இனிமையான மாலை வேளை போலும் வாசலில் உள்ள முல்லை கொடியின் மனம் நாசியில் நுழைந்து இதயத்தைத் தீண்டி, அவ்வீட்டு மக்களைச் சிலிர்க்க வைக்கப் போராடி தோற்றுக் கொண்டிருந்தது.
பட்டு புடவையில் பெண்கள் மஞ்சள், குங்குமம் சந்தனம் மணக்க குண்டு மல்லி கண் சிமிட்டி நின்றது. இன்று இரவு பரிசம் போட்டு நாளை திருமணம் என்ற நிலையில். அனைவரும் வேலன் வீட்டில் குழுமிருக்க வள்ளி மட்டும் தயாராகாமல் தர்ணா பண்ணி கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகப் போராடுகிறாள்கள் கணவன், மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள் நாத்தனார், அவர் கணவர் என்று வள்ளியிடம் வித விதமாகப் பேசி வைக்கச் செவியை இரும்பு சாவி கொண்டு பூட்டி வைத்தது போல அமர்ந்திருந்தார் வள்ளி.
“இந்தாருடி இப்போ என்னாங்குற வர முடியுமா? முடியாத?. விடிஞ்சா கண்ணாலத்த வச்சு கிட்டு மல்லு கட்டிக்கிட்டு கிடக்க” வேலன் உரக்க குரலில் பேசி கொண்டே வள்ளியை நெருங்க அவரும் அவருக்கு மேல கத்தினார்.
“எதுக்கு நான் வரணும்? இல்ல எதுக்குங்குறேன்? எம்ம கேட்டு பொண்ணு பார்த்தீகளா? எம்ம கேட்டு உறுதி கொடுத்தீகளா? எம்ம கேட்டு பூ வச்சீகளா? இல்ல எம்ம கேட்டு தேன் கண்ணாலம் தேதி குறிச்சீகளா? இப்போ மட்டும் எதுக்கு நானு வர முடியாது” என்று அவரும் கத்த.
“மதனி என்ன இது அண்ணே பேச்சுக்கு வேண்டி தேன் நானும் என் புருசனும் போனோம்”
“நான் நீங்க போனதை தப்பு சொல்லல பாரிஜாதம் எமக்குப் புடிக்கல அம்புட்டு தேன்” என்றதும் சிறுசுக்கும் பெருசுக்கும் கோபம் வந்தது.
“உங்க அப்பாரை விட்டு எங்க அண்ணனுக்குப் பேசி முடிக்கச் சொல்லுக” என்றதும் வாசுகி அதிர கோபமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பெருசின் முகம் இப்போது மனைவியின் பேச்சில் பூவாக மலர்ந்தது.
‘அப்படி போடுடி என் மாமன் பெத்த மயிலே’ மனைவியை மனதுக்குள் கொஞ்சி கொண்டான்.
வாசுகி,”என்ன பேசுறீங்க மதனி அது எப்படி முடியும்?”
“ஏன் முடியாது?” இப்போது அல்லியும் சேர்ந்து கொண்டாள்.
வாசுகி பதில் சொல்ல முடியாமல் தவிக்க. அவளது நிலை கண்டு செந்தில் வேகமாக “அவீங்க வூட்டுல அரசாங்க வேலையா பாக்குறாங்க அல்லி. அந்த புள்ள அண்ணனுக்கு தோது படாது” என்றதும் சிறுசு.
“இம்புட்டு நேரம் பேசாம தானே இருந்தீக மச்சான் இப்போ என்ன பொஞ்சாதிக்கு வக்காலத்து” என்றதும் சிறு பதட்டம் வர சுற்றி உள்ளவர்களைப் பார்த்துக் கொண்டே பின் வாங்கினான் செந்தில்.
பெருசு,”பொறுப்பை கிடாசி புட்டு திரிங்க. வூட்டுல நீங்களும் பொண்ணு பார்க்க மாட்டிங்க பார்த்து வச்சாலும் ஆயிரம் பகுடி பேசுவீக. மச்சானுக்கு நல்லது செய்யிற எண்ணம் இருக்கா? இல்லையா?” என்று வீடே அதிர கத்த வள்ளி மருமகனது கோபத்தைக் கண்டு எழுந்ததே விட்டார்.இது போல் கோபம் கொண்டு அவர் பார்த்ததே இல்லை போலும்.
அதே கோபத்துடன் வள்ளியிடம் திரும்பி “இந்தாருங்க ஐத்த நம்பப் புள்ளைய குறையா பேசித்தேன் கண்ணாலம் தட்டி போகுது,
அப்போ நம்ம என்ன செய்யனும்? என்று கேட்க பதில் சொல்ல தெரியாமல் அவனையே ‘என்ன செய்ய?’ என்பது போல் பார்த்து வைத்தார் வள்ளி.
சிறு இடைவேளை விட்டு அவனே தொடர்ந்தான் “எதாவது ஒன்னை அனுசரிச்சு போகணும்.அந்தப் புள்ளைக்குக் குறைன்னு பார்த்தா காசு பணந்தேன்” என்றதும் வெடுக்கென.
“அது மட்டுமா பெரிய தம்பி குறை?”
“சரி எல்லாமே குறை தேன். அந்தப் புள்ள குறையச் சுளுவா சரி பண்ணிபுடலாம்… மச்சானுக்கு என்ன வழி? எந்த ஊரு ராணி காத்துக்கிடக்கா?” என்றதும் வள்ளி தம்பிரானை பார்க்க. அவன் இன்னுமே குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தான்.
“என்ன குறை எம்ம மவனுக்கு. இன்னும் காத்து கிடந்தா கண்டிப்பா ராணி கணக்கா பொண்ணு வரு…” வள்ளி முடிப்பதற்குள் வேலன்.
“நீ பாடுனா பாட்டையே பாடு. நீ ஒன்னும் வர வேணா முடி. எங்க இவனைப் பெத்த ஆத்தானு ஆரும் கேட்டா செத்து போச்சுன்னு சொல்லிக்கிடுறேன்”என்றதும் அனைவரும் அதிர.
அதுவரை விளையாடி கொண்டிருந்த தம்பிரான் தந்தையைக் கண்டிக்கும் பொருட்டு வெகு அழுத்தமாக “ப்பா!…” என்று அரட்டினான்.
கணவனது கடுமையில் வள்ளி வாய் விட்டே அழுக ஆரம்பித்து விட்டார். செழியனுக்கு இங்கு நடக்கும் காட்சி எரிச்சலை கொடுக்க வேகமாக வெளியில் சென்று விட்டான்.
செல்வம், “மச்சான் என்ன இது? நல்ல காரியம் பண்ணும் போது பேசுற பேச்சா?”
“இதுங்கள வச்சுக்கிட்டு எங்க நல்ல காரியம் பண்ண மச்சான். எம்ம புள்ளைக்கு என்ன வயசு? அது சுக பட வேணாமா?
உங்களுக்குத் தெரியாது மச்சான் இவளுக்கு அவனைக் கொண்டு ரொம்ப அலட்சியம்” மீண்டும் அவர் கோபமாக வள்ளியை அடிக்க நெருங்க. அவர் முன் வந்து நின்றான் தம்பிரான்.
தனது கை கொண்டு மெதுவாக அவரைப் பின்னே தள்ளி “என்ன வேலை இது?” என்று அவரை அமர் வைக்கப் பார்க்க அவரோ அவனுடன் மல்லு கட்டிக்கொண்டே.
“என்ன வூடு இரண்டு சாத்தியெடுத்தா தேன் என் மனசு ஆறும் கொதிச்சுக் கிடக்கேன்”
“ப்ச் என்ன பேச்சு இது? தோளுக்கு மேல புள்ளைங்கள வச்சு புட்டு அவுங்கள கை நீட்டுவேன்னு பேசுறீக” என்றவன் குரல் வழமைக்கு மாறாக இல்லை இல்லை முதல் முறை யாக உயர்ந்து நின்றது.
“நீ இப்படி உம்ம அம்மா காரிய தாங்குறதுனால தேன் அவ ஆடுறா. ஊரு கூட்டி உறுதி குடுத்து அங்கன அந்தப் புள்ள காத்து கிடக்கு. அதுக்கு நியாயம் செய்ய வேணாமா? அது பாவத்தை வாங்கிக் கட்டிக்கிட சொல்லுறியா?”
“அம்மா கிட்ட நான் பேசுறேன்” என்றதும் சற்று தளந்தவர் தன் கையைப் பற்றி இருந்த அவனது கைகளைத் தட்டி விட்டு தளர்வாக அமர்ந்து கொண்டார். அவரை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் அழுது கொண்டிருக்கும் தாயை நெருங்கி.
“ம்மா!..” என்று அழைக்க அவனது அழைப்புக்குச் செவி சாய்த்தவள் தம்பி… என்று பேச வர அவரை முந்தி கொண்டு.
“நான் பேசுதேன் கேட்டுக்கிடுங்க அந்தக் காரணம் கருத்துல படலனா நம்ப அவீங்க கிட்ட பேசி கண்ணாலத்த நிறுத்தி புடலாம் என்ன” என்று மிக மென்மையாகப் பேச அவனது தன்மையில் இளகியவர் சொல்லு சாமி.
“மா எமக்கு வயசு போகுது ராணியாட்டம் ரதியாட்டம் பொண்ணு தேடுற காலம் மலையேறி போச்சு. இப்போ இந்தப் புள்ள எப்படி இருந்தாலும் சரித்தேன்.
புள்ளையும் எமக்கு தோது படுற மாதிரி தேன் தெரியுது. பவுசும் பணமும் உள்ள புள்ளை கிட்ட எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப் புள்ளைக்கு அதெல்லாம் இல்ல என்ன சொன்னாலும் கேட்டு கிடும் போல.
நமக்குக் கீழ பார்த்தா தேன் எமக்குச் சரி வரும்” என்றவனை ‘அட சண்டாளப்பாவி!…” என்பது பார்த்து கொண்டிருந்தனர் பெருசும் சிறுசும்.
தம்பிரான் அடுக்கிய காரணங்கள் அவன் மேல் உள்ள மதிப்பை குறைத்து வைத்தது பயத்தை கூட்டியது.
அவர் யோசனையாக நிற்க “ம்மா பேசிக்கிடலாம் எல்லாம் சரிவரும் ஒருதரம் கண்ணாலம் தடை பட்டு போச்சு. இதுவும் போச்சுன்னா நான் வேற தேன் முடிவு செய்யனும்” உறுதியாகச் சொன்னவனைச் சில நொடிகள் பார்த்தவர். வேகமாகத் தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
சில மணி துளிகள் கடந்து அவரும் தயாராகி வர எதுவும் பேசாமல் அனைவரும் கிளம்பினர். தம்பிரான் பேச்சில் ‘என்ன இவன் இப்படி பேசுறான்’ என்று வேலனுக்குமே அதிர்ந்து வந்தது.
அடுத்து வந்த நொடிகள் மின்னலாக கடக்க.சிறுசும் பெருசும் பெரும் பாரத்துடன் நிகழ்வை வெகு சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
யாருக்குமே முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை கடனே எனக் கிளம்பி கடமையே என்று பரிசம் போட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இரவு முழுமையும் சிறுசுக்கும் பெருசுக்கும் உறக்கம் பிடிக்க வில்லை. அத்தனை தூரம் தம்பிரான் பேச்சில் பாதிக்க பட்டிருந்தனர்.
***
அழகான விடியல் யாருக்கு என்று கேட்டால் அது தம்பிரானுக்குத் தான். களிப்பின் உச்சத்தைச் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு பட்டு வேட்டி சட்டையில் அறிய பிள்ளையாக நின்று கொண்டிருந்தான்.
நேற்றைய பொழுதின் தாக்கத்தில் சிறுசும் பெருசும் அவனை முறைத்த வாறே எதிரில் நிற்க. வேலன் இன்பம் பயம் என்று சரி விகிதத்தில் தத்தளிக்க. வள்ளி சொல்ல முடியா உணர்வில் சோகம் கொள்ள. மற்றைய மக்கள் அனைத்தும் கூடி பேசி கொண்டிருந்தனர்.
இதோ ஓர் இரு நிமிடங்களில் தம்பிரான் போதும் பொண்ணு திருமணம். அதுவும் மீனாட்சி சன்னதியில் முக்கிய மக்கள் கொண்டு எளிமையான நாடக்கவிருந்தது.
போதும் பொண்ணை ராணி அழைத்து வர. அவர் பின்னில் அப்புச்சி செல்வி மட்டுமே துணையாக. இது என்ன? வள்ளிக்கு இதனைக் கண்ட நொடி கண்ணில் மீண்டும் நீர் கோர்த்துக் கொண்டது. பெண் நெருங்கியதும் மனம் பொறுக்காமல் கேட்டே விட்டார்.
“ராணி எங்க உம்ம வூட்டு ஆளுங்க” என்றதும் படப் படத்து போன ராணி சமாளிக்கும் பொருட்டு.
“வருவாகம்மா என்ன செத்த நாழியாகும். நம்பக் கண்ணாலத்தைப் பண்ணி புடலாம்” ராணியின் அவசர பேச்சில் கோபம் வர வள்ளி எதையோ பேச போக.
அதற்குள் ஐயர் “ம்மா பொண்ணும் பையனும் முன்னுக்கு வாங்க நாத்தி யாரு “என்க வள்ளிக்கு பதற்றமாகி விட்டது கவன சிதறல் சில நேரம் நன்மையே போலும்.
அல்லியும் அம்பிகையும் தம்பிரான் போதும் பொண்ணுக்கு பின்னே நின்று கொண்டார்கள் மீனாட்சி பாதத்தில் தாலியை வைத்து வேண்டி தம்பிரான் கையில் கொடுக்கத் தனக்கு எதிரில் கலக்கமாக இருந்த மச்சான்களை ஒரு நொடி பார்த்தவன் பெரும் புன்னகை கொண்டு உரக்க குரலில்.
“எம்ம சொத்தாகி போச்சுன்னா உசுர குடுத்து கருத்தா காமந்து பண்ணிபுடுவேன்.ஆருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் தம்பிரான் தோட்டம் கணக்கா” என்று சொல்லியவாறே தாலியை கட்ட.
அவனது பேச்சு யாருக்கும் புரியவில்லை என்றாலும் மச்சானுகளுக்கு நன்று விளங்கியது.அது வரை கவலையாக இருந்தவர்கள் தம்பிரானின் உறுதியில் மனம் தெளிய பல்லை காட்டி தம்பிரான் போலவே உரக்க குரலில் “ஏலேய் சிறுசு!….” பெருசை போலவே சிறுசும் அதே தொனியில்.
“நம்பவே கூடாதுடா காரியகாரய்ங்க” என்க இவர்களது பேச்சு புரியவில்லை என்றாலும் வம்பு செய்கிறார்கள் என்றுவரை தெரிய அங்கே சிறு துளியாகக் கல்யாண கலை கட்டியது.
அனைத்தையும் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே. ஐயர் சொன்ன சடங்கை செய்தவன். அம்மனை தரிசித்து அப்பனை தரிசித்துப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் பெண் வீட்டாரிடம் விடை பெற்று கொண்டான்.
ஆரவாரம் இல்லாத எளிமையான திருமணம் மனதுக்கு நிறைவை கொடுக்க மற்ற சடங்கிற்காகப் பெண்களும் அவனுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.
எதிர்காலத்தை மட்டும் இறுக்கப் பிடித்துக் கொண்டு.கனவுகளைக் கண்ணில் தேக்கி நம்பிக்கையை மனதில் கொண்டு தனது வீட்டை நோக்கி சென்றான்.
மகள்கள் மற்றும் மருமகள்களை நாத்தியுடன் அனுப்பி வைத்து விட்டு ராணியைப் பிடித்துக் கொண்டார் வள்ளி.
“என்ன ராணி இது? எம்புட்டு பொம்பளைங்க இருக்கீக அந்தப் புள்ளைக்கு ஒரு பூவ தலைக்கு வைக்க மாட்டீங்க.
போதும் பொண்ணுக்கு அலங்காரம் என்று பெரிதாக இல்லை, ஆனால் ராணி பூ வாங்கி வைத்திருந்தார் அவர் இருக்கும் பதட்டத்தில் அதனை வைக்க மறக்க செல்வியும் அதனை கவனிக்கவில்லை போலும்.
“வேண்டா வெறுப்பா அந்தப் புள்ளைய தள்ளிவிட்டு போற மாதிரி இருக்கு.எனக்கு இந்தக் கண்ணாலமே உறுத்தல் தேன் எல்லாரும் சேர்ந்து கச்ச கட்டி காரியம் பண்ணிபுட்டாய்ங்க”
“ஐயோ அக்கா அப்புடியெல்லாம் இல்ல சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சுக் கிடக்கேன். தாய் இல்லாத புள்ளைக்கா…” மேலும் என்ன சொல்ல என்று கையைப் பிடித்துக் கொள்ள.
செல்வியோ “வள்ளி சொல்லிக்கிடுற அளவுல அக்காளுங்க உறவு இல்ல வூடு தேடி வந்தது நீங்க தானே” என்று கேட்டு விட உண்மை சுட்டது அமைதியாகி விட்டார் வள்ளி இதற்கு என்ன சொல்வது.
மேலும் “அம்புட்டு விளக்கமும் வச்சுத்தேன் கண்ணாலம் பேசுனாக” என்றதும் வெடுக்கென அவர் திரும்பி சென்றுவிட ராணி பதறி போயி அவர் பின்னே செல்ல பார்க்க கை பிடித்து தடுத்தார் செல்வி.
“ராணி நீ இரு”
“க்கா புள்ள பாவமுக்கா”
“புள்ளைய எண்ணி கவலை பட வேணாம் ராணி தம்பி கிட்ட நான் பேசி புட்டேன் அது பார்த்துக்கிடும்” என்றதும் ஆச்சிரயமாகப் பார்க்க.
“நெசந்தேன் ராணி கோவிலுக்கு நுழைஞ்ச ஜோருள தனியா கூட்டி போயி பேச வேண்டிய அம்புட்டையும் பேசி புட்டேன் தம்பி தெளிவா இருக்கு அது பேச்சுல அம்புட்டு உறுதி தெரியுது ராணி”
செல்வி என்ன சமாதானம் பேசினாலும் ராணிக்கு மனம் கேட்கவில்லை, சோர்ந்து போயி அமர்ந்து விட்டாள். போதும் பொண்ணை எண்ணி மனம் மத்தளம் கொட்டியது.
திக்கெட்ட மக்களுக்கு தெய்வம் மட்டுமே துணை என்று எண்ணி மனதை சமன் செய்ய முயற்சித்து கொண்டிருந்தாள் முயற்சி ராணி மட்டுமே…