அத்தியாயம் – 33
அனு ஜெனி இருவரும் குழந்தைகளுடன் ஜெனியின் அம்மா பாக்கியத்தின் வீட்டிற்கு சென்றனர். ஜெனி அவளது அம்மாவை பார்த்ததும் ஓடி சென்று கட்டி பிடித்தார்.
“என் தங்கமே உன்ன பார்த்து எத்தனை வருசம் ஆச்சு டி , நான் சாகுறதுக்குள்ள உன்ன ஒரு தடவையாது பார்த்துரனும்னு டெய்லி கடவுள் கிட்ட வேண்டிட்டே இருப்பேன். என் வேண்டுதல் வீண் போகல என் பொண்ண என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டாரு ” என்று கூறி அழுதார்.
பாக்கியாப் பாட்டி என்று கத்திக் கொண்டே சிறுவர்கள் இருவரும் பாக்கியத்தின் காலைக் கட்டிக் கொண்டனர்.பாக்கியமும் அவர்களை அனுப்புடன் அனைத்துக் கொண்டார்.
இரவு தூங்கும் போது குழந்தைகள் இருவரும் அனுவுடன் தூங்கி விட்டனர். ஜெனியும் பாக்கியமும் இரவு முழுவதும் தூங்காமல் பழைய கதைகளை பேசிக் கொண்டே இருந்தனர் பின் ஜெனி அவளது அன்னையை கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்கிவிட்டால்.
கதிரவன் நள்ளிரவில் மதுரைக்கு வந்து சேர்ந்தான். வெளிய வந்ததும் ஹரிக்கு போன் செய்தான், அது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு இருந்தது. பலமுறை முயன்றும் ஹரியிடம் பேச முடியாமல் போகவே மதுரையில் உள்ள தான் வீட்டிற்கு சென்று விட்டான்.கண் எதிரில் அனு இருந்தும் அவளிடம் பேச முடியவில்லை என்று மிகவும் வேதனை அடைந்தான். காலையில் எப்படியாவது அனு இருக்கும் இடம் அறிந்து அவளை சென்று பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தூங்கி விட்டான்.
காலையில் எழுந்ததும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஜெனியும் அனுவும் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அழைப்பு மணியின் சத்தம் வந்தது.
இவ்வளவு காலையில யாரு வந்துருப்பாங்க என்று கூறிக் கொண்டே போய் கதவை திறந்தார் பாக்கியம். வாசலில் ராமசந்திரன் தான் மொத்த குடும்பத்துடன் நின்று இருந்தார். பாக்கியம் அவர்களை உள்ளே அழைத்து வந்தார்.
அனு ராமசந்திரனை பார்த்தும் “அப்பா “என்று கத்திக் கொண்டே ஓடி சென்று அவரை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள். ராமசந்திரனின் கண்களும் கலங்கி விட்டது.
“அனுமா எப்படி டா இருக்கா, உன்ன பாத்து எத்தனை வருஷம் ஆச்சி, ஏன்டா இந்த அப்பாவை பார்க்க வரல”என்று கேட்டார். அனு பதில் கூறும் முன்னர் “hello oldmen who are u, எதுக்கு என் அம்மா வா அழ வைக்குறிங்க ” என்றான் கிரிஷ்.
அங்கிருந்த அனைவரும் கிரிஷ் கவினை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். “இவங்க இரண்டு பேரும் நம்ம அனுவோட பசங்க, அனு வீட்டை விட்டு போகும் போது அனு இரண்டு மாதம் கர்ப்பமா இருந்தா “என்றான் அகில்.
“கிரிஷ் குட்டி இவரு தான் உன் தாத்தா, இவங்க உன் பாட்டி,இவங்க உன் பெரியபாட்டி இவங்கல்லாம் உன்னோட மாமா, அத்தை,சித்தி”.
“அப்பறம் இவ அனு உங்க மாமா பொண்ணு “என்றான் அகில்.
“அகில் என் அம்மா பேருதான் அனு, நீங்க என் அந்த பொண்ண அனு சொல்லுறீங்க “என்றான் கிரிஷ்.
“உன் அம்மா நேம் தான் இவளுக்கும் வச்சிருக்காங்க “என்றான் அகில்.
அனு சாந்தி, வள்ளிப்பாட்டி, கார்த்திக், கீதா, சுஜி என்று அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தாள். அந்த வீட்டில் இருந்த அனைவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
வள்ளிப்பாட்டி கவின் கிரிஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார்.”அனு குழந்தைக்கு என்ன பேருடி வச்சிருக்கிற கிரிசுனு வாய்க்குள்ளயே நுழைய மாட்டேங்கிது “
“பாட்டி அவன் பேரு கிருஷ்ணா, நாங்க செல்லமா கிரிஷ்னு கூப்புடுவோம் ” என்றாள் அனு.
“கிருஷ்ணா குட்டி, கவின் குட்டி இங்க வாங்க, நான் தான் உங்களோட பெரிய பாட்டி “என்றார் வள்ளியம்மாள்.
“old lady don’t call me Krishna ” என்றான் கிரிஷ் கோவமாக.
கார்த்தி இவன் என்னடா சொல்லுறான் “பாட்டி இவனை கிருஷ்ணானு கூப்பிட கூடாதாம்”என்றான் கார்த்திக்.
“இவன் என்னடா இப்படி பேசுறான் அப்படியே அவன் அப்பனை மாதிரியே பேசுறான் “என்றான் கார்த்திக், நானும் இதையே தாண்ட நினைச்சேன்.
“கவின் நம்ம அனு மாதிரியே உருவம் குணம் எல்லாம், கிரிஷ் உருவம் மட்டும் அனு மாதிரி குணம் புள்ள கதிரவன் தான், ஒரு கதிரவனையே சமாளிக்க முடியல இப்போ இவன் வேற “என்று கூறி சிரித்தான் அகில்.
அன்று மதியம் வரை அனைவரும் ஜெனியின் வீட்டில் தான் இருந்தனர். ராமசந்திரன் அனுவை தன்னுடன் வருமாறு அழைத்தார். அனு செல்ல மறுத்துவிட்டாள்.
“அனுமா இரண்டு நாள் மட்டுமாவது வந்து எங்க கூட இருடா “என்றார் ராமசந்திரன்.
அனு ஜெனியை பார்க்க “இரண்டு நாள் தான அனு போய்ட்டுவா அப்பா தான் கூப்புடுறாங்களா போடா ” என்றாள் ஜெனி.
“நீயும் எங்க கூட வாமா “
“இல்ல அப்பா நான் இப்போ தான வந்திருக்கேன் எனக்கும் அம்மா கூட இருக்கனுன்னு ஆசையா இருக்கு ” என்றாள்.
“இப்போ வரலைனா பரவாயில்லை, சுஜி கல்யாணத்துக்கு நீ அம்மாவ கூட்டிடு நாலுநாளைக்கு முன்னாடியே வந்துரனும் சரியா “
“கண்டிப்பா வரேன்பா “என்றாள் ஜெனி.
சற்று நேரத்தில் அனு, கவின், கிரிஷ் அவர்களுடன் கிளம்பி பள்ளப்பட்டி சென்றனர்.
காலையில் இருந்து கதிர் மிகவும் டென்ஷனாக இருந்தான்,ஹரிக்கு கால் பண்ண கால் போக மாட்டேங்கிது. அனு எங்க போனான்னும் தெரியலயே என்று எண்ணி புலம்பிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது கதிரவனுக்கு ஹரி போன் செய்தான்.தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், இப்போ மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினான். கதிர் ஹரியை காண அங்கு சென்றான் அவனிடம் எப்படி விபத்து நடந்தது என்பதை பற்றியும், உடல்நலன் பற்றியும் கேட்டான்.
ஹரி கதிரவனிடம் “நேத்து நான் ரஞ்சனிய பாத்தேன்டா, ஆன தனியா இல்ல ரஞ்சனியோட ஹஸ்பண்ட் அப்பறம் பசங்களோட பார்த்தேன் ” என்றான்.
“என்னடா உளறுற நீ “என்றான் கதிர் கோவமாக.
“நான் உண்மைய தான் சொல்லுறேன், ரஞ்சனிக்கு கல்யாணம் ஆகிருச்சி இரண்டு பசங்க கூட இருக்காங்க இந்த போட்டோவ பாரு “என்று கட்டினான்.
அதில் அனு அகிலன் இருவரும் குழந்தைகள் இருவரையும் தூங்கி வைத்திருப்பது போல் இருந்தது. கதிரவனால் அங்கு இருக்க முடியாமல் ஹரி இடம் விடைப் பெற்று சென்று விட்டான்.
நேராக மதுரையில் உள்ள KR மினி மால் கடைக்கு சென்றான். அங்கு அவனது அறையில் இருந்த அனுவின் சிலையிடம் பேசிக்கொண்டு இருந்தான்.”அனு அப்போ நீ என்ன விட்டு நிரந்தரமாவே போய்டியா டி “
“நான் இருக்கும் போதே உன்னால எப்படி டி இன்னொரு கல்யாணம் பண்ண முடிஞ்சது “
“என் மேல இருக்குற கோவத்தால என்கிட்ட வராம இருக்குற, கோவம் போனதும் வந்துருவானு நெனச்சிட்டு இருந்தேன் இப்படி என்ன ஏமாத்திடியே டி “என்று கூறி அழுதுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அறையின் கதவு தட்டப் பட்டது. கதிர் கண்களை துடைத்துக் கொண்டு உள்ள வாங்க என்றான்.
கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் ஜெனிபர்.”வாங்க உக்காருங்க நீங்க யாரு என்ன விஷயமா என்ன பாக்க வந்துருக்கீங்க” என்றான்.
“என் பேரு ஜெனிபர், நான் அனுவோட பிரண்ட் அனுவை பத்தி உங்க கிட்ட பேச வந்துருக்கேன் ” என்றாள்.
“அனுவை பத்தியா “
“ஆமா உங்க மனைவி அனுரஞ்சனி பத்தி தான், அவ இவளோனால எங்க இருந்தா இப்போ எங்க இருக்கானு சொல்ல வந்துருக்கேன் “என்றாள் நேரடியாக.
“அனுக்கு அகில் கூட கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு பசங்க இருக்காங்கனு சொல்ல போறிங்களா “என்றான் கதிர் சோகமாக.
“என்ன பேசுறீங்க நீங்க அனுக்கு கல்யாணம் ஆகிருச்சா அதுவும் அகிலன் கூட இப்படிலாம் பேசுறதுக்கு உங்களுக்கு அசிங்கமா இல்ல, இப்போ புரியுது என் அனு உங்கள விட்டு போனானு “
“நான் வேற லூசு மாதிரி அனுவுக்கு தெரியாம இங்க வந்து உங்க கிட்ட பேசி உங்களையும் அனுவையும் சேர்த்து வைக்கலாம் வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் நான் கிளம்புறேன் “என்று கோவமாக கூறி விட்டு எழுந்து செல்லப் பார்த்தாள்.
“அனுக்கு அப்போ கல்யாணம் ஆகலையா,அப்போ அந்த பசங்க” என்றான் கதிர்.
“அனுக்கு கல்யாணம்ல எதுவும் ஆகல இன்னைக்கு வரைக்கும் அவ உங்க மனைவியா தான் இருக்குற, பசங்க உங்க பசங்க தான் நம்பிக்கை இல்லனா இது அவங்க பாஸ்போர்ட் இதுல பாருங்க ” என்றாள்.
கதிர் அதை வாங்கி பார்த்தான் அதில் “கவின் கதிரவன் சக்கரவர்த்தி, கிருஷ்ணா கதிரவன் சக்கரவர்த்தி ” என்று இருந்தது.
அப்போ நான் துபாய்ல பார்த்த பசங்க என் பசங்களா என்று எண்ணி கண்ணீர் வடித்தான்.
“சாரிங்க நேத்து ஏர்போர்ட்ல அனு, பசங்கள அகிலனோட பார்த்த என் பிரண்ட் அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு சொன்ன அதுனால தான் நான் அப்படி பேசிட்டேன், ப்ளீஸ் உக்காருங்க ” என்றான்.
“அனு வீட்டை விட்டு போகும் போது இரண்டு மாசம் கர்ப்பமா இருந்தா “
“நிஜமாவாங்க சொல்லுறீங்க, இவளோ சந்தோசமான விஷத்தை அனு ஏங்க என்கிட்ட சொல்லாம போன “
“அவ உங்க கிட்ட சொல்ல தாங்க வந்தா, அப்போ தான் நீங்க அனு அப்பாவை அடிச்சி தள்ளி விட்டிங்க, அதை பார்த்ததுமே சொல்ல வந்ததை சொல்லாம போய்ட்டா “என்று கூறினாள் ஜெனி.
மேலும் கதிரவன் சந்தேகப்பட்டதால் தான் அனு வீட்டை விட்டு போனதாகவும், பின் கன்னிகாஸ்திரி ஒருவருடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றதாகவும், பின் அவருடன் சேர்ந்து ஊர் ஊராக சென்றதகவும். போதிய அளவு உணவு இல்லாமலும், தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டே இருந்ததாகவும் கூறினாள். கடைசியாக மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அனுவை சந்தித்ததாகவும் கூறினாள்.
அனுப்பட்ட கஷ்டங்களை எண்ணி கண்ணீர் விட்டான் கதிரவன். “சாரி செல்லம் உன்ன இந்த அளவுக்கு கஷ்ட பட வச்சிட்டேன் என்ன மன்னிச்சிருடி “என்றான் மனதிற்குள்.
“இந்த போட்டோவ பாருங்க, அனு வளைகாப்பு அன்னைக்கு எடுத்தது” என்று கூறி போட்டோவை காட்டினால் ஜெனி.
அதை வாங்கி பார்த்த கதிர் கத்தி அழ ஆரம்பித்தான் அந்த போட்டோவில் அனு இருந்த தோற்றம் அவனை அப்படி செய்ய வைத்தது.உடல் மிகவும் மெலிந்து முகம் கருத்து, எலும்புக்கூடு போல் இருந்தாள் அனு.
“கதிரவன் ப்ளீஸ் அழாதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க “என்று கூறினாள்.
பின் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலையும் அதிலிருந்து அனு கஷ்டப் பட்டு மீண்டு வந்ததை பற்றியும் கூறினாள்.
கதிர் கண்களில் கண்ணீர் வடிய கேட்டக் கொண்டிருந்தான். அதன் பின் அனு விட்டு வேலைக்கு சென்றது, ஹோம் நர்ஸ் ஆக வேலை பார்த்தது.
கடைசியாக பிட்டரை சந்தித்தது, அவருடன் லண்டன் சென்றது. அங்கு மென்பொருள் அலுவலகத்தில் வேலை பார்த்தது.இப்போ மதுரைக்கு ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்க வந்துள்ளது வரை கூறி முடித்தார்.
அனு பட்ட கஷ்டம் எல்லாத்தையும் இப்போ உங்க கிட்ட ஏன் சொல்லுறேனா நீங்க பண்ண தப்புனால அந்த பொண்ணு எப்படிலாம் கஷ்டப்பட்டானு நீங்க தெரிஞ்சிக்க தான்.
அனு இப்போ வரைக்கும் உங்க மேல கோவத்துலையும், வருத்தத்திலை யும் தான் இருக்குற. ஆன அதே அளவுக்கு உங்க மேல காதலும் இருக்குது.அனு வாழ உங்க கூட வாழவும் முடியல, நீங்க இல்லாம இருக்கவும் முடியல அவளால.
அனுகிட்ட மனசு விட்டு பேசுங்க, அவளையும் பேச வைங்க, உங்க பிரச்சனைகளை எல்லாம் பேசி முடிச்சிட்டு, இரண்டு பேரும் சந்தோசமா வாழ பாருங்க என்றாள் ஜெனி.
நீங்க அனுவுக்கு உதவி செஞ்சி அவளுக்கு துணையாக இருந்ததுக்கு ரொம்ப நன்றிங்க. உங்க உதவிய என் உயிர் இருக்குற வரைக்கும் மறக்க மாட்டேன்க.
“அனுவை நான் பாக்கணும், அவகிட்ட நான் பேசணும் அனு இப்போ எங்க இருக்குற “
“அனு அவங்க அப்பா கூட அவங்க வீட்டுக்கு போயிருக்க இன்னும் ரெண்டு நாள்ல இங்க வந்துருவா, உங்க மேல இருக்குற கோவத்துல உங்கள பாக்க வர சம்மதிக்க மாட்ட “
“ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க, நான் எப்பவும் இங்க தான் இருப்பேன் ” என்றான்.
“அனு ஊருல இருந்து வரவும் அவளை இங்க கூட்டிடு வாரேன் “.
அனு கதிரை பார்ப்பாளா, கோவத்தை விட்டு அவனிடம் பேசுவாளா பொறுத்திருந்து பார்ப்போம்.