சிறுகுளத்தூர்க்கு பக்கத்து ஊரு தான் செந்தூரப் பாண்டியனின் ஊர்..
விவசாயம் மற்றும் பயிர் வகைகள் என்று எப்போதும் பச்சை பசேலென்று பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாகவே இருக்கும் அந்த ஊர்..
அந்த ஊரில் ஒரு அறை. சிறிய ஹால் ஓலையல் கட்டிய சமையல் அறை இதுதான் ஐந்து பேர் வாழும் வீடு..
அந்த வீட்டின் முன்பு டாக்ஸி நிறுத்தி அதிலிருந்து பாண்டியும் லதாவும் இறங்கினார்கள்..
இறங்கியவர்கள் உள்ளே வரும் போது வீட்டில் இருக்கும் ஏனைய மூன்று பெண்களும் உள்ளே தான் இருந்தார்கள்..
லதாவின் அம்மா டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்.. முதல் தங்கை லலிதா பாண்டி மற்றும் அவனது கடைசி தங்கை லீலா பாண்டி மூவரும் பிரயோசனம் இல்லாத ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தார்கள்..
அந்த வீட்டுக்கு உழைத்துக் கொடுக்கும் ஆண்மகன் வீட்டினுள் நுழையும் போது யாரும் அவனை அழைக்கவும் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவும் எதுவும் செய்யவில்லை..
அம்மா தங்கைகள் இருந்தும் அவன் உறவுகள் அற்ற அனாதை தான்..
வந்தியா வா போறியா போ இதுதான் அந்த வீட்டில் அவர்களின் நடவடிக்கை அவன் மீது மட்டும்..
உள்ளே வந்தவன் எதிரே இருந்த இருக்கையில் இருந்து தாயையும் மற்ற இரு தங்கைகளையும் ஹாலுக்கு அழைத்தான்..
“ ப்ச் இவனுக்கு இதே வேலை தான்.. ஏதாவது சொல்றதா இருந்தா அம்மா கிட்ட சொன்னா அம்மா எங்க கிட்ட சொல்ல போறாங்க.. அதை விட்டுட்டு எல்லாரும் வாங்க வாங்கனு ஒவ்வருத்தர் பேரா ஏலம் போடுறான்.. ” என்று மூத்த தங்கை லலிதா பாண்டி அண்ணனுக்கு நல்ல மரியாதையுடன் அவனை எதிர் கொண்டாள்..
தங்கைகள் அவனை திட்டுவது மனதில் மட்டும்தான்..
ஆனால் பொறுப்பற்ற ஊதாறியாக இருந்தாலும் அவனை பெற்ற தாய் தானே அதனால் அவர் நேரடியாகவே அவர்கள் நினைத்ததை கேட்டு விட்டார்..
“ என்ன பாண்டி உன்னோட பெரிய ரோதனையா போயிருச்சு.. சீரியல் நல்ல கட்டத்துல போகும்போது எல்லாரும் வந்து இங்க இருங்கன்னு பெரிய சத்தமா கூப்பாடு போடுற.. சொல்ல வேண்டியதை சீக்கிரமா சொல்லிட்டு எங்களை விடு..” என்றார்..
அவருக்கு வயசு போன காலத்தில் அவரது பெண் பிள்ளைகள் தான் அவரை பார்க்கும்… ஆண் திருமணம் செய்து மனைவியின் பேச்சைக் கேட்டு ஆடுவான் என்பதால் அவனை உழைப்பிற்காக மட்டுமே ஏடிஎம் மிஷனாக பயன்படுத்தினார்..
மலை போல் பெண் பிள்ளைகள் மூவரை நம்பி இருக்கிறார் லட்சுமி.. ஆனால் எதிர்காலத்தில் யார் அவரை பார்ப்பார்கள் என்று அவருக்கு தெரிந்திருந்தால்..
மகனது வாழ்க்கையில் விளையாடி அவனது வெறுப்பிற்கு ஆளாகி இருக்க மாட்டாரோ என்னவோ..
தினமும் அவனுக்கு கிடைக்கும் இந்த அலட்சியம் புதிது இல்லை..
அது அவனுக்கு பழகிய ஒன்றுதான் அதனால் இந்த முறையும் அதை கடந்து பேச வேண்டியதை பேச ஆரம்பித்தான்..
“ நான் சவுதி நாட்டுக்கு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.. “
“ அதுதான் எங்களுக்கு தெரியுமே முன்னாடியே சொல்லிட்டியே.. திரும்ப ஏன் அதையே சொல்ற..? இன்னும் பத்து நாளில் கிளம்ப வேண்டி இருக்குன்னு சொன்னியே.. ” என்றார் அவனின் அன்புத்தாய்..
அவருக்கு அருந்த பழைய விடயத்தை அவன் பேசி இன்னும் நேரத்தை கடதூக்கிறான்.. அங்கு சீரியல் நல்ல கட்டத்தில் போய் கொண்டு இருப்பதை பார்க்க விடாமல் தடுக்கிறான் என்ற கோபம்..
“ குறுக்க பேசாம சொல்ல வந்ததை முழுசா கேளுங்க அம்மா.. போறதுக்கு இடையில நான் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு முடிவு எடுத்து இருக்கேன்.. ” என்றான்..
அவன் சொன்னதை கேட்டு சீரியல் அனைத்தையும் மறந்து திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்..
ஒரு வேலை மகன் பேசியது அவர் காதில் தான் தவறாக விழுந்ததோ..? என்று நினைத்தார்..
அதற்கு வாய்ப்பில்லை என்பது போன்று அடுத்து அவன் பேச ஆரம்பித்தான்..
“ கல்யாணம் பண்ணி மீனாட்சியை இங்க விட்டுவிட்டு நான் சவுதி போகப்போறேன்.. அங்க உழைக்கிற சம்பளத்தை மீனாட்சிக்கு தான் அனுபுவேன்…
என் மூலமா நான் சொல்றதை அவ செய்வா.. அவ ரொம்ப சிக்கனமான பொண்ணு.. உங்கள மாதிரி ஆடம்பரச் செலவுக்கு ஆசைப்படுறவ இல்லை.. நான் இங்க இருந்து போனதும் அவளை கொடுமை படுத்தலாம் டார்ச்சர் பண்ணலாம்னு ஏதாவது நினைப்பு வைத்திருந்தால் அதை இப்பவே விட்டுருங்க.. ஏதாவது இங்க நடந்து அந்த தகவல் எனக்கு அங்கு வந்தா உங்களுக்கு கிடைக்கிற எதுவுமே கிடைக்காமல் பண்ணிட்டு அவளை வேற வீட்டுக்கு குடி வைத்து அவளோட சேர்ந்து நான் வாழ ஆரம்பிச்சிடுவேன்..
உங்க பொண்ணுங்களும் உங்களுக்கும் என்ன கதினு யோசிச்சுக்கோங்க.. இதைத்தான் நான் சொல்லனும்னு நெனச்சேன் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அடுத்து கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலை இருக்கு நான் போய் பார்க்கணும் கல்யாண வீடு களைகட்டி இருக்கணும்..
அவங்க ஊர் முத்து மாரி அம்மன் கோவிலில் சிம்பிளா கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அதை பதிவு பண்ணிக்கபோறோம்.. இதுதான் எங்க கல்யாணத்தோடு திட்டம் அதுக்கு நீங்க எல்லா வேலையும் எடுத்து செய்யணும்..” என கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்று விட்டான்..
வெளியே சென்று அவன் டாக்ஸியை திருப்பி ஹாரன் நடிக்கும் சத்தத்தில் தான் அவன் தாய் மகன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தார்..
லதா வேலையாக பின்பக்கம் சென்று விட்டாள்.. அதனால் அவளை தவிர்த்து மற்ற இருவரும் தாயின் அருகே வந்து
“ இவன் இப்படி சொல்லிட்டு போறான்.. கல்யாணம் பண்ணி ஒருத்தியை கொண்டு வந்து இங்க வச்சுட்டா நாம எப்படி அவன் வெளி நாட்டுக்கு போய் அனுப்புற பணத்துல சந்தோசமா இருக்க முடியும்..
அவளுக்கு பணம் அனுப்பி அவள் நமக்கு போடுற பிச்சை காசுல தான் நம்ம சாப்பிட்டு வாழணும்.. அப்போ எப்படி நம்ம செலவுகளுக்கு காசு பத்தும் எப்படி நம்ம செலவுகளுக்கு காசு தேடிக்க முடியும்.. இந்த கல்யாணத்தை நடக்க விடாமல் தடுத்திடுமா.. எங்களால் ஒன்னும் செய்ய முடியாது.. நீ தான் தடுத்து நிறுத்தணும்..
என்னமோ இதுக்கு இவன் மட்டும் காரணம் இல்லை இந்த லதாவும் காரணமா இருப்பாள் என்று ஒரு சந்தேகம்.. அவதான் சின்ன வயசில் இருந்து எப்பயுமே அண்ணா அண்ணன்னு அவன புடிச்சிட்டு தொங்குவா.. இதை ஆரம்பத்திலேயே தடுத்திடனும் இல்லாட்டி பிறகு நம்ம தான் கஷ்டப்படுவோம்.. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் பார்த்து இருந்துக்கோ மா…” என்று லலிதா கூறிவிட்டு தங்கையையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்..
அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வந்தவர் அவனிடம் பேசுவதற்காக அவன் மீண்டும் வரும் வரை காத்திருந்தார்..
திருமணத்திற்கு அவர்களுக்கு மட்டும் உடை மற்றும் தாலி போன்ற செலவுகள் இருப்பதால் கொஞ்சம் அதிகமாகவே டாக்ஸி ஓட்டி உழைக்க வேண்டும் என முடிவெடுத்து இருந்தான்
இந்த ஐந்து நாட்களுக்கும்..
வரும் எந்த ஒரு சவாரியையும் அவன் விடப்போவது இல்லை..
அப்படி நாள் முழுக்க உழைத்துக் களைத்து இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்த மகனை ஒரு கை பார்க்க பிடித்துக் கொண்டார் தாய்..
சன் டிவியில் காலை ஆரம்பித்து இரவு முடியும் அனைத்து சீரியல்களையும் ஒன்று விடாமல் பார்க்கும் தாய் இன்று பத்து மணி சீரியலை பார்க்காமல் டிவியை ஆஃப் பண்ணி வைத்துவிட்டு வாசலை பார்த்து காத்திருப்பதை வைத்து அவனிடம் பேச தான் என்று புரிந்து கொண்டான்..
வீட்டுக்குள் வந்து பின்பக்கம் சென்று முகம் கை கால் கழுவி விட்டு உடைமாற்றி உணவு உண்பதற்கு மீண்டும் ஹாலில் வழமையாக இருக்கும் இடத்தில் அமர்ந்தான்.. தாய் உணவு எடுத்து வைப்பார் என்று..
எங்கே அவர் அவன் பசி அறிந்து உணவு வைப்பது.. இந்த திருமண பேச்சை இந்த பேச்சோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மகள்கள் கூறியதோடு அவர் முடிவெடுத்துவிட்டார்..
நீ சாப்பிடு இல்லன்னா சாப்பிடாம போ.. அவர் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.. இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.. என்று அவன் எதிரே வந்து அமர்ந்தார்..
“ என்ன பாண்டி?.. உனக்கு என்ன புதுசா பழக்கமெல்லாம் வித்தியாசமா இருக்கு.. உனக்கு கல்யாண வயசுல தங்கச்சி இருக்கும்போது அந்த பொறுப்பு முக்கியமா தெரியாம இந்த பணமும் உன்னோட சுகமும் தான் முக்கியமா தெரியுதா?..
வீட்டில் வயசுக்கு வந்து மூணு பொண்ணுங்கள வெச்சிக்கிட்டு நீ எப்படி கல்யாணம் பண்ணி இந்த வீடு இருக்கும் நிலவையும் பார்த்து கூத்து அடிக்க முடிவு செய்து இருப்ப.. அப்பா இல்ல இந்த அம்மா என்னத்த செய்யப் போற கேக்குறதுக்கு ஆள் இல்ல உழைக்கிறோம் என்ற திமிரா?..
பணத்தை சிக்கனமாக செலவு செய்ய எத்தனையோ வழி இருக்கு.. அதுக்கு கல்யாணம் எப்படி தீர்வாகும்..
நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தா அந்த பொண்ணோட புது செலவுகள் அதிகரிக்குமே தவிர எப்படி செலவுகள் குறையும்..
நீ அங்க போய் உழைச்சு சம்பளத்துல எங்களுக்கு இது போதுமான அளவுன்னு உனக்கு தோணுற அளவு பணத்தை எங்களுக்கு அனுப்பிவிட்டு. மிச்ச பணத்தை நீ உன்னோடு வங்கி கணக்கில் போட்டு வைக்கலாமே..
மூத்தவளுக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்படும் பண்ணும் போது நீ அந்த பணத்தை அவளோட கல்யாணத்துக்கு தரலாம்.. அதை விட்டு கல்யாணம் பண்ண போறேன்.. அதன் மூலமா அவள வச்சு சிக்கனமா எல்லாத்தையும் பண்ண போறேன்னு சொல்லுற. இது நடைமுறைக்கு சாத்தியமானது இல்லை..
சிக்கனம் என்ற பெயரில் நீ கல்யாணம் பண்ண போறியா?.. இல்ல இந்த வயசு கோளாறு அதனால சுகம் தேவைப்பட்டு கல்யாணம் பண்ண போறியா?..
உன்னோட உடம்பு கோளாறு பண்ணுதுன்னா..? அதுக்கு வேற வழி இருக்கு.. அந்த வழியில் அதை தீர்த்துக்கோ.. எதுக்குமே இப்ப நம்ம குடும்பமும் என் பொண்ணுகளும் இருக்கிற சூழ்நிலைக்கு உன்னோட கல்யாணம் தீர்வாகாது இதுதான் என்னோட ஒரே முடிவு.. ” என்றார்..
தாய் வாய் கூசாமல் பேசிய வார்த்தை அவனுக்கு கோவத்தை அதிக படுத்தியது.. ஆனால் எதிரில் இருப்பது அவனை பெற்றவர் ஆகிவிட்டார்.. இல்லை என்றால் ஒரு வழி பண்ணி இருப்பான்..
கோவத்தை அடக்கிக்கொண்டு வார்த்தைகள் அழுத்தமாக அவன் வாயில் இருந்து வெளி வந்தது..
“ உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லணும் என்று அவசியம் எனக்கு இல்லை..
எனக்கு உழைக்கிற திமிரும் இல்லை.. என் ஒரு ஆள் உழைப்புல உங்களால் முடிந்த உதவி செய்து இந்த குடும்பத்தை காப்பாற்றி இருந்தால் நான் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்க போறேன்..
சீரியல்ல அந்த சுடிதார் போடுறாங்க இந்த டாப் போடுறாங்க.. அந்த மேக்கப் செட் பண்ணனும்..
அந்த செருப்பு வேணும்.. அந்த ஹேண்ட் பேக் வேணும்.. அது எல்லாத்துக்குமே உங்க பொண்ணுங்க ஆசைப்பட்டால் நான் ஒருத்தன் உழைச்சி என்ன செய்ய முடியும்.. கல்யாணம் பண்ணிட்டு நான் வெளிநாடு போறதா இருந்தா போயி நல்லபடியா என் கடமையை உங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி தீத்துகிறேன்..
நான் கல்யாணம் பண்ணிக்கலன்னா வெளிநாடு போகல.. இங்கேயே என்னால முடிஞ்சது உழைச்சுக் கொண்டு வந்து அதுக்கு ஏற்ற மாப்பிள்ளை பார்த்து சீதனம் கொடுக்காமல் எவன் மாப்பிள்ளையாக வாரானோ அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன்..
அப்புறம் என்ன சொன்னீங்க..? ஒரு மகனிடம் அம்மா பேசுற பேச்சா நீங்க பேசுறீங்க..? உடம்பு சுகத்துக்கு நான் அலையுற ஆளா..? என்ன பார்த்தா அப்படியா தெரியுது..?
அவளை கல்யாணம் கட்டினா எனக்கு இன்னொரு செலவு கூடும் என்று சொன்னீங்க தானே..
நான் கல்யாணம் பண்ணி மீனா இந்த வீட்டுக்கு வந்ததும் என் உழைப்புல ஒத்த பைசா எடுக்காம அவ எப்படி உழைச்சு உங்க எல்லாத்துக்கும் சோறு போடுறான்னு பாருங்க..
அவளோட உழைப்பையும் சுறுசுறுப்பான தன்மையும் பார்த்து நீங்களும் உங்க பொண்ணுங்களும் அப்பவாவது திருந்துங்க..
கல்யாணம் பண்ணுறது பண்ணுறது தான்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
நான் வெளிநாடு போகணுமா?.. இல்ல வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க.. ” என்றான்..
அவனும் என்ன தான் செய்வான்.. அந்த குடும்பத்திற்காக உழைக்க மட்டுமே அவதாரம் எடுத்தது போன்று தான் அவன் நிலை..
தாய் நீ சாப்பிட்டியா உனக்கு பிடித்தது எது என அறிந்து செய்திருக்க மாட்டார்..
மூன்று பெண் குழந்தைகளையும் அன்பாக பார்த்துக் கொள்பவர் அவனுக்கு என இதுவரை எதையும் செய்ததில்லை..
என்னை அவர்தான் பெத்தாரா?.. இல்லை எங்கும் ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்தாரா?.. என சிறுவயதில் இருந்தே அவனுக்கு அந்த சந்தேகம் இருந்து வந்தது..
அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மூன்று பெண்களுக்கும் உறங்குவார்கள்..
ஹாலில் தான் அவனும் அவனது தாய் லட்சுமியும் ஆளுக்கு ஒரு இடத்தில் உறங்குவார்கள்..
அவன் உறங்கும் இடத்தில் அன்று உறங்கினான்..
அடுத்த நாள் காலை அழகாக வடிந்தது..
மீனாட்சி இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது அவர் பேசியதை எப்படி தாயிடம் கூறுவது என்று அன்று நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தவள் ஒரு வழியாக மாலை நேரம் தாய் பாட்டி என அனைவரையும் அழைத்து ஒரே மூச்சாக சொல்ல நினைத்ததை சுருக்கமாக சொல்லி முடித்து விட்டாள்..
மகள் கூறியதை கேட்டு கோவம் தான் வந்தது அவருக்கு.. ஆனால் தாயை அவன் காப்பாற்றிய நன்றி இருந்தது..
கோமதி மீனாட்சி மூலம் பாண்டிக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து கடுமையாக பேசாமல் தன்மையாகவே இந்த திருமணத்திற்கு அவர்களுக்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்தார்..
அழைப்பு துண்டித்ததும் அதைக் கேட்டு சிரித்த செந்தூரப்பாண்டி..
“ பொண்டாட்டி.. நீ சம்மதம் சொல்லுவடி.. எனக்கு நீ சம்மதம் சொல்லுவேன்னு தெரிஞ்சு தான் எங்க வீட்டுலையும் பேசி இன்னைக்கு போய் தாலி வாங்கி உனக்கு எனக்கு புடவை வேட்டி சட்டை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்.. நீ சம்மதம் சொல்லுவியா இல்லையான்ற சந்தேகம் வந்து இருந்தா கூட நான் ஏன் இவ்வளவு செய்ய போறேன்.. ஐயர் மூலமா நான் நம்ம கல்யாணத்துக்கு குறித்த அந்த நேரத்துல புதன்கிழமை உனக்கும் எனக்கும் முத்துமாரியம்மன் கோயில கல்யாணம் நடக்கும்.. ” என்று 100% நம்பினான்.. அவள் சம்மதம் சொல்லுவாள் என்று..
அவன் விருப்பத்தை அவனது மீனுக்குட்டி நிறைவேற்றுவாளா?..
இல்லையா..?
தாய் தடுத்தும் எப்படி அவர்களது குடும்பத்தை மீறி மீனாட்சி அவனுக்கு சம்மதம் சொல்லுவாள்..
என்று காத்திருக்கிறான் என நாமும் அவனோடு சேர்ந்து காத்திருந்த தெரிந்து கொள்வோம்..