வாட்ச்மேன் கேட்டை பூட்டவும் அதுவரை நின்று பார்த்துவிட்டு உள்ளே வந்த சீதா மகளை தேடினார்.
“தியா…” என சத்தமாக அழைக்க,
“இங்க இருக்கேன் ம்மா…” என்று அடுக்களையில் நின்று கத்தினாள் ஆராத்தியா.
“நினைச்சேன், வந்ததும் அவளோட அரட்டையடிக்க போய்ட்டா…” என உள்ளே நுழைய அங்கே சமையல் மேடையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டிருந்தவள் வீட்டின் மூத்த மருமகளிடம் என்னவோ பேசிக்கொண்டிருந்தாள்.
“இந்து வந்ததும் இவளுக்கு இப்ப டீ போடனுமா நீ? பாரு, ட்ரெஸ் கூட மாத்தாம வந்திருக்கா…” என மருமகளை சத்தம் போட,
“ம்மா, காலையில குளிச்சிட்டு தான் காலேஜ் போனேன். எக்ஸாம் முடிச்சிட்டு வந்து வேற ட்ரெஸ் மாத்திட்டேன். எத்தனை மாத்த? ஒரேதா நைட் ட்ரெஸ் மாத்திக்கறேன்…” என்றாள் ஆராத்தியா.
“திருந்தவே மாட்டா இவ. நீயும் கேட்கமாட்ட…” என சீதா சொல்லிவிட்டு,
“இந்து இந்த பிஸ்கட்டை எடுத்து ஏர்டைட் பாக்ஸ்ல போட்டு வை…” என்று நீட்டினார் தன் மருமகளிடம்.
ஆராத்தியாவின் மூத்த அண்ணனின் மனைவி. அந்த வீட்டின் சீதாவிற்கு அடுத்தபடியான ஆளுமை.
“இல்லம்மா, வேண்டாம். நான் பின்னாடி பூவை எல்லாம் பறிச்சிட்டு வரேன். சாமி கும்பிடனும். அப்பறம் நிச்சயத்தன்னைக்கு என்னென்ன டிஷ்ன்னு லிஸ்ட் போட்டதுல எதுவும் விட்டிருக்கான்னு பார்க்க சொன்னாங்க உன் மாமா…”
“நான் செக் பண்ணிட்டேன்த்தை. ரசமாலாய் மட்டும் லிஸ்ட்ல விட்டு போயிருக்கு. சேர்க்க சொல்லி அவர்கிட்ட சொல்லிட்டேன்…” என இந்து டீயை வடிகட்டிக்கொண்டே கூறினாள்.
“எங்க அவன்? எழுந்துட்டானா? இப்ப காய்ச்சல் குறைஞ்சிருச்சா?…” என்றார் மகனை பற்றிய கவலையுடன்.
“டயர்டா இருக்காம். தூங்கறாங்கத்தை. காய்ச்சல் இல்லை. டெம்பரேச்சர் செக் பண்ணிட்டேன்…” என இந்து.
பேசிக்கொண்டே இந்து தனக்கும், ஆராத்தியாவிற்கும் டீயை ஊற்றி எடுத்துக்கொண்டாள்.
“இது நான் வீட்டுல பண்ணின குக்கீஸ் தான்…” என ஒரு ட்ரேயில் அதனையும் தியாவிற்கு போட்டுக்கொடுக்க,
“இருக்கட்டும்த்தை. தியாவுக்கு தனியா சாப்பிட, டீ குடிக்கன்னு புடிக்காது. அதான் எனக்கும் சேர்த்து போட்டேன். இல்லைன்னா நீங்க குடிங்களேன்…” இந்து சொல்ல,
“சர்க்கரை போட்டுட்டியே. வேண்டாம். அப்பறம் உன் மாமா என்னை திட்டறாங்களோ இல்லையோ என் அண்ணி புடிச்சு திட்டிருவாங்க நான் சொன்ன பேச்சு கேட்கறதில்லைன்னு…” என்றார் சீதா தன் கணவனின் தங்கையை நினைவில் வைத்து.
“ம்மா, உங்க அண்ணி புராணத்தை ஆரம்பிச்சிராதீங்க. என் மூடே ஆஃபாகிரும்…” என்ற ஆராத்தியா,
“ஹால்ல உட்காருவோம் அண்ணி. வாங்க வாங்க…” என டீ ட்ரேயை தன் கையில் வாங்கிக்கொண்டு சென்றாள்.
ஒரு சிரிப்புடன் அவள் சென்றதும் டீ போட்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்து சிங்க்கில் போட்டுவிட்டு கையை கழுவியவள்,
“பின்னால ராதா இருந்தா வர சொல்லுங்கத்தை. தூறல் விழறதுக்குள்ள பூவை பறிச்சிட்டு வந்திருங்க. திரும்ப மழை ஆரம்பிச்சிரும்…”
“சரிம்மா, நீ டீயை குடி…” என்று அடுக்களை வழியாகவே பின்னால் சென்றார் சீதா.
கையை துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த இந்து அங்கே ஆராத்தியாவை காணாமல்,
“நான் தான் பாவம். வரப்போ டீ எதுவுமே குடுக்கலையா? அதான் வந்ததுமே அண்ணிட்ட சொல்லி டீ வாங்கி குடிச்சிட்டே பேசிட்டிருந்தேன். அதான் என்னை சொல்லிட்டிருந்தாங்க…” என்றாள் ஆராத்தியா சரளமாக.
“நம்பற மாதிரி இல்லை. இருந்தாலும் பார்த்துக்கோ…” என்றான் அண்ணனாக.
இந்து டீயை ஊற்றி கணவனுக்கு நீட்டியவள் குக்கீஸை எடுத்து அவனுக்கு தந்தாள்.
“திரவியம் பட்டர் பிஸ்கட் வாங்கிட்டு வந்திருப்பானே? அதை எடுத்துட்டு வா…” என ஆதவன் சொல்லவும் தலையசைத்து இந்து செல்ல,
“நிச்சயம் முடிஞ்சு எத்தனை நாள் லீவ்?…”
“அண்ணா, எக்ஸாமே முடிஞ்சது. இனி செமஸ்டர் லீவ் முடிஞ்சு காலேஜ் ஓப்பன் பன்றப்போ தான் போகனும்…”
“ஓஹ், மறந்துட்டேன் பாரு. எக்ஸாம் எப்படி பண்ணிருக்க?…” என்றான் ஆதவன் பேசிக்கொண்டே.
இந்துவும் வரவும் பரீட்சையை பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு நிச்சயத்தை பற்றி பேச்சு திரும்ப மழை சடசடவென்று ஊற்ற ஆரம்பித்தது.
“ஏய் பிள்ளைங்களா, உள்ள வாங்க. இங்க வரைக்கும் மழைத்தண்ணி தெறிக்குதுல…” என சீதா வந்து சத்தம் போடவும் எழுந்து உள்ளே சென்றார்கள்.
ஹாலில் அமர்ந்து டிவியை போட்டதும் சீதா மகளின் காதை பிடித்து எழுப்பிவிட்டார்.
“உக்கார்ந்துட்டா நகரவே மாட்ட. முதல்ல போய் உன் ரூம்ல ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை…” என்று விரட்டினார் சீதா.
“கொஞ்ச நேரம்மா…” ஆராத்தியா கத்த,
“பேச்சுல உக்கார்ந்தா சாமானியமா எழுந்துக்கமாட்ட நீ…” என்று அவளை தள்ளாத குறையாக பிடித்து அறைக்குள் தள்ளினார்.
“இருக்கட்டும்ங்கத்தை, அப்பறமா நானும் போய் ஹெல்ப் பன்றேனே?…” இந்து சொல்ல,
“யாருக்கு? இவளுக்கா? சும்மாவே வளையமாட்டா. நீ ஆதியை கவனி…” என்று சொல்லிவிட்டு,
“நீ என்ன இன்னும் நிக்கிற? கிளம்பு…” என அதட்டவும் ஒன்றும் சொல்லமுடியாமல் சென்றாள் தியா.
அதன் பின்னர் கொண்டுவந்த பேக்கிலிருப்பவற்றை எடுத்து வைக்க தன்னறைக்கு சென்றவள் வேலையை பார்த்துக்கொண்டிருக்க பூமிகாவிடமிருந்து அழைப்பு.
“போரடிக்குது தியா. வரியா இங்க?…” என்று கேட்க,
“நான் மாட்டேன். உங்கம்மா இருப்பாங்க…” ஆராத்தியா உடனடி மறுப்பை சொல்ல,
“ம்க்கும், என்னவோ எங்கம்மா உன்னை கடிச்சி முழுங்கற மாதிரி தான். ப்ச், நானும் அங்க வர முடியாது. அம்மா இருந்தா நான் ஏன் கூப்பிடறேன் உன்னை?…” என்று பேச அப்படியே பேச்சுக்கள் நீண்டது.
இடையே இந்துவும் வந்துவிட அவளும் பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்ல சீதா வந்தார்.
“முகத்தை கழுவிட்டு வா. சாமி கும்பிடனும்…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
“ப்ச், இவங்க சம்பிரதாயத்தோட…” என்று சலித்துக்கொண்டே உடையை மாற்றிவிட்டு லாங் ஸ்கர்ட், டாப் மட்டும் போட்டுவிட்டு வர அதற்கும் முறைத்தார் சீதா.
“நிச்சயதார்த்த வீடு. இதென்னடி ட்ரெஸ்? உன் அத்தை பார்த்தா போச்சு…” என சீதா சொல்லிக்கொண்டிருக்க,
“தியா இங்க வா…” என்ற இந்து தன்னருகே அவளை கூட்டிக்கொண்டாள்.
“இந்த பூவை எல்லாம் இதுல அடுக்கு. அங்க இருந்தா அத்தை உன்னை திட்டுவாங்க…”