எதிர் கட்சி தலைவர் அவர் கட்சிக்கு சம்பந்தமில்லாத அவருக்கு ரொம்ப நம்பிக்கையான ஒருவரை அழைத்தார்..
அவரும் வந்து என்னவென்று கேட்க அவர் செய்ய வேண்டிய வேலையை அவருக்கு ஒப்படைத்தார்..
அதன்படி இராவணன் அன்று எங்கு இருப்பான் என தெரிந்து கொண்டு அங்கே அந்த நபரை அனுப்பினார்..
அன்று மாலை நேரம் 7:00 மணி இருக்கும்..
நிர்மலா விட்டு சென்றதற்கு பின் அவரும் வரவில்லை இவனும் சென்று பார்க்கவில்லை..
பெண் சுகம் கேட்ட உடலுக்கு பதவி காரணமாக உடலை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்..
எங்கேயும் போய் பெண்ணுடன் இருக்கும்பொழுது மாட்டிக்கொண்டால் பதவி பறிபோய்விடும் என்று ஒரு சின்ன பயம் இருந்தது..
நிர்மலாவும் இந்த ரெண்டு மாத காலத்தில் அண்ணனுடன் பேசி இரண்டு வீடு தள்ளி ஒரு சின்ன வீட்டுக்கு குடி வந்து வேலையும் ஒன்றை தேடிக்கொண்டார்..
முன்பு நடந்தது அனைத்தையும் விட்டுவிடலாம்.. ஆனால் ராவணன் ஒரு கொலைகாரன் என தெரிந்தும் அவனுக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்து தன் வாழ்க்கையை பாலாக்கி விட்டதாக அண்ணனிடம் கேட்டு வாய் தர்க்கம் பண்ணினார்..
இவ்வளவு பிழை செய்திருந்தும் தனக்கு கீழ் இருப்பான்.. என்ற நம்பிக்கையில் தான் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததாக அவரும் கூறினார்.. ஆனால் அவர் எவ்வளவு சமாதானம் கூறியும் அதை நிர்மலா ஏற்றுக்கொள்ளவில்லை..
தான் தனியாக சொந்த காலில் நின்று தன் பிள்ளைகளை வளர்க்கப் போவதாக கூறினார்..
இனி ஒரு திருமண வாழ்க்கையோ அண்ணன் என்னும் உறவு மீதும் நம்பிக்கையோ வேண்டாம் என முடிவு செய்து விட்டார்..
நிர்மலா இப்படி ஒரு முடிவு எடுத்ததும் கமிஷனரின் மனைவிதான் நிர்மலாவிடம் மிகவும் பணிவாக பேசினார்..
இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தூர இடத்திற்கு போய் அங்கும் கஷ்டப்படாமல் தங்களுக்கு அருகே ஒரு வீடு பார்த்துக் கொண்டு இருக்கும்படியும் வேலைக்கு செல்லும் போது பிள்ளைகளை இங்கு விட்டு விட்டு செல்லும்படியும் அவர் பார்த்துக் கொள்வதாகவும் கூறி கெஞ்சி கேட்டார்..
இந்த யோசனை நிர்மலாக்கும் கொஞ்சம் சரி என்று பட்டதால் அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சின்ன வீட்டை வடைக்கு எடுத்து இருந்து கொண்டார்..
அவருடன் அலைபேசி தொடர்பில் இருக்கும் மதி தான் அவருக்கு வேலை ஒன்று ஏற்பாடு பண்ணி கொடுத்தான்..
அவரை அவன் கடையிலேயே வேலைக்கு வைக்கலாம் ஆனால் அதுவும் நாளைக்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் வேறு ஒரு கடையில் கணக்கு எழுதுவதற்கு நிர்மலாவை வேலையில் வைத்தான்..
சொந்த உழைப்பில் இனி நிம்மதியாக ஒருவாய் உணவாவது உண்டு யாருக்கும் பயப்படாமல் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தைரியமாக இனி வாழ்வார்..
கமிஷனர் தங்கைக்கு மிகவும் துணையாக இருந்தார்..
நிர்மலா வீட்டை விட்டு வந்ததிலிருந்து ராவணன் இன்னும் அழைக்கவில்லை.. ஆனால் ராவணனுக்கு நிர்மலாவுடன் இனி வாழும் எண்ணம் இல்லை விவாகரத்துக்கு போட வேண்டும் என முடிவு செய்து கொண்டார்..
கமிஷனர் ராவணன் மட்டும் வந்து ஏதாவது பிரச்சினை பண்ணட்டும் அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தார்.. ஆனால் அவன் வரவும் இல்லை பிரச்சினை பண்ணவும் இல்லை..
தற்பொழுது இல்லாட்டிலும் அவன் குணத்திற்கு தங்கை அவனை திட்டி வந்ததால் கட்டாயம் தங்கைக்கு ஏதாவது ஒரு பிரச்சினை கொடுப்பான் என மிகவும் கவனமாக தான் நிர்மலாவை பார்த்துக்கொண்டார்..
ராவணன் தான் மதியை விபத்துக்குள்ளாக்கியது என்பது கமிஷனருக்கு தெரியும்.. ஆதாரம் கிடைக்கட்டும் அவனை தூக்கி உள்ளே வைப்பதற்காக காத்திருந்தார்..
அன்றைய அவனது டியூட்டி நேரம் முடிந்ததும் வழமையாக குடிக்கும் மதுபான கடைக்கு வந்திருந்தான் ராவணன்..
அவனுக்கு அடுத்த மேசையில் தான் தலைவர் அனுப்பிய அந்த நபரும் இருந்தார்..
அவர் ஓரளவுக்கு கொஞ்சமாக குடித்தார்..
அதன் பின் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தார்..
அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றதும் பேச ஆரம்பித்தார்..
“ ஹலோ. பேசுறது கேட்குது சொல்லுடா. ஆமாம் டா நம்ம போட எடுத்த அந்த மதியை பார் யாரோ போட்டுட்டாங்க.. அந்த புண்ணியவான் யாருன்னு தெரியல.. நமக்கு வேலை வைக்காமலுக்கு நம்ம வேலையை அவனே முடிச்சிட்டான்.. பாரேன் அப்படி இருந்தும் இப்ப எழுந்து ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டானாமே.. எலக்சன்ல வேற நிக்க போரானாம். இந்த தகவல் தெரியுமா உனக்கு?.. ” என்றான்..
அந்த பக்கம் பேசுபவன் பேசுவதை ராவணன் கேட்க வேண்டும் என்பதற்காக போனை ஸ்பீக்கரில் போட்டு பேசினார்..
“ ஓஹோ இவ்வளவு தூரம் வந்திருச்சா.. இவ்வளவு நடந்தும் அவனுடைய கொழுப்பு அடங்கவில்லை பாரேன்.. அவனை வேரோட அழிக்கிறதுக்கு தான் நம்ம காத்திருக்கும் போது எப்படி டா அவன் எழுந்து நடமாட முடியும்.. எலக்சன்ல நிக்க முடியும்.. பாவம் சின்ன குழந்தையும் இரண்டு பொம்பளை இருக்கேன்னு நினைச்சி அந்த குடும்பத்தை ஒன்னும் பண்ணாம விட்டால் இந்த பொண்ணு பாரு அவனுக்கு பக்க துணையாக இருந்து புருஷன காப்பாத்தி கொண்டு வந்துருச்சு.. இனி பாவம் பார்ப்பது நம்ம தொழிலுக்கு சரி இல்லை..
நம்ம தனியா செய்யாம அவனை போட நேரத்தோட முயற்சி செஞ்ச அந்த ஆளோட கூட்டு வச்சிக்கிட்டு சேர்ந்து பண்ணினோம்னா சிறப்பா அவனை அழிக்க முடியும்.. ஆனா அந்த ஆள் யார் என்று தானேடா தெரியல.. போலீஸ் கேஸ் க்ளோஸ் பண்ணின மாதிரி அந்த லாரி டிரைவர் எல்லாம் குடிச்சுட்டு வந்து ஆக்சிடென்ட் பண்ணினான் என்று சொன்னது எல்லாம் சும்மா பொய் வேலைன்னு தெரியும் நமக்கே.. எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை.. வேற ஒன்னும் பண்ண முடியாது.. அந்த ஆளு நம்ம கிட்ட கை கொடுத்தால் ஈஸியா அவனை அழிக்கலாம்.. அப்படி இல்லையா அடுத்த முறையும் நம்ம கொல்ல முயற்சி செய்வோம்.. அவனை அழிக்க முடிஞ்சா சந்தோசம்.. இல்லாட்டி தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம்..
அவன் பரம்பரையே இருக்க கூடாது அவன் நமக்கு பண்ணின வேலை அப்படி..
இனி நம்ம எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு ஸ்டெப் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. போலீஸ் கிட்ட சிக்க கூடாது.. ஆனாலும் அவனையும் கச்சிதமா முடிக்கணும்.. சரிடா அவனை எப்ப முடிக்கலாம் என்று யோசிச்சு முடிவெடுப்போம்.. அவனும் கால் நல்லா சுகமாகி வீட்டை விட்டு வெளியே வரணுமே… அடிபட்டதால பொட்டை மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான்..” என்றார்
“ பயந்துட்டானோ என்னவோ யாருக்கு தெரியும்.. எங்க போக போறான் நம்ம கையில சிக்காம.. கொஞ்சம் பொறுமையா இருப்போம்.. சரிடா நான் வச்சிடுறேன்.. ” என்று கூறி தலைவர் அனுப்பிய அந்த நபர் அழைப்பை துண்டித்துவிட்டு ஓர கண்ணால் ராவணனின் ரியாக்சன் என்னவென்று பார்த்தார்..
ராவணன் உன்னிப்பாக அவர் பேசியதை தான் கேட்டுக் கொண்டிருந்தான்..
சரி ஆடு நம்ம வலையில் சிக்கிடுச்சு.. கொஞ்சம் பொறுமையா இருந்தா தலைவர் சொன்ன மாதிரி எல்லாமே நடந்துரும் போல இருக்கு..என்று நினைத்து ராவணன் அவர் இருந்த மேசைக்கு வரும் வரை காத்திருந்தார்..
ராவணனின் முகத்தில் பல யோசனை முடிச்சுகள்..
பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தான்..
எவ்வளவு முயற்சி செஞ்சும் பீனிக்ஸ் பறவை போல் திரும்பத் திரும்ப மதி எழுந்து வருவதை பார்த்து ராவணனும் மிகவும் கடுப்பாக இருந்தான்..
நம்மளை விட இவனுகளுக்கு ஏதோ சிறப்பா பண்ணி இருப்பான் போல இருக்கு அந்த மதி .. அதுதான் அவனுங்க அவனை போட்டே ஆகணும்னு முடிவோட இருக்காங்க..
என நினைத்துக் கொண்டு நான் போலீஸ் உயர் அதிகாரி நம்மிடம் யாரும் வாலாட்ட முடியாது எனும் மிதப்பில் அந்த நபர் நினைத்தபடியே அவர் எதிரே போய் அந்த மேசையில் அமர்ந்தான்..
நாமும் இத்தனை வருடமாக பல விதங்களில் தனியாக முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை..
இந்த முறை அவனுக்கு இருக்கும் மற்றொரு எதிரியுடன் கூட்டு சேர்ந்து அவனை போட்டுத் தள்ள முயற்சி செய்யலாம் என நினைத்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தான்..
எதிரிக்கு எதிரி நண்பன் எனும் ஃபார்முலாவை கையாண்டான்..
இவர்களை வைத்து காரியம் சாதித்து விட்டு நாமே தூக்கி உள்ளே போட்டு விடலாம்.. நம்மிடம் எதிர்த்து பேசினால் என்கவுண்டர் பண்ணி விடலாம் என நினைத்துகொண்டான்..
“ ஹலோ நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ராவணன்.. இவ்வளவு நேரமும் நீ பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு தான் இருந்தேன்.. அப்படி அந்த மதியை நீங்க இவ்வளவு வெறியா கொல்ற அளவுக்கு அவன் உங்களுக்கு என்ன செஞ்சான்.. ” என்றான்..
“ சார் அது எதுக்கு உங்களுக்கு..”
“ டேய் நான் போலீஸ்.. இவ்ளோ நேரம் நீ ஒரு ஆள கொலை பண்றது பத்தி பேசிகிட்டு இருந்த.. அதை கேட்டதுமே உன்னை அள்ளி தூக்கிட்டு போய் ஜெயிலில் போட்டு இருக்கனும்.. இப்ப உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்.. அதனால தான் இவ்வளவு பொறுமையாக இருந்து பேசிகிட்டு இருக்கேன்.. வெளியே போய் கேட்டுப்பாரு இந்த ராவணன் எப்படிப்பட்டவன்னு எல்லாரும் சொல்லுவாங்க.. இப்போ நமக்கு இடையில் டீல் பேசலாமா?.. ” என்றான்..
“ சார் பிளீஸ் எதுவும் பண்ணிடாதீங்க சார்.. நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்.. ” என்று அவனுக்கு முன் பயந்த மாதிரி காட்டிக் கொண்டார்..
பண போதையில் பதவி போதையில் இருப்பவர்கள் அதற்கு கீழ் பட்டவர்களை பயந்துவிட்டார்கள் என முட்டாள்தனமாக நினைத்து தவறு செய்வார்கள்..
ராவணன் அந்த வகையில் பதவி போதையில் மிதந்தான்..
அவனுக்கு முன் இருப்பவர் பயந்தது மாதிரி நடித்ததை உண்மையாகவே தன் பதவியை நினைத்து பயந்து விட்டான் என்று தவறாக நினைத்து எதிர்பார்த்தது போன்று அவன் வாயால் அவன் இதுவரை மதிக்கு செய்தது அனைத்தையும் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தான்..
கஞ்சாவை மதியின் கடையில் வைத்து அதை பிடித்தது..
கமிஷனரின் மகனுக்கு தன் மைனர் மகளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தது..
மதி வந்து மகளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டது..
மைனர் பொண்ணை திருமணம் செய்ததால் அரெஸ்ட் பண்ண வைத்தது..
மகளைப் பற்றி மதிக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது அவள் மைனரா மேஜரா என்றும் அவனுக்கு தெரியாமல் தான் திருமணம் செய்தான் என்று கூறினார்..
முதல் மனைவி சந்திராவிற்கு இவ்வளவு காலமும் தான் செய்த கொடுமை அவர்கள் குடும்பத்திற்கு செய்த கொடுமை..
அனைத்திலும் இருந்து மதி தப்பியதும் லாரி மூலம் ஆக்சிடென்ட் பண்ண வைத்தது..
அந்த ஆக்சிடெண்டில் அவன் இறந்து விடுவான் என நினைத்தால் மீண்டும் உயிர் பெற்று வந்து விட்டான்…
அவர்தான் ஆக்சிடென்ட் பண்ணியது என ஒரு சிறு சந்தேகம் மதிக்கு வந்தாலும் இனி மதி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை விட்டு வைக்க மாட்டான் என தனக்கு தெரியும்..
அவன் எழுந்து நடமாடி தன்னை குறி வைக்க முந்திக் கொள்ளும் முன் தான் மீண்டும் அவனை படுகுழியில் அல்லது புதை குழியில் தள்ள வேண்டும் என தீர்மானித்தார்..
அதற்கு தற்பொழுது அவரின் உதவி தேவைப்படுவதாக கூறினார்..
அவர் சொல்லும் திட்டத்தின் படி மீண்டும் மதியை கொலை முயற்சி செய்து அவனை கொன்று விட்டால் அந்த கேஸில் இருந்து தப்பிக்க வைப்பதாகவும் ஐந்து லட்சம் பணமும் தருவதாக கூறி டீல் பேசினான் ராவணன்…
“ சார் நீங்க சொன்னபடியே செய்கிறோம் .. அவன் வெளிய வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும் சார்..அவன் வீட்டை ஃபாலோ பண்ணி அவன் வீட்டை விட்டு எப்ப கால் எடுத்து வைக்கிறானோ அன்னைக்கு அவனுக்கு திரும்பவும் சம்பவம் பண்ணிடுறோம் சார்..” என்று பவ்யமாக கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்..