“இதையே எத்தனைதடவை சொல்லிருக்கேன். இல்லைன்னா நீ இங்க வந்து சார்ஜ் எடுத்துக்கோ. நான் ஊட்டி வந்து பேக்டரியை ஹேண்டில் பன்றேன்…” என கத்திக்கொண்டிருந்தான் திரவியம்.
மறுபக்கமிருந்த ரகுவிற்கு பதில் சொல்லமுடியாமல் முழிபிதுங்கியது. உண்மையில் தவறு அவன் மீது தான்.
திரவியத்தின் கோபத்தில் செய்வதறியாமல் அவன் இருக்க ஆதவனும், அபிராமியும் என்ன என்று தலையசைத்து கேட்டனர் ரகுவின் அருகிருந்தபடி.
“பேசு ரகு. உன்கிட்ட நான் முதல்ல எதை அனுப்ப சொன்னேன்? இங்க டீ பேக் டிமான்ட்ன்னு சொல்லியும் இன்னும் அதை கிளியர் பண்ணாம இருந்தா என்ன அர்த்தம்? கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்ல?…” என இரைந்தான் திரவியம்.
அதே அறையில் இருந்த ஆராத்தியா பயத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தான் அத்தனைமுறை சொல்லியும் இப்படி செய்தவன் மீதிருந்த கோபத்தில் வார்த்தைகளையும் கவனமாகவே விட்டான் திரவியம்.
அவனை சமாளிக்க முடியாமல் இருந்த ரகுவிடமிருந்து போனை வாங்கிய தென்னரசு,
“தீரா நான் மாமா பேசறேன்…”
“ப்ச், அவனை காப்பாத்தவா? முதல்ல எதுக்கு முக்கியத்துவம் குடுக்கனும்னு சொல்லி குடுங்க உங்க பிள்ளைக்கு. நான் கேட்ட ஸ்டாக்கும் அனுப்பலை. அதோட இன்னொரு ஆடர்க்கு பாதி சரக்கு தான் வந்திருக்கு….”
“புரியுது தீரா, இங்க ரகு கொஞ்சம் அசால்டா இருந்திட்டான்….” என்றார் தென்னரசு.
“மாமா உங்களுக்கு நான் புதுசா சொல்லனும்னு இல்லை. ஆனா…” என வார்த்தைகளை நிறுத்தியவன்,
“நீங்களாவது கவனிச்சிருக்கனும். எது முதல்ல வேணும், வேண்டாம்ன்னு ஆடரை பொறுத்து தான் நாம தொழில் பண்ணனும். அதுவும் இப்ப இருக்கற சூழ்நிலையில…” என்றவனின் கோபம் தென்னரசுவிற்கு புரிந்தது.
இந்த முறை தமிழகத்தின் தொழில் முனைவோருக்கான விருதும், வளரும் தொழிலதிபருக்கான விருது விழாவும் நடைபெற இருக்க அதில் தங்களின் பங்களிப்பும் இருக்கிறதே.
இந்த முறை தங்கள் நிறுவனத்திற்கு நிச்சயம் ஒரு விருது உண்டு என வியாபார சங்கத்தில் பேசப்பட்டு கொண்டிருந்தது.
அந்த டென்ஷன் ஒருபுறம், இப்போது இப்படி அலட்சியமாக இருக்கிறார்களே என ஒருபுறம் டென்ஷன் திரவியத்திற்கு.
ஆதவனுக்கும் தம்பியின் மீது கோபம் தான். ஆனால் ஒன்றும் காட்ட முடியவில்லை அவனின் முகத்தை பார்த்து.
“அப்பா, விடுங்க. நான் சமாளிச்சுக்கறேன்..” என்றான் ஆதவன்.
“ஆதிக்கிட்ட குடுங்க மாமா…” திரவியம் சொல்ல தென்னரசு மகனிடம் நீட்ட,
“ஏன்டா இந்த வேலையையும் நீயே பார்த்தா எப்படி? ஏற்கனவே நமக்கு டைட் ஆடர்ஸ் தான். கொஞ்சம் பொறுடா…”
“எங்க பொறு? ப்ரீ பாக்கெட்ஸ் எல்லாம் ரெடியா இருந்தா தானே சேர்த்து மார்கெட்க்கு அனுப்ப முடியும்? எப்போ அது ரெடியாக?…”
“இன்னும் ரெண்டு நாள் தான். பண்ணிடலாம். அதுக்கு முன்ன இந்த ஆடரை இன்னைக்கு நைட் அனுப்பிடறேன்…” என பேசி ஒருவழியாய் சமாளித்தவன்,
“ஏன் தீரா இவ்வளோ டென்ஷன்? டெஸ்பாட்ச் பண்ணத்தான் இன்னும் டூ டேய்ஸ் டைம் இருக்கே? ஒன்னும் அவசரமில்லையே…”
“எப்பவும் போல கடைசி நேரம் அனுப்பறதா? அது ஏன்டா ஒவ்வொரு பெரிய ஆடருக்கும் இதையே பன்றீங்க? முன்னக்கூட்டியே அனுப்பினா என்னவாம்? டென்ஷனில்லாம அனுப்பலாம்னு தோணவே செய்யாதா?…” என பல்லை கடித்து சொல்ல,
“தெரியாம சொல்லிட்டேன்ப்பா. இன்னைக்கு நைட் சரக்கு வந்திரும்…” என சொல்லி வைத்துவிட்டான் ஆதவன்.
போனை வைத்துவிட்டு ரகுவை கேட்க அவனுக்கு தலையை பிடித்துக்கொண்டு தனியாய் அமர்ந்தால் என்ன என வந்தது.
“ஏன் ரகு, முதல்ல நமக்கு டீ தூள் தானே ரெடி பண்ணினோம்? அதுக்குள்ளே என்ன?…” என்றான் ஆதவன் அமைதியாக.
“இல்லண்ணா, எதோ ஞாபகத்துல டீக்கு பதில் காபியை முன்னாடி சொல்லிட்டேன்….”
“ஸ்டாப் இட் ரகு. இப்ப எவ்வளோ பெரிய இஷ்யூவாகிருக்கு. அவன் ஒவ்வொருதடவையும் வார்ன் பன்ற மாதிரியே இருக்கு நீயும் பன்றது…” என சொல்லிவிட்டு எழுந்து வேலை நடக்குமிடம் சென்றிருந்தான் ஆதவன்.
ரகுவிற்கு இந்த கவனக்குறைவிற்கு தனக்கு தேவைதான் என எண்ணியபடி மனவருத்தத்துடன் இருந்தான்.
கோவையில் கையிலிருந்த கோப்பை வைத்து மேஜையில் தட்டியபடி அமர்ந்திருந்தவன் முகம் பார்க்காமல் புத்தகத்தில் தலையை நுழைத்துக்கொண்டிருந்தாள் ஆராத்தியா.
அவனுடனான இந்த மூன்று மாத வாழ்க்கையில் அவனை இன்னுமே நன்றாக புரிந்துகொண்டாள்.
மிக முக்கியமாக அவன் கோபத்தில் இருக்கையில் எதுவும் இடையிட கூடாதென்பதை தெளிவாகவே அறிந்து வைத்திருந்தாள்.
அது மற்றவர்களுக்கு தான், அவளுக்கல்ல என அவள் உணராதது தான் திரவியத்தின் உச்சகட்ட கோபத்திற்கு காரணமாக இருக்கப்போகிறது என அப்போது அவள் அறியவில்லை.
மாலை நேரமாகியிருக்க ஆராத்தியா கிளம்ப வேண்டும். வாட்சை பார்த்துவிட்டு ஜீப்பின் சாவியை எடுத்தான் திரவியம்.
“தியா, வா உன்னை ட்ராப் பன்றேன்…” என்றதும் வேகமாய் எழுந்துகொண்டவள் மதிய உணவு பையையும் எடுத்துக்கொள்ள,
“ஏன்? ஏன்? மெதுவா தான் எடுத்து வைய்யேன். இங்க தானே இருக்கேன்? விட்டுட்டா போக போறேன். மெதுவா எடு…” என்று சொல்ல,
“எடுத்தாச்சுத்தான். போகலாம்…” என்றாள்.
ஜீப்பை கிளப்பியதும் மனைவியின் முகம் பார்த்தவனுக்கு பெருமூச்சு தான் கிளம்பியது.
சில நேரம் இலகுவாய் இருப்பவள் தான் யாரிடமாவது கோபம் கொண்டு குரலை உயர்த்திவிட்டால் அப்படியே சுருண்டு கொள்கிறாள்.
‘இவளையா பேசினேன்?’ என பற்றிக்கொண்டு வந்தாலும் அவளின் முகபாவனையில் கொஞ்சமே அமைதியாகிவிடுவான்.
இப்போது அவளின் அண்ணன்களை வேறு பேசியிருக்க நிச்சயம் அதனை எண்ணியபடி தான் வருகிறாள் என புரிந்தது.
“உன் அண்ணனை திட்டினேன்னு ஃபீல் பன்றியா தியா?…” என கேட்க,
“அதெல்லாம் இல்லைத்தான். தொழில்ன்னு வரும்போது இது சகஜம் தானே?…” என்றாள்.
“பார்ரா, பட்டர் பிஸ்கட் பிஸ்னஸ் பேசறாங்க…” என்றவன் முகத்தில் சற்றுமுன்னிருந்த கோபம் குறைந்து புன்னகை மலர்ந்தது.
“காய்ச்சிட்டா போச்சு. அதுக்கு கோபமா தான் செய்யனும்னு இருக்கா என்ன தியா?…” என்றவன் ஹஸ்கி வாய்ஸில் ஆராத்தியா கப்சிப்.
நல்ல மனநிலைக்கு வந்துவிட்டான் என புரிந்தது. இனி அவனின் பேச்சுலகில் தன்னை மட்டுமே அவன் பிரசுரிப்பான் என கண்டுகொண்டவள் முகம் லேசாய் சிவக்க வீடு வந்துவிட்டது.
“முக்கியமான கிளைன்ட்டை மீட் பண்ண போறேன். வர டைமெடுக்கும். எனக்கு வெய்ட் பண்ணாம சாப்பிட்டு தூக்கம் வந்தா தூங்கு தியா…” என்றவன் சொல்ல,