அவருக்கும் ஆசை தான் அண்ணன் மகளையும் மகனுக்கு எடுக்கவேண்டும் என்பதில்.
ஆனால் சம்பந்தப்பட்ட இருவரிடமும் சாதாரண பேச்சிற்கு மட்டுமல்ல இலகுவான பார்வைக்குமே பஞ்சமிருக்க எப்படி இதை பேசுவது என இரு குடும்பத்தாரும் நினைத்தது என்னவோ உண்மை.
சிறு வயதில் ஏற்பட்ட சிறுபிள்ளைத்தனமான சண்டை ஆராத்தியாவை திரவியத்திடமிருந்து தூரமாய் ஒதுங்க செய்ய வருடங்கள் கடந்தும் அதுவே நீடித்தது.
தெரியாமல் விளையாட்டாய் அவனின் பள்ளிக்கு செய்து வைத்திருந்த ப்ராஜெக்ட்டை கீழே தள்ளி விட்டிருக்க தெரியாமல் நடந்த தவறை புரியும் வயது திரவியத்திற்கும் இல்லை.
அந்த நேரம் ஆத்திரமும், கோபமும் அவளை பிடித்து அறைந்ததுடன் கீழே தள்ள செய்ய காலத்திற்கும் நெற்றியில் வடுவாய் தழும்பு.
“உன்னை யார் ஸ்டடி ரூம்க்கு போக சொன்னா?…” என அபிராமி வேறு கேட்க அவரிடமும் பேசவில்லை.
தன்னை அவரும் திரவியத்திற்கு பரிந்துகொண்டு அதட்டுகிறாரோ என்று பேச்சை குறைக்க காய்ச்சலும், பயமும் குழந்தையாய் இருந்தவளை படுத்தி எடுத்தது.
பூமிகாவிடமும் சில நாட்கள் பேசாமல் இருந்தவள் அவள் விடாமல் உடனிருக்க அழுதுகொண்டே அவளோடும் பேச ஆரம்பித்திருந்தாள்.
“உன்னால தான் அண்ணி நான் பட்டர் பிஸ்கட் எடுக்க போய் அடி வாங்கினேன்…” என்று இன்றுவரை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பூமிகாவை ஒரு பிடி பிடிப்பாள்.
திரவியமும் ஆராத்தியாவின் உடல்நிலை கண்டு வருந்தினான். தன்னால் தானே என்று நினைக்காமல் இல்லை.
திரவியத்தை பார்க்கும் நேரமெல்லாம் அவள் பயந்து ஒதுங்க அதில் மேலும் கோபம் கொண்டவன் சுபாவமும் அவளுடன் இயல்பாக போகவிடாமல் முறைத்துக்கொண்டே தான் இருக்க வைத்தது.
திரவியம் கோபம் எல்லாம் சில நாட்கள் மட்டுமே. ஆனால் மீண்டும் சரியானவளுக்கு தான் அந்த பயம் கொஞ்சமும் குறையவில்லை.
கோபக்காரன், அடிப்பான், திட்டுவான், முறைப்பான். எல்லாவற்றையும் விட அவனுக்கு தன்னை பிடிக்காது என ஒரு வரையறை பிஞ்சு மனதில் பதிந்து போக அவள் எதிர் வரவே பயந்தாள்.
வீட்டினர் சொல்லியும் அதனை மாற்ற முடியாமல் போக போக சரியாகிவிடும் என நினைக்க எதுவும் சரியாகவில்லையே தவிர திரவியத்தோடு அபிராமியையும் தவிர்த்து வளர்ந்தாள் ஆராத்தியா.
காலப்போக்கில் ஆராத்தியாவின் ஒதுக்கத்தையும், பிடித்தமின்மையையும் புரிந்துகொண்டவன் தானும் ஒதுங்கிக்கொள்ள பேச்சுக்கள் மட்டும் தான் குறைத்தானே தவிர்த்து பெரிய மனிதனாய் தன் தங்கைக்கு வாங்கும் பொழுது ஆராத்தியாவிற்கும் எதுவும் வாங்காமல் இருந்ததில்லை.
அந்த வீட்டின் கடைக்குட்டி, சின்ன பெண். ஆராத்தியாவின் பிடித்தங்கள், விருப்பு வெறுப்புகள் அத்தனையும் திரவியத்திற்கு அத்துப்படி.
ஆனால் அவன் என்ன கொடுத்தாலும் வீம்பிற்கு சிசிறுபிள்ளையில் வாங்காமல் இருந்தவள் பழக்கம் பின்நாட்களில் வழக்கமாகி போனது.
அதனை மாற்றும் காலம் எப்போதோ கடந்துவிட்டிருக்க கத்தி பேசி சண்டை போடும் பெண்ணாக இருந்தால் அதட்டி புரிய வைத்து பேசலாம்.
அவள் யார் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்து சாதித்தாள்.
திருமண வயதில் எல்லாம் மாறும் என்றிருக்க முன்பை விட இன்னும் இரு துருவங்களாக நிற்க பிள்ளைகளிடம் கேட்காமலே தாங்கள் ஏற்படுத்தி கொடுக்கவிருக்கும் உறவு சரிப்படாது என பெரியவர்களாகவே முடிவுக்கு வந்துவிட்டனர் இரு வீட்டிலும்.
வலுக்கட்டாயமாக பிடித்து கட்டி வைத்து வாழாமல் போனால்? அந்த பயமே அதனை யோசிக்கவிடவில்லை.
எல்லாவற்றையும் யோசித்தபடி அபிராமி அமர்ந்திருக்க வெளியே ஷூவை மாட்டிவிட்டு பேப்பரை எடுத்து படித்தபடி கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தான் திரவியம்.
“ரெடியாப்பா தீரா?…” என தயாளன் வந்துவிட,
“ஹ்ம்ம் ப்பா. பூமி வரவும் தியாவை பிக்கப் பண்ணிட்டு கிளம்பனும்…” என்றவன் பேச்சில் தியாவின் பெயர் எப்பொழுதும் போல இலகுவாகவே வந்தது.
வளர வளர பக்குவமாய் அவன் நடந்துகொள்ள ஆரம்பித்திருக்க அதில் அத்தனை பெருமிதம் தான் பெற்றவர்களுக்கு.
“அப்பா கிளம்பறேன்…” என பூமிகா வரவும் பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்துகொண்டான் திரவியம்.
“சரிப்பா, பார்த்து போய்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு மக்கள் கிளம்பவும் உள்ளே வந்தவர் மனைவி அமர்ந்திருப்பதை பார்த்து,
“என்ன அபி? இன்னும் பேக்டரிக்கு கிளம்பாம இருக்க?…” என்றார்.
“கிளம்பனும், நீங்க வாக்கிங் போய்ட்டு வந்தாச்சா?…” என அபிராமி கேட்க,
“ஹ்ம்ம், இந்த நேரம் வாக்கிங் போறது நானா தான் இருப்பேன். கொஞ்சம் சீக்கிரமா போகலாம்ன்னா அம்மாவும் மகனும் விடமாட்டேன்றீங்களே?…” என சிரித்தார்.
“உங்க வயசுக்கு எப்ப போகனுமோ அப்ப தான் போகனும். உடல்நிலையை யார் பார்க்கவாம்?…”
“அதிருக்கட்டும், நான் வரப்போ என்னவோ யோசிச்சு உக்கார்ந்திருந்த. பசங்க கிளம்பறதை கூட சரியா கவனிச்ச மாதிரி தெரியலையே?…”
“ஹ்ம்ம், எல்லாம் நம்ம தீரா, தியா பத்தி தான்…”
“அவங்களை பத்தி யோசிச்சு என்ன செய்ய?…” பெருமூச்சுடன் தயாளன் சொல்ல,
“மனசுக்குள்ள ஒரு ஆசை. ஆனாலும் நாம ஆசைப்பட்டு என்ன செய்ய?…”
“அபி, இதையெல்லாம் நினைச்சு நீயும் உன் உடம்பை கெடுத்துக்காத. நடக்கறது தான் நடக்கும். அதான் உன் பொண்ணை உன் அண்ணன் வீட்டுக்கு குடுக்க தானே? அப்பறம் என்ன?…”
“இருந்தாலும் என் அண்ணன் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா?…”
“சரியா போச்சு. நிச்சயத்துல உன் பெரியப்பா செஞ்சதை நீ இப்ப ஆரம்பிக்கிற…”
“அவர் சொன்னதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு தானே?…”
“என்னம்மா பேசற? நம்ம பையன் கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சப்பவே இப்போதைக்கு கல்யாணம் பேசாதீங்கன்னு சொல்லிட்டார் ஜோசியர். இல்லைன்னா அவனுக்கு இப்ப பிள்ளைங்க கூட இருந்திருக்கும்…”
“ஹ்ம்ம்…”
“முதல்ல அவனுக்கு தானே கல்யாணம் முடிக்கலாம்ன்னு இருந்தோம். வெளில தானே பொண்ணை எடுக்கலாம்ன்னு இருந்தோம். இப்ப என்னடான்னா இப்படி பேசற நீ?…”
“வெளில பார்க்கலாம்ன்னு இருந்தாலும் என்னவோ இந்த நினைப்பு அரிச்சிட்டே இருக்கு…” அபிராமி தாங்கமாட்டாமல் கூற தயாளனுக்கும் புரிந்தது.
“ப்ச், உன் அண்ணனுக்கு இது தெரிஞ்சா தியாவுக்கு விருப்பமில்லைன்னாலும் பிடிச்சு கட்டி வைச்சிருவார். பிள்ளைங்க வாழ்க்கை தான் பாழாகிரும். அவங்களுக்கே பிடிக்கலைன்றப்போ வற்புறுத்த கூடாது…” என்றவர்,
“முதல்ல ஆறு மாசம் கழிச்சு பூமி கல்யாணம் முடிஞ்ச கையோட பையனுக்கும் ஒரு வரனை பார்த்து பேசி முடிக்கனும். அப்பத்தான் நீ கொஞ்சம் அமைதியா இருப்ப…”
“ப்ச்…” அபிராமி சலித்தார்.
“என்ன? என்ன சலிப்பு? இதே மனநிலையோட புதுசா வர போற பொண்ணை பார்க்காத. (Ambien) உன்னோட இந்த ஏமாற்றம் அந்த பொண்ணு மேல அதிருப்தியாகிரும். அப்பறம் மனசங்கடம் தான். இதை எல்லாம் யோசிக்காம வேலையை பாரு…” என்றார் தயாளன்.
“திரவியத்துக்கு வெளில பார்த்தா, தியாவுக்கும் வெளில தானே வரன் பார்க்கனும்?…” என மனது அதிலேயே தான் சுழன்றது அபிராமிக்கு.
“என்கிட்டே அவ்வளவா ஒட்டலைன்னாலும் தியான்னா எனக்கு அவ்வளோ புடிக்கும். பிறந்ததுல இருந்து நான் மனசுல நினைச்ச ஒன்னு, ஆனா நடக்காதுன்னு நினைக்கும் போது. பூமி கண்ணுக்கு முன்னாடி இங்க இருப்பா. தியா?…” கண்கள் கலங்கியேவிட்டது அபிராமிக்கு.
“நீ ரொம்ப யோசிக்கிற. பேசாம தியாவுக்கு இங்க ரொம்ப பக்கமா ஒரு வரன் பார்த்து நம்மோடயே வச்சுப்போம். அதை வேணா செய்ய முடியும்…” தயாளன் சிரித்தபடி சொல்ல அபிராமியும் புன்னகைத்தார்.