ஆராத்தியா உள்ளே வந்ததும் திரவியம் தானே எழுந்து சென்று கதவை அடைத்து தாழிட்டு வர மிரண்ட விழிகளுடன் அதனை பார்த்தவள் பின்னே நடந்தாள்.
“உட்கார், ஏன் நின்னிட்டிருக்க?…” என சாதாரணமாக கேட்டவன் மீண்டும் சென்று முதலில் அமர்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்தான்.
“இன்னும் எத்தனை தடவை சொல்லனும் உனக்கு? இனி நீ இங்க தான். என்கூட இதே ரூம்ல. தெரியும் தானே?…” என திரவியம் கேட்கவும் தலையசைத்தவள் அந்த அறையை விழிகளால் வட்டமிட்டாள்.
மனதை ஒருநிலைப்படுத்தி தன்னை நிதானமாக வைத்துக்கொள்ள முயன்று முயன்று தோற்றது தான் மிச்சம் என்பதை போல வியர்வை கழுத்தை நனைக்க புறங்கையால் துடைத்துக்கொண்டே இருந்தாள்.
சில நொடியிலேயே அறையின் குளுமை இன்னும் அதிகமாகி இருக்க உடலில் ஊசியாய் குளிர் பரவியது.
“இங்க வந்து உட்கார் தியா…” என்றவனின் அழைப்பில் அருகே செல்ல நினைத்தாலும் உடலும், மனதும் ஒத்துழைக்கவில்லை.
ஒருவிதமாய் தலை சுற்றி கிறுகிறுவென்று வர லேசாய் தடுமாறி நின்றவளை சென்று தாங்கிக்கொண்டான்.
“ஹேய் தியா என்ன?…” என கன்னத்தை தட்ட விலகவும் முடியாமல் கண்கள் சொருகியது.
“இங்க பார், தியா. தண்ணி குடி முதல்ல…” என தண்ணீரை புகட்ட மெதுவாய் குடித்தவள் முகத்தில் அதனை தெளித்து துடைத்துவிட்டான்.
“இப்ப ஓகே வா தியா?…” என கேட்க தலையை அசைத்தவள் முகத்தை அவன் பார்க்க விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
“இந்தா…” என பாலை தம்ளரில் ஊற்றி நீட்டியவன்,
“சூடா இருக்கு, குடி…” என்றான்.
“உங்களுக்கு…”
“ஹப்பா, இதெல்லாம் தெரியுதாமா?…” என்றவன்,
“குடிச்சிட்டு குடு. பார்ப்போம்…” என அவளெதிரே அமர ஒன்றும் சொல்லாமல் பாலை குடித்தாள்.
“வேற ஏதாவது வேணுமா?…” என்றவன் பார்வை கட்டிலின் அருகிருந்த டேபிளை காண அங்கே பழங்கள், இனிப்புகளுடன் பட்டர் பிஸ்கட் சேர்த்தே இருந்தது.
“பிஸ்கட் வேணுமா?…” என கேட்க இல்லை என தலையசைத்தாள்.
“உங்கண்ணன் வேலை தான். நாளைக்கு பேசிக்கறேன்…” என சட்டையின் கையை உயர்த்தியவன்,
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ண போறியா நீ?…”
“ம்ஹூம், இல்லை…”
“சரி, அந்த தம்ளரை குடு…” என அந்த பால் தம்ளரை வாங்கி தான் பருகியவன்,
“என்னவாம், ரொம்ப ரெஸ்ட்லெஸ் மூட்ல இருக்க போல?…” என்றதும் திடுக்கிட்டு பார்த்தாள் அவனை.
“பயமா இருக்கா தியா?…” என கேட்டவன்,
“இன்னைக்கு எல்லாருக்குமே இருக்கற ஒரு நெர்வஸ், எஸ், எனக்குமே இருக்கு. உன்கிட்ட நான் எப்படி இருக்க போறேனோ? எப்படி ஹேண்டில் பண்ண போறேனோன்னு ஒரு பதட்டம்…” தன் கையை நெஞ்ச பகுதியில் வைத்து சொல்ல பேச்சற்ற பார்வை தான் ஆராத்தியா.
“இதுவரைக்கும் என்னோட ஒவ்வொரு குணாதிசயமும் எல்லாருக்குமே தெரியும். உனக்கும் கூட. ஆனா உனக்கே உனக்கு மட்டுமான என்னோட இந்த பக்கம். நீ மட்டுமே பார்க்க போற என்னோட புருஷன்ற பார்ட்…” என்றவன்,
“ஓஹ், இட்ஸ் வெரி டிபிகல்ட்…” என்றான் தன் தலையை கோதியபடி.
‘என்னடா பன்றான் இவன்?’ என்ற பீதியுடன் அவனை பார்த்தவளுக்கு அவனின் முகத்திலும் அந்த சிறு வெட்கம்.
‘பதட்டமாமே? அப்ப ஒன்னுமில்லையோ?’ என நினைத்தபடி அவனின் பாவனைகளை அதிசயமாய் பார்த்தாள் ஆராத்தியா.
“என்ன இத்தனை பார்வை?…” என அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.
“சிலதை மாத்த முடியாது. எனக்கு நீன்னு முடிவு பண்ணவும் உன்னை பார்த்திட்டிருந்த அக்கறையான பார்வை மாறி வொய்பா, உரிமையா, எனக்கானவளா பார்க்க ஆரம்பிச்சிட்டேன்….”
“உனக்குள்ள இன்னும் சில தயக்கம் இருக்கும். தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா அதையே பிடிச்சிட்டு நீ இருக்க கூடாது தியா. ப்யூச்சர்ல சரிவராது. வாழ்க்கை, இந்த நாள் எல்லாம் ஒருமுறை மட்டுமே. என்னால ஸ்பாயில் பண்ண முடியாது…” என்றவன் அவளின் புறங்கையில் தன்னிதழ் பதிக்க அதனை இழுக்கவும் முடியாமல் அவன் பேச்சில் கட்டுண்டு அமர்ந்திருந்தாள்.
“இதுதான் இனி நம்மோட லைஃப். இனி நீ பார்க்க போற திரவியம் தான் உனக்கு நிஜம். அந்த நிஜத்தை ஏத்துக்க தயாரா இரு…” என்றவன்,
“இப்ப வந்திடறேன்…” என வாஷ்ரூம் சென்றான்.
அங்கிருந்து அவன் நகர்ந்ததும் தான் மூச்சே வந்தது. இயல்பாய் இருக்கமுடியாமல் மனது உள்ளுக்குள் அல்லாட அடுத்து அடுத்து என்று பயப்பந்து சுழன்றது அடிவயிற்றில்.
‘இன்னைக்கு ஒரு நாள். நாளைக்கு எனக்கு ஓகே. இன்னைக்கு மட்டும், முதல்ல இந்த ரூம்ல அடாப்ட்டாக பார்ப்போம். இன்னைக்கு ஒருநாள்’ என மானசீகமாக தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் உடலை குறுக்கி படுத்திருக்க எந்த சத்தமும் இல்லை.
இன்னும் வரவில்லையோ? எங்கே என்று கண்களை திறந்தவள் இன்னும் அவன் கட்டிலில் அமராததை உணர்ந்து திரும்பி பார்க்க தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தவன் பாட்டிலை மூடி வைக்கும் பொழுது பார்த்துவிட்டான்.
“என்ன?…” என திரவியம் அருகே வந்ததும் அவள் விழிகள் சட்டென திரும்ப முடியாமல் அப்படியே இருக்க அருகே அமர்ந்துவிட்டான்.
“தியாக்கும் என்னவாம்?…” என,
“ம்ஹூம் ஒன்னும் இல்லையே…” என்றவள் அப்படியே கண்ணை மூடிக்கொள்ள இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவள் முகத்தை அவதானித்தவன் அசையாதிருக்க மீண்டும் கண்ணை திறந்து பார்த்தாள்.
“இன்னைக்கு தனியா படுத்தா கெட்ட கனவு வருமாம். என்னால வெளிலையும் போக முடியாது தியா. எல்லாரும் கேட்பாங்க…” என்றதும் வேகமாய் எழுந்துவிட்டவள்,
“அதெல்லாம் போகவேண்டாம். நான் உங்களை போக சொல்லலை…” என்றாள்.
“தென்?…”
“ஹாங், தென், தூங்கலாம்….” என நகர்ந்து படுக்க,
“தியா பெட்ல லாஸ்ட் போய்ட்ட…” என கை கொடுத்து படுக்கையின் விளிம்பில் நகர்ந்தவளை நடுவில் இழுத்தான்.
“நானே வரேன்…” என அவன் கையை எடுத்துவிட மொத்தமாய் அவள் மீது சரிந்தவன் முகத்தின் நெருக்கத்தில் தன் கைகளை கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள் ஆராத்தியா.
“என்னை பார் தியா…” என பேசியவன் இதழ்கள் மீசையோடு அவளின் விரல்களில் உராய தொண்டைக்குழி ஏறி இறங்கியது ஆராத்தியாவிற்கு.
‘இன்னைக்கு ஒருநாள் ப்ளீஸ்’ என வாய்விட்டு கேட்கமுடியாமல் மனதிற்குள் நினைத்த நிமிடம் தொண்டையில் என்னவோ அழுத்தம்.
முத்தச்சத்தம் பின்னோடு வர கைகளை இறக்கி பார்க்க கழுத்தில் தொண்டைக்குழியில் முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவள் நெற்றியில் பதிய மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.
“ஸே எஸ் ஆர் நோ தியா?…” என்றவன் கைகள் அவளை வளைக்க அந்த வளைவில் தன்னுடலை குறுக்கிக்கொண்டாள்.
“மெல்ட்டிங் மொமென்ட் தியா. ஸே எஸ் ஆர்…” என்றவன் நோ என்ற வார்த்தையை நிறுத்திவிட்டான்.
அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் அவளில்லை. ஒருவித மாயசுழலில் சிக்கியதை போல அவனின் கைகளை அகற்றுவதில் அவள் இருக்க அவளின் தீவிரத்தில் அவனும் தீவிரமானான்.