தலைவர் சொன்னபடி அனைத்தும் பக்காவாக அவரது அலைபேசியில் பதிவாகி இருந்தது..
அதை தான் அவர் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறார்..
ராவணனுக்கு சொன்னது போன்று மதியை கொலை பண்ணவும் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது எலெக்சனுக்கும் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது..
வள்ளியை வைத்து இந்த வீடியோவை டிஎஸ்பி யிடம் ஒப்படைத்து அதன் மூலம் ஆக்சன் எடுக்கும்படி தீர்மானித்து வைத்திருந்தார்..
மீனாட்சி வீட்டில் மீனாட்சி தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து கொண்ட அன்றுதான் சந்தோசமாக இருந்தாள்..
அதை எப்பொழுது கணவனிடம் தெரியப்படுத்தக் கூடாது என மாமியார் சொன்னாரோ அப்பொழுது அவளின் சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது..
வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு இல்லை என பொய் சொல்லும் அவலம் எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது..
இதை வீடியோ காலில் தினமும் பேசும் கணவனிடம் இருந்து எப்படி மறைக்கப் போகிறேன் என்பதே அவள் யோசனைக்கு பெரிய காரணம்..
பாண்டியின் அன்னையை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது..
சொல்வதை செய்யக்கூடிய ஆள் தான்..
ஐந்து மாதம் பிள்ளை வயிறு தெரியும் அளவிற்கு பாண்டியை ஓரளவுக்கு சமாளிக்கலாம் அதன் பின் எப்படி வீடியோ காலில் வயிற்றை காட்டாமல் முகத்தை மட்டும் காட்டி பேசுவது..
முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் தான் வயிற்றுப் பிள்ளையை கணவனுக்கு தெரியாமல் அவள் மறைக்க வேண்டும்..
நல்ல வேளை அவன் நாட்டில் இல்லை..
அவள் என்ன சொன்னாலும் அவன் நம்புவான்..
மற்ற கணவன்மார் போன்று தவறான முறையில் மனைவியை பார்க்க தூண்ட மாட்டான்..
அவன் மேல் அந்த ஒரு நம்பிக்கை இருந்தது.. அதனால் முகத்தை மட்டும் காட்டி பேசி சமாளிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..
எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விட்டு வேலைகளும் காலேஜும் என அவள் நாட்கள் மேலும் அந்த ஒரு மாதமும் கடந்தது..
தாயின் கஷ்டம் அறிந்தோ என்னமோ வயிற்றில் இருக்கும் பிள்ளை அவளுக்கு எந்த ஒரு பேறுகால தொல்லையையும் கொடுக்கவில்லை..
அவளுக்கு வழமை போன்று வேலைகளை செய்ய முடிந்தது..
மதியும் நன்றாக உடல் பயிற்சி செய்து தேவையான அளவிற்கு மருத்துவ ஆலோசனை பெற்று நன்றாகவே இந்த ஒரு மாதத்தில் உடல் தேறி ஓடி ஆடி நடமாடும் அளவிற்கு வந்து விட்டான்..
அதாவது சொல்லப்போனால் பழைய மதியாக வந்துவிட்டான்..
அதற்கு முழு முதல் காரணம் அவன் மனைவியின் கவனிப்பும் அன்பும் காதலும் தான்..
மலர் நன்றாக தந்தையுடன் தினமும் விளையாட ஆரம்பித்து விட்டாள்..
அவர்களின் வாழ்க்கை இப்படியே செல்லும் போது வேட்பு மனு தாக்கல் பண்ணுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது..
தற்பொழுதுதான் மகன் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறான் இந்த தேர்தல் எல்லாம் வேண்டாம் இனியாவது குடும்பத்தில் சந்தோஷமாக இருவரும் வாழட்டும் என எவ்வளவோ சொல்லி பார்த்தார் கோதை..
தாய் பேச்சை இந்த விஷயத்தில் மதி கேட்பதாக இல்லை..
சாதாரன மனிதனாக இருந்து எவ்வளவு தான் போராடினாலும் ராவணன் பதவியில் இருக்கும் பொழுது அவனை ஒன்றும் செய்ய முடியாது..
இதுவே ஒரு பொறுப்பில் ஒரு பதவியில் இருந்தால் பதவியை துஸ்பிரியோகம் பண்ணுவதற்கு எதிராக அவன் கண்டனம் செய்ய முடியும்..
அவனும் வள்ளியும் எவ்வளவோ எடுத்து கூறினார்கள்.. ஆனால் கோதை முழு மனதாக சம்மதிக்கவில்லை..
வள்ளி பேசி பேசியே கோதையின் மனதை கரைத்தாள்..
இன்னும் இரண்டு நாட்களில் மதி வெளியே வர இருப்பதாக அவருக்கு தகவல் வந்தது என்று ராவணனுக்கு பொய் கூறி சமாளித்து வைத்தார்..
அடுத்த நாள் மாலை பத்திரிக்கை நிருபர் மற்றும் டீவி நிருபர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி எதிர்க்கட்சித் தலைவர் டிஎஸ்பி மதி வள்ளி என அனைவரும் முன் நின்றனர் அங்கு கமிஷனர் மற்றும் ராவணனும் பாதுகாப்பிற்காக நின்றார்கள்..
எதிர்க்கட்சித் தலைவரையும் மதியையும் பார்த்ததும் ராவணன் தேர்தல் அறிவிப்பு என்றுதான் நினைத்தான்..
இந்த அறிவிப்பு முடிந்து அவன் வீட்டுக்கு உயிரோடு செல்ல மாட்டான் என்று அந்த நபர் கூறியதை நம்பினான் ராவணன்..
அனைவரும் ஒன்று கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் பேச ஆரம்பித்தார்..
“ இங்கு எங்கள் அழைப்பை மதித்து வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.. நான் இப்ப ரொம்ப முக்கியமான விஷயம் பேச போறேன்..
இவர் எங்க கட்சியில புதிய உறுப்பினர் மதியழகன் கண்ணபிரான்..
இவர் நாளைக்கு ஆரம்பிக்க போற எம் எல் ஏ தேர்தல் போட்டிக்காக வேட்பு மனு தாக்கல் பண்ண போறார்..
எங்க தொகுதியிலேயே போட்டியிடப் போறார்..” என்று கூறினார்..
அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு பத்திரிக்கையாளர். “ என்ன தலைவரே இவர் கஞ்சா கேஸில் மாட்டி முன்ன ஒரு முறை ஜெயிலுக்கு போனவர் தானே.. இவரோட அக்கா கணவர் அதாவது நம்ம ஏசிபி ராவணன் சார் தானே இவரை கையும் களவுமா அரெஸ்ட் பண்ணினார்.. அப்படி இருக்கும் போது எப்படி இவர் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியும்.. இதுக்கு வாய்ப்பே இல்லையே சார்..” என்றார்..
“ பத்திரிக்கை நண்பரே உங்கள் கேள்வி சரியானதுதான்.. இதைப் பற்றி தெரியாமலா நான் இருப்பேன்.. எல்லாத்துக்கும் கைவசம் பதில் இருக்கு.. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பாருங்க.. இப்ப எல்லாருமே காபி வடை சாப்பிடுங்க.. ஆறுதலா அதை பத்தி பேசலாம்.. ” என்று கூறிவிட்டு அங்கே டிஎஸ்பி உடன் பேசிக் கொண்டிருந்தார்..
15 நிமிடத்திற்கு பின் மீண்டும் பத்திரிக்கை நிருபர்களுக்கு முன்பு பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்..
“ இத்தனை வருஷமா எதிர்க்கட்சி தலைவரா இருக்கிற நான் குற்றம் செய்து சிறை சென்ற ஒருவரை கட்சியில் சேர்த்த உடன் நம்பிக்கையில் பதவி கொடுக்கவோ மாட்டேன்.. என் கையில் அவர் குற்றம் செய்யவில்லை என்பதற்கான சரியான ஆதாரம் இருக்கிறது என்று அர்த்தம்.. அந்த ஆதாரம் உங்கள் பார்வைக்கு..” இந்த வீடியோ இருந்த பெண் ட்ரைவை கொடுக்க ப்ரொஜெக்டர் திரையில் ராவணன் பேசிய வீடியோ ஓட ஆரம்பித்தது..
இந்த வீடியோ ஓட ஆரம்பித்ததுமே இராவணன் உணர்வுகள் துடைத்த முகத்தோடு சிலையாக நின்ற இடத்தில் நின்றான்..
அந்த வீடியோ உடனடியாக அனைத்து ஊடகங்கள் மற்றும் டீவிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது..
இப்படி வசமாக சிக்குவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை..
இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கையும் களவுமாக மாட்டி விட்டான்..
உடனடியாக டிஎஸ்பி நீதிபதியின் வீட்டிற்கே பத்திரிகையாளர்களுடன் சென்று அந்த நேரடி ஒளிபரப்பை காட்டி மதி குற்றமற்றவன் என்று நிரூபித்து அவன மேல் போட்ட எஃப் ஐ ஆர் ஐ கேன்சல் செய்ய வைத்து அவன் சாதாரண குடிமகன் குற்றமற்றவன் என்று கூறி அவன் தேர்தலில் நாளை வேட்பு மனு தாக்கல் பண்ணலாம் என்று சட்ட பூர்வமாக நிரூபித்தார்..
ராவணன் செய்த அனைத்து குற்றங்களும் தெரிந்து அதற்கு துணை போன காரணத்திற்காக கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்..
ராவணனுக்கு பதவியை தவறாக பயன்படுத்திய காரணத்தால் குற்றத்திற்கான தண்டனையும் பதவியும் பறிமுதல் செய்யப்பட்டது..
சந்திராவை கொடுமை செய்த குற்றம்.. பொய்யாக கஞ்சா கேஸ் மதியின் மேல் போட்ட குற்றம்.. மைனர் பொண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடிவெடுத்த குற்றம்.. மதியின் விபத்து வரை அனைத்தையும் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது..
10 ஆண்டுகள் வரை இனி மதிக்கு இராவணனின் தொல்லை இல்லை…
அதன்பின் அவன் உயிரோடு இருந்தால் திருந்துவானா?. இல்லையா?. என்று தெரியவில்லை..
இல்லை ஏதாவது நோய்கள் வந்து உயிர் பிரிந்தால் வாழ்கை மொத்தமாக இனி வள்ளியும் மதியும் நிம்மதியாக இருக்கலாம்..
அதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் வழி செய்து விடுவார் என்று மதிக்கு நன்கு தெரியும்..
மறுநாள் சந்தோசமாக கோதையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வள்ளியையும் அழைத்துக் கொண்டு தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார்கள்..
அங்கே அவனுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் வந்து காத்திருந்தார்.. அவரிடமும் காலில் விழுந்து ஆசீ வாங்கிக் கொண்டான்..
எந்த தடையும் இல்லாமல் நல்ல நேரத்தில் வேட்பு மனு தாக்கல் வெற்றிகரமாக செய்து முடித்தான் மதி..
அவனை சுற்றி இருந்த அனைவர் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி தெரிந்தது..
இது அனைத்திற்கும் காரணம் எதிர்க்கட்சி தலைவர் அவன் மீது வைத்த நம்பிக்கையும் பாசமும் தான்..
அடுத்தடுத்து தொடர்ந்து பிரச்சாரங்களும் தேர்தல் கூட்டங்களும் தான் நடைபெற்றது..
நிர்மலாவிற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் நிரந்தரமான ஒரு நல்ல வேலையை மதி ஏற்பாடு செய்து கொடுத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு சந்தோசமாக தன் சொந்த காலில் யாரையும் எதிர்பார்த்து இல்லாமல் வாழ்ந்து வருகிறார்..
அதை பார்த்த கமிஷனர் மனதளவில் கஷ்டப்பட்டாலும் தங்கை முகத்தில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி மற்றும் நிமிரவு இராவணனிடம் இருந்தால் கிடைக்காது என்பதை உணர்ந்தபடியால் அவரும் அமைதியாக இருந்தார்..
தங்கைக்கு தெரியாமல் தேவையான சில உதவிகளையும் செய்து வந்தார்..
கமிஷனர் சஸ்பென்ஸில் இருப்பதால் குடும்பத்தோடு சந்தோஷமாக தான் இருந்தார்..
எசிபி யாக கம்பீரமாக அந்த ஜெயிலில் வளம் தந்த ராவணன் இன்று ஒரு கைதி உடையில் கைதியாக கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்தான்..
ஒருமுறை மதியும் வள்ளியும் அவனை பார்க்க சென்றார்கள்..
ராவணன் அவர்களை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறி அனுப்பி விட்டான்..