அன்றும் காலேஜ் முடித்து வந்து வழமை போல் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அவளது அறையில் புத்தகத்தை எடுத்து மடியில் வைத்து அமர்ந்திருந்தாள் மீனாட்சி..
அப்போது அருகே அவளது கைபேசி அழைத்தது..
கணவனோ என எடுத்து பார்த்தாள்.. ஆனால் அவளது தாய் தான் அழைத்திருந்தார்..
கோமதியுடன் பேசி விட்டு பாட்டி மற்றும் அன்பு என அனைவரிடமும் பேசினாள்.. அவர்களுடன் பேசிய பின்பு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..
அவள் தனி ஆள் இல்லை.. அவளுக்கு என ஒரு குடும்பம் இருக்கிறது என்ற நினைப்பே அவளை கொஞ்சம் உற்சாகப்படுத்தியது..
அவர்கள் அழைப்பை துண்டித்ததும் மீண்டும் அழைப்பு வந்தது எடுத்து பார்த்தால் இந்த முறை அவளை ஏமாற்றாமல் கணவன் பாண்டி தான் அழைத்திருந்தான்..
கைபேசியில் அவனது அழைப்பை பார்த்ததுமே அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது.. எங்கே தாமதித்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுமோ என நினைத்து உடனடியாக அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..
“ மீனம்மா மீனம்மா.. எப்படி இருக்க?.. என்னடி பண்ணுற சாப்பிட்டியா?.. சாரிடி. இங்கே வந்து எல்லாம் செட் ஆகி எடுக்க இரண்டு நாள் டைம் தேவைப்பட்டுச்சு.. வேலையா இருக்கிற நேரம் உன்னோட ஒரு அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு கூட எனக்கு நேரம் கிடைக்கல.. ரொம்ப கஷ்டப்பட்டுடியா? மீனம்மா.. என்னடி அமைதியா இருக்க ஏதாவது பேசேன்.. கோவமா மீனு குட்டி..” என்றான்..
“ கோவம் இல்லங்க.. என்னாலையும் புரிந்து கொள்ள முடியுது.. முன்ன பின்ன தெரியாத இடம். எல்லாத்தையும் நீங்களும் பழகத்தானே வேணும்.. அங்க எல்லாம் செட் ஆயிடுச்சா?.. நீங்களும் சாப்பிட்டீங்களா?… இப்ப அங்க டைம் என்ன?.. வேலையில் சேர்ந்துட்டீங்களா?..” என்றாள்..
“ நான் சாப்பிட இன்னும் டைம் இருக்கு.. எனக்கு ஒரு வீட்ல தான் டிரைவிங் வேலை கிடைச்சிருக்கு.. வீட்ல அவங்க ஷாப்பிங் போக வேலைக்கு போக எல்லாத்துக்குமே கார் ஓட்டணும்.. எனக்கு இடைல இடையில போன் கதைக்கிறதுக்கு டைம் கிடைக்கும்.. ஆனால் உனக்கு சரியான டைம் அமையாது.. டெய்லி நீ காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்து பிரஷ் ஆயிட்டு இந்த டைமுக்கு பேசலாம்.. அந்த டைம் எனக்கு டிரைவிங் என்றால் பேசமாட்டேன்.. வந்ததுமே எங்களுக்கு தேவையான திங்ஸ் கொஞ்சம் தந்தாங்க.. ஏர்போர்ட்ல வச்சு பாஸ்போர்ட் வாங்கிட்டு விட்டுட்டாங்க.. இனி நாங்க நாடு திரும்பும் போது தான் தருவாங்க.. லதா என்ன பண்ணுறா?.. வீட்ல எல்லாரும் என்ன பண்றாங்க?.. என்ன சமைச்சாங்க?..”
“ இன்னைக்கு நைட் சப்பாத்தி பண்ணினேன்.. எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க.. நான் உங்களோட பேசுறேன்.. லதா படிக்கிறா .. நானும் லதாவும் இனி தான் சாப்பிடுவோம்.. அத்தை கூட பேசலையா நீங்க..”
“ அவங்களோடு பேசுவேன்.. என்ன அவசரம் பொறுமையா பேசுவோம்.. இன்னும் அவங்க எனக்கு கால் பண்ணலையே போயிட்டியானு கூட கேக்கல.. அவங்களுக்கு நான் ஏன் முக்கியத்துவம் கொடுத்து கால் பண்ணனும்..
ஏன் நீ சப்பாத்தி பண்ணின?. மற்ற யாரும் எதுவும் பண்ணலையா என்ன?.. அங்க வந்து எதுவும் வேலை செய்யக்கூடாது சந்தோஷமா இருக்கணும்.. படிக்கணும் தானே சொன்னேன் .. இப்ப நான் சொல்லுறதை நீ கேட்க கூடாதுன்னு முடிவு எடுத்தால் அப்புறம் நான் கால் பண்ணவே மாட்டேன். உன்னை சமையல்காரியா வேலைக்காரியா இருக்க சொல்லி நான் விட்டுட்டு வரல..
நீ பிடிவாதம் பிடித்ததால் தான் உன்னை அங்கு இருக்கவே சம்மதித்தேன்.. நீ அங்க இருக்கணும்னு சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் இருக்கணும்.. அங்க வேலைக்காரியா சமையல்காரியா இருந்தா நீ அங்கே இனி இருக்க முடியாது.. உன்னை எவ்வளவு அன்பா பாசமா பார்த்துக்கொள்ளணும் என்று நினைக்கிறேனோ அந்த அளவுக்கு எனக்கு கோபமும் வரும் மீனு குட்டி.. என் கோவத்தை காட்டினா நீ அதை தாங்கிக் கொள்ள மாட்ட.. கோபப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.. சரி கவனமா காலேஜ் போய் வரணும்.. நேரம் கிடைக்கும்போது அத்தையை போய் அங்க பார்த்துட்டு வா.. நல்லா படிக்கணும்..நல்லா சாப்பிடணும்.. நான் தினமும் இந்த டைமுக்கு கால் பண்ணுவேன்.. முடியாட்டி எப்ப கால் பண்ணுவேன்னு மெசேஜ் போடுவேன்.. இனியாவது சிரிச்சு சந்தோசமா இருடி பொண்டாட்டி அதான் கால் பண்ணி பேசிட்டேன் தானே.. ” என்றான்..
“ நம்ம வீட்டு வேலையை நான் தான் பார்க்கணும்.. அதுக்கு ஏன் சமையல்காரி வேலைக்காரி என்று நினைக்கனும்.. நீங்க இருந்தா என் கையால உங்களுக்கு சந்தோஷமா சமைச்சு தர மாட்டேனா?.. அதே மாதிரி அத்தைக்கும் உங்க தங்கச்சிகளுக்கும் செஞ்சு கொடுக்கிறேன்.. இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. நான் இதையும் பார்த்துட்டு படிக்கவும் செய்வேன்.. நீங்க அதை பத்தி கவலைப்பட வேண்டாம்.. கவனமா கார் ஓட்டுங்க.. நேரத்துக்கு சாப்பிடுங்க.. பேச நேரம் கிடைக்கிற நேரத்துல கால் பண்ணுங்க.. சரிங்க வச்சிடவா?..” என்றாள்..
அந்த பக்கம் பாண்டி அலைபேசியில் மனைவிக்கு இச்சு மழை பொழிந்தான்..
இனி அவர்களது காதல் அலைபேசியில் வளரும்..
கணவனுடன் பேசியதும் அவள் முகம் பிரகாசமாக இருந்தது..
அதை பார்த்த லதா அவளை கலாய்த்து தள்ளினாள்..
“ அடடே என் பிரண்டு சொங்கி மூஞ்சி போயி. என் அண்ணி வந்துட்டாடா.. இப்ப எவ்வளவு பிரகாசமா இருக்கு இந்த மூஞ்சி.. என் அண்ணன் என்ன மருந்து போட்டானோ?.. சொல்லுங்க அண்ணியாரே உங்க முகம் இப்படி செவ்வானமா சிவந்து இருக்கிறதுக்கு என்ன காரணம்..” என்று கேலி செய்து மீண்டும் விரிந்த புன்னகையை தோழி முகத்தில் பார்த்த பின் தான் அவள் படிப்பின் பக்கம் கவனத்தை திரும்பினாள் லதா..
அன்று காலையில் வீட்டில் லலிதாவும் அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை லதா கேட்டாள்.. அதனால் இரவு மீனாட்சி உணவு சாப்பிடவில்லை..என்பதை தெரிந்து கொண்டாள்..
இனி வீட்டில் இருக்கும் நேரத்தில் அவளுடன் தான் சாப்பிட வேண்டும். அவளை விட்டு இனி தனியாக சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்..
லலிதா லீலா அவர்களும் லதா இன்னும் சாப்பிடவில்லை என தெரிந்ததும் இன்று மினாட்சிக்கு உணவை வைத்திருந்தார்கள்..
மீனாட்சி இரவு உணவை முடித்துவிட்டு சமையலறை வேலைகளையும் முடித்துவிட்டு அறைக்கு வந்து அவனது சேர்ட் எடுத்து அவன் வாசத்துடன் அணிந்து கொண்டு
உறங்க ஆரம்பித்தாள்..
பாண்டிக்கு மனைவி தேவைப்பட்டாள்..
ஆனால் இருக்கும் இடம் அறிந்து அவனை கட்டுப்படுத்திக் கொண்டான்..
மீனாட்சியின் புடவையும் அவள் புகைப்படமும் தான் பாண்டிக்கு தற்பொழுது துணையானது..
அவள் புடவையை போர்த்தி கொண்டு புகைப்படத்தை பார்த்து அதற்கு பல முத்தங்கள் வைத்து விட்டு அதை எடுத்து தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு அவன் உறங்க ஆயத்தமானான்..
மதி தலைவர் கூறிய நேரத்திற்கு அவரை சந்திக்க அங்கே சென்றான்..
புகழ்பெற்ற ரெஸ்டாரன்ட் ஒன்றில் இருவரும் சந்தித்தார்கள்..
மதியின் வரவிற்காக எதிர்க்கட்சித் தலைவர் வந்து காத்துக் கொண்டிருந்தார்..
“ சாரி தலைவரே கொஞ்சம் லேட் ஆச்சு ட்ராஃபிக்ல மாட்டிட்டேன்.. நீங்க வந்து ரொம்ப நேரம் வெயிட் பண்ணுனிங்களா?..”
“ இல்ல மதி இப்பதான் 5 மினிட்ஸ் முன்னாடி வந்தேன்.. வா வந்து இரு.. உனக்கு என்ன காஃபியா?.. டீயா?.”
“ எனக்கு காஃபி எல்லாம் வேணாம் தலைவரே..என் பொண்டாட்டி கையால குடிக்கிற மாதிரி எங்கேயும் காஃபி கிடைக்காது.. எனக்கு ஒரு பிரஸ் ஜூஸ் போதும்..” என்றான் சிரித்துக் கொண்டே..
“ நீ பிழைச்சுக்குவ யங்மேன்.. ரொம்ப விவரம் தான்..” என்று கூறிவிட்டு சர்வரை அழைத்து அவனுக்கு ஒரு ஜூஸ் அவருக்கு ஒரு காஃபியும் ஆர்டர் பண்ணினார்..
“ அப்புறம் சொல்லுங்க தலைவரே.. வரச் சொன்னீங்க என்ன பேசணும்.. எலக்சனுக்கு ஏதாவது வேலை செய்யணுமா?..” என்றான்..
“ எலக்சனுக்கு நீ வேலை செய்யவேணாம்.. ஆனா நீ எலக்சன்ல நிக்கனும்.. இன்னும் மூன்று மாதத்தில் எம்எல்ஏ எலக்சன் வருது.. நம்ம கட்சியில சேர்ந்து இந்த தொகுதியில எம்எல்ஏ எலெக்சனுக்கு போட்டி போடனும்.. நீ நின்னாலே போதும் உன்னை ஜெயிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு..” என்றார்..
“ என்ன தலைவரே விளையாடுறீங்களா?.. நான் ஆறு வருஷம் சிறை தண்டனை அனுபவித்தவன் அப்புறம் எப்படி நான் வேட்பாளரா நிக்க முடியும்..” என்றான்..
“ ஏன் முடியாது?.. தாராளமா முடியும்.. உனக்கு இந்த குற்றங்கள் எதுவுமே சம்பந்தமில்லைன்னு ஆதாரப்பூர்வமா இப்ப கோர்ட்டில் சப்மிட் பண்ணி உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்டினால் நீ நிரபராதி ஆயிடுவ.. அப்புறம் உன் மேல போட்ட எப் ஐ ஆர் கேன்சல் ஆகிவிடும்.. நீ சாதாரண குடிமகனா எலக்சன்ல நிக்கலாம்.. நல்லா யோசிச்சுகோ மதி காலம் முழுக்க இப்படி செய்யாத தவறுக்கு பழி சுமந்து வாழ போறியா?.. இல்லை தவறு செய்து உன்னை மாட்டி விட்டவனுக்கு நீ பாடம் கற்பிக்க போறியா?.. உன்ன மாதிரி எத்தனையோ இளைஞர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்… ராவணன் மாதிரி அரக்கனும் இருக்காங்க.. உங்க அக்கா சந்திராவை மாதிரி அப்பாவிகளும் இருக்காங்க.. இன்னொரு ராவணனும் உருவாக வேண்டாம்.. இன்னொரு சந்திராவும் உருவாக வேண்டாம்.. ராவணன் மாதிரி துரியோதனன் துச்சாதனன் இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்களை நீ கலை எடுப்பதற்கு உனக்கு கையில அதிகாரமும் பவரும் வேணும்.. இன்னும் மூன்று மாதம் டைம் இருக்கு.. என்ன உதவி வேணும்னாலும் செய்ய நாங்க தயாரா இருக்கோம்.. உன் மேல இருக்கிற பழியை போக்க ஒரே வழி நடந்தது எல்லாத்தையும் இராவணன் வாயால வாக்குமூலம் வாங்க வேண்டியது உன்னோட பொறுப்பு ..
அதுக்கு நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. முழு ஆதரவு நாங்க தருவோம்.. ராவணன் வாயால வாக்குமூலம் எடுப்பது மட்டும்தான் ஒரே வழி அதை தவிர வேற எந்த வழியும் இல்லை.. ரெண்டு நாள் டைம் எடுத்து நல்லா யோசிச்சு பதில் சொல்லு… நீ சாமானியன் இல்ல மதி.. நீ சாணக்கியன் நீ ஜெயித்து காட்டுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையை முதலில் நீ உன் மேல வை.. அப்புறம் நீ கட்டாயம் ஜெயிச்சுடுவ..” என்றார்..
“ ஹா ஹா ஹா.. நீ சாதாரண பட்டவன் இல்லன்னு.. சொன்னேன் தானே சில ஆண்கள் வீட்டில் என்ன கலந்து பேசுவது என்று அவர்களே ஒரு முடிவு எடுத்து அதுல சாதக பாதகத்தை பார்க்காமல் சிலர் வீட்ல தகவல் சொல்லுவாங்க சிலர் அதையும் செய்யாமலுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா தான் அதை வீட்டிலேயே சொல்லுவாங்க.. மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்ற பாரு நீ கிரேட் மேன்.. எவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்தாலும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த பழக்கத்தை நீ எப்பவுமே விடக்கூடாது.. மனைவியை புரிஞ்சு அனுசரிச்சு முக்கியத்துவம் கொடுக்கிறவன் வாழ்க்கையில் தோற்றதா சரித்திரமே இல்லை.. சரி மதி வாழ்த்துக்கள் உன்னோட வேட்டையை ஆரம்பி.. நல்ல படியா வெற்றிகரமா முடியும்.. நம்பிக்கை வை..” என்று கூறிவிட்டு இருவரும் எழுந்து ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தார்கள்…
மதி கடைக்கு சென்று விட்டு சீக்கிரமாக வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து கடைக்கு சென்றான்..
ராவணன் சாதாரண பட்டவன் இல்லை என்பதை காட்டினான்..
நிர்மலா விட்டு சென்றதும் அதன் பின் அவன் அவளை போய் பார்க்கவோ பேசவோ இல்லை..
கமிஷனர் சும்மா இருக்காமல் ராவணனை ஒரு முறை வார்னிங் பண்ணிவிட்டார்..
அதெல்லாம் அவனுக்கு பெரிய விஷயமே இல்லை..
கோவில் ஐயர் மூலம் மதியும் நிர்மலாவும் கோவிலில் சந்தித்து பேசிக்கொண்டது இராவணனுக்கு தெரிய வந்தது..
அப்போதே தெரிந்து கொண்டான்.. இவ்வளவு காலமும் அடிமையாக அமைதியாக இருந்த அவளுக்கு பழைய உண்மைகளும் எப்படி தெரிய வந்தது அவள் இவ்வளவு துணிவதற்கு யார் காரணம் என்று தெரிந்து கொண்டான்..
தெரிந்தவன் சும்மா இருப்பானா?..
சும்மாவே மதியை கண்டால் அவனுக்கு ஆகாது.. மதி தான் அவன் வாழ்க்கையில் இப்படி செய்தான். என்று தெரிந்த பின் சும்மா இருப்பதற்கு அவன் என்ன மகாத்மாவா?..
அவன் செய்யும் இல்லீகள் வேலைகளுக்கு துணை நிற்கும் கையால் ஒருவனை மதியை ஃபாலோ பண்ண அனுப்பியிருந்தான்…
அவனுக்கு கொடுத்த வேலையை அவன் சிறப்பாக செய்து விட்டான்..
ஏனோ இன்று மதிக்கு மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது..
ராவணன் என்னும் ஒரு கொடிய அரக்கன் இருக்கும்பொழுது எப்படி அவன் சந்தோஷமாக இருக்க முடியும்..
ஆட்கள் பெரிய அளவில் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மதி ஓட்டி போன பைக் மீது லாரி ஒன்றை ஏற்பாடு பண்ணி இடித்து சாய்த்து விட்டான்..
யார் செய்த புண்ணியமோ அவன் தலையில் பெரிதாக அடிபடவில்லை.. அவன் கை கால்களில் மட்டுமே பெரிய அளவில் அடி..
அவன் எப்பொழுது யாருக்கு செய்த புண்ணியமோ ஒரு ஆட்டோக்காரர் அந்த வழியாக வரும் பொழுது ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை தூக்கிக்கொண்டு போய் அரசு மருத்துவமனையில் சேர்த்தான்..
கைபேசியில் கடைசியாக இருந்த எதிர்கட்சி தலைவரின் எண்ணுக்கு அழைத்து இப்படி விபத்து நடந்திருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் கூறிவிட்டு அவர் வரும்மளவுக்கு காத்திருந்து அவர் வந்ததும் அவரிடம் மதியின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டோக்காரன் சென்று விட்டான்..
நேற்று நடந்தவை அனைத்தும் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும் என்பதால் இது ராவணனின் வேலை என நன்கு புரிந்து கொண்டார்..
முதல் டாக்டர் வந்து சிகிக்சை அளித்த பின் என்ன சொல்கிறார் என பார்த்த பின்பு தான் வீட்டுக்கு சொல்ல வேண்டும் என காத்திருந்தார்..
மருத்துவரும் வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்..
இங்கே மீனாட்சி வீட்டில் மீனாட்சி யின் தினசரி வழக்கமான காலை எழுந்து வீட்டு வேலை செய்துவிட்டு காலேஜ் போவது பின் வந்து இரவு சமையல் வேலை செய்துவிட்டு படிப்பது கணவனுடன் கைபேசியில் உரையாடுவது பின்பு சந்தோஷமாக உறங்குவது என நாட்கள் கடத்த ஆரம்பித்தாள்..
வேலைகள் அனைத்திலும் லதா அவளுக்கு உதவியாக கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள்..
லீலா லலிதா அவர்கள் தாய் என மூவரும் அவள் போக்கில் விட்டு விட்டார்கள்.. அவளை எந்த ஒரு வார்த்தையும் சொல்லி திட்டுவதில்லை..
அவர்கள் திட்டாததால் அவளுக்கு அந்த பிரச்சினை இல்லாமல் அவள் வேலை அவள் படிப்பு என அவள் நாட்களை சந்தோஷமாகத்தான் கடத்தினாள்..
மாமியார் ஒரு வேலை கணவனுக்கு பயந்துவிட்டாரோ.! இல்லை திருந்தி விட்டாரோ?. என அவள் தப்பு கணக்கு போட்டால் அது அவளின் பிழை..
இப்போது அமைதியாக இருப்பதற்கும் சேர்த்து வைத்து பாண்டியின் அம்மா ஒரு ஆட்டம் ஒன்று மீனாட்சியின் வாழ்வில் ஆடப்போகிறார். அதுவும் வெகு விரைவில் வரும்..