“நான் என்ன கேட்கறேன், நீ என்னடா பேசற?…” என்ற ஆதவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“புரிஞ்சவன் பிஸ்தா…” என கண்ணடித்த திரவியம்,
“ஆமா, நீ என்ன மறுவீடு அழைக்க வந்துட்டு எங்களை கூட்டிட்டு போகாம இங்கயே கதை பேசிட்டிருக்க? பார்த்தா நீ தான் மறுவீட்டுக்கு வந்திருக்கிற மாப்பிள்ளை மாதிரி இருக்கு…” என என்றான் கேலியாய்.
கால்கள் தரையில் தொம்மென்று அழுந்த வேகமாய் அவனை நோக்கி செல்ல பக்கவாட்டில் வாட்ச்மேன் வீட்டு பக்கம் சென்று நின்றிருந்தான் திரவியம்.
“அத்தான்…” என அழைக்க,
“சொல்லு தியா…” என்றவன் அவள் பக்கம் பார்க்கவில்லை.
“உள்ள வாங்க, கொஞ்ச நேரம் ரெஸ்ட்….”
“எனக்கா? காலையில இருந்து சும்மா தான் இருந்தேன்…” என்று சொல்ல அவன் கேட்டுவிட்டான் என்று புரிந்தது.
மற்றவர்களும் இதனை கவனித்திருப்பார்களோ என சட்டென தலையில் தட்டிக்கொண்டவள்,
“ஸாரி…” என கேட்டும் அவனிடம் பதிலில்லை.
ஒன்றும் பேசாமல் இன்னும் உள்ளே நகரந்தான் அந்த பூ செடிகளுக்குள். சுவற்றை ஒட்டி பன்னீர் ரோஜா செடி புதராய் வளர்ந்திருந்தது.
வேண்டுமென்றே தான் செய்தான். அதுவும் அவள் என்ன செய்கிறாள் என பார்க்க நகர பதறிவிட்டாள்.
“அத்தான் அங்க வேண்டாம். முள் பிடிச்சுக்கும்…” என்று சொல்ல,
“ப்ச், தெரியாதா எனக்கு? நீ போ…” என்று திரும்பியவன் முதுகில் கொத்தாய் ரோஜா செடி சட்டையை இழுக்க சட்டென அவன் விலகியதும் சட்டையுடன் உள்ளே முதுகிலும் முள் பதிந்தது.
“அச்சோ முள்ளு குத்திருச்சு….” என்று வேகமாய் வந்தவள்,
“நான் எடுக்கறேன். இருங்க…”
“ஹேய், சத்தம் போடாதடி. எல்லாரும் வர போறாங்க…” என அதட்டினான் கோபமாய்.
“என்னவோ இதுக்கு முன்னாடி எனக்கு முள்ளே குத்தாத மாதிரி இருக்கு உன் பதட்டம்…” என்று சொல்லவும் வாயை மூடிக்கொண்டவள் விழிகள் கலங்கிவிட்டது.
“தியா விடு, உன் கைல பட போகுது…” என அவளை தன் பின்னிருந்து முன்னிழுக்க,
“ம்ஹூம், இன்னும் கீறிடும். நானே எடுக்கறேன் த்தான்…” என்றவள் அவனை ஒவ்வொன்றாய் மெல்ல எடுத்துவிட்டாள்.
புதுசட்டை கோடுகோடாய் கிழித்திருக்க உள்ளே நிச்சயம் காயமிருக்கும் என தெரிந்தது பார்த்ததுமே.
“வாங்க மருந்து போடலாம்…” என சொல்ல,
“ப்ச், யார்ட்டையும் ஒன்னும் சொல்லவேண்டாம். இல்லைன்னா சகுனம் அது இதுன்னு நாளைக்கு கிளம்ப விடமாட்டாங்க…” என எச்சரித்தே அவன் முன்னே செல்ல இப்படி அன்று அவன் அதட்டிக்கொண்டே இருந்ததில் ஆராத்தியாவின் மனதும் துவண்டது.
இதுவரை திருமண நாளைலிருந்து அவள் இருளில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க இப்படி பார்த்திராததில் கூச்சம் வந்து சேர்ந்தது.
“ஆயின்மென்ட் இருக்கா?…” என்றான் அவளிடம்.
“ஹாங், இருக்கே. இதோ வரேன்…” என முதலுதவி பெட்டியில் இருந்து மருந்தை எடுத்தாள்.
“ஒரு டவலை ஹாட் வாட்டர்ல நனைச்சிட்டு வந்து முதல்ல கிளீன் பண்ணிட்டு மருந்தை போடு…” என்று சொல்ல சொல்லியபடியே செய்தவளுக்கு அவன் முதுகில் வரிவரியாய் முள்ளின் அடையாளம்.
“நான் தான் போக வேண்டாம்ன்னு சொன்னேன்ல…” என முனுமுனுப்புடன் துடைத்தவள் அவனின் அசைவில்,