மகளை வாங்கிக்கொண்டவன் ரகுவுடன் முன்னே நடக்க திரவியம் ஆராத்தியாவின் அறை நோக்கி சென்றான்.
“தியா என்னன்னு கேட்டு சீக்கிரம் கூட்டிட்டு வா…” என்று பூமிகாவும் குழந்தையுடன் வெளியே சென்றாள்.
“இவங்க இப்ப ஏன் உள்ள போறாங்க?…” என காலை உதைத்தபடி புடவையை தூக்கி பிடித்துக்கொண்டே அவள் அறையை எட்டி பார்க்க திரவியம் அறையில் இல்லை.
“இப்ப தானே உள்ள போனதை பார்த்தேன்?…” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய வாஷ்ரூமில் சத்தம் கேட்டது.
அவன் அங்கிருப்பதை புரிந்துகொண்டவள் மீண்டும் தன் அறையை ஒருமுறை சுற்றி பார்த்தாள்.
இந்த பயணம் இதுவரை கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததை போலில்லை. இனி விடுமுறை என்றெல்லாம் கிடையாது.
நாள் கணக்கில் தாய்வீடு கிடையாது. இருநாள் விடுமுறை கிடைத்தாலும் கிளம்பி வரும் நிலை கிடையாது.
அவளின் எண்ணங்கள் எல்லாம் புருஷனுடன் என்றாலுமே தன்னை எங்கோ அனுப்பி வைப்பதை போல ஒரு தோற்றத்தையும் கொடுக்க மனதிற்குள் பெரும் அலையொன்று அடித்து சென்றது.
இரு குடும்பங்களும் ஒன்றாய் இருந்தாலும் இனி எப்படியோ என்று தான் உள்ளுக்குள் தோன்றியது.
பெருமூச்சுடன் ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு எதையாவது விட்டுவிட்டோமா என கவனித்துவிட்டு திரும்ப திரவியம் நின்றிருந்தான்.
“ம்மா…” என பதறியவள் நெஞ்சில் கைவைத்து நின்றுபின் அவனை பார்த்து தானாக புன்னகைக்க,
“இங்க என்ன பன்ற கார்க்கு போகாம?…” என கேட்டவன் உடலை லேசாய் வளைத்து வெளியே பார்த்ததும் உஷாரானாள் ஆராத்தியா.
“போச்சு, போயிரு தியா…” என சத்தம் வராமல் சொல்லிக்கொண்டு நகர கையை பிடித்துவிட்டான்.
“எங்க போற?…”
“நீங்க தானே கார்ல இருக்க சொன்னீங்க?…”
“ஹ்ம்ம்…” என கேள்வியாய் அவன் பார்க்க,
“அத்தான்…” என முடித்தாள்.
“ஹ்ம்ம், போகலாம்…” என்றவன் கைகள் இடையில் அழுத்தம் கூட்டி,
“இப்ப எதுக்கு உனக்கு ப்ளைண்ட் மாஸ்க்?…” என்றதும் தன் கையிலிருந்ததை பார்த்தவள்,
“இதை கொண்டு போய் பழகிருச்சு. அதான்…”
“அதுக்கேன் இப்படி முழிக்கிற?…” என்றவன்,
“ஃபேமிலியா போறோம். அதான் இப்ப ஏன்னு கேட்டேன். சரி போ…” என்று சொல்ல வாசல் வரை நகர்ந்தவள் அவன் வருகிறானா என பார்க்க திரவியம் கண்ணாடியில் தன் தலைமுடியை சரி செய்துகொண்டு நின்றான்.
“ம்க்கும், அழகு தான் ரொம்ப…” என இவள் முணுமுணுக்க,
“நிஜம் தானே. அதை கான்பிடன்டா சொல்லுவேன்…” என்றான் கண்ணாடி வழியே அவளிடம் கண்சிமிட்டி.
“போச்சு…” என அவள் ஓடி சென்றதும்,
“மைன்ட் வாய்ஸ் கூட சத்தமா வருது இப்ப இந்த பிஸ்கட்க்கு…” என சிரித்தபடி கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.
முதலில் இன்னோவாவில் பாதியும், ஜீப்பில் பாதியுமாய் ஏறிக்கொண்டனர். ஊட்டியிலிருந்து கீழே இறங்க வழக்கம் போல திரவியத்தின் பிடித்தமான இடம்.
டீ குடிக்கவென இறங்கி நின்றுவிட்டான் அவன். எல்லோருமே இறங்க அதற்கு மேல் அமர முடியாமல் ஆராத்தியாவும் அழைக்காமலே இறங்கிக்கொண்டாள்.
விழிகள் ஒளிர அதனை பார்த்தவன் முகத்தில் மிதமான புன்னகை. சற்று நேரத்தில் கிளம்பி கோவை பண்ணை வீட்டிற்கு வந்து சேர அங்கே வேலையாள் சரளா தயாராக இருந்தார்.
ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து விளக்கேற்றி என அங்கே எல்லா சம்பிரதாயமும் முடிய ஆராத்தியாவின் உடமைகள் எல்லாம் திரவியத்தின் அறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
மதிய உணவு முடிந்து மாலை மருதமலை சென்று சுவாமி தரிசனம் முடித்து வர ஆதவன் அந்த வழியே ஊட்டிக்கு கிளம்பிவிட்டான் இந்துவுடன்.
திரவியமும், தயாளனும் ரகுவுடன் ஸ்டோருக்கு சென்றுவிட்டனர் ஒரு அவசர வேலையாக.
“சாப்பிட்டு தூங்கற நேரத்துல இப்படி போகனுமா? இவங்களை…” என அபிராமி பல்லை கடித்தார்.
மற்றவர்கள் இங்கே பண்ணை வீடு வந்து சேர இரவு உணவும் முடிந்து திரவியத்தின் அறைக்கு செல்ல காத்திருந்தாள் ஆராத்தியா.
“என்ன தீரா பன்ற இன்னும்? இங்க தியா உனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கா?…” என போன் செய்து மகனிடம் அபிராமி கேட்க,
“வந்திடறேன்ம்மா. கொஞ்ச நேரம் தான்…”
“அவ இங்க ஹால்லையே இருக்கா. நீ வரட்டும்ன்னு சொல்லிட்டிருக்கா…” என்றதும் லேசாய் சிரித்தவன்,
“தியாக்கிட்ட குடுங்க…” என்றான்.
“தியா, உன் வீட்டுக்காரன் தான். என்னன்னு கேளு…” என மொபைலை நீட்ட கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு விளங்கவில்லை.
“நானா? நான் என்ன கேட்கனும் த்தை?…” என்றாள் அவர் வந்து மொபைலை நீட்டியதும்.
“சுத்தம், அவன் லேட். இன்னும் வரலை. நீ பேசு…” என குடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
“பூமி டிவில வால்யூம் கம்மி பண்ணிட்டு இங்க வா. அவ பேசட்டும்…” என்று சொல்ல பூமிகாவும் எழுந்துகொண்டாள்.
“சொல்லுங்கத்தான்…” என்றவள் இதையெல்லாம் கவனித்தபடி இருக்க திரவியம் அங்கே நடந்ததையும் கேட்டிருந்தபடியால்,