கோவை மாநகரம் மெல்லிய சாரலுடன் மதியம் இரண்டு மணிக்கே மாலையின் இதத்தை, குளுமையாய் தந்துகொண்டிருந்தது.
லேசாய் பனி தூறல் தரையை தொடாமல் காற்றோடு கலக்க அதனை கையை நீட்டி ஸ்பரிசித்தபடி ஆராத்தியா.
முகம்கொள்ளா புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருக்க அருகில் நின்ற பெண் முகத்தில் ஏக குழப்பம்.
“தியா நிஜமாவே தான் சொல்றியா நீ?…” என நம்பமுடியாத பாவனையுடன் அவள் கேட்க,
“நீங்க தான் கூட வரீங்களே வந்தனாக்கா. அப்ப நீங்களே தெரிஞ்சுப்பீங்க பாருங்க. அவங்களுக்கு வாய் பேசறதுக்கு முன்ன கை தான் பேசும். அடிச்சிட்டு தான் பஞ்சாயத்தே ஆரம்பிப்பாங்க…” என்றாள் தியா கண்சிமிட்டி.
“என்ன வந்தனா உன் முகமே மாறிடுச்சு?…” என அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்தாள் பூமிகா.
இருவரும் திடுக்கிட்டு திரும்ப அவர்களின் அந்த பதட்டமே எதையோ மறைக்கின்றனர் என காட்டிக்கொடுத்தது.
ஆனாலும் அதனை பூமிகா வாய்விட்டு கேட்டுவிடவில்லை. எப்படியும் அவர்கள் வீட்டு இளவரசி தியா தன்னிடம் சொல்லாமல் விட போவதில்லை.
தலையசைத்தபடி இருவரையும் பார்த்து புன்னகைத்த பூமிகா தனது ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டாள்.
“இப்ப அண்ணா வந்திருவாங்களாம். ஆன் தி வே. கால் பண்ணினாங்க. நான் வார்டன்கிட்ட பேசிட்டேன். கிளம்பி கீழே போய் வெய்ட் பண்ணுவோம்…” என்றவள்,
“ஹேய் வாலு, உன் பேக்கை எடுக்க கூட உனக்கு சொல்லனுமா?…” என்றாள் தியாவிடம்.
“ப்ச், நானே எடுத்துப்பேன் அண்ணி. நீங்க வாங்க…” என்று தனது ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டாள் ஆராத்தியா.
“ஹாங், சேர்ந்துட்டாங்களாம் பூமி. நாம ஊட்டி என்டர் ஆனதும் கால் பண்ண சொன்னாங்க. அங்க என்னை தம்பி வந்து பிக்கப் பண்ணிப்பான்…” வந்தனா ஒப்புவித்தாள்.
“ஏன் டல்லா இருக்க நீ? ஒருவேளை எங்களோட வரது சங்கடமா இருக்கா வந்தனா?…”
“ச்சே ச்சே, அதெல்லாம் இல்லை பூமி. உங்களுக்கு எதுக்கு சிரமம்ன்னு தான் நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை…” என்றாள் வந்தனா.
“இதுல என்ன சிரமம்? நாங்க போறப்போ உன்னை ட்ராப் பன்றோம். அதுல தப்பில்லையே. ஒரே காலேஜ். ஒரே கிளாஸ். இதை கூட செய்யலைன்னா எப்படி?…” என்றாள் பூமிகா வந்தனாவிடம்.
“ஹ்ம்ம்…” என வந்தனா மென்று விழுங்க,
“எதாச்சும் கேட்கனுமா?…” என்றாள் பூமிகா.
“அதெல்லாம் இல்லை…” என்றவள்,
“ஆனா கேட்டா கோச்சுக்க மாட்டியே?…”
“ம்ஹூம், சொல்லு வந்தனா…”
“இல்ல உன் அண்ணன், அவங்களுக்கு என்னை கூட அழைச்சிட்டு வரதுல இஷ்டமா? ஒன்னும் சொல்லமாட்டாங்களா?…” என பூமிகாவிடம் அவள் கேட்க,
“அவங்க என்ன சொல்லுவாங்க? நான் ஏற்கனவே போன்ல பேசிட்டேனே….”
“என்ன சொன்னாங்க பூமி?…” வந்தனாவை மீறிய ஆர்வம் அவளின் முகத்தில்.
“அப்படியான்னாங்க. ஒன்னும் சொல்லலை, ஏன்?…” பூமிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“அண்ணி ரெடியா?…” என்றவளின் சத்தத்தில் இருவரும் கலைய,
“வா தியா, போலாம்…” என பூமிகா அவர்களுடன் கீழே சென்றாள்.
கீழே தனது பேக்கை வைத்துவிட்டு ஜீப்பின் வரவிற்கு காத்திருக்க குளிர் காற்று உடலை துளைத்தது.
“தியா ஸ்வெட்டர் போட்டுக்கோ…” பூமிகா சொல்ல,
“ம்ஹூம், எனக்கு வேண்டாம். இந்த குளிரை கூட தாங்கலைன்னா நான்லாம் ஊட்டில பிறந்ததே வேஸ்ட்…” என சுடிதார் காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் ஆராத்தியா.
“கேட்கமாட்ட நீ…” என்ற பூமிகா தனது அங்கே நின்ற தன் வகுப்பு தோழியிடம் நகர வந்தனா தியாவினருகே வந்தாள்.
“என்னக்கா? சோகமா இருக்கீங்க?…” பாவம் போல தியா.
“அதெல்லாமில்லை. ஆமா உன் அத்தான் அவர் எப்ப வருவார்?…” வந்தனா கேட்க,
“தெரியலை…” என்றாள் தியா கண்டுகொள்ளாத பாவனையுடன்.
“நீ கேட்கலையா?…”
“ம்ஹூம், இல்லையே. அதான் அண்ணி பேசிட்டாங்களே….” என்று தியா சொல்ல அத்தனை குழப்பம் வந்தனாவிற்கு.
“உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். புரிஞ்சுக்கோங்க. லைஃப நல்லா என்ஜாய் பண்ணனும்னா இப்பவே தப்பிச்சிக்கோங்க. அவ்வளோ தான் சொல்லுவேன்…” என தியா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே வந்தனாவின் கவனம் திசை மாறியது.
உள்ளே கருப்பு நிற ஜீப் நுழைய வந்தனாவின் பார்வை மொத்தத்திலும் அவன் நிறைந்தான்.
ஜீப்பை பார்க் செய்துவிட்டு அதிலிருந்து குதித்து இறங்கியவனின் கம்பீரத்தில் தடுமாறி போனாள் வந்தனா.
“வாட் எ மேன்லி…” என வாய் திறந்து சொல்லிவிட தியாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
“அங்க இஞ்சியை மூஞ்சி முழுக்க கட்டிட்டு நிக்கிறாங்க. உங்களுக்கு மேன்லியா? முரட்டு சிங்கிள். லவ்வபிளா மிங்கிளாக எல்லாம் வாய்ப்பே இல்லைன்னு சொன்னா நம்பறதே இல்லை…” என தியா சொல்ல வந்தனாவின் காதில் எங்கே விழுந்தது?
“தியா பேக் எடுத்துக்கோ…” என வந்தாள் பூமிகா.
“அண்ணா நான் சொன்னேனே என் ப்ரென்ட் வந்தனா…” திரவியத்திடம் தோழியை அறிமுகப்படுத்தி,
“வந்தனா இது என் அண்ணன் மகிழ்திரவியம்…” என்றாள்.
“ஹாய்…” என்ற வந்தனாவிற்கு,
“ஹலோ…” என தலையசைத்தவன் அவ்வளவு தான் என்பதை போல பூமிகாவின் பேக்கை வாங்கிக்கொண்டான்.
அதற்குள் தியா தன்னுடைய பேக்கை கொண்டு ஜீப்பில் வைத்துவிட்டு பின்னிருக்கையில் அமர்ந்து தலை சாய்ந்துகொண்டாள்.
“தியா குட்டி முன்னாடி உட்காரேன். நாங்க ரெண்டுபேரும் பின்னாடி உட்காருறோம். வந்தனாவுக்கு கம்பெனியா இருக்கும். பேசிட்டே வருவோம்…” என்று பூமிகா சொல்ல,
“ஹ்ம்ம்…” ஒன்றும் சொல்லாமல் மறுக்கவும் முடியாமல் முன்னிருக்கைக்கு செல்ல திரவியம் தன்னிருக்கையில் அமர்ந்து ஜீப்பை கிளப்பினான்.
“வா வந்தனா…” என மறுபக்க கதவை திறந்து தானும் ஏறிக்கொண்டாள் பூமிகா.
வந்தனாவிற்கு அந்த முன்னிருக்கையில் தான் அமர்ந்துகொண்டால் என்னவென்று தோன்ற தியாவை பார்ப்பதும், பூமிகாவை பார்ப்பதுமாக இருந்தாள்.
“அண்ணா இன்னைக்கு எக்ஸாம் நல்லா பண்ணிட்டோம். தியா கூட…” என்று திரவியத்திடம் சொல்ல,
“குட். கீப் இட் அப்…” என்றான் அவன்.
வந்தனா ஆராத்தியாவை பார்க்க இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை போல கண்களை கருப்புநிற மாஸ்கில் கட்டிக்கொண்டு சாய்ந்துவிட்டாள்.
வந்தனா அந்த கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து அவ்வப்போது திரவியத்தை பார்த்திருக்க இதுவே முதல்முறை அருகில் வந்து, சந்தித்து, உடன் செல்வது என்பது.
எப்போதும் பூமிகா, ஆராத்தியா இருவரையும் இறக்கிவிடவும், மீண்டும் அழைத்துக்கொண்டு செல்லவும் வருபவன்.
அதிலிருந்து மகிழ்திரவியம் பூமிகாவிற்கு அண்ணன், ஆராத்தியாவின் அத்தை மகன் என்று தெரிந்துகொண்டாள்.
பூமிகா பேசிக்கொண்டே வர நினைவு இங்கே இல்லை. மனதில் இருவேறு எண்ணங்கள்.
தன்னுடையது ஆரம்பகட்ட விருப்பம் மட்டுமே. இது சரியா? நடந்தேருமா? என்று ஒருபக்கம் இருந்தால், விருப்பம் யார் மீதோ அவனே கொஞ்சமும் கண்டுகொண்ட பாவனை இல்லை.
“ஹேய் வந்தனா? என்ன ஒரே யோசனை?…” என்று அவளின் மடியில் பூமிகா தட்டவும்,
“இதை என்கிட்டையே கேட்க வேண்டியது தானே?…” என்று சிரித்த பூமிகா,
“ஏற்கனவே சொன்னது தான் அப்பாவும், மாமாவும் டீ எஸ்டேட், காபி எஸ்டேட் பார்த்துக்கறாங்க. எங்க தாத்தா காலத்துல இருந்து இது தான். அண்ணா அதை மார்க்கெட்டிங் பன்றாங்க இங்க….”
“பெஸ்ட் & பெஸ்ட் பிராண்ட் டீ தூள், காபி தூள்க்கு எவ்வளோ டிமான்ட்ன்னு உனக்கு தெரியும் தானே? இங்க கோவைல தனி ஆபீஸ் போட்டு என் அண்ணன் பார்த்துக்கறாங்க. ஊட்டில என்னோட மாமா பையன், அதான் தியா அண்ணன் ஆதவன், ரகுநந்தன் ரெண்டுபேரும் கவனிச்சுக்கறாங்க. பேமிலி பிஸ்னஸ்…”
இப்படி பூமிகா பேசிக்கொண்டே வர ஒருமணி நேரமாகியிருந்தது அவர்கள் மலை ஏற ஆரம்பித்து.
ஜீப் ஓரிடத்தில் நின்றுவிட பூமிகாவும் பேச்சு சுவாரஸியத்தில் நின்ற பின் தான் அதனை பார்த்தவள்,
“இங்க ஒரு டீ சாப்பிட்டு போகலாம். எப்பவும் அண்ணாவோட பேவரெட் ஸ்பாட் இது. அதோட கொஞ்சம் டயர்ட் இல்லாம ப்ரெஷா இருக்கும். இன்னும் மேல போக ரெண்டுமணி நேரமாகும்…” என்று இறங்கிக்கொண்டாள்.
“தியா…” வந்தனா கேட்க,
“அவ வரமாட்டா…”
“ஏன், டீ பிடிக்காதா?…”
“அதெல்லாம் பிடிக்கும். என் அண்ணான்னா ரொம்ப பயப்படுவா. அதான் முன்னாடி உட்காரவும் ஒன்னும் பேசாம கண்ணை மூடிட்டா…” என பூமிகா சிரிக்க வந்தனா முகம் போன போக்கை கவனிக்கவில்லை.
இருவரும் இறங்கி கடையின் அருகே சென்று நிற்க வந்தனாவிற்கு ‘தன்னிடம் திரவியத்தை எப்படி கலாய்த்தவள் தியா? அவளுக்கு அவன் மீது நிஜமாக பயமா?’ என யோசிக்க அதற்குள் டீ வந்துவிட்டது.
“குடி வந்தனா…” என்ற பூமிகா,
“இன்னைக்கு எக்ஸாம் இல்லைன்னா உன் ஃபேமிலியோட போயிருப்ப. ரொம்ப மிஸ் பன்றியா அவங்களை?…”
“ச்சே, ச்சே. அதெல்லாமில்லை…” வந்தனா சமாளித்தாள்.
“ஓகே ஓகே…” என பூமிகா டீயை குடிக்க வந்தனாவின் பார்வை மொத்தமும் திரவியத்திடம் மட்டுமே.
தனது டீயை கூட குடிக்காமல் தூரத்தில் தடுப்பு சுவற்றில் ஒற்றை காலை வைத்துக்கொண்டு கீழே தெரிந்த எஸ்டேட்களை பார்வையிட்டபடி தேநீரை பருகிக்கொண்டிருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வந்தனா.
“வந்தனா…” என்ற பூமிகாவின் உலுக்கலில் தெளிந்தவள்,
“ஹாங், என்ன? சொல்லு பூமி…” என்றதும் பூமிகாவின் பார்வை தன் அண்ணனை தொட்டு வந்தனாவில் பதிந்தது.
பூமிகா புரிந்துகொண்டதில் வந்தனாவிற்கு பதட்டமாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
“யூ மீன்…” என பூமிகா கேட்க,
“தப்பா நினைக்காத பூமி. ஜஸ்ட் ஒரு தாட். வேற ஒண்ணுமில்லை…” என்று சங்கடத்துடன் வந்தனா சொல்ல,
“இதை தான் அந்த பெரியமனுஷிட்ட பேசிட்டிருந்தியா நீ?…” என்றாள் பூமிகா மென் சிரிப்போடு.