“கண்டிப்பா கண்டிப்பா சொல்லவேமாட்டேன். ப்ராமிஸ் அண்ணா…” என்றதும் மெல்ல புன்னகைத்தவன்,
“பார்க்கலாம், பை….” என்று அழைப்பை துண்டித்துவிட்டு கையிரண்டையும் உயர்த்தி சொடுக்கிட்டான்.
“ஊஃப், ஒரு கல்யாணத்துல எவ்வளோ பிரச்சனை?…” என எரிச்சலுடன் நினைத்து முணுமுணுக்க தலை சுற்றியது அவனுக்கு.
இப்படி ஒவ்வொன்றையும் சரிக்கட்டி சொந்தத்தில் முடிக்கவே இத்தனை இடர்பாடுகள்.
இதில் வெளியிடத்தில் மட்டும் எல்லாம் சரியாக அமையவில்லை என்று பெற்றோர்கள் வருந்தியதை எண்ணி பார்த்தான்.
“ஸார் நெக்ஸ்ட் பேக்கேஜ் வந்திருச்சு…” என்று மேனேஜர் கதவை தட்டி சொல்லவும்,
“வரேன்…” என எழுந்து பின்னால் இருந்த பெரிய அறைக்கு சென்றான்.
“எல்லாமே வந்திருச்சா?…” என திரவியம் உள்ளே நுழையும் பொழுதே கேட்டுக்கொண்டே செல்ல,
“மசாலா டீ ஃப்ளேவரும், ஏலக்காய் டீ ஃப்ளேவரும் மட்டும் 250 கிராம் பேக்கிங் டூ டேய்ஸ் ஆகும்ன்னு சொல்லியிருக்காங்க. மத்த எல்லாம் வந்திருச்சு….” என்றான் மேனேஜர்.
“காபி தூள்?…” என கேட்ட திரவியம்,
“ரெடி டூ மேக் டிக்காஷன் பேக் டிமாண்ட்ல இருக்கே. இன்னைக்கு நைட் வந்திரும்ன்னு சொன்னாங்க. கன்பார்ம் பண்ணியாச்சா?…”
“வாட்? எர்லி மார்னிங்? வாட் ரப்பிஷ்? மார்னிங் வந்து எப்போ பேக்கிங் பிரிச்சு அந்தந்த சூப்பர்மார்க்கெட்க்கு, மத்த கடைங்களுக்கு சப்ளை பண்ணுவீங்க?…” என்று கத்தினான்.
“ஸாரி ஸார். அவங்க உங்கக்கிட்ட பேசறதா சொன்னாங்க…” என மேனேஜர் பம்மிக்கொண்டே சொல்ல,
“எவங்க?…” என்றான் மீசையை நீவியபடி.
“ஆதவன் ஸார் பேசறதா சொன்னாங்கன்னு அங்க மேனேஜர் சொன்னார்….” என்றதும் கையில் வைத்திருந்த பேனாவை அங்கேயே விசிறியடித்தவன் வேகமாய் மீண்டும் தன்னறைக்கு வந்தான்.
போனை எடுத்து ஆதவனுக்கு உடனே அழைக்க அவனின் அழைப்பு எடுக்க நேரமானது.
“நீ என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும் ஆதி. மேனேஜர் சொல்லி நான் தெரிஞ்சுக்கறேன். அததுக்கு ஆளுங்க இருந்தாலும் எல்லாத்துலையும் நாமளும் இருக்கனும்…”
“ஓகே, காம் டவுன் தீரா…”
“நோ மோர் எக்ஸ்ப்ளனேஷன் ஆதி. மார்னிங் டிஸ்ட்ரிபூட் பன்றதா நான் சொல்லிருக்கேன். லேட் பண்ணினா என்ன நினைப்பாங்க நம்ம கஸ்டமர்ஸ்?…” என பல்லை கடித்தான்.
“ஓகே, ஓகே. நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் அனுப்ப பார்க்கறேன். இன்னைக்கு நைட்டே அனுப்ப முடியாட்டியும் மிட்நைட்லயாச்சும் அனுப்ப பார்க்கறேன்…” என்றான் ஆதவன் சமாதானமாக.
“இதே தான் லாஸ்ட் டைம் டிக்காஷன் ஷாஷேக்கும் சொன்னதா ஞாபகம்…” என கறாராய் திரவியம் பேச,
“சரிடா, ரொம்ப கோவிச்சுக்காத. நானும் புள்ளக்குட்டி வச்சிருக்கறவன். என் பொண்ணுக்கு முடியலைன்னா இந்த பக்கம் கொஞ்சம் மிஸ்ஸாகிடுது. என்ன பண்ண?…”
“ரகு என்ன பன்றாராம்?…” என்றான் இன்னும் எரிச்சலில்.
“மரியாதை எல்லாம் தூள் பறக்குது உங்க வீட்டு மருமகனுக்கு?…” என சிரித்த ஆதவன்,
“அவனும் பூமி கூட இருக்கான். நாங்க தான் அவனை கொஞ்சம் ப்ரீ பண்ணி விட்டோம். இல்லன்னா பார்த்திருப்பான்…”
“ஹ்ம்ம்…” என்று திரவியம் முனங்க,
“சரிப்பா தப்பு நடந்திருச்சு. அதுக்குன்னு கோவமாவே இருந்தா போதுமா? உன் கோபத்தை என் தங்கச்சி என்னன்னு தாங்க போறாளோ?…” என விளையாட்டாய் ஆதவன் சொல்ல,
“நானும் அதான் யோசிக்கறேன். ஏற்கனவே இங்க வள்ளல். இதுல ப்ச்…” என சலிப்பாய் திரவியம் சொல்ல ஆதவன் திகைத்தான்.
“தீரா…”
“தெரியலை ஆதி, யார்கிட்ட இதை சொல்ல? நைட் நீயும் இங்க வர முடியுமா?…” என கேட்கவும் ஆதவன் மறுக்கவில்லை.
“அவ்வளோ தானே வந்துட்டா போச்சு…” என்று உடனே சொல்லவும்,
“ஓகே, நைட் மீட் பண்ணலாம்…” என சொல்லி வைத்துவிட்டான் திரவியம்.
அடுத்ததாக தனது மொபைலில் வாட்ஸ் ஆப் சென்று ஆராத்தியாவின் சாட்டை ஓபன் செய்தான்.
விரல்விட்டு எண்ணிவிட கூடிய அளவில் தான் இதுவரை தான் மெசேஜ் அவளுக்கு முன்பு அனுப்பியிருந்தது.
இப்போது பூமிகா வேறு திருமணம் பற்றி உளறி வைத்திருக்க தலையை பிடித்துக்கொண்டான்.
வீட்டில் அத்தனைபேரிடமும் படித்து படித்து சொல்லியிருந்தான் இந்த பேச்சை எடுத்ததுமே.
“பிஜி முடிக்கிற வரைக்கும் கல்யாணமில்லையா?…” என கேட்க,
“அப்பா இன்னும் நான் சொல்லியே முடிக்கலை. உங்க விருப்பப்படி தியாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா நான் சொல்றதையும் நீங்க கேட்கனும்…” என்றதும் அனைவருமே அமைதியாகிவிட்டனர்.
“இது எனக்கான கல்யாணம் மட்டுமா? தியாவை ஏன் யோசிக்கலை? ஒருவேளை அவ சம்மதிக்கலைன்னா நானும் ஒத்துக்கமாட்டேன்….” என்றதும் அனைவரின் முகமும் பீதிக்குள்ளாகியது.