ஆராத்தியாவிற்கு சட்டென அத்தனை கோபம் வந்தனாவின் இத்தகைய பேச்சில்.
தங்களின் குடும்ப விஷயத்தில் இவள் ஏன் இத்தனை தூரம் உள் நுழைகிறாள் என கடுப்பாகி போனாள்.
“இல்ல நீ பேசறதை வச்சு தான் நானா புரிஞ்சுக்கிட்டேன்…” வந்தனா அவளின் கடுமையில் சமாளித்து பேச,
“நீங்களா புரிஞ்சுக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது. அத்தான் கொஞ்சம் ரஃப் அன்ட் டஃப் தான். அதுக்குன்னு புடிக்காதுன்னு எப்போ சொன்னேன்? என்னைக்கும் சொல்லமாட்டேன். உங்க அசெம்ஷனை உங்களோட நிப்பாட்டிக்கறது நல்லது…” என சொல்லியவள்,
“இதுவே இதை பத்தி நாம பேசறது லாஸ்ட்டா இருக்கட்டும். இல்லைன்னா நாம பேசவே வேண்டாம். பை வந்தனாக்கா…” என சொல்லியவள் கடைசியில் சட்டென மின்னலாக புன்னகைத்துவிட்டு செல்ல வந்தனா தான் குழம்பி நின்றாள்.
இவளே இத்தனை பேசியிருக்க அடுத்து பூமிகாவிடம் இதனை பற்றி கேட்க இருந்த முடிவை அப்படியே மாற்றிக்கொண்டாள் வந்தனா.
ஆராத்தியாவுடனான இவ்வளவு பேச்சிலும் வந்தனாவிற்கு திரவியம் என்ன சொன்னான் என கடைசி வரை தெரிந்துகொள்ளாமல் போனதில் மண்டை குடைந்தது.
அதன் பின் பூமிகாவிடம் கூட அந்த நட்பையும் இழக்க வந்தனா முன்வரவில்லை.
அவளுடன் எப்போதும் போல இயல்பாக பழக வீட்டை பற்றி பேசாதவரை படிப்பை பற்றி மட்டும் பேசும் வரை பூமிகாவும் நல்லவிதமாகவே பதில் கூறியிருந்தாள்.
இப்படி இவர்களுடன் பேசத்தான் வேண்டுமா என்னும் எண்ணமும் எழத்தான் செய்தது வந்தனாவிற்கு.
ஆனாலும் பூமிகாவை பார்த்துவிட்டால் திரவியத்தின் நினைவில் தானாகவே ஏதாவது பேச கிளம்பிவிடுவாள் வந்தனா அவளறியாமலே.
ஆனால் ஆராத்தியாவிடம் அதன் பின்னர் பேச கூட முடிவதில்லை. பார்த்தால் சிறு புன்னகை மட்டுமே.
அருகே செல்ல முயலும் பொழுது வேலை இருப்பதை போல நகர்ந்துவிடுவாள் ஆராத்தியா.
அதன் பின்னர் அவளை நெருங்க நினைக்கவில்லை வந்தனா. பூமிகாவிடம் மட்டும் நெருங்கவும் முடியவில்லை. அதே நேரம் விலகியும் இல்லை. (Provigil)
வகுப்பு தோழியாக அவளின் எல்லை அறிந்து அதற்குள்ளேயே நின்றுகொண்டாள் பூமிகா.
“ரொம்ப டிஸ்டன்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணிட்ட மாதிரி இருக்கு பூமி…” என ஒருவிதமாய் வந்தனா சொல்லி பார்க்க,
“எனக்கு அப்படி தெரியலையே வந்தனா. முன்னாடியும் இதே டிஸ்டன்ஸ்ல தானே நாம பழகுவோம்…” என்றுவிட்ட பின் வந்தனா சாதாரணமாக கூட பேச முடியாமல் திணறி போனாள்.
நாளுக்கு நாள் திரவியத்தின் மீதான பிடித்தம் அவளின் மனநிலையை வெகுவாய் சோதித்தது.
பரிட்சை நெருங்கும் நேரம். இறுதி வருடம் வேறு. அதிகமாக கல்லூரி நாட்களும் இல்லாமல் விடுமுறையில் கழிய கவனம் சிதறிவிட கூடாதே என திரவியம் பக்கம் சென்ற மனதை படிப்பில் திசை திருப்பினாள் வந்தனா.
தானாக வலிந்து சென்று அவர்களை பிடிப்பதை போலிருக்க பூமிகாவிடம் கூட அதன் பின் இயல்பாய் பேச முடிவதில்லை.
அவர்களுக்கான இறுதி ஆண்டு பரிட்சை ஆரம்பமாகிவிட்டது. பூமிகாவே வந்து வாழ்த்தையும் சொல்லிவிட்டு சென்றுவிட பதிலுக்கு சொல்ல கூட முடியவில்லை வந்தனாவால்.
நல்லபடியாக இறுதி பரிட்சையும் முடிந்துவிட வந்தனா இதோ வெளியே கிளம்பி வந்துகொண்டிருக்க திரவியத்தின் ஜீப்.
அதன் முன்னே சாய்ந்து நின்றவன் யாருடனோ போனில் பேசியபடி நின்றிருந்தான்.
கொள்ளையாய் அவனின் புன்னகை. ‘இப்படி சிரிக்கிறானே?’ என பார்த்ததும் அழுகை வரும்போலானது வந்தனாவிற்கு.
‘ம்ஹூம், இது ஒத்துவராது’ என மனதை தேற்றியவள் அவனை கடக்கும் முன் புன்னகைக்க அவளை கவனித்த பாவனை கூட இல்லை திரவியத்திடம்.
ஏமாற்றத்துடன் அவள் கடந்து செல்ல ஜீப் பேனட்டின் மீது ஏறி அமர்ந்திருந்தான் திரவியம்.
கூடுதலாக அரைமணி நேரம் கடந்துவிட்டிருந்தது தியாவும், பூமிகாவும் வெளியே வந்தனர்.
இருவரையும் பார்த்தவன் சட்டென இறங்கி பூமிகாவிடம் இருந்த பேக்கை வாங்கிக்கொண்டான்.
பூமிகாவின் உடமைகள் எல்லாம் எடுத்து வந்தாகிற்று. அன்றோடு அவளின் கல்லூரி வாசம் முடிந்துவிட்டது.
பூமிகா கிளம்பும் முன் ஆராத்தியாவுடன் தங்க ஒரு பெண்ணையும் பார்த்து ஹாஸ்டல் வார்டனிடம் சொல்லிவிட்டே தான் கிளம்பினாள்.
இனி அங்கே ஆராத்தியா தனியாக இருக்கவேண்டும். அதுநாள் வரை ஒருவருக்கொருவர் துணையாக இருந்துவிட்டு இப்போது அவள் மட்டுமே இருக்க அதுவும் தனியாய் இருக்க நினைக்கையில் மனதிற்குள் சஞ்சலம்.
“எக்ஸாம் நல்லா பண்ணுடா தியா? பத்திரமா இரு. எதுவானாலும் கால் பண்ணு. அண்ணா உடனே வருவாங்க…” என்று பூமிகா அவளை அணைத்து விடுத்து சொல்ல தன்னை தேற்றியிருந்தவள்,