆராவை நினைத்து.
அவன் அரெஸ்ட் எதிரொலியால் அவன் இரசிகர்கள் இங்கு வந்து ஏதும் பெரிய அளவில் பிரச்சனை செய்ய கூடும் என்று டி.ஐ.ஜி-யே நேரில் வந்து சொன்னதன் பேரில் மண்டபத்திலிருந்தவர்களின் பாதுகாப்பு கருதி போலிசார் நால்வரை தவிர்த்து அனைவரையும் வெளியேற்றி கொண்டிருக்க, இது எதுவும் தெரியாமல் அறைக்குள் கிளம்பிக்கொண்டிருந்தாள் அத்ரித்தா.
கிளம்பி முடித்தவள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை கண்ணாடி முன் சென்று நின்று பார்த்தாள்.
கோல்டன் நிற ஜரி பட்டு புடவையில் தேவதை போல் அவள் இருக்க, கண்ணாடியிலிருந்து விழிகளை எடுக்காமல் தன்னையே அவள் இரசித்துகொண்டிருக்கும் போதுதான் அவளின் அறைகதவு தட்டப்பட்டது.
திரும்பி கதவை பார்த்தவள், “வரேன்” என்று சொல்லி கொண்டே நெற்றி பொட்டை அழுத்திவிட, அவள் அறைகதவோ விடாமல் தட்டபட்டது.
“யாரு விடாம தட்டுறது” என்று வாய்க்குள் முனுமுனுத்தவள்,
“ப்ச்…. அதான் வரன்னு சொன்னல்ல… அப்புறமும் ஏன் விடாம தட்டிக்கிட்டே இருக்கீங்க..?” என்று கேட்டவாறே அறை கதவை திறந்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள் எதிரில் நிற்பவனை பார்த்து.
இது எப்படி சாத்தியம் என்று இரு கைகளாலும் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் அவனை பார்த்தாள்.
அவன் தான் அவனேதான். யார் மீது கம்பிளைண்ட் கொடுத்தாலோ அவன் தான். யாரை கைது செய்துவிட்டதாக சற்றுமுன் டீ.வியில் பார்த்தாளோ அவனே தான். ஆனால் எப்படி அவன் இங்கு..? என்று யோசித்தவள் மீண்டும் டி.வி-யை பார்த்தாள்.
பின் டி.வியையும், அவனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
தன் கண்முன் இருப்பதுதான் அவன் என்றால் அங்கு அவர்கள் கைது செய்து அழைத்து செல்வது யாரை..? என்று தலையை பிய்த்துகொண்டவளுக்கு அந்த முக மூடியின் பின்னால் இருக்கும் மர்மம் என்னவென்று அப்போதுதான் விளங்கியது.
“ஹே நீ.. நீ எப்படி இங்க வந்த..?.”’ என்று ஆள்காட்டிவிரலை நீட்டி ஆக்ரோஷமாக கேட்டவள், அப்போதுதான் அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த வாசு-வை கவனித்தாள்.
“அங்கிள்” என்றவாறு வேக எட்டுகளுடன் அவரிடம் சென்றவள், “அங்கிள் நீங்க அரெஸ்ட் பண்ண வேண்டியது இவன… ஆனா அங்க தப்பா வேற யாரையோ அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இவன் தான் ஆரா-வ கொன்னவன். இவனதான் நீங்க அரெஸ்ட் பண்ணனும். அரெஸ்ட் பண்ணுங்க அங்கிள்” என்றவள் சொல்லிகொண்டிருக்கும் போதே, தேவ் வாசு-யை பார்த்து கண்ஜாடை செய்ய,
அதை புரிந்துகொண்டவரோ, மனதை கல்லாக்கிகொண்டு ரிவால்வரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சோமசுந்தரத்தின் நெற்றிபொட்டில் வைக்க, “அங்கிள்” என்று அதிர்ந்தவள், அப்போதுதான் மண்டபம் வெறுமையாக இருப்பதையும், அங்கு சூழ்ந்து நின்றுகொண்டிருந்த அவனுடைய பவுன்சர்களையும் கவனித்தாள்.
“ஏய்.. யார் நீங்கலாம்..? இங்க எதுக்காக வந்தீங்க..? வெளியில போங்க மொதல்ல.. இல்லன்னா நான் என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது” என்று வார்த்தைகளால் அவர்களை விரட்ட முயன்றவள்,
“இனியன், ஆத்மன்” என்று கத்தி அவர்களை உதவிக்கு அழைத்தாள்.
அவர்கள் இருவரும் வராமல் போகவே, இனியனை தேடிகொண்டு மணமகன் அறைக்கு விரைந்தவள், அப்போதுதான் தரையில் உழன்றுகொண்டிருந்த இனியனை கவனித்தாள்.
“இனியன்” என்று கத்தியவாறு அவன் அருகே சென்றவள், “இனியன் ஆர் யூ ஓகே. என்னாச்சி உங்களுக்கு..? அந்த ராஸ்கல் என்ன பண்ணான் உங்கள..?” என்று கேட்டு அவள் அவனை உலுக்க, பாவம் அவன் தான் அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.
அவன் உடம்பில் செலுத்தபட்டிருந்த போதை ஊசியின் விளைவால் அவன் கருவிழிகள் மேல் நோக்கி சொருக ஆரம்பிக்க, அவனை இந்த நிலையில் பார்த்தவளுக்கோ நெஞ்சம் பதறிவிட்டது.
இங்கு என்ன நடக்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை. யாரிடம் கேட்பதென்றும் அவளுக்கு தெரியவில்லை.
சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் அவளையே பார்த்திருக்க அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்கு தெரியவில்லை.
துப்பாகி முனையில் இருந்த தந்தையையும், இனியனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு இப்போது அழுகைதான் வந்தது.
அதேசமயம் இதற்கெல்லாம் காரணம் அவன் மட்டும்தான் என்பது புரிய அழுத விழிகளோடு அவனை பார்த்தாள்.
அவனோ மார்பின் குறுக்கே கைகளை கட்டியப்படி இதழ்களில் ஒருவித குறுநகையுடன் அவள் படும் அவஸ்தையை இரசித்து கொண்டிருக்க, அவனின் அந்த புன்னகை அவளுக்குள் ஆத்திரத்தைதான் ஏற்படுத்தியது.
வந்த ஆத்திரத்திற்கு, “ஹவ் டேர் யூ ஏ.டி..?” என்று கேட்டு அவன் சட்டையை அவள் கொத்தாக பற்ற, “ஏய்..” என்று சீறிக்கொண்டு வந்த தேஜ்-ஐ கண்களாலேயே அடக்கினான் தேவ்.
“நீயெல்லாம் மனுஷ ஜென்மம்தானா.. உனக்குலாம் மனசு-ல கொஞ்சம் கூட ஈரமே இல்லையே. ஏன் மிருகத்தவிட கேவலமா நடந்துக்கற.. என்ன பண்ண இனியன்-அ….? எதுக்கா என் அப்பாவையும், இனியனையும்…” என்று நிறுத்தியவள், பின் புருவ முடிச்சிகளுடன்,
“ஆத்.. ஆத்மன்.. ஆத்மன் எங்க..?” என்று சொல்லும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர்துளிகள் உருண்டோடின.
ஆம் இவ்வளவுநேரம் வரை ஆத்மன் அவள் கண்களுக்கு தென்படவேயில்லை. ‘எப்படி அவனை மறந்துபோனேன்’ என்று தன்னையே நிந்தித்து கொண்டிருந்தவளின் முகத்திற்கு முன் சொடுக்கு போட்டவன், ஆள்காட்டிவிரலால் எதையோ சுட்டி காட்ட,
அவன் சுட்டி காட்டிய இடத்தை பார்த்தவளுக்கோ இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது சுருண்டு விழுந்து கிடந்த ஆத்மனை பார்த்து.
மண்டபத்திலிருந்த அனைவரும் வெளியேற்ற படவும் தேவ் மண்டபத்தை வந்தடையவும் சரியாக இருந்தது.
அவர்கள் பிளான் படி சம்மந்தபட்ட அந்த நால்வர் மட்டுமே மண்டபத்திற்குள் இருக்க, பவுன்சர்கள் புடை சூழ மண்டபத்திற்குள் நுழைந்த தேவ்-ஐ, முதலில் எதிர்கொண்டது என்னவோ இனியன்தான்.
கோவத்தோடு அவனை நெருங்க முற்பட்டவனை அவன் பவுன்சர்கள் பிடித்துகொண்டதோடு, தேஜ்-ன் கட்டளைபடி ஊசி மூலமாக போதை மருந்தையும் அவன் உடம்பில் செலுத்தியிருந்தனர்.
இனியனை காப்பாற்ற முயன்ற ஆத்மனோ தேவ் அறைந்த அறையில் மூச்சி பேச்சி-ன்றி சுருண்டு கீழே விழுந்து விட, நடக்கும் அனைத்தையும் பார்த்த சோமசுந்தரமோ அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றுவிட்டார்.
எல்லாம் முடிந்த பின் இறுதியாகதான் அவளின் அறைகதவை அவன் தட்டியது கூட..
“ஆத்மன்” என்று கதறியவாறு அவன் அருகில் சென்றவள், அப்போதுதான் கவனித்தாள் அவன் கன்னத்தில் பதிந்திருந்த ஐந்து விரல்களையும், இதழோரத்தில் உறைந்து போயிருந்த இரத்தத்தையும்.
“ஆத்மன் எழுந்திரு ஆத்மன்.. என்ன பாரு ஆத்மன்” என்ற போதும் அவன் எழுந்திரிக்கவே இல்லை.
“வாசு அங்கிள்” என்று மீண்டும் அவரிடம் சென்றவள், “எல்லாத்தையும் பார்த்துட்டு ஏன் அங்கிள் சும்மா இருக்கீங்க.. எதாவது பண்ணுங்க அங்கிள். எதாவது பண்ணுங்க” என்றவள் சொன்னபோதும் அவர் சோமசுந்தரத்தின் நெற்றிபொட்டில் துப்பாகிமுனையை வைத்தபடியே நின்றிருக்க,
“சார் நீங்களாவது கேளுங்க சார். இந்த இராட்சன் கிட்டேந்து எங்கள காப்பாத்துங்க. என் தம்பி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான். பிளீஸ் சார்” என்று அங்கு நின்றுகொண்டிருந்த டி.ஐ.ஜி-யிடம் கூட கைகூப்பி கெஞ்சி பார்த்தாள்.
ஏன் அவன் ஒருவனை தவிர அங்கிருந்த தேஜ் மற்றும் அவனின் அடியாட்களிடம் கூட அவள் கெஞ்சி பார்த்து விட்டாள்.
அனைவரும் அவள் நிலையை வேடிக்கைதான் பார்த்தனரே தவிர, யாருமே அவளுக்கு உதவ முன் வரவில்லை.
அன்று துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலி போல, அவளும் இந்த துரியோதனன்களின் கூட்டத்தின் மத்தியில் நிராயுதபானியாக நின்றாள். அன்று அந்த பாஞ்சாலியை காப்பாற்றவாவது கண்ணன் வந்தான். ஆனால் அத்ரித்தாவிற்கோ அதற்கும் வழியில்லாமல் போனது.
அவள் படும் வேதனையை பார்த்து சோமசுந்தரம் மற்றும் வாசு-வின் கண்களும் கூட குளமாகி போயின.
ஏதும் செய்ய முடியாத அளவிற்கு அல்லவா அவர்களின் கைகளை கட்டிபோட்டிருக்கிறான் அந்த கிராதகன்.
அனைவரிடமும் உதவி கேட்டு அலைந்து திரிந்து கலைத்துபோனவள் அழுது வடிந்த முகத்துடன் இறுதியாக சென்று நின்றது என்னவோ தேவ்-ன் முன்தான்.
அவளாக செல்லவில்லை.. அவனாக அவளை வரவைத்திருந்தான்.
அழுதுவடிந்த அவள் முகத்தை உற்று நோக்கியவன் “அவ்வளோதன…. டிராமா-லா முடிஞ்சிதா டிராமா குயின்” என்று புருவம் உயர்த்தி கேட்டவனை, விழிகள் விரித்து பார்த்தாள் அத்ரித்தா.
அவள் வலி அவனுக்கு வேடிக்கையாக தெரிகிறது போலும்.
“ஏன் இப்படி அவங்கள டார்ச்சர் பண்ற.. நான்தன உன் மேல கம்பிளைண்ட் பண்ணேன். ஏன் அவங்கள தேவையில்லாம கஷ்டப்படுத்துற..?” என்று சற்று கோவமாகவே அவள் கேட்டுவிட,
அவனோ, “முடிவெடுக்கற தகுதி-அ நீ எப்பவோ இழந்துட்ட” என்றான் அழுத்தம் திருத்தமான குரலில்.
இனி அவனிடம் என்ன கேட்பதென்று அவளுக்கு தெரியவில்லை.. அவனின் எதிர்பார்ப்பும் என்னவென்று அவளுக்கு புரியவில்லை.
அவனிடம் அவள் அழுதும் பார்த்துவிட்டாள், கோவப்பட்டும் பார்த்துவிட்டாள். ஏன் கெஞ்சியும் பார்த்து விட்டாள். ஆனால் அவன்தான் எதற்குமே அசைந்து கொடுக்காமல் இருக்கிறானே…
“அவன் சின்ன பையன். அவன அடிக்க உனக்கு எப்படிதான் மனசு வந்துச்சி… அவன் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான். என்ன காயப்படுத்துறதா நினைச்சி அவங்கள தண்டிக்காத… உன் கால்-ல விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்க தயார். பிளீஸ் அவங்கள விட்டுடு” என்று அழுதுகொண்டே மீண்டும் அவள் கெஞ்ச,
“உன்ன மன்னிக்கிற மனநிலையலாம் நான் எப்பவோ கடந்துட்டேன்” என்று ஒரே வார்த்தையில் அவன் முடித்துவிட, அவளோ இப்போது மொத்தமாக உடைந்து போயிருந்தாள்.
எதற்குமே வழி விட மாட்டேன் என்று அடம்பிடிப்பவனிடம் அவளால் இனி என்ன பேச முடியும்…? என்ன கேட்க முடியும்…?
“ஏன்தான் எங்கள இப்படி சித்ரவதை பண்றியோ..” என்று தலையை பிடித்துகொண்டு அவள் அழ,
“ஏன்-னு தெரியலையா..?” என்று கேட்டு இரும்புபிடியாய் அவளின் தோள்களை அவன் அழுந்த பற்ற, தோள்பட்டையே உடைந்துவிழுந்து விடுவது போல இருந்தது அவளுக்கு.
“எனக்கு வலிக்குது விடு” என்றவாறு அவன் பிடியிலிருந்து விலக முயன்றவள் அப்படியே நின்றுவிட்டாள் அவன் பார்த்த பார்வையில்.
ஆம் அந்த பார்வையில்தான் எத்தனை குரூரம். உன்னை என்னவெல்லாம் செய்ய போகிறேன் பார் என்று சொல்வது போல இருந்தது அந்த பார்வை.
விழிகளில் ஒருவித அச்சத்துடன் அவன் விழிகளையே அவள் பார்த்திருக்க,
“ஏன்னு தெரிஞ்சிக்கோ.” என்று தன் பிடியிலிருந்து அவளுக்கு விடுதலை கொடுத்தவன்,
“இன்னைக்கு அவங்க அனுபவிக்கற சித்தரவதை, கஷ்டம் எல்லாத்துக்கும் நீ மட்டும்தான் பொறுப்பாளி.” என்று பற்களை கடித்து கொண்டு அவன் சொல்ல, அவளோ அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
நான் எப்படி பொறுப்பாளியாவேன் என்று கேட்க துடித்த நாவை சிரமபட்டு அடக்கி கொண்டாள்.
“வீடியோ அப்லோட் பண்றதுக்கு முன்னாடி இந்த இன்சிடண்ட்-அ பத்தி நீ என் கிட்ட பேசியிருக்கணும். இது நீ பண்ண முதல் தப்பு.. கேஸ் பைல் பண்றதுக்கு முன்னாடி என்னோட உயரத்த பத்தி நீ தெரிஞ்சி இருந்திருக்கணும். இது நீ பண்ண இரண்டாவது தப்பு” என்று நிறுத்தியவன்,
அவள் விழிகளை கூர்ந்து நோக்கி, “அட்லாஸ்ட் ஒன்.. இருக்கறதுலே மிகப்பெரிய தப்பு என்னோட..” என்று ஆள்காட்டி விரலால் தன்னை சுட்டி காட்டியவன்,
“இந்த தேவ்-வோட போன் கால்-அ நீ கட் பண்ணியிருக்க கூடாது” என்று சொல்ல, அன்று அவன் அழைப்பை துண்டித்ததை நினைத்து இப்போது தன்னை நொந்து கொண்டவளுக்கு, அத்தனை லேசில் அவன் இந்த பிரச்சனையை விடபோவதில்லை என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
அவனிடம் வாதிடுவதும், கெஞ்சிவதும் இனி வீண் என்று தோன்றவே,
“நான் என்ன பண்ணனும் ஏ.டி” என்று அவனிடமே பிரச்சனைக்கான முடிவை கேட்டுவிட்டாள் அவள்.
இந்த வார்த்தை அவள் வாயிலிருந்து வர வேண்டும் என்பதற்காகத்தானே அவனும் இவ்வளவு நேரம் காத்திருந்தான்.
அவன் காத்திருப்பு வீண்போகாமல் அவளே கேட்டு விட, அவளை ஆழ்ந்து பார்த்தவாறே,
“என்ன கல்யாணம் பண்ணிக்கனும்” என்றவன் சொல்லி முடித்ததுதான் தாமதம்,
“நோ” என்று கத்தியே விட்டாள் அத்ரித்தா.
“உனக்கு நான் ஆப்ஷன் தரல.. யூ மஸ்ட் ஒபே மை ஆர்டர் டிராமா குயின்.” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
“உனக்கு நான் இரண்டு நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள நீயா வந்து மணமேடையில உட்காரணும். இல்ல மூணாவது நிமிஷம் உன் அப்பன் தலை சிதறிடும்.” என்றவன்,
“என்ன ஐ.ஜி ஒரே புல்லட்-ல சிதறிடும் தன..?” என்று அவரிடம் கேட்டுவிட்டு, மீண்டும் அவள்புறம் திரும்பியவன்,
“யுவர் டைம் ஸ்டார்ட் நவ்” என்றதோடு “சீக்கரம் வந்து சேரு” என்று சொல்லிகொண்டே மணமேடையை நோக்கி சென்றவனையே பார்த்து கொண்டிருந்தாள் அத்ரித்தா.
பார்த்துகொண்டிருப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்..?
தன் பக்கம் உள்ள நியாயத்தை கேட்க கூட தயாராக இல்லாத ஒருவனிடம் இனி பேசி புரியவைக்க என்ன இருக்கிறது..?
இனியும் அழுது புலம்புவதெல்லாம் வீண் என்றுதான் தோன்றியது அவளுக்கு.
இரக்கத்தை மனிதனிடம் எதிர்ப்பார்க்கலாம். அவன்தான் இராட்சனுக்கெல்லாம் இரட்சனாயிற்றே.. அவனிடம் இரகத்தை எதிர்ப்பார்த்தது தன் தவறுதான் என்று இப்போது அவள் மூளைக்கு உறைத்தது.
அதேசமயம் தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக மூன்று உயிர்களை பலியிட அவள் விரும்பவில்லை. அவள் அதை விரும்பவும் மாட்டாள்.
இனி நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவள், உடைந்திருந்த தன்னை ஒன்று திரட்டி எழுந்து நின்றாள்.
இறுதியாக ஒரு முறை மூவரையும் பார்த்தாள்.
சோமசுந்தரம் வேண்டாம் என்பது போல அவளை பார்த்து தலையை மட்டும் அசைக்க, அவளோ மனதை இரும்பாக்கி கொண்டு மண மேடையை நோக்கி முன்னேறினாள்.
தேஜ் கொடுத்த மாலையை வாங்கி கழுத்தில் போட்டுகொண்டு அவனருகில் சென்று அவள் அமர, நினைத்ததை சாதித்து விட்ட கர்வபுன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்து.
திருமணத்தை நடத்த அழைத்து வரப்பட்ட ஐய்யரோ, திரு திருவென விழித்தபடியே அமர்ந்திருக்க,
அவரை பார்த்து “என்ன ஐய்யரே மந்திரம் மறந்து போச்சா..?” என்றான் நக்கலாய் தேவ்.
“இல்ல சார். முகூர்த்த நேரம் முடிஞ்சி எமகண்டம் ஸ்டார்ட் ஆயிட்து….” என்றவர் இழுக்க,
“சந்தோஷமா வாழப்போறவங்களுக்குதான் முகூர்த்த நேரம்.. அனுதினம் சாவபோறவளுக்கு எமகண்டம்தான் சரியான நேரம்” என்று அழுத்தம் திருத்தமாக அவன் சொல்ல, அதன் பின் திருமண சடங்குகளை ஆரம்பித்தார் அவர்.
என்னதான் பழிவாங்குவதற்காக அவளை அவன் திருமணம் செய்தாலும், அதில் அவன் வாழ்க்கையும் சேர்ந்துதானே பாதிக்கப்படும் என்பதால்,
அவன் நலனை கருத்தில் கொண்ட தேஜ் இந்த திருமணம் தேவைதானா என்று அவனிடமே கேட்டபோது, அவனோ இந்த திருமணம் தேவைதான் என்றான் பிடிவாதமாய்.
நிகழ்காலம்
“எதுக்கும்..” என்று ஆரம்பித்த தேஜ்-ஐ பார்வையாலே தடுத்தவன், “ஒன்ஸ் நான் முடிவு பண்ணா முடிவுபண்ணதுதான். காட் இட்” என்று கர்ஜிக்க, அதன் பின் தேஜ் வாயை திறக்கவேயில்லை.
பத்துவருடகாலமாக பக்கத்தில் இருந்து பார்த்திருந்தவனுக்கு தெரியாதா அவன் பிடிவாதத்தை பற்றி.
“என்ன ஐய்யரே இன்னும் எவ்வளோ நேரம்..?” என்று தேவ் வார்த்தைகளில் கடுமை காட்ட,
“இதோ மாங்கல்யத்தை பெரியவாகிட்ட காட்டி ஆசிர்வாதம் வாங்கிட்டா முடிஞ்சிது” என்றவாறே மங்கள நாண் அடங்கிய தாம்பூலத்தட்டை ஆசீர்வாதம் வாங்குவதற்காக தேஜிடன் அவர் கொடுக்க,
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்றவனோ, மங்கள நாணை கையில் எடுத்து அவள்புறம் திரும்ப, அத்ரித்தாவிற்கோ இதயமே நின்றுவிடுவது போல இருந்தது.
முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் ஒரு ஜடம் போல அமர்ந்திருந்தவளின் கழுத்தருகே மங்களநாணை கொண்டு சென்றவன், அதை அவள் கழுத்தில் கட்டவும் ஆரம்பித்திருந்தான்.
“இது உன் அப்பனுக்காக” என்றவாறே முதல் முடிச்சை போட்டவன், “இது உன் தம்பிக்காக” என்று இரண்டாவது முடிச்சை போட்டுவிட்டு, அவள் விழிகளை அவன் ஆழ்ந்து நோக்க, அவளுமே கலங்கிய விழிகளுடன் அவனையேதான் பார்த்து கொண்டிருந்தாள்.
“அட் லாஸ்ட் ஒன்..” என்று இழுத்தவன், “உன்னோட உயிர் காதலுக்காக” என்றவாறே மூன்றாவது முடிச்சியையும் போட, கலங்கிய அவள் விழிகளிலிருந்து உதிர்ந்த கண்ணீரோ அந்த பொன் தாலியில் பட்டு தெறித்தது.
“ரிமம்பர் டிஸ்… அந்த மூணு பேரோட உயிரும் உன் கையிலதான் இருக்கு-ன்றத, இந்த மூணு முடிச்சி ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு நியாபக படுத்திக்கிட்டே இருக்கணும்.” என்று நிறுத்தியவன்,