வெகு நேரமாகியும் மதி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று வாசலில் அவனுக்காக காத்திருந்தாள் வள்ளி..
இதற்கு முன்பு என்றால் அவன் வீட்டுக்கு வருவதே தெரியாது.. காலை எழும் போதுதான் பார்ப்பாள்..அருகே கணவன் இருப்பதை.. அவள் உறங்கி விடுவாள்..
ஆனால் தற்பொழுது அவர்களின் வாழ்க்கை நிலை அப்படி இல்லை..
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனதார கணவன் மனைவியாக ஏற்றுக் கொண்டு காதல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்..
இனி இருவரும் சேர்ந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்க்கையில் பொக்கிஷம்..
அப்படியாப்பட்ட பொக்கிஷ தருணத்தை அவள் தவறவிட விரும்பவில்லை..
அதனால் இன்று மதியம் நன்றாக ஓய்வெடுத்து விட்டு தற்பொழுது கணவனுக்காக காத்திருந்தாள்..
ஆனால் மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவன் எப்படி வீட்டிற்கு வர முடியும் அது இவளுக்கு தெரியாமல் போனது..
நீண்ட நேரத்துக்கு பின் வெளியே வந்த மருத்துவர் எதிர்க்கட்சி தலைவரிடம் அடி பெரியது தான் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை நடப்பதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்று கூறினார்..
காலில் சில எலும்புகள் முறிந்து இருப்பதாகவும் அது ஒட்டுவதற்கு நாட்களாகும் அதுவரை கவனமாக பார்த்துக் கொள்ளும் படியும் கூறினார்..
சரி இதை எவ்வாறு மதி வீட்டில் தெரிவிப்பது என்று தான் அவர் குழம்பிப் போயிருந்தார்.. நேரமும் இரவை தாண்டி விட்டது..
கணவனை இன்னும் காணாததால் அவன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்..
தலைவருக்கு எடுத்து எப்படி பேசுவது என தெரியாமல் அழைப்பை ஏற்காமல் கைபேசியை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டார்…
ஆனாலும் யோசித்து பார்த்தார்.. வீட்டில் அந்த பெண் கணவனை தேடி மிகவும் கஷ்டப்படுவாள்.. எடுத்து ஏதாவது பேசி விட்டு வைப்போம்.. என நினைத்துக் கொண்டார்..
மீண்டும் போனை ஆன் பண்ணும் போது உடனடியாக அழைப்பு வந்தது..
அதை ஏற்று காதில் வைத்தார்.
“ ஹலோ நான் எதிர் கட்சி தலைவர் பேசுறேன் மா.. மதி என்னை பற்றி ஏதும் சொல்லி இருக்கானா?.. நான் யாருன்னு தெரியுமா?..”
“ ஐயா நீங்களா?.. சொல்லி இருக்காங்க ஐயா.. நேத்து அந்த ஆள் ராவணனை பழி வாங்க நீங்க உதவி பண்ணுனீங்கன்னு சொன்னார்.. ரொம்ப நன்றி ஐயா..” என்றாள்..
“ நல்லதுமா நல்லதுமா.. மதிக்கு இது மட்டும் இல்ல இன்னமும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கு.. இப்ப என்ன விஷயம்னா நானும் மதியும் கட்சி சம்மந்தமா ஒரு மீட்டிங்க்கு வெளியே வந்தோம்.. எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல அதனால மதியை தான் இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லி இருந்தேன்.. மீட்டிங் முடிஞ்சு ரொம்ப லேட் ஆனதால வெளியே தங்கிட்டோம்.. மெடிக்கல் ஷாப் போய் இருக்கான் மா எனக்கு மருந்து வாங்க அதனால நான்தான் அவனோட கைபேசியை வச்சிருக்கேன்.. மதி வந்ததும் அழைக்கச் சொல்றேன்.. காலையில தான் வீட்டுக்கு வருவான்.. நீ போய் உறங்குமா எதையும் யோசிக்காத சரியா?..” என்றார்..
நல்லதுக்கு தற்பொழுது பொய் சொன்னால் தப்பில்லை என அவர் மனதை அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்..
“ சரி ஐயா.. ” என்று கூறிய பெண் குயிலுக்கு இன்று மாமன் துணை இல்லாமல் எப்படி உறக்கம் வருமோ என தெரியாமல் தவித்துப் போனாள்..
மாமனின் இறுகிய அணைப்பு வேண்டும். என உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் அவன் அணைப்புக்கு ஏங்கி துடித்தது..
எப்படி உறங்கினாள் என்று தெரியாது விடிய காலையில் எழுந்து கொண்டாள்..
முன்பு பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் எழும் போது கணவன் முகத்தில் தான் முழிப்பாள்..
ஆனால் இன்று அந்த இடம் பெற்றிடமாக இருந்தது..
மனம் மிகவும் சுணங்கியது..
எழுந்து காலை பூஜையை முடித்துக் கொண்டு சமையல் அறையில் வேலைக்காக வரும்பொழுது தான் மீண்டும் அவள் கைபேசி அழைத்தது..
இனியும் வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது சரி இல்லை என நினைத்த தலைவர் அவளுக்கு அழைத்தார்..
மீண்டும் கணவன் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் எடுத்து காதில் வைத்தாள்..
“ ஹலோ ஹலோ நான் தான் மா.. நான் ஒன்னு சொல்லுவேன் நீ பயப்படாம கேட்டுக்கணும்..” என்றார்..
“ என்னையா மாமாக்கு எதுவும் ஆயிடுச்சா?.. ஏன் இப்படி பேசுறீங்க?..” என்றாள்.. இரு வார்த்தை பேசி முடிக்கும் முன்பே அவள் குரலில் அழுகை தெரிந்தது அவருக்கு..
“ மதிக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்.. அரசு மருத்துவமனையில் தான் இருக்கோம்.. நீ கொஞ்சம் சீக்கிரம் வா மா.. டாக்டர் எல்லாம் பார்த்துட்டாரு பயப்படும்படி எதுவும் இல்ல.. நீ எதுவும் யோசித்து கவலைப்பட வேண்டாம்..” என்றார்.
மதிக்கு ஆக்சிடென்ட் என அந்த ஒரு வார்த்தை மட்டும்தான் அவள் காதில் கேட்டது அதன் பின் அவர் என்ன பேசினார் என்று எதுவும் கேட்கவில்லை..
கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.. ஆனாலும் தற்போது அவள் போய் தன் மாமனைப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தால் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக அவள் அம்மாச்சியின் அறைக்கு சென்று மகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவரிடம் விபத்து என்று எதுவும் கூறாமல் கொஞ்சம் அவசர வேலையாக வெளியே போய்விட்டு வருவதாக மட்டும் கூறிவிட்டு கைபேசி மற்றும் கைப்பையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ ஒன்றை பிடித்து சென்றாள்..
மருத்துவமனைக்கு வந்து தலைவரிடம் என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொண்டு கணவனை போய் பார்த்தாள்..
மருத்துவ கருவிகள் பொருத்தி கால் மற்றும் கைகளில் கட்டுகளோடு கண் மூடி படுத்திருந்தான் மதி..
அவளுக்கும் இதை பார்த்ததும் தெரிந்தது தந்தையின் வேலை என்று..
இன்னும் சற்று நேரத்தில் கண் விழித்து விடுவான் என டாக்டர் சொல்லிவிட்டு சென்றார்..
வெளியே வந்து தலைவரை சந்தித்தாள்..
“ வாம்மா வள்ளி இப்படி இரு.. உனக்கும் தெரியும் இந்த வேலையை உன் புருஷனுக்கு யார் பண்ணி இருப்பான்னு.. இன்னும் ரெண்டு மாதத்தில் எலக்சன் இருக்கு. அதுக்கு போட்டி போடு நீ எம்எல்ஏ ஆயிடலாம்னு அதை பற்றி பேசத்தான் ஈவினிங் மதியை வர சொன்னேன்.. நானும் அவனும் பேசிட்டு கிளம்பிட்டோம்.. அப்போ அவன் கடைக்கு போகும் போது தான் அவனுக்கு இப்படி ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கு.. அப்பவே உன் கிட்ட சொன்னா நீ கைக்குழந்தை வச்சிருக்க பதறிடுவேன்னு தான் உன்கிட்ட பொய் சொல்லிட்டு நான் இங்க தங்கி இருந்து அவனை பார்த்துட்டு தான் இப்ப உன்னை வர வைத்து இருக்கேன்..
விட்டா இன்னும் உன் அப்பன் ஆட்டம் ரொம்ப அதிகமா போயிடும்.. அசிஸ்டன்ட் கமிஷனர் என்ற பதவியை கையில வச்சிக்கிட்டு உன்னையும் உன் புருஷனையும் உன் குடும்பத்தையும் இன்னும் உன் அப்பன் வாழ விடாமல் அழிச்சுகிட்டு தான் இருக்கான்.. ராவணன் வாயாலயே வாக்குமூலம் எடுத்தா மட்டும்தான் மதி எந்த குற்றமும் செய்யலன்னு எஃப் ஐ ஆர் கேன்சல் பண்ணி எலெக்ஷன்ல நிக்க முடியும் என்று நான் சொன்னேன்..
மதி எழுந்து நடக்கவே இரண்டு மாத காலம் ஆகும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.. அப்புறம் எப்படி மதி ராவணன் வாயால் வாக்குமூலம் எடுத்து அதை கோர்ட்ல நிரூபித்து எலக்சன்ல நிக்க போறான் என்று எனக்கு தெரியாது..
இதுக்கு ஒரே வழி நீ தான் எப்படியாவது உங்க அப்பாகிட்ட பேசி அவனுக்கே தெரியாம அவன் செய்த குற்றம் அனைத்தையும் இந்த ஆக்சிடெண்ட் முதல் கொண்டு எல்லாத்தையும் ராவணன் வாயாலேயே வாக்கு மூலம் எடுத்து அதை கோர்ட்டில் சப்மிட் பண்ணனும்.. நீ நெனச்சா மட்டும் தான் முடியும்..
நீ திடீரென்று இத்தனை வருஷம் இல்லாம இப்ப உன் அப்பா கிட்ட போய் பேசினா அந்த ஆளுக்கு சந்தேகம் கட்டாயம் வரும்.. சந்தேகம் வராத அளவுக்கு அந்த ஆளோட வீக் பாயிண்ட் என்னன்னு பார்த்து அங்க நீ அடிச்சா தான் உங்க காரியத்தை சாதிக்க முடியும்…
மதி மாதிரி ஒரு நல்லவன் சாணக்கியன் கட்டாயம் அரசியலுக்கு வரணும் அப்பதான் எல்லாமே நல்ல முறையில் நடக்கும்..
உனக்கு என்ன உதவி எப்ப வேணும்னாலும் என்னோட நம்பருக்கு நீ அழைத்து கேட்கலாம்..
என்னை உன் அப்பா மாதிரி நினைச்சுக்கோ.. உனக்கு எந்த தயக்கமும் வேண்டாம்மா சரியா?.. உனக்கு உதவிக்கு நான் ஆள் அனுப்புறேன்.. இப்ப நான் போயிட்டு ஈவ்னிங் வரேன்.. மதியை கவனமா பார்த்துக்கோ வள்ளி.. ” என்று கூறிவிட்டு சென்றார்..
அவர் சொன்னது போன்றே வள்ளிக்கு உதவிக்கு கட்சியில் இருந்து ஒரு ஆளை அனுப்பி வைத்தார்..
அதன்பின் மீண்டும் அவன் கண் முழித்த பின் பார்ப்பதற்கு அவனிடம் வாக்குமூலம் எடுப்பதற்கு போலீஸ் வந்திருந்தனர்..
சற்று நேரத்தில் மதி கண் விழித்துவிட்டான்..
போலீஸிடம் நடந்ததை வாக்குமூலமாக கூறினான்..
அவன் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து விட்டு கடைக்கு திரும்பும் பொழுது தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளாகியது என்பதை கூறினான்..
இந்த வாக்குமூலம் நேரடியாக அசிஸ்டன்ட் கமிஷனர் ராவணனிடம் தான் சென்றது..
மைனர் திருமணம்.. கஞ்சா கேஸ் என அனைத்தையும் போட்டு உள்ளே தள்ளியும் அவன் அடங்கவில்லை.. மீண்டும் தன்னிடமே வம்பு பண்ணியதை தாங்க முடியாமல் விபத்து மூலம் அவன் உயிரைப் பறிக்க நினைத்தான் ராவணன்.. ஆனால் உயிர் போகாமல் கை கால் முறிந்து படுத்த படுக்கை ஆகியதும் ராவணனுக்கு சிறு சந்தோஷத்தை தான் கொடுத்தது..
இதிலிருந்து குணமாகி அவன் எழும்போது மீண்டும் அடுத்த அடியை அவனுக்கு பெரிய அடியாக கொடுக்க வேண்டும் என ராவணன் காத்திருந்தான்..
உடனடியாக அந்த லாரி டிரைவரை பிடித்து விசாரித்த பொழுது குடிபோதையில் தெரியாமல் விபத்து நடந்ததாக கூறி கேஸை க்ளோஸ் பண்ணி விட்டார்கள்..
இந்த கேஸில் இருந்தும் ராவணன் சிக்காமல் பக்காவாக பிளான் பண்ணி தப்பித்து விட்டான்..
அன்று முழுவதும் அழுது அழுது வள்ளி ஓய்ந்து போனாள்..
மதி மிகவும் கஷ்டப்பட்டு அவளுக்கு சமாதானம் கூறி அவளை அமைதி படுத்தினான்..
“ ஏண்டி பொண்டாட்டி நீ அழுது என்னையும் கஷ்டப்படுத்துற?.. இந்த அளவோடு போய்டுச்சுன்னு சந்தோஷப்படு.. இந்த அழு மூஞ்சி பொண்டாட்டிய எனக்கு பார்க்க பிடிக்கவில்லை…” என அவளுடன் சில வம்புகள் பேசி அவளை ஓரளவுக்கு அழுகையை நிறுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வந்தான்..
தானம் கஷ்டப்பட்டு தன்னால் மாமனும் இன்னும் கஷ்டப்பட வேண்டாம் என அழுகையை தனக்குள் கட்டுப்படுத்திக் கொண்டு நன்றாக அவனை கவனித்துக் கொண்டாள்…
இனியும் வீட்டில் சொல்லாமல் இருப்பது சரி இல்லை.. என வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைத்து அம்மாச்சியிடம் நடந்ததை கூறி மகளை கவனமாக பார்த்துக் கொள்ளும் படியும் இன்னும் இரண்டு நாளில் டிக்கெட் வெட்டி வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதாகவும் கூறிவிட்டு வைத்தாள்..
அன்று மாலையே மலர் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என கேட்டு அழுததால் கோதை குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டி விட்டு அவரும் மகனை பார்த்து விசாரித்து விட்டு வந்தார்..
கோதை கோவில் சென்று மகனுக்கு நல்லபடியாக குணமாக வேண்டும் என விரதம் இருந்தார்..
மீண்டும் அந்த வீடு பழையபடி கலை இழந்து காணப்பட்டது..
உதவிக்கு வந்தவர் மூன்று வேலையும் இருவருக்கும் உணவு வாங்கிக் கொடுப்பது என சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு அங்கே இருந்தார்..
இரண்டு நாட்களில் மருத்துவமனையில் தங்கியிருந்து நல்லபடியாக கணவனை பார்த்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தாள் வள்ளி..
மதி வீல்சேரில் அமர்ந்து தான் வீட்டிற்கு வந்தான்..
தலையில் இருந்த காயம் ஓரளவுக்கு ஆறி இருந்தது..
காலும் கையும் தான் அதிக காயத்தோடு எந்த ஒரு அசைவையும் ஏற்படுத்த முடியாமல் இருந்தது..
மலர் போல் மதியையும் வள்ளி ஒரு குழந்தையாக தான் உணவு ஊட்டுவது குளிக்க வைப்பது பாத்ரூம் அழைத்து செல்வது அவனுக்கான அனைத்தையும் செய்து இப்பொழுது மல்லிகை தோட்டம் ரைஸ் மில் என போய் வேலைகளையும் பார்த்துவிட்டு வருவது என அனைத்தையும் அவளே முன் நின்று செய்தாள்..
மதிக்கு ராவணனை உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என வெறியாக இருந்தது..
ஏதோ கை காலில் அடிபட்டு அவன் பிழைத்துக் கொண்டான்.. உயிருக்கு ஆபத்து என்றால் அவன் குடும்பத்தின் நிலை என்ன என நினைத்து தான் அவன் கலங்கி போய் நின்றான்..
மனைவி தினமும் அவனை பார்த்து பார்த்து கண்ணீர் வடிப்பதை பார்த்து அவளுக்கு தெரியாமல் அவனும் கண்ணீர் வடித்தான்..
எழுந்து நடமாடும் அளவுக்கு கால் கொஞ்சம் குணமாகினால் போதும் மதி அந்த ராவணனை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவான்..