கணவன் மனைவி இருவரும் கட்டி கொண்டு நிற்பதை பார்த்து சிறுசும் பெருசும் அதிர்ந்து நிற்க. கணவனது இறுக்கத்தில் கண் மூடி சிரித்தவள் மெதுவாக கண்ணைத் திறக்க. எதிரில் இவர்களை கண்டு அதிர்ந்து துள்ளி விலகினாள்.
அவளது சிறு அதிர்வு கூடிய துள்ளல் எரிச்சலை கொடுக்க “எம்புட்டு விளக்கம் கைக்கிறேன் தள்ளி போறவ கிட்டத்துல வாடி எலும்பி” என்றவன் மீண்டும் நெருங்க பதட்டத்தில் பேச்சு வராமல் பின்னாடி பாரு என்பது போல் கண்ணைக் கண்ணைக் காட்டினாள்.
அதில் பெரும் போதை கொண்டவன் “என்ன புள்ள கண்ண காட்டி கண்ணி வைக்கப் பார்க்குற அதெல்லாம் எம்ம கிட்ட ஆகாது நான் உம்ம விடக் காவாளி” என்றதும்.
“அது இம்புட்டு வருஷம் செண்டு இப்போ தானே தெரியுது எங்களுக்கு” என்று பின்னிருந்து குரல் வர இப்போது தம்பிரானுக்கும் பதட்டம்.
“ஐயோ!… இவீங்களா இதுக்குத் தேன் கண்ண காட்டுனால” முனகியவன் வழமையான சிரிப்பை சிரித்து “வாக மச்சான்” என்க.
அவனைத் தொடர்ந்து போதும் பொண்ணும் சிரித்து “வாக அண்ணே!” என்றழைக்க இருவரது சிரிப்பையும் மாறி மாறி பார்த்த சிறுசு.
“குடும்பமா சிரிச்சு எங்களைக் கிழிச்சு கிட்டு திரிய வைக்கிறீகளா? நீ என்னம்மா இவனோட சேர்க்க” சிறுசு பேச்சில் தம்பிரான் சிரிக்கப் போதும் பொண்ணு பதறி,
“ஐயோ அண்ணே அப்படி இல்ல”
“ப்ச் என்ன மச்சான் கொதிச்சி கிடக்க வா வந்து இங்கன உட்காரு” தம்பிரான் அமர்ந்து கொண்டு இருவரையும் அழைக்க.
“கொதிச்சித்தேன் போயி இருக்கோம்”,பெருசு.
“இப்போது போதும் பொண்ணுக்கு லேசாகப் பதட்டம் “ஏன் அண்ணே என்ன ஆச்சு?”.
“விடியக்குள்ளையும் உம்ம அக்கா ராணி வூட்டுக்கு வந்து ஒரே ஒப்பாரி” சிறுசு.
“ஐயோ எதுக்கு? ஏன்? ராணியாம்மா அங்கன வந்துச்சு?”
“இன்னைக்குச் சரக்கு வர நாளு வெள்ளனே போல முண்டு நானும் அண்ணனும் கிளம்பி வாசலுக்கு வந்தா…ராணி அக்கா நிக்குது எங்களைப் பேசவே வுடல அழுது அலப்பறை பண்ணி புடுச்சு”, சிறுசு.
“சங்கதிய கேட்டு அப்பாரு நல்லா வஞ்சு புட்டாக”.
“ஏன் அண்ணே? என்ன ஆச்சு? எதுக்கு உம்மக் கிட்ட சண்டை கட்டுச்சு” இத்தனைத் தூரம் இவர்கள் பேசி கொண்டிருக்க. இவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தம்பிரான் மேல் வெறியே வந்தது.
“எடுவே அந்தக் கட்டைய வக்காளி வகுந்து புடுறேன் ராணியக்கா சொன்ன சங்கதிய கேட்டு உசுர கையில புடுச்சு ஓடியாந்தா பொஞ்சாதிய கட்டி கிட்டுப் பகுமானம் காட்டுற நீ! உம்ம என்ன செய்ய?”
“இது என்ன மச்சான் வம்பு? கருப்பட்டிய கையில கொடுத்து கண்ணுல தின்ன கணக்கா கண்ணாலத்தைப் பண்ணிப்புட்டு கட்டிக்கிட கூடாதுனா நான் என்ன செய்ய?”
தம்பிரான் பேச்சில் சங்கடப்பட்டு போன போதும் பொண்ணு ‘ஐய்ய என்ன இந்த மனுஷன் மானத்த வாங்குது’ மனதுக்குள் முனகி கொண்டாள்.
“நீ என்ன செய்யல? உம்ம கூட்டாளி பாலு கிட்ட என்னத்த சொல்லி வச்ச” பெருசு கண்டிப்பாகக் கேட்க.
“என்ன சொன்னேன்? என்று திரும்பி கேட்டவனைப் பார்த்து ஏகத்துக்கும் கொதித்த சிறுசு “எடுண்ணே எதையாவது பேச தெரியாம பேசி ஏழுரையைக் கூட்டி வச்சு புட்டு எகத்தாளத்த பாரு”
“மச்சான் புரியும் படி சொல்லுய்யா சத்தியமா செய்தி புடிபடல”
“அது எப்படிப் புடிபடும்?”
“ப்ச்”
“கண்ணாலத்துக்கு மறு நாள் பாலு கிட்ட என்னத்த பேசி வச்ச? எதுக்கு இந்தக் கண்ணாலம்னு பேச்சு வர அதுக்கு நீ என்ன சொல்லி வச்ச?” இப்போது பேச்சில் சிறு கடுமையைக் கூட்டி பெருசு கேட்க மெல்லமாக விடயம் பிடிபட்டது.
“அவந்தேன் கேட்டான் மனசுல பட்டதைச் சொன்னேன்”
“நல்ல வண்ணம் வண்ணமா வந்து புடும்” அதுவரை இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த போதும் பொண்ணுக்கு சங்கதியின் வேர் பிடிபட.
“அண்ணே என்ன ஆச்சு?”
“முதல மனுச்சுகிடும்மா இவனைக் கண்ணாலம் கட்டி வச்சு பெரும் பாவத்தைப் பண்ணி புட்டேன்” என்றதும் பொண்ணு சங்கடமாகத் தம்பிரானை பார்க்க அவன் முகத்தைத் தூக்கி கொண்டான்.
இந்தச் சில நாட்களில் தம்பிரான் குணம் சிலது கண்ணைக் கவர அதில் ஒன்று…. அவனுடைய குறுகலான பிடித்த வட்டத்தில் நான்கே நபர்கள் தான். அதில் தானும் என்பதை இன்னும் பெண் உறுதி செய்ய வில்லை.
முதலில் அம்மா வள்ளி, பிறகு அப்பா, அவர்களைத் தாண்டி சிறுசு பெருசு. அவனது பேச்சில் அதிகம் இடம் பிடிக்கும் நபர்கள் இவர்கள் நால்வர் தான். பிடித்தம் என்றால் எல்லை இல்லாத பிடித்தம்.
மற்றவர்கள் பேசினால் சீண்டினால் பேச்சை கண்டு கொள்ளாதவன்.இவர்கள் பேச்சுக்குச் செவி சாய்ப்பதும், கோபம் கொண்டால் சுருண்டு விடுவதும், உரிமை கொண்டு அவனது கோபத்தைக் காட்டுவதும்” என்றிருக்கச் சற்று வியந்து தான் போனாள்.
இவர்கள் நால்வரை விடப் பிடித்தம் கூடி போயி நிற்பது தன்னிடம் தான் என்று பொண்ணுக்குப் போகப் போகப் புரியும் போலும்.
“அண்ணே என்ன சொன்னாரு சொல்லுக?”
“அந்தக் கொட்டி பைய ‘எதுக்கு எம்ம தங்கச்சிய கட்டி கிட்டன்னு’ பேச்சு வாக்குல கேட்க. அதுக்கு இந்தக் கொட்டி பைய என்ன சொல்லி வச்சிருக்கான் தெரியுமா? பெருசின் கோபத்தைக் கண்டு தம்பிரானை திரும்பி பார்த்தவள் சிறு பயம் கொண்டு “என்ன?”
“சோறு போட, துணி துவைக்க அவனுக்குச் சேவகம் பண்ணத் தேன் நீ. இதுல பொறந்து வூடு இல்லனா அவ எங்கனையும் போக மாட்ட.
சண்டை கட்டுனா எம்ம கூடத் தேன் இருப்பா. நாளை மக்கா நாளு புள்ள பேரு அது இதுனு எதுக்கும் போக முடியாதுனு சொல்லி வச்சிருக்கான்.
அதோட விட்டானா அந்தப் பைய தேன் விவசத்தை இல்லாம ராவுக்கு என்ன சங்கத்தினு கேட்டா. இந்தப் பையலும் பொஞ்சாதி சொறிஞ்சு கொடுத்துச்சுச் சொகமா தூங்கி புட்டேனு சொல்லி வச்சிருக்கான்” என்றதும் அதிர்ந்த போதும் பொண்ணு தம்பிரானை பார்க்க.
“அவன் எம்ம சிநேகித்தேன்டி அதன் பேச்சு அப்படி? சிறு தடுமாற்றத்துடன் தம்பிரான் சொல்ல.
“பார்த்தியாமா? இவனை என்ன செய்ய?” மீண்டும் பெருசு கோபம் கொள்ள.
“ப்ச் அண்ணே இப்படி வந்து உட்காருக நான் சொல்லுதேன்”
“நீ என்னத்த சொல்ல இவந்தேன் சொல்லனும். உம்ம அக்கா தவிச்சு போயி எம்ம காலை கட்டிக்கிச்சு, துடிச்சுப் போயிட்டேன். இந்தப் பாவத்தை எங்கன போயி தொலைக்க” பெரும் வேதனையாகப் பேசிய பெருசு தளர்ந்து அமர. அவனுக்குக் குறையாத வேதனையைக் கண்ணில் தேக்கி அவனுடன் அமர்ந்து கொண்டான் சிறுசு.
இருவரது கோபமும் நியாயம் தான், ஆனால் தனது கணவன் பேசும் லட்சணம் இத்தனை நாட்களில் தனக்கு நன்கு பரிச்சயம் என்பதால் பொண்ணு நிதானமாக இருந்தது.
“நெசந்தேன் அண்ணே நம்பப் பள்ளி கூடத்துல படிச்சிருப்போம்ல நேர்கூற்று ஆயர்கூற்று” என்றதும் இருவரும் ஒரு சேர அதிர்ந்து.
“சேர்ந்த சேர்க்கை பேசுதோ? நாங்க என்ன பேசிகிட்டு கிடக்கோம்? நீ என்ன…?” அதிர்ச்சி விலகாமல் கேட்டான் பெருசு.
“செய்தி இருக்கப் போயித்தேன் பேசுறேன் நீக சொல்லுக”
“ஆமா இப்போ என்னம்மா? விட்டால் அழுகும் நிலையில் சிறுசு.
“அது மாதிரி தேன் இவர் பேச்சும் நம்பப் பேச்சுப்படி எடுத்து காட்டு சொல்லுதேன் ஒரு பேச்சுக்கு எம்ம அக்காவ எங்கனையோ பார்க்கிறாருனு வைங்க அதை இந்த மனுஷன் எம்ம கிட்ட எப்படி வந்து செல்லும் தெரியுமா?
அப்புச்சி பெரிய மகளைப் பார்த்தேன் நல்ல இருக்கும் போல” என்று நிறுத்த மீண்டும் அதிர்வு கொடுத்து சிறுசு “என்ன இது?”
இப்படித்தேன் அவரு பேச்சு.அப்புச்சி மக எனக்கு என்ன வேணும்?… ‘உம்ம அக்காளை பார்த்தேன் நல்லா இருக்காங்க’ இப்படி சொல்லாம.
‘நல்லா இருக்கும் போலனா’ நான் என்னானு எண்ணிக்க.என்ன இந்த ஆளு சத்தாப்பா பேசுதுன்னு தேன் தோணும்”
“சரித்தேன்?” இப்பொழுது பெருசு சிறுசு இருவருக்கும் சங்கதி லேசாக விளங்கியது.
“அது அவர் வழமை, குணம், பழக்கமுன்னு சொல்லலாம்” என்ற பெண்ணை ஆச்சிரியமாகப் பார்த்தனர்.
நாள் பழக்கத்தில் எப்படி சாத்தியப்படும் இந்தக் கணிப்பு?. கூடவே வளர்ந்த தங்களுக்கே அவனது குணம் தண்ணி காட்டி நிற்க.சின்னப் பெண் அவனை சித்திரமாக விரைந்தே விட்டாலே.
“அண்ணே! நீங்கன்னு பேச்சு… அது தேன் விளக்கம் வைக்கிறேன்.அது போக ராணியம்மா ரொம்பப் பயந்துக்கிடும்.எனக்கு இருக்குற ஒரே உறவு அது தேன். அது என்னைக் கொண்டு நோவ கூடாது பாருக”
எதுவும் தானே செய்யச் சோம்பேறி தனம், எதிர்பார்ப்பு சாஸ்தி,நான் நல்ல சம்பாரிப்பேன் உமக்கு வேண்டி செய்வேன் என்னைப் பார்த்துகிடு என்று நிறுத்தியவள் கொஞ்சமாகச் சிரித்து என்னை மட்டுமே பார்த்துக்கிடு”
அதத் தேன் அந்த லட்சணத்துல பேசி வைச்சிருப்பாரு.அண்ணனுக்கு அது விளங்கள… என்னை நல்லாத்தேன் வச்சிருக்காரு.
அப்பாருக்கு வேண்டி பேசுனேன். இப்போ தினமும் போயி பார்த்துப்புட்டு வாராருண்ணே. எம்ம வூட்டுல என்ன வேலை செய்வேனோ அதே தேன் இங்கனையும்.அவர் பேச்சுக்கு காது குடுக்காதீக.
அவள் பேச்சில் மனப் பயம் தெளிந்தாலும் சமாதானம் கொள்ள முடியவில்லை “நீ பொதுவுல அனுசரிச்சு புடுறம்மா” சிறுசு சொல்ல
“அப்படி இல்லண்ணே அம்புட்டு கூடப் பொறந்த பொறப்பு இருந்தும். ஏன்னு? கேட்க நாதியத்து இருந்தேன் எமக்கு நாந்தேன், அதே போலத் தேன் இவரும்” என்றவள்.
“அங்கன எம்ம வூட்டுல அம்புட்டும் பொம்பள புள்ளைங்க அதுங்க புருஷன், புள்ள, மாமியா மாமார்னு, கவனிப்பு.அவீங்களுக்குப் போகத் தேன் நானும் அப்பாரும் அவீங்களையும் தப்பு சொல்ல முடியாது.
இவங்க வயசு தொலைவு அதேன் இவுக கிட்ட நெருக்கமில்லை. அவுக இரண்டும் ஒரே வயசுல அதேன் கூட்டாளி கணக்கா சேர்க்கை.
வாசுகி அக்காக்கு குழந்தை புருஷன் அவுங்க கணக்கு சரி.
எஞ்சி இருக்குறது வேலன் மாமா தேன் அவருக்கும் பேச்சு பாசமும் எல்லை கட்டித்தேன் நிக்கும் செயல் வராது “ஒருவரி கணிப்பு வைத்து அசர வைத்தது பெண்.
அவரு பக்கமும் எம்மப் பக்கமும் ஒரே மாதிரி யானா சறுக்கல் அதேன்.இவருக் கூட என்னால சுளுவா போக முடியிது” என்றவள் ஒரு கணம் நிறுத்தி பல நொடிகள் மௌனம் கொண்டு.
“கண்ண மூடி கிட்டு சொல்லுவேன் வூடு தேடி வந்த வரம் நீக.வரத்தை கொடுத்த சாமி அவுக” என்றதும் அதுவரை இருந்த தவிப்பு, ஆத்திரம்,கோபம் இயலாமை, பதட்டம், பெரும் பயம், எல்லாம் அகல சிறுசு பெருசு இருவர் இதழ்களும் ஒன்று போல் விரிந்தது.
“அது சரி யோவ் மச்சான் என்ன மருந்து கொடுத்து புள்ளைய மயக்கி வச்சிருக்க” தனது அருகில் அமர்ந்திருக்கும் தம்பிரான் கழுத்தை வளைத்து பிடித்து இறுக்கிய வாறே பெருசு கேட்க.
“அம்புட்டும் ரகசியம் வரிஞ்சு கிட்டு வந்து வஞ்சீல உம்மக் கூட எமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு போயா அந்தாண்ட” என்று அவனது கையைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டவன் வேகமாகச் செல்ல.
“போயா வா!… பொண்ணு எடுத்தவன் மச்சான்”
“அதுக்கு முன்னாடி என் ஐயித்த மவன் என்றவன் மீண்டும் பெருசு முகத்திற்கு நேராக கை நீட்டி ப்ச் என்ன பேச்சு வேண்டி கிடக்கு பேச மாட்டேன்” சிறு பிள்ளை போல் முகம் தூக்கி செல்ல.
“அட உம்மத் தங்கச்சி கூட இப்படி போனகிகிட்டு போக மாட்டா நில்லுய்யா “என்று கேலி பேசியவாறே பெருசு செல்ல. சிறுசும் பொண்ணும் அவர்களைச் சிரிப்புடன் பார்த்தனர்.
“பரவாயில்லை என்னமோ எண்ணி வச்சேன் மச்சான் மானத்தைக் காப்பாத்தி புட்டான்” என்றவனை திரும்பி பார்த்தவள் மனம் கனிய.
“நல்ல மனுஷன் அண்ணே எமக்கு வேண்டியும் அதுக்கு வேண்டியும் பெரிய கானாவே வச்சிருக்கு. என்ன அது பேச்சுல எனக்கு தேன் பயந்து வருது” என்றவள் கணவனைப் பற்றி மேலும் சில தகவல்கள் சொல்ல.
பொண்ணு சொன்ன தகவல்களை கேட்டு அதிர்வு கொண்டு “என்னம்மா சொல்லுற?”
“ஆமாண்ணே!”
“இது என்ன வில்லங்கம் பண்ணிகிட்டே இருக்கு. இது யோசனை படி செஞ்சா? நீ தேன் பேச்சு வாங்கி நிக்கனும். இது என்ன வேலை?”
“அதெல்லாம் பேசி புட்டேன் நான் பார்த்துக்கிடுவேன்னு சொல்லுறாரு” சிறு கவலை குரலில் போதும் பொண்ணு.
“உமக்கு வேண்டி பேச்சுன்னா நானும் அண்ணனும் முன்னுக்கு வருவோம்,ஆனா இது அவீங்க குடும்பத்துக்குள்ள எங்க பொஞ்சாதிங்க கூடப் பேச முடியாதும்மா”
“பேச்சுனு வந்தா நான் பார்த்துக்கிடுவேன். நீ செய்யுன்னு மல்லுக்கட்டுது. நாந்தேன் இரண்டு நாளா போக்கு காட்டிக்கிட்டு கிடக்கேன்”
“இவன் என்ன இம்புட்டு வருசத்துக்குச் சேர்த்து வச்சு வஞ்சம் பண்ணிபுடுவான் போல இருக்கே. சரிம்மா பேச்சு வரட்டும் என்னானு பேசிக்கிடலாம் நீ யோசிக்காத”
“சரிண்ணே அப்புறம் ராணியம்மாகிட்ட நான் சந்தோசமா தேன் சொல்லிடுங்க அண்ணே”
“முத வேலை அதேன் பண்ண போறோம். முன் கூட்டியே மதுர காளி கோவிலுக்கு வர சொல்லி இருக்கேன்.அந்தப் பாலு பைய அவுக அம்மா எல்லாரும் வராக”
“ப்ச் என்னால தேன்”
“இது கடமை எமக்கு தங்கச்சி இல்ல நீ இருந்துட்டு போ” படக்கெனச் சொல்ல பெரும் உவகை கொடுத்த வார்த்தையை மனதுக்குள் பூட்டி வைத்துச் சிரித்துக் கொண்டால் பெண்.