அவன் மனதை எடுத்துக்காட்டும் விதமாக ரேடியோவில் ஒலித்த பாடலை கேட்டபடியே இடையிடையே அவள் முகத்தையும் பார்த்தான்..
அதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியாமல் யோசித்தபடியே மெஸ் முன்பு வந்து டாக்ஸியை நிறுத்தினான்…
அதில் இருந்து அவள் இறங்கியதும்.
“ ஏங்க மீனாட்சி ஒரு நிமிஷம் நில்லுங்க.. ” என்று அவன் கூறவும் நின்று திரும்பி பார்த்தாள்..
அவன் அவளை திரும்பி பார்க்காமல் கார் கண்ணாடியை பார்த்தபடி இருந்தான்..
லதா பாண்டிதான் அவளைப் பார்த்து பேசுவது போல் சைகை செய்தாள்..
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு லதாவும் மீனாவும் சுவாரசியமாக பேசுவது போல் காட்சி தெரியும்..
ஆனால் பேசுவதோ மீனாட்சியும்
செந்தூரபாண்டியும் தான்..
அவள் திரும்பி பார்த்ததும் “ நான் பேச வேண்டியதை உங்ககிட்ட சொன்னேன்..
ஆனா உங்ககிட்ட கேட்க வேண்டிய முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். அதற்கான நேரமும் அப்ப இல்லை.. அது என்னன்னா .. சட்டுனு நான் வந்து கல்யாணம் கட்டிக்கிறீங்களான்னு கேட்டுட்டேன்..
ஆனா உங்க மனசுல யாரு இருக்குறாங்க.. இல்ல நீங்க யாரையும் லவ் பண்றீங்களா?.. இல்ல உன் ஃபியூச்சர்ல இப்படித்தான் ஒரு ஹஸ்பண்ட் வரணும்னு ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா?.. இதை பத்தி நான் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை..
அப்படியே ஏதாவது இருந்தா இப்பவே சொல்லிடுங்க.. இந்த பேச்சை இதோட விட்டுட்டு நான் போயிடுவேன்.. அப்படி உங்க மனசுல ஏதும் இல்ல.. யாரும் இல்லன்னு சொன்னா நான் கேட்டதுக்கு நீங்க ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் நல்லா யோசிச்சு எனக்கு சாதகமான பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.. இந்தாங்க இதுதான் என்னோட கார்ட்.. உங்க செல் நம்பர் லதா கிட்ட நான் வாங்கிக்கிறேன்.. ” என்று கூறி அவனது கார்ட்டை அவளிடம் கொடுத்தான்..
“ கல்யாண விஷயம் சட்டுனு இன்னைக்கு பேசி நாளைக்கு முடிவெடுக்கிற விஷயம் இல்லைங்க.. என்கிட்ட தனியா எனக்குன்னு செல்போன் இல்ல.. மெஸுக்கு பொதுவான ஒரு செல்போன் தான் இருக்கு.. உங்களுக்கு முடிவு சொல்லனும்னா நான் அதுல இருந்து லதாவுக்கு எடுத்து நானே பேசுறேன்.. ” என்று கூறிவிட்டு லதாவிடமும் கையாட்டி விட்டு திரும்பி நடந்தாள் உள்ளே..
மெஸ் உள்ளிருந்து மதிய சமையலை முடித்து அனைத்தையும் தயார் படுத்திக் கொண்டிருந்த கோமதி அடிக்கடி வெளியே மகளை பார்த்திருந்தார்..
தங்கள் உழைப்புக்கு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு போய் வருவதற்கு டாக்ஸி பிடிப்பது எல்லாம் நடக்காத காரியம்..
இப்போது திடீரென கோவிலுக்கு சென்ற மகள் புதிதாக டாக்ஸியில் வரவும் சற்று பயத்துடன் தான் திரும்பி பார்த்தார்..
மீனாட்சி மெஸ் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தவன் டாக்ஸியை எடுக்க ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சியின் பாட்டி பூமணி பாண்டியை பார்த்து அருகே சென்று உள்ளே அழைத்தார்..
“ அடடே பாண்டி தம்பியா வாங்க வாங்க.. என்ன இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராம போறீங்க.. இதுதான் நீங்க சொன்ன மூணு தங்கச்சில ஒரு தங்கச்சியா?.. நீயும் உள்ள வாம்மா காபி குடிச்சிட்டு போலாம்..” என்று அன்போடு சிரித்து முகத்தோடும் அவர்களை அழைத்துச் சென்றார் உள்ளே..
“ பாட்டி நீங்க எப்படி இங்க..? இப்ப உடம்புக்கு எப்படி பாட்டி இருக்கு?.. நல்லா இருக்கீங்களா?.. ” என்றான் கள்ளன்..
இவர் மீனாட்சியின் பாட்டி என்பது இதுவரை அவனுக்கு தெரியாதது போன்று காட்டிக்கொண்டான்..
“ என்ன கேள்வி பாண்டி இது… அன்னைக்கு நீ கொஞ்சம் எனக்கு உதவி செய்யலைன்னா இந்நேரம் நான் உயிரோட இருந்திருக்கவே முடியாது..
நான் மயக்கம் போட்டு விழுந்தது பத்தோட பதினொன்றாக எல்லாரையும் போல நீயும் பார்த்துட்டு போகாம உனக்கு மனித தன்மை இருக்கும் போய்தானே நீ என்னை மருத்துவமனை கொண்டு போய் காட்டி திரும்பவும் கொண்டு வந்து இங்க விட்டுட்டு போன…
இது நடந்து இப்ப ஒரு வருஷம் இருக்கும் அதனால உனக்கு இந்த இடம் மறந்து போயிடுச்சு.. இதுதான் எங்களோட மெஸ்.. ஏன் வெளிய நிக்கிறீங்க.. வாங்க உள்ள வாங்க வந்து காபி குடிச்சிட்டு போகலாம்.. ” என்று கூறி இரண்டு கையிலும் இருவரையும் பிடித்துக் கொண்டு அங்கிருந்த பெஞ்சில் அமர வைத்தார்..
பிரஷர் கூடி பூமணி பாட்டி கோவிலில் மயக்கம் போட்டு விழுந்த நேரம் இவன்தான் காப்பாற்றி அழைத்துச் சென்றான்..
ஆனால் அப்போது அவர் மீனாட்சியின் பாட்டி என்று அவனுக்கு தெரியாது அதன் பின் தெரிந்து கொண்டான்..
ஆனால் இப்போதும் தெரிந்தது போல் காட்டினால் ஒரு வேலை மீனாட்சி இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் இவன் திருமணத்திற்கு கேட்கிறான் என்று தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று தான் தெரியாதது போல் காட்டினான்..
ஆனால் பாட்டி பேசியே அனைத்தையும் சொதப்பி விட்டார்..
வந்தவர்களை வரவேற்கும் பண்போடு இருவருக்கும் சூடாக காபியும் காலை பலகாரமும் கொண்டு வந்து கொடுத்தாள்..
இருவரும் அதை உண்டு விட்டு அதற்கான பணத்தை கொடுக்கும் போது கோமதி வாங்க மறுத்து விட்டார்..
“ அம்மா உங்களைப் பற்றி ரொம்ப சொல்லி இருக்காங்க தம்பி.. நீங்க அன்னைக்கு உதவி செய்யலைன்னா இன்னைக்கு எங்க அம்மா எங்களுக்கு இல்ல.. உங்க தங்கச்சி என் பொண்ணோட தோழி வேற அதனால எதுக்கு தம்பி பணமெல்லாம் தந்து சங்கடப்படுத்துறீங்க..” என்று பாண்டி கொடுத்த பணத்தை வாங்க மறுத்தார்..
“ ஐயோ ஆண்ட்டி தொழில் வேற பழக்கவழக்கம் வேற.. பழக்கவழக்கத்தை தொழில் கூட கொண்டு வந்து இணைக்க கூடாது.. எவ்ளோ கஷ்டப்பட்டு தொழில் செய்றீங்க.. இந்த ரெண்டு டீ காசு ஏன் சும்மா வீணாக்குவனேன்.. ” என்று கூறி அவன் கொடுக்கவும் அவர் வாங்க மறுத்தார்..
அதனால் அந்த பணத்தை கல்லாப்பெட்டியின் முன்பு வைத்திருந்த முதியோர் நிதி சேகரிப்பு என போட்டு இருந்த பணப்பெட்டியில் போட்டுவிட்டு அவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்..
மீண்டும் அங்கிருந்து அவர்கள் ஊரை நோக்கி டாக்ஸியில் போகும் போது மெல்லிசை பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது..
அப்போது அவனது தங்கை லதாபாண்டி பேச்சு கொடுத்தாள்..
“ அண்ணா அடுத்து நீ என்ன செய்றதா இருக்க?.. ” என்று அண்ணனின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டாள்..
“ அடுத்து என்ன லதா வீட்டுக்கு போய் இந்த கல்யாணத்தை பத்தி அம்மாகிட்டயும் மத்த ரெண்டு பேருகிட்டயும் பேசி அவங்க விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்கணும்.. அப்புறம் மீனா சம்மதம் சொன்னா அடுத்தடுத்த கல்யாணத்துக்கான வேலைகள் பார்க்கணும்.. ” என்றான்..
“ ஏன் அண்ணனா அவசரபடுற.. மீனா சம்மதம் சொன்னதுக்கு பிறகு வீட்டில் பேசுங்களேன். அவ ஒரு நேரம் சம்மதம் சொல்லாமல் போன இது பத்தி பேசி வீட்ல வீண் பிரச்சனை தானே வரும்..” என்றாள் லதா..
“ அட நீ வேற மா.. என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியாதா?.. மீனாட்சிய பார்த்த காலத்துல இருந்து அவளை பற்றி எல்லாமே தெரிந்து கொண்டேன்.. அவ சம்மதம் சொல்ல மாட்டானு அவ மேல சந்தேகம் இருந்திருந்தால் நான் அவ கிட்ட போய் பேசி இருக்கவே மாட்டேன்..
கட்டாயம் என்னோட மீனாட்சி சம்மதம் சொல்லுவா.. எங்க கல்யாணம் நடக்கும்.. இந்த அம்மாவும் மற்ற ரெண்டு பேரும் குறுக்க கட்டைய போடாம இருந்தா சரி..
அவ சம்மதம் சொல்லுவானு எனக்கு 100 வீதம் நம்பிக்கை இருக்கு… என் காதலை நம்பி நான் வீட்ல அம்மாகிட்ட இன்னைக்கு பேச போறேன்… ” என்று நம்பிக்கையோடு கூறி திருமணத்தைப் பற்றிய சில திட்டங்களை போட்டுக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்..