இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் ஏதோ ஒரு ஆசை லட்சியம் இருக்கும்.. அதனால் தான் வாழ்க்கையில் வரும் போராட்டங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..
அதேபோன்று நம் நாயகன் செந்தூரப் பாண்டியனும் விதிவிலக்கல்ல..
அவனுக்கு வறுமை இல்லாத அமைதியான அழகான ஒரு குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது மட்டுமே அவன் லட்சியம்..
அவனுக்கு எப்படி ஒரு மனைவி வேண்டும் என நினைத்தானோ அதேபோல் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தவள் தான் மீனாட்சி..
அவள் அப்படி இருக்கும் போது அவளுடன் திருமணமாகி சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து எதிர்காலத்தில் அவனுக்காக அன்பான குடும்பத்தை உருவாக்க நினைப்பது அவனுக்கு தவறாக தெரியவில்லை..
அவனது 15 வயதில் அவனது தந்தை இறந்துவிட்டார்..
அப்போது அவனது தோளில் வந்தது அந்த குடும்பத்தின் பொறுப்பு..
அவன் தந்தை இருந்தபோது தாய் லட்சுமியை நல்லபடியாக தான் பார்த்துக் கொண்டார்.. அப்போது லட்சுமி வீட்டு வேலை கூட அதிகமாக செய்ய மாட்டார்.. வேலைக்கு சென்று வந்து மனைவிக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று பாண்டியின் தந்தை தான் அனைத்து வேலைகளுக்கும் மனைவிக்கு உதவியாக இருந்து செய்து முடித்து வரும் பணத்தை அப்படியே அவரது கையில் கொடுத்து அதை வைத்து அவர் குடும்பம் நடத்தி அவருக்கு தேவையான அனைத்து பொருட்களுமே வாங்கிக் கொண்டார்..
அவருக்கும் மகள்களுக்கும் மட்டும் அழகான விலை உயர்ந்த உடைகள் காலணிகள் எடுப்பார்கள்..
செந்தூரப் பாண்டியனுக்கும் கணவனுக்கும் சாதாரணமாக ரோட் ஓர கடைகளில் இருக்கும் உடைகள் தான் எடுப்பார்கள்..
தந்தையின் இறப்பிற்கு பின் குடும்ப பொறுப்பும் தன்னிடம் வந்ததும் தன்னுடன் அன்பாக இருக்கும் தந்தையும் இல்லாமல் மிகவும் அந்த 15 வயதிலேயே என்ன செய்வது என தெரியாமல் மனம் உடைந்து போய் விட்டான் செந்தூரன்..
அவனை லட்சுமி தான் அந்த ஊரில் இருக்கும் பெரிய பண்ணையாரிடம் வேலைக்கு சேர்த்து விட்டது..
அப்போது அவருக்கு வெளியூர்களுக்கு லோட் ஏற்றும் லாரிக்கு கிளினராக வேலைக்கு சேர்ந்தான்..
ஐந்து வருடமாக கிளிநராக இருந்து வரும் அந்த சொற்ப பணத்தை கொண்டு தாயிடம் கொடுத்தாலும் அப்போது இரவு பகல் பாராமல் வெளி இடங்களுக்கு வெளி மாகாணங்களுக்கு போகும் அனைத்து லாரிகளுக்கும் கிளினராக போவதால் வீட்டுக்கு வரும் நேரங்களில் அன்பாக அழைத்து சந்தோஷமாக உணவு கொடுக்க மாட்டார்..
அவனுக்கு பிடித்தது என எதையும் செய்து கொடுக்க மாட்டார்..
ஐந்து வருடங்கள் கிளினராக இருந்தவன் அவனுக்கு சொந்தமாக டாக்ஸி ஓட்ட ஆசை வந்ததும் பண்ணையாரின் உதவியுடன் உடனே அவனுக்கு ட்ரைவர் லைசென்ஸ் எடுத்து இருபதாவது வயதில் பண்ணையாரின் டாக்ஸியை வாடகைக்கு ஒட்ட ஆரம்பித்தான்..
டாக்ஸி ஓட்ட ஆரம்பித்த போது தான் வீட்டில் அதிக நேரம் இருக்க முடிந்தது..
அப்போதுதான் நான் கொடுக்கும் சம்பளத்தை தாய் என்ன செய்கிறார் என நன்கு பார்த்து தெரிந்து கொண்டான்..
இதோ டாக்ஸியும் ஓட்ட ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்டது..
ஆரம்பத்தில் அவன் தனக்கென கொஞ்சம் பணம் எடுத்துவிட்டு தான் தாய்க்கு கொடுக்க ஆரம்பித்தான். ஆனால் போகப்போக தாயின் வசவு சொற்களைக் கேட்க முடியாமல் அவனுக்காக எடுத்த பணத்தை கூட சேர்த்து கொடுத்து விடுவான்..
அவராக பார்த்து அவனுக்கு வழமை போன்று ரோட்டோர கடைகளில் விலை குறைந்து எடுத்து கொடுக்கும் உடைகளும் காலனியும் மட்டுமே அவனிடம் எப்போதும் இருக்கும்..
தன் தங்கைகள் தானே ஊரில் கௌரவமாக இருந்தால் தனக்கு தான் பெருமை என நினைத்து அதையும் கடந்து விடுவான்..
அப்படி இருக்கும் போது தான் பண்ணையாறிடம் வீட்டில் நடப்பதை கூறியிருந்தான்..
அவர் தான் அவனுக்கு அனைத்திற்கும் உதவி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்..
அவனும் அப்போதுதான் அவனது கையில் பணம் இருக்கும்.. பணம் கொஞ்சமாவது சேமித்து அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்.. என்று நினைத்து. சரி என சம்மதம் சொன்னான்..
இங்கே ஓட்டும் இந்த வாடகை டாக்ஸிக்கு உரிய டிரைவர் சம்பளத்தை விட அங்கு மூன்று மடங்கு கிடைக்கும் என அவனுக்கு தெரியும்..
தான் வெளிநாடு சென்றால் அனுப்பும் பணத்தை திருமணத்துக்கு என்று சேர்க்காமல் அவர்கள் ஆசைப்பட்டது அனைத்தையும் வாங்கி செலவழித்து விடுவார்கள்.. என்று தான் அதற்கு கட்டுப்பாடான ஒரு ஆள் வேண்டும் அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த போது அவனது கண்ணில் தோன்றியது தான் மீனாட்சி..
அவளுக்கு 18 வயது என்று தெரியும் இந்த சிறு வயதில் அவளது வாழ்க்கையை கெடுக்குறோமோ..? என்ற பயமும் அவனுக்கு இருந்தது..
லதாவை அவன் நம்பினான்.. லதாவின் தோழி தான் மீனாட்சி.. தோழிக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் விட மாட்டாள்.. என்னவாக இருந்தாலும் தனக்கு சொல்லி விடுவாள்.. சொன்னால் அவர்களுக்கு அந்த மாதத்துக்கான பணம் அனுப்பாமல் அவர்களை தவிக்க விட்டால் தானாகவே மீனாட்சியை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என அவன் நினைத்தான்..
அவர்களுக்கான செலவுகளுக்கு பணம் அனுப்புவது அவன் கையில் இருக்கும் ஒத்தைப்பிடியாகும்..
பெண்கள் என தூக்கி தலையில் வைக்கும் லட்சுமிக்கு வீட்டில் சிறு உதவி கூட செய்து கொடுக்க மாட்டார்கள்.. அவ்வளவு சோம்பேறி பெண்கள்..
அப்படி இருக்கும் அவர்களா உழைத்து சாப்பிட போகிறார்கள்..
பணம் அனுப்பாமல் விட்டு விடுவேன் என மிரட்டினால் மீனாட்சிக்கு எந்த தொல்லையும் கொடுக்க மாட்டார்கள் என நம்பினான்..
ஆனால் அவன் திட்டமிடுவது அனைத்தும் நடப்பதற்கு அவன் என்ன கடவுளா?..
எதிர்காலத்தில் அவன் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட லட்சியத்தை அடைவதற்கு மிகுந்த சிரமங்களையும் பிரிவுகளையும் வலிகளையும் அவன் சந்திக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியவில்லை..
அவன் தன்னையே வெறுக்கும் காலம் வரும்.. என அவன் அப்போது உணரவில்லை..
இப்படி இருக்கும் போது மீனாட்சி என்ன முடிவெடுப்பாள்.. என யோசிக்காமல் தான் அனைத்தையும் திருமணத்திற்கு வாங்கி வைத்து தயார் படுத்தினான்..
திடீரென மீனாட்சியின் தாய் அழைத்து திருமணத்திற்கு சம்மதம் இல்லை இவ்வாறு 18 வயது பெண்ணின் மனதை திருமணம் எனக் கூறி கெடுக்க வேண்டாம்..
இப்பொழுது திருமணம் செய்ய விருப்பம் இல்லை அவள் படிக்க வேண்டியதை படிக்கட்டும் என கூறினார்..
சனிக்கிழமை விடிந்ததிலிருந்து எவ்வாறு தாயிடம் இதை கூறுவது என பல யோசனைக்கு மத்தியில் வேலைகளை செய்து கொண்டிருந்த மீனாட்சிக்கு இனியும் தாமதிப்பது சரியில்லை என முடிவெடுத்து..
எதிர்கால வாழ்க்கை திட்டங்களை பற்றி மட்டும் கூறாமல்..
லதாவின் அண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அவருக்கு தன்னை பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்ததும் அவர் வெளிநாடு சென்றுவிடுவார் அதனால் திருமண வாழ்க்கை படிப்பிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறினாள்..
மீனாட்சியின் பாட்டி பூமணியும் பாண்டி ரொம்ப நல்லவன்.. அன்பானவன்.. குணமானவன்.. என எவ்வளவோ எடுத்து கூறினார்.. ஆனால் கோமதி ஒத்தப்பிடியாக இப்போது திருமணம் மகளுக்கு வேண்டாம்.. என கூறி மறுத்துவிட்டார்..
லதாவிடம் மெஸின் செல் நம்பரை வாங்கி மீனாட்சியின் தாய் மறுப்பு சொல்லி வைத்ததும் மீனாட்சிக்கு உடனே அழைத்தான்..
மரியாதையாக தள்ளி நின்று பேசினால் வேலைக்காகாது என நினைத்து உரிமையுடன் பொண்டாட்டி என நினைத்து அவளிடம் பேசினான்..
தாய் மறுத்துவிட்டார்.. தான் எப்படி அதை அவனிடம் கூற முடியும்.. என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் கஸ்டமர் என்று நினைத்துதான் முதலில் அழைப்பை ஏற்றாள்..
அந்த பக்கம் “ மீனுக்குட்டி நான் தான் செந்தூரன்.. உங்க அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. நீயும் என்னை வேணாம்னு சொல்லி வெறுத்துடுவியாடி.. நான் உனக்கு வேணாமா?.. நான் உன்ன நல்லா பாத்துகுவேன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா..? நான் தான் சொன்னேன் தானே கல்யாணம் பண்ணி நீ உங்க அம்மா வீட்டிலேயே இருக்கலாம்..
எந்த பிரச்சனையும் இருக்காது.. நான் அனுப்புற பணத்தை கொண்டு போய் அவங்க கிட்ட கொடுத்தா போதும்னு.. அப்புறம் ஏண்டி பயப்படுற..? அப்போ இதுக்கும் சம்மதம் இல்லைன்னா என்னை பிடிக்கலையா உனக்கு?..” என்றான் குரலில் கரகரப்பு தெரிந்தது அவளுக்கு.. மனதுக்கு கஷ்டம் ஆகிவிட்டது..
யார்தான் ஒரு ஆண் அழுதால் தாங்கி கொள்ள முடியும்.. தீர்மானித்து விட்டாள் மீனாட்சி வருவது வரட்டும் ஒரு கை பார்க்கலாம்.. என்று.
அவன் தொடர்தான்.. “ பெத்தவங்க. கூட பிறந்தவங்க கிட்ட தான் என்னோட ஆசை நிறைவேறல்ல.. உன்னை கல்யாணம் கட்டியாவது என்னோட வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகணும்.. நானும் நாலு பேர் மாதிரி குடும்பத்தோட வறுமை இல்லாம சந்தோஷமா வாழணும் நினைச்சது தவறா?.. அப்போ அஞ்சு வருஷத்துல சந்தோஷமா மாற வேண்டிய என் வாழ்க்கை 15 வருஷம் ஆனாலும் மாற வாய்ப்பே இல்லை அப்படித்தானே..? நான் உன்னை முழுசா நம்பினேன்.. மீனாட்சி இப்பயும் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.. என் மீனு குட்டி என்ன என்னைக்கும் ஏமாத்த மாட்டான்னு.. உங்க அம்மா தானே என்னை வேணாம்னு சொல்லுறாங்க.. நீ இதுவரை வேணாம்னு சொல்லலையே..
நீ உங்க அம்மாவை எப்படி பேசி சம்மதிக்க வைக்க போறேன்னு எனக்கு தெரியாது.. ஆனால் நாளைக்கு காலைல கட்டாயம் நீ கால் பண்ணி எனக்கு சம்மதம் சொல்லுவ என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. சரி நேரம் ஆயிடுச்சு குட் நைட் டி.. மீன் குட்டி வைக்கிறேன் காலையில பேசலாம்.. உன் அழைப்புக்காக காத்திருப்பேன்.. ” என்று அவளை பேசவிடாமல் அவனே அழைத்துப் பேசி விட்டு வைத்து விட்டான்..
‘ ப்ச் என்ன அழுகை பா.. உங்களை நான் பிடிக்கலன்னு எப்ப சொன்னேன்..? பாவமே வாழ்கை குடுக்கலாம்.. அம்மாகிட்ட எடுத்து பேசலாம்னு நினைக்கிறேன்.. இப்ப நீங்க அழுதா நானும் வேணாம்னு சொல்லிடுவேன்.. ‘ என்று மனதில் கொஞ்சி மிரட்டினாள்..
இதில் ஒன்றை கவனிக்க வேண்டும் நேற்று கோயிலில் வைத்தும் அவன் தான் நீளமாக பேசினான்..
அனைத்தும் அவன் தான் பேசினான்.. அவள் பேச அவன் நேரம் கொடுக்கவே இல்லை என்பது தான் உண்மை..
பகிரங்கமாகவே நீ என்னை கல்யாணம் பண்ணி தான் ஆக வேண்டும்.. என்று கட்டாயப்படுத்தினான்..