காலை வழக்கமான நேரத்தில் ஷேஷா கிளம்பியிருப்பான் என நினைத்துக்கொண்டே ஷக்தி எழுந்து அமர்ந்தாள்.
க்ளோசெட்டில் சப்தம் கேட்க அவன் இன்னும் இங்கே தான் இருக்கிறான் என புரிந்தவள் மீண்டும் படுத்து கண்ணை மூடிவிட்டாள்.
“வேக் அப் ஷக்தி. நீ எழுந்ததை பார்த்தேன்…” என வந்த ஷேஷாவின் குரலில் திரும்பி பார்த்தவள்,
“இன்னும் கிளம்பலையா நீங்க?…” என.
“ம்ஹூம், ஒரு முக்கியமான விஷயம். நீ கிளம்பி கீழ வா. வெய்ட் பன்றேன்…” என சொல்லிவிட்டு மென்னகையுடன் அங்கிருந்து செல்ல அவனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை அனுமானிக்க முடியாமல் தானும் எழுந்துகொண்டாள்.
கீழே செல்லும் நேரம் கிருஷ் நின்றுகொண்டு இருந்தான் ஷேஷாவின் அருகே. பவன் இல்லாமல் இருக்க அதுவே அவளுக்கு ஆச்சர்யம்.
எப்போதும் பவனை தாண்டி தான் கிருஷ். இப்போது அவன் இல்லாமல் கிருஷ் மட்டும் இருக்க யோசனையானாள்.
“பாஸ் மேம்…” என்ற கிருஷ் விலகி நிற்கவும் அவனுக்கு கையால் சமிஞ்சை காண்பித்த ஷேஷா,
“ஷக்தி இங்க வா…” என சொல்லி எதிரே சுவற்றை நிறைத்திருந்த தொலைகாட்சியில் பார்வையை செலுத்த ஷக்தியும் அவனின் குறிப்பை உணர்ந்து அதனை பார்த்தாள்.
அங்கே செய்தியில் யாரோ இருவர் கைது செய்யப்பட்டிருக்க அதன் கீழே செய்தியில் சொல்லப்பட்ட இடத்தை கேட்டு அதிர்ச்சியானாள்.
“ஷேஷா இது லெதர் பேக்டரி…” என எழுந்து நின்றுவிட,
“ஷக்தி கூல்…” என்றான் இப்போதும்.
“என்ன கூலா? என்ன விளையாடறீங்களா? ஷேஷா இதோட சீரியஸ்னஸ் தெரியாம…” என சொல்லும் பொழுதே அவனின் பார்வையில் வார்த்தைகளை நிறுத்தினாள்.
“பாஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்…” கிருஷ் வந்து சொல்லவும்,
“வர சொல்லு கிருஷ்…” என சொல்லி ஷக்தியை பார்த்தான்.
“உட்கார் ஷக்தி…”
“ஷேஷா இங்க இப்போ எதுக்காக போலீஸ்?…”
“இப்போ நீ உட்கார். அவர் வரார்ல நீயே தெரிஞ்சுப்ப…”
“ஷேஷா…” என ஷக்தி மேலும் பேசுவதற்குள் காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார்.
“குட்மார்னிங் ஷேஷா ஸார்…”
“குட்மார்னிங் ஸார்…” என்றான் அவனும் அமைதியாகவே.
“தேங்க்ஸ் யூ ஸார். நீங்க கோவாப்ரெட் பண்ணலைன்னா இத்தனை பெரிய விஷயம் நடந்துட்டு இருக்கறதே எங்களுக்கு தெரியாம போயிருந்திருக்கும்…” என்றார்.
“இருந்தாலும் இதை நீங்க தனியாவே ஹேண்டில் பண்ணியிருக்கலாம். அதுவும் விஷயம் இத்தனை சீரியஸ்…” அவரின் பேச்சில் மெல்லிய புன்னகை ஷேஷாவின் முகத்தில்.
“ஓகே, இதை நீங்க இவ்வளவு தூரம் வந்து சொல்லனும்னே இல்லை. நானும் உங்க ஆபீஸ் வரனும்னு தான் இருக்கேன்…” என்றான் ஷேஷா.
“இட் இஸ் ஓகே ஸார். நீங்க உங்க கம்ப்ளைண்டை இங்கயே ரிட்டன்ல குடுங்க. நாங்க மேற்கொண்டு பார்த்துக்கறோம்…” என்றதும் ஷேஷா ஷக்தியை பார்த்தான்.
“என் மிசஸ்க்கு இன்னும் முழுசா தெரியாது. நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன். கம்ப்ளைன்ட் குடுக்கறதா இருந்தா ஷக்தி தான் குடுக்கனும். லீகல் அத்தாரிட்டி என் வொய்ப் தான்…”
“என்ன நடக்குது இங்க?…” என்ற ஷக்தி,
“நான் இவர்க்கிட்ட பேசனும்…” என்றாள் ஷேஷாவிடம் காவல்துறை அதிகாரியை காண்பித்து.
“யாஹ் சூர்…” என்ற ஷேஷா பின்னால் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
“ஸார், நியூஸ்ல சொல்லியிருக்கிற அந்த லெதர் பேக்டரி எங்களோடது தான். அங்க அரஸ்ட் நடந்திருக்குது. இதுவரைக்கும் இது விஷயமா என்னை யாருமே கான்டேக்ட் பண்ணலை. நீங்க வந்தது என்கொயரிக்குன்னு நினைச்சேன்…”
“இல்லை மேம், எங்களுக்கு இப்படி ஒரு விஷயம் நடக்குதுன்னு முன்னாடியே தெரியும்…” என்றார் ஏசி.
“வாட்?…” என்றவள் ஷேஷாவை அதிர்ச்சியுடன் பார்க்க அவனிடம் எந்த சலனமும் இல்லை.
“வாட் யூ மீன்?…” என்றாள் காவல்துறை அதிகாரியிடம்.
“எஸ், மூணு நாள் முன்னாடியே ஸார் எங்க கமிஷனர்கிட்ட பேசியிருக்கார். சந்தேகப்படற மாதிரியான சில ஆட்கள் அந்த பேக்டரி குடோவ்ன்ல நடமாடினதா. அதோட செக்யூரிட்டியையும் அடிச்சி காயப்படுத்திருக்காங்க. ஆள் அடையாளம் தெரியலை…”
“யார்? எதுக்காக அங்க வந்து போனாங்க?…”
“அதுக்கான விசாரணை தான் நடந்துட்டு இருக்குது மேம். மாட்டினவங்க கோவில் சிலைகளை திருடற ஆளுங்க. அதுவும் பதுக்கி வைக்கிறது எப்பவும் உங்க குடோவ்ன் அண்டர் கிரவுண்ட்ல தான்னு சொல்றாங்க…”
இது இன்னுமே ஷக்திக்கு பேரதிர்ச்சி. ‘சிலை கடத்தல், தங்களுடைய தொழிற்சாலையில் பதுக்கி வைத்தல். இவையெல்லாம் யாரின் வேலை?’ என தலை சுற்றியது அவளுக்கு.
“உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?…” என ஷேஷாவிடம் கேட்க,
“நோ. பேக்டரி மத்த அசெட்ஸ் நம்மகிட்ட திருப்பி ஒப்படைச்சதும் அங்க இருந்த வொர்க்கர்ஸ் எல்லாரையும் மாத்தினோம். குடோவ்லையுமே. ஆனா அதுல இருந்தே யாரோ அங்க வர முயற்சி பன்றதும் போறதுமா இருந்தாங்க. செக்யூரிட்டியை அட்டாக் பண்ணிருக்காங்க…”
“சூர் ஸார். கண்டிப்பா. எங்களை மீறின விஷயம் இது. எப்படி நாங்களும் கவனிக்காம விட்டோம்ன்னு தெரியலை?…” என்றாள் ஷக்தி.
“ஏன் அங்க அன்டர்க்ரவுன்ட் பேஸ்மென்ட் இருக்கறது உங்களுக்கு தெரியாதா?…” அதிகாரி கேட்க,
“நோ ஸார். இதுவரைக்கும் தெரியாது. அதுக்கு முன்னாடியும் இருந்ததா ஞாபகம் இல்லை…” என்ற ஷக்தியின் முகம் யோசனைக்குள்ளானது.
“அப்பாவோட எப்போவாவது தான் நான் பேக்டரிக்கு போவேன். அதுவும் ஆபீஸ் ரூம் மட்டும் தான். குடோவ்ன் பக்கம் போனதில்லை…” என்றாள்.
“போயிருந்தாலும் எதுவும் தெரிஞ்சிருக்காது. இது ரீசன்ட்டா சில வருஷத்துக்கு முன்னாடி உருவாக்கினது. யாரோ இதை பயன்படுத்தியிருக்காங்கன்னு தெளிவா புரியுது. அது யாரா இருக்கும்ன்னு தான் விசாரிச்சுட்டு இருக்கோம்…” என்றவர்,
“ஓகே ஸார். நாங்க கிளம்பறேன். இது விஷயமா அடுத்த விசாரணை எப்போன்னு நாங்க சொல்றோம்…” என்றார்.
“ஒரு நிமிஷம், நான் கம்ப்ளைண்ட் தரேன் ஸார். என்னோட பேக்டரியை அவங்க இல்லீகல் பிஸ்னஸ்க்கு யூஸ் பண்ணியிருகிறதா நான் கம்ப்ளைண்ட் தரேன்…”
“மேடம்…” என அதிர்ந்தார் அவர்.
‘அவங்க’ என்று ஷக்தி குறிப்பிடுவது எழிலை என தெளிவாய் தெரிந்தது அவருக்கு.
“எஸ், ரிட்டன் கம்ப்ளைண்ட் குடுக்கறேன். இங்கயே வாங்கிக்கறீங்களா? இல்லை ஆபீஸ்க்கு வரனுமா?…” என்றவள்,
“ஷேஷா எனக்கு சந்தேகம் இருக்குது. நான் செய்யலாம் தானே?…” என்றாள். ஆனால் செய்வேன் என்னும் தொனி அந்த வார்த்தையில்.
“சூர் ஷக்தி…” என்றான் ஷேஷாவும்.
ஆனால் வந்தவருக்கோ நெற்றியில் வியர்த்தது. ‘இது என்ன பெரிய பூதம்?’ என நினைத்தார்.
“கம்ப்ளைண்ட் யார் மேல மேடம்?…” தெரிந்துமே கேட்டார் அவர்.
“இதுக்கு முன்னால என் பேக்டரியை ரன் பண்ணிட்டிருந்தவங்க மேல தான்…” என சொல்லியவள்,
“கிருஷ்…” என அழைத்து அங்கேயே வேகமாய் தனக்கு தோன்றியதை எழுத ஆரம்பித்தாள்.
ஷேஷா அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தான். அவள் பேசியதாகட்டும், இப்போது புகார் தருகிறேன் என கேட்டு எழுதியதாகட்டும் எதிலும் தலையிடவில்லை.
அவன் எதிர்பார்த்ததும் இதைத்தான். ஷக்தி முடிவெடுத்துவிட்டாள். இனி அடுத்தகட்டத்திற்கு தானாகவே இது நகர்ந்துவிடும் என நினைத்துக்கொண்டே அந்த அதிகாரியை பார்க்க அவர் முழுவதும் வியர்த்திருந்தார்.
மணிவாசகம் மகன் மீது புகார், அந்த மகனோ அறநிலையத்துறை அமைச்சரின் மருமகன் வேறு. இதை எப்படி சமாளிக்க போகிறோம் என உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார்.
“ஆர் யூ ஓகே?…” என ஷேஷா கேட்ட கேள்வியே தூக்கிவாரி போட்டது அவருக்கு.
அவன் சாதாரணமாக கேட்கவில்லையே. குரலே பயமா என கேட்பதை போல இருந்தது.
ஷேஷா நிச்சயம் இதை அப்படியே விடமாட்டான் என அறிந்திருந்தவர் ஒன்றும் இல்லை என தலையசைத்து,
“என்னோட ட்யூட்டியை நான் பார்க்கறேன் ஸார். ஆனாலும் இது மினிஸ்டர் வீட்டு விவகாரம்…”
“சோ?…” ஷேஷாவும் பார்வையில் பாவனையை மாற்ற,
“கம்ப்ளைண்ட் பைல் பண்ணிட்டு உங்களுக்கு இன்பார்ம் பன்றேன் ஸார். ஸ்டேஷன் வரதா இருந்தாலும் சொல்றேன்…” என்றவர் ஷக்தி எழுதி தந்ததை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
“இது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது ஷேஷா?…” என ஷக்தி கேட்க,
“வா ஆபீஸ் ரூம் போவோம்…” என எழுந்து முன்னால் சென்றுவிட ஷக்தி தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியையே பார்த்துக்கொண்டே நகர்ந்தாள்.
உள்ளே நுழைந்ததுமே மனதிற்கு தோன்றிய அத்தனை சந்தேகங்களையும் அவள் கேட்க ஆரம்பித்தாள்.
“இப்போ இந்த பிரச்சனையால பேக்டரிக்கு தானே கெட்ட பேர்? இதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாதா?…”
“எது அரசியலா? இல்லை சிலை கடத்தலா? நீ கடத்தின மாதிரி ஏன் ரெஸ்ட்லெஸ் ஆகற?…”
அவனின் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. அதே நேரம் பெரிதாக அதை பற்றிய அச்சமும் இல்லை.
“பிரஸ் மீட் அரேன்ச் பன்றேன். சொன்னா இப்போ வந்திருவாங்க. நீ தான் பேசனும்…”
“நானா? என்ன பேசறீங்க நீங்க? நான் ஏன் பேசனும்?…”
“பேசனும் ஷக்தி. ஏற்கனவே நான் நேத்து ஸ்பீச் குடுத்ததுல இந்த ஒன் வீக்கா தான் பேக்டரி நம்ம கன்ட்ரோல்ல இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும் ஷக்தி. கூல்…” என்றவன் தன் யோசனையை மாற்றினான்.
“ஓகே, கம்…” என எழுந்தவன்,
“கமிஷனர் ஆபீஸ் போகலாம்…” என சொல்லவும் ஷக்தி இன்னும் திகைத்தாள்.
“என்ன நினைக்கறீங்க நீங்க? எதுவாவது சொல்லுங்களேன்…” என கேட்டதும்,
“கண்டிப்பா உனக்கும் தெரியனும் ஷக்தி…” என்றவன்,
“இங்க வா…” என மீண்டும் இருக்கையில் அமர்ந்து தனக்கருகே ஷக்தியை அழைத்து அமர வைத்துக்கொண்டான்.
“இந்த வீடியோ பாரு…” ஒரு காணொளியை காண்பிக்க அங்கே மங்கலான விளக்கொளியில் சிலர் எதையோ கொண்டு செல்வதும் அவர்களுடன் அகத்தியன் பேசிக்கொண்டு வெளியே வருவதும் என இருந்தது.
“மை காட்…” என்றவளின் அதிர்ச்சியை பார்த்து காணொளியை நிறுத்தினான்.
“இதை ஏன் நீங்க அவர்கிட்ட சொல்லலை?…” என ஷேஷாவின் மீது பாய்ந்தாள் ஷக்தி.
“உடனே சொல்லிட்டா உடனே எல்லாம் நடந்துரும். அவங்க எதுக்கு இருக்காங்க. கண்டுபிடிக்கட்டும்…” அலட்டிக்கொள்ளாமல் அவனின் வழக்கமான பாணியில் பேச அதுவே ஷக்திக்கு இன்னும் டென்ஷன் ஏற்றியது.
“எல்லாம் அகத்தியன் வேலை. இதை எப்படி கவனிக்காம இருந்தாங்க?…”
“சிலருக்கு லைட்டா தெரிஞ்சிருக்கும். ஆனாலும் நோ ஆக்ஷன். அகத்தியனோட இல்லீகல் பிஸ்னஸ் இன்னும் இருக்கே…”
“இது தேச துரோகம் இல்லையா? நம்ம நாட்டோட பொக்கிஷங்களை இப்படி யாருக்கோ விக்கிறது, அதையும் இந்த சட்டம் வேடிக்கை பார்க்குது…”
“ஷக்தி, கூல்…”
“ப்ச், சும்மா இதையே சொல்லாதீங்க ஷேஷா. இப்படி ஒரு துரோகத்தை செய்யறதோட, அப்பாவோட தொழிற்சாலையை பயன்படுத்தி நாசம் பண்ணியிருக்கானே?…” என கொதித்தவள்,