அத்தியாயம் – 32
ஜெனி வீட்டு வேலை செய்து அனுவைப் பார்த்துக் கொண்டாள். அனுவிற்கு ஒன்பது மாதங்கள் ஆகும் பொழுது மிகவும் சிறிய அளவில் வளைகாப்பு ஒன்றையும் நடத்தினால். அனுவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால். இரட்டை குழந்தைகள் என்பதாலும் அனுவின் உடம்பில் போதிய அளவு சத்து இல்லாததாலும் பிரசவம் மிகவும் கடினமாகவே இருந்தது.
அனு மிகவும் கஷ்டப்பட்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள் ஜெனியும் அவர்களை அன்புடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டார். தினமும் நான்கு வீடுகளில் வேலை செய்துவிட்டு வந்து அனுவையும் குழந்தைகளையும் ஜெனி பார்த்துக் கொண்டாள் .
ஜெனி அனுவிற்காகவும் குழந்தைகளுக்காகவும் இவ்வளவு கஷ்டப்படுவது அனுவிற்கு வேதனை அளித்தது அதை ஜெனி இடமும் கூறினாள். என் உடன் பிறந்த தங்கையாக நினைத்துதான் அனைத்தையும் செய்கிறேன் இதில் எனக்கு சந்தோஷம் தான் என்றாள் ஜெனி.
குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு நாள் ஜெனி வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது காலில் வெந்நீர் விழுந்து தீக்காயம் ஆகி ஜெனியால் நடக்க முடியாமல் போய் விட்டது. ஜெனியின் காயம் ஆறும் வரை வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அனு வீட்டு வேலைகளை செய்ய சென்றாள்.
அனு இரண்டு வீடுகளில் ஹோம் நர்சாக வேலை செய்து கொண்டிருந்தாள். அங்கு நடக்க முடியாமல் இருக்கும் முதியவர்களை குளிக்க வைப்பது, கழிவறை செல்ல உதவுவது, அவர்களுடைய ஆடைகளை துவைப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள் அனு வேலை செய்யும் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தான் அனுவின் டுவின் பிரதர் பீட்டர். முதலில் அனுவை பார்த்ததும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.அதன்பின் அனுவை பார்த்து “நீ அனு தான “என்றான்.
“ஆமா பிட்டர் அண்ணா “என்றாள் அனு .பிட்டர் அதிர்ச்சியுடன்
“அனுமா நீ இங்க என்னடா பண்ணுற, உனக்கு என்ன ஆச்சு என் இப்படி மெலிஞ்சி போய் இருக்குற ” என்றான்.
“அனு இங்க தான் பிட்டர் ஹோம் நர்ஸா வேலை பாக்குற”என்றார் அந்த வீட்டின் உரிமையாளர்.
“என்ன இங்க வேலை பாக்குறாளா, MCA படிச்சா நீ எதுக்கு விட்டு வேலை செய்யுற, என்ன தான் ஆச்சி உனக்கு சொல்லு “என்றான் ஆதங்கத்துடன்.
அனு கதிரவனை காதலித்து திருமணம் செய்ததில் தொடங்கி, மும்பை வந்தது, ஜெனியை சந்தித்தது, இரட்டைக் குழந்தை பிறந்தது வரை கூறி முடித்தாள்.
அனுவின் வாழ்க்கையில் நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டான் பிட்டர். அனுவுடன் அவள் விட்டிற்கு சென்று ஜெனியையும் குழந்தைகளையும் பார்த்தான்.பின்
“அனு நீ MCA படிச்சிருக்கல்ல அதுக்கு தகுந்த வேலை பார்க்க வேண்டியது தான “என்றான் பிட்டர்.
“அண்ணா என்கிட்ட செர்டிபிகேட் எதும் இல்லனா அது இல்லாம நான் எப்படி வேலைக்கு போக முடியும் “
“நான் உன் வீட்டுல பேசி செர்டிபிகேட் வாங்கி தரவா “
“இல்ல அண்ணா நீங்க என் வீட்டுக்கு பேசுனா நான் எங்க இருக்கேனு எல்லாருக்கும் தெரிஞ்சிரும் வேண்டாம் அண்ணா, என்னால என் அப்பா அம்மா பட்ட கஷ்டம் போதும் “
அனு எவ்வளவோ மறுத்தும் கேக்காமல் பிட்டர், அனுவின் வீட்டிற்கு போன் செய்தான், சாந்தி தான் பேசினார் பிட்டர் முதலில் அவனை அறிமுக படுத்திக் கொண்டு, அனு மும்பையில் இருப்பதாகவும் வேலை இல்லாமல் கஷ்ட படுவதாகவும் கூறினான், அனுவின் குழந்தைகளை பற்றி பிட்டர் அவர்களிடம் சொல்ல வில்லை.
அனு இருக்கும் இடத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்றும், அனுவின் செர்டிபிகேட்களை ஒரு முகவரியை கூறி அதற்கு அனுப்பி வைக்குமாறு கூறினான்.
“தம்பி நீங்க சொன்ன படி எல்லாத்தையும் நான் அனுப்பி வைக்குறேன், என் பொண்ண பத்திரமா பாத்துக் கோங்கபா,நாங்க அங்க வந்து ஒரே ஒரு தடவை அனுவை பார்த்துட்டு வந்துறோம்பா ” என்றார் சாந்தி.
“வேண்டாம் மா நீங்க இங்க வர்றது கதிரவனுக்கு தெரிஞ்ச அனுவுக்கு தான்மா பிரச்சனை ஆகும் வேண்டாம் “
“சரிபா நாங்க வரல. நீ அவளை பார்த்துக்கோபா, அவ எங்க இருந்தாலும் நல்ல இருக்கனும் அது போதும் எங்களுக்கு “என்றார் சாந்தி.
பிட்டர் அனுவிற்கு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி குடுத்தான்.மூன்று மாதங்கள் அங்கே வேலைக்கு சென்றால். அதன் பின் லண்டனுக்கு அவனுடன் அழைத்து சென்று விட்டான்.
அனு, ஜெனி, கவின், கிரிஷ் அனைவரும் பிட்டர், ஸ்டெல்லா, லயா இவர்களுடன் சந்தோசமாகவும், பாதுகாப்பகவும் இருந்தனர்.
அனு பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க ” அம்மா அம்மா “என்று அழைத்து நிகழ் உலகிற்கு அழைத்து வந்தான் செல்லக்குட்டி கிரிஷ்.
“என்ன கிரிஷ் சொல்லு உனக்கு என்ன வேணும் பசிக்குதா பிஸ்கட் தரவா “என்றாள் அனுரஞ்சனி.
“பிஸ்கட் நோ,சூசு போகணும் ” என்றான் மழலை மொழியில்.
அனு கிரிஷ் ரெஸ்ட்ரூம் அழைத்து சென்றாள். அப்பொழுது அருகில் நின்றிருந்த ஒருவரை அனு தெரியாமல் இடித்து விட்டாள் “sorry”
என்று கூறி அவரை நிமிந்து பார்த்தாள். இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டாள் “அகில் அத்தான் “என்று கூறி அகில் கைகளை பிடித்துக் கொண்டாள்.
“அனு எப்படிமா இருக்குற எங்க இருந்த இவளோ நாளா”என்றான் அகில்.
“நான் நல்ல இருக்கேன் அத்தான், நீங்க எப்படி இருக்கீங்க “என்று கூறி கொண்டிருக்கும் போதே “அம்மா வா போலாம் “என்றான் கிரிஷ்.
“அனு இந்த குட்டிபையன் “என்றான் கேள்வியாக.
“என் பையன் தான் அத்தான் கிரிஷ் கிருஷ்ணா “என்றாள்.
“அம்மா நோ கிருஷ்ணா, கிரிஷ் சொல்லு “என்றான்.
அகில் சிரித்துக் கொண்டே “ஹாய் கிரிஷ் ” என்றான்.
அனு அகிலனிடம் “அத்தான் இவங்க ஜெனி அக்கா நான் வீட்டை விட்டு போய் தனியா கஷ்டப்பட்டப்போ இவங்க தான் என்னையும் என் பசங்களையும் விட்டுவேலைக்கு போய் பாத்துகிட்டாங்க, அப்பறம் இவன் கவின் என் பையன் “
“ரொம்ப நன்றிமா நீங்க அனுக்கு பண்ண உதவிய நான் எனக்கும் மறக்கமாட்டேன் ” என்று கூறி கையெடுத்து வணங்கினான்.
பின் உறங்கிக் கொண்டிருந்த கவின் தலையை வருடி கொடுத்தான்.
“ட்வின்ஸா பசங்க உன்ன மாதிரியே இருக்காங்க குட்டிமா “என்றான் மகிழ்ச்சியாக.
“uncle என் அம்மா பேரு அனு அனுரஞ்சனி, குட்டிமா இல்ல புரிஞ்சாத ” என்றான் கிரிஷ்.
(பாக்க தான் அனு மாதிரி இருக்குறான், பேசு குணம் எல்லாம் அப்படியே கதிரவனை உறிச்சி வச்சி பொறந்துருக்கான் )என்று மனதிற்குள் நினைத்து கொண்டு கிரிஷிடம் ” உன் அம்மா பேரு அனுன்னு எனக்கு தெரியும், ஆன எனக்கு எப்பவும் உன் அம்மா குட்டிமா தான் “
“அப்பறம் நீ என்ன அங்கிளாம் கூப்பிடாத அகில்னே கூப்புடு ஓகே வா, இனிமேல் நீயும் நானும் பிரெண்ட்ஸ் சரியா “என்று கை நிட்டினான்,
“ஓகே அகில் “என்று கூறி கை குலுக்கினான்.
அகில் அவனுடைய சிட்டை மாற்றி அனுவின் அருகில் இருந்த சிட்டில் வந்து அமர்ந்துக் கொண்டான். இருவரும் பேசி கொண்டு இருந்தனர். “அனு நீ எங்க இருந்த இத்தனை வருஷம் “
அவள் லண்டன்ல இருந்ததாகவும் அங்கு அவள் வேலை பார்த்த கம்பெனி பேரையும்,அவள் இருந்த நகரத்தின் பேரையும் கூறினாள்.
“என்ன அனு சொல்லுற நானும் இரண்டு வருசமா அங்க தான் இருக்கேன் “என்றான் பின் அவன் வேலை செய்த கம்பெனி பேரையும் கூறினான்.
“அத்தான் உங்க கம்பெனில தான் என்னோட பிட்டர் அண்ணா ஒர்க் பண்ணுறாங்க “என்றாள்.
“பிட்டர் என்னோட பிரண்ட் தான் நான் நிறைய டைம் பிட்டர் வீட்டுக்கு வந்துருக்கேன்,அப்போ லயா கூட விளையாடிட்டு இருந்த பசங்க உன் பசங்க தானா, பிட்டர் அடிக்கடி சிஸ்டர் சிஸ்டர் சொல்லுவான் அது நீ தானா “என்றான்
“பக்கத்துலயே இருந்தும் பாக்காமேலே போய்ட்டும் “என்றாள் அனு.
“நான் உன்ன பாத்துட்டே தான் குட்டிமா இருந்தேன் “என்றான் அகில் மனதிற்குள்ளேயே.
(அனு வீட்டை விட்டு சென்ற பின் அகிலனும் ஜெர்மனிக்கு சென்று விட்டான், ஜெர்மனியில் அவனுடைய விசா முடிந்த பின் தான் இந்தியா வந்தான். ஒரு நாள் அனுவை பற்றி பேசும் போது பிட்டர் போன் செய்ததையும், செர்டிபிகேட் அனுப்பி வைத்ததை பற்றியும் கூறினார் சாந்தி, பிட்டரின் போன் நம்பர் மற்றும் செர்டிபிகேட் அனுப்பிய முகவரிக்கு சென்று அனுவை பற்றி விசாரிக்க அவள் லண்டனில் இருப்பதை தெரிந்துக்கொண்டு.
பின் பிட்டரின் கம்பெனிக்கு வேலைக்கு சென்றான் பிட்டருடன் பழகி அனுவை பற்றி அறிந்துக் கொண்டான். தினமும் வேலைக்கு செல்லும் முன் அனுவை மறைந்து இருந்து பார்த்துவிட்டு தான் செல்வான்.
அனுவிடம் சென்று பேசினால் அவள் கோவம் கொண்டு இங்கிருந்து வேறு எங்காவது சென்று விடுவாளோ என்று பயந்து அனுவிடம் பேச முயற்சிப்பதை விட்டு விட்டான்.
அகிலனுக்கு இப்போ அனுவின் மீது பாசம் மட்டுமே இருக்கிறது, அனுவிற்கு பாதுகாப்பாக துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். இருந்தும் அனுவை தவிர வேறு பெண்ணை மணக்க முடியாமல் இப்பொழுது வரை தனியாக தான் இருக்கிறான்.)
வெகுநேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அனுவின் குடும்பத்தினரை பற்றியும் அனுஸ்ரீ பற்றியும் அகில் கூறிக் கொண்டிருந்தான்.
“அத்தான் என் அத்தான் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கமா இருக்கீங்க “என்றாள்.
“கல்யாணம் பண்ணிக்க தோணலடா”
“நீங்க இன்னும் என்ன மறக்கலையா அத்தான் “என்றாள் சிறு தயக்கத்துடன்.
“நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே உன்னையே நெனச்சிட்டு இருந்துட்டேனா திடிர்னு மறக்க சொன்ன முடியலடா” என்றான் வேதனையுடன்.
“சாரி அத்தான், எனக்கு உங்க மேல அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்ல அத்தான்,அத்தான் நான் உங்கள அத்தை பையனா மட்டும் பாக்கல, உங்கள நல்ல நண்பனா மட்டும் தான் பாத்தேன்”
“அன்னைக்கு என்ன காப்பாத்த நீங்க மாமா கிட்ட அடி வாங்குனீங்கல, ஒரு அம்மா கோழி குஞ்சுகோழிகளை ரெக்கைகுள்ள வச்சி பாதுகாக்குற மாதிரி என்ன உங்க முதுகு பின்னாடி வச்சி பாதுகாத்திங்க அன்னைக்கு நான் உங்கள என் அப்பாவா தான் பார்த்தேன் அத்தான்”
“உங்க கூட இருக்குறப்போல்லாம் என் அப்பா கூட இருக்குற மாதிரி பாதுகாப்பா இருக்கும்”என்று கூறி அழுதாள்.
“அனுமா அழாதடா ப்ளீஸ், உன் மனசுல என்ன இருக்குனு தெரியாம ஆசை பட்டது என் தப்பு தான் சாரிமா”
“அத்தான் என்னால தான் உங்க லைப் இப்படி ஆகிருச்சு, என்னால தான் நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கீங்க “
“அப்படிலாம் எதும் இல்லடா,இப்போ என்ன உனக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிரனும் அவளோ தான, உனக்காக உன் மன நிம்மதிக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீயே எனக்கு ஒரு பொண்ண பாரு, நீ சொல்லுற பொண்ணையே நான் காட்டுகிறேன் சரியா “என்றான்.
அனுவும் மகிழ்ச்சியுடன் சரி என்று தலை அசைத்தால்.
“அனு மா நீ நேரா நம்ம வீட்டுக்கு தான வர “
“இல்ல அத்தான், நான் ஜெனி அக்கா கூட அவங்க வீட்டுக்கு போறேன், அங்க அக்கா ஓட அம்மா கூட தான் தாங்க போறோம் “
“ஏன்டா நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தான, உன்ன பார்த்த அத்தை மாமா பாட்டி எல்லாம் ரொம்ப சந்தோசப்படுவாங்க ப்ளீஸ் வாடா “
“என்னால நீங்க எல்லாம் பட்ட கஷ்டமும் அவமானமும் போதும், என்ன வற்புறுத்தாதிங்க, அத்தான் என்ன பார்த்ததை கூட நீங்க வீட்டுல சொல்லாதீங்க “
“சரி நான் சொல்லல, இந்த ஜெனி பொண்ணு யாருடா அவளை எப்படி நீ பார்த்த, அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா “என்றான்.
அனு ஜெனியை சந்தித்தை பற்றியும் ஜெனி வாழ்கையில் நடந்த சோகத்தை பற்றியும் கூறினாள், இன்னைக்கு நான் உங்க முன்னாடி உயிரோட இருக்கேன்னா அது ஜெனி அக்கானால மட்டும் தான் அத்தான் என்றாள் அனு.
ஜெனியை பற்றி தெரிந்த பின் அகிலனுக்கு அவள் மீது மரியாதையும், பரிவும் ஏற்பட்டது.
விமானம் மதுரையை வந்தடைத்தது. குழந்தைகள் இருவரும் நன்கு தூங்கிவிட்டனர். அனு கிருஷையும், அகிலன் கவினையும் தூக்கிக் கொண்டு வந்தனர் ஜெனி லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு வந்தார்.
அனு அகிலன் குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு வருவதை பார்த்து அனுவிற்கு வேறு திருமணம் ஆகிவிட்டது என்று ஹரி நினைத்துக் கொண்டான் அத்துடன் அந்நால்வரையும் சேர்த்து குடும்பமாக ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டான்.
அனு ஜெனி குழந்தைகளுடன் ஒரு காரில் ஜெனியின் வீட்டிற்கு சென்றனர், அகிலன் தனியாக ஒரு காரில் பள்ளப்பட்டிக்கு சென்றான். ஹரி அனுவின் காரை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் அப்பொழுது எதிர்பாராத விதமாக ஹரிக்கு விபத்து நடந்து தலையில் அடிபட்டு அந்த இடத்திலே மயங்கி விழுந்தான்.
ஹரியால் அனுவை பின் தொடர முடியாமல் போனது, அனு தங்கி இருக்கும் இடம் கதிரவனுக்கு தெரியாமலே போய்விட்டது.
.