ஒருவிதத்தில் திருமணம் வரை மட்டுமே யோசித்தவள் அதன் பின்னான வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட தோன்றவில்லை.
அப்போது பார்த்துக்கொள்ளலாம். முதலில் இதனை தாண்டுவோம் என்னும் மனநிலை தான் ஆராத்தியாவுக்கு.
“தியா ஆர் யூ தேர்?…” என அவன் கேட்டதும் திடுக்கிட்டவள்,
“ஹாங்…” என்றாள்.
“இல்ல நீ இங்கயே இல்லை. அதான்…” என்றவன்,
“சேர்ந்தா போல உன்னால என் கிட்ட நாலு வார்த்தை பேச முடியலை? கல்யாணம் எப்படி?…” இலகுவாய் கேட்டான் திரவியம்.
“உங்களுக்கு வேண்டாம்ன்னா மாமா கேட்டப்பவே வேண்டாம் சொல்லியிருக்கனும்…” என்றாள் தன்னை இத்தனை கேட்கிறானே என்னும் எரிச்சலில்.
“ஹ்ம்ம், பேசற நீ…” என மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவன்,
“அப்போ நிஜமாவே இந்த ப்ரப்போசல் உனக்கு ஓகே?…” மீண்டும் கேள்வியாய்.
“எத்தனைதடவை, யார் என்ன கேட்டாலும் நான் ஏற்கனவே சொன்னது தான்…” தெளிவாக ஆராத்தியா சொல்ல திரவியம் அவளை பார்த்தபடியே சாப்பிட்டான்.
“ஒன்னு கேட்கலாமா?…” ஆராத்தியா கேட்க,
“வொய் நாட்?…” என்றான்.
“நான் சம்மதிக்கமாட்டேன்னு நினைச்சீங்களோ?…” என கேட்டதும் சற்று சத்தமாய் சிரித்துவிட்டவன்,
“ம்ஹூம், பூமி பேசினதுமே எனக்கு உன்னோட முடிவு என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சிருச்சு. ஃபேமிலிக்காக ஓகே பண்ணிருக்க…” என்றவன் கூற்றை அவளும் மறுக்கவில்லை.
“ஓகே, வேற பேசலாம்…” என்றவன்,
“இனிமே கொஞ்சம் என்னோட அதிகமா பேச பழகு. ஏனா ரெண்டுபேருக்குமே வேற சாய்ஸ் அன்ட் சான்ஸ் இல்லை…” என கூற,
“இல்ல இப்படியே பழகிருச்சு…” என்றாள் ஆராத்தியா.
உண்மை தான். இத்தனை தூரம் அவள் பேசியதே அவனுக்கு அதிசயமாக தான் இருந்தது.
ஆனாலும் ஓரிரண்டு வார்த்தைகளில் நிறைந்துவிட கூடியதா அவர்கள் வாழவிருக்கும் திருமண பந்தம் என தோன்றியது.
முடிந்தளவில் அவளின் இந்த மனநிலையை கூட தனது பேச்சினால் தொலைத்துவிட வேண்டாம் என்று கவனமாக இருந்தான் திரவியம்.
“ஓஹ், அப்போ பேசி பேசி உன்கிட்ட நானா பதில் வாங்கினா என்னோட பேச பழகிடுவ? ரைட்?…” என்றதும் பதில் என்னவென்று தெரியாமல் தடுமாறினாள்.
“ஹ்ம்ம், இத்தனை வருஷம் கூடவே வளர்த்துட்ட. இனி நான் வளர்க்கனும் போல?…” என்றதும் என்னவென அவனை நிமிர்ந்து கேள்வியாய் அவள் பார்க்க,
“அதான் என்மேல உன் பயத்தை, கோபத்தை, பிடித்தமில்லாததை, நான் இப்படித்தான்ற உன்னோட வே ஆஃப் திங்கிங்கை இப்படி ஒருசில நீயா வளர்த்துக்கிட்ட தானே?…” என்றதும் அமைதியாய் அவள் ஜூஸை எடுத்து குடிக்க,
“ஒரு நெகட்டிவ் விஷயத்தோட இன்பாக்ட் நமக்குள்ள பெரிய கேப்பை குடுத்திருச்சு. இந்த மேரேஜை ஒரு பாசிட்டிவா பார்ப்போம்….” என்றான் தாடையை தடவியபடி.
அதற்கும் அவளிடம் வழமையான அமைதியே விரவி இருக்க முகத்தில் இன்னும் புன்னகை இல்லை.
வந்ததில் இருந்து அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசியவை வெகு சொற்பமே. இப்போதும் முகம் பார்க்காமலிருக்க,
“ஸீ தியா…” என்றதும் அவனை பார்க்காமல் டேபிளில் ஸ்பூனை பற்றியிருந்த அவனின் கைகளை தான் பார்த்தாள்.
“என்னை பார்க்கனும்? எவ்வளோ நாள் என் முகம் பார்க்காம அவாய்ட் பண்ணுவ நீ? அதுவும் கல்யாணம் பண்ணிக்க போறோமாம் நாம…” என்றதும் சட்டென அவனின் முகத்திற்கு பார்வையை உயர்த்தினாள்.
“குட்…” என்றான் திரவியம்.
“சொல்லுங்க…”
“வாட்? கம் அகைன்?…” என லேசாய் தலையை சாய்த்து ஒரு கையை காதில் வைத்து கேட்க அவன் கேட்க நினைப்பதை புரிந்துகொண்டாள்.
“சொல்லுங்க அத்தான்…” என ஆராத்தியா சொல்லவும்,
“ஹ்ம்ம், நான் என்ன கேட்க நினைக்கறேன்னு உனக்கு புரிஞ்சுக்க முடியற அளவுக்காச்சும் நமக்குள்ள ஒத்து போகுதே….” என்று தலையசைத்து சிரிப்புடன் சொல்லிக்கொண்டவன்,
“இப்பவும் சொல்றேன் சில விஷயங்களை இப்ப, இப்ப நினைச்சா கூட மாத்திடலாம். பின்னாடி வருத்தப்பட வேண்டாம் பாரு…” என சொல்லவுமே அவனின் பேச்சின் எதிரொலியாய் ஒன்றும் பேசாமல் தனக்கானதை மடமடவென சாப்பிட்டாள்.
அதுவே சொல்லியது அவளின் ஸ்திரமான முடிவை. ஒருபக்கம் மனது அடித்துக்கொண்டது இவளுடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று.
இன்னும் அதே சிறுபிள்ளை போன்ற சிறிய பிடிவாதம் தொனிக்கும் பார்வையும் முறைப்பை கவனமாக மறைத்துக்கொண்டு முயன்று அவள் சாதாரணம் போல இருப்பதையும் நினைக்க கவலையும் சூழ்ந்தது.
முழுக்க முழுக்க அவனின் எண்ணமெல்லாம் ஆராத்தியாவை மகிழ்ச்சியுடன் தன்னால் பார்த்துக்கொள்ள முடியுமா என்பது தான்.
இத்தனை நேரத்தில் ஓரிரு முறை முகத்தில் ஒட்டவைத்த புன்னகை மட்டுமே அவளிடம் வெளிப்பட்டதை உணர்ந்திருந்தான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் முடியும் தருவாயின் அவனின் பிளேட்டை பார்த்தாள்.
பார்வையே நீ இன்னும் உண்ணவில்லையா என்ற கேள்வியை தாங்கி நின்றிருக்க பெருமூச்சுடன் தானும் உண்ண ஆரம்பித்தவன்,
“நீ பிஜி பண்ணு தியா…” என்றான் மீண்டும் திரவியம்.
“நான் அதை யோசிக்கலை…”
“இன்னும் நாள் இருக்கு. எம்.ஈ பண்ணினாலும் சரி. எம்.பி.யே பண்ணினாலும் சரி. ஆனா மேல படி. தட்ஸ் இட்…” என்று சொல்லிவிட்டான்.
ஏன் எதற்கென ஒன்றும் புரியவில்லை. தானே இதனை யோசிக்கவில்லை. இந்த செமஸ்டர் முடியவும் வீட்டில் அம்மா, அண்ணிகளுடன் இருந்து, அண்ணனோடு பேக்டரிக்கு, கம்பெனிக்கு சென்று என ஓரிரு வருடங்களை கழிக்க வேண்டும் என்ற தான் எண்ணிக்கொண்டிருந்தாள்.
திருமணம் என்று ஆரம்பித்துவிட்டால் வெளியே பார்ப்பார்கள். அதன் பின்னர் குடும்பத்துடன் இருக்கமுடியுமா என்ற சிந்தனையே பெரிதாய் இருக்க மேற்படிப்பு பின்னுக்கு சென்றிருந்தது.
இப்போது திரவியம் சொல்லவும் மறுக்கவும் முடியவில்லை. அவன் அதற்குமே வாய்ப்பு தரவில்லையே?
“உன்னை புஷ் பன்றேன்னு நினைக்காத. இந்த கல்யாண லைஃப் எப்படி இருக்குமோ தெரியலை. எனக்கு கம்பெனி இருக்கு. ஸ்டோருக்கு போய்டுவேன். நீ என்னோட வர விருப்பப்படுவியா தெரியாது. அதான் படின்னு சொன்னேன்…” என்றான்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணத்தை அவன் கூற தலையை மட்டுமே அசைத்தாள் ஆராத்தியா.
“ஓகே, ஐஸ்க்ரீம் சாப்பிடு…” என்று சொல்ல,
“ம்ஹூம். இதுவே போதும். வேண்டாம்…” என்றதும் கிளம்பிவிட்டார்கள்.
விடுதிக்கு மீண்டும் அவளை கொண்டுவந்து இறக்கிவிட்டவன் பார்வை அவளின் முகத்திலேயே ஆராய்ச்சியுடன் குடியிருந்தது.
“வரேன்…” என்றவளுக்கு வேறு என்ன பேச என்றும் தோன்றவில்லை.
“ஹ்ம்ம், நெக்ஸ்ட் வீக் பூமி வளைகாப்புக்கு வந்து பிக்கப் பன்றேன். ரெடியா இரு…” என சொல்லியவன்,
“இன்னைக்கு பேசினது இப்படியே இருக்கட்டும். வீட்டுல கேட்கற வரை எதுவும் சொல்லவேண்டாம் நீ. இந்த செமெஸ்டர் நல்லா பண்ணனும் தியா…” என்றான்.
அத்தனை வருடத்திற்கும் சேர்த்து வைத்து பேசுவதை போலிருந்தது அவனின் அணுகுமுறையும், பேச்சும்.
“ஹ்ம்ம், ஓகே…”
“என்ன?…”
“ஓகே த்தான்…” என்றாள் ஆராத்தியா.
“ஓகே பை. டேக் கேர் தியா…” என சொல்லி ஜீப்பை கிளப்பிக்கொண்டு சென்றான் மகிழ்திரவியம்.