“இந்த லைஃப், இது வேண்டாம் ஷக்தி. எனக்கே கஷ்டமா இருக்குது. உன்னை இங்கே இப்படி பார்ப்பேன்னு நான் நினைக்கலை…” என்றான்.
“என்ன பரிதாபப்படறீங்களா? எனக்கு அது தேவை இல்லை. எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. நான் இங்க தான் இப்படித்தான் இருப்பேன். இதை பேசத்தான் கூப்பிட்டீங்களா?…” என்றாள்.
“ஹ்ம்ம், அப்படின்னும் சொல்லமுடியாது…” என்றவன்,
“இது என்னோட கார்ட். உனக்கு எப்போ என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் செய்ய கடமைப்பட்டிருக்கேன்…” என்றான்.
“ஹெல்ப் பண்ண நினைச்சதுக்கு தேங்க்ஸ். ஆனா அதுக்கு அவசியமிருக்காது…” என்றவள் அங்கிருந்த தண்ணீரை மட்டுமே அருந்திவிட்டு எழுந்துகொள்ள,
“சாப்பிட்டு போயேன் ஷக்தி…” என்று சொல்லும் பொழுதே அவளின் விழியில் நீர் சுரக்க தொண்டையை செருமிக்கொண்டாள்.
“இல்லை, வேண்டாம். எனக்கு தேங்க் பண்ணனும்னு நினைச்சீங்க. அதுவே போதும். நான் கிளம்பறேன்…” என்றவள் வேகமாய் நடந்தாள்.
“வெய்ட் உன்னை உன் ஸ்டூடியோல ட்ராப் பண்ண சொல்றேன்…” என்றதுமே அவளின் நடை நிற்க தன்ராஜின் முகம் ஞாபகம் வந்தது.
அவனின் நோக்கமும் தொட்டு தொடர அதை எப்படி சமாளிப்பதில் முகத்தில் தெரிந்த கலவரம் அப்பட்டமாக வெளிப்பட ஷேஷா அதை கவனித்துவிட்டான்.
“ஷக்தி…” என்ற அவனின் அழைப்பில்,
“ஹாங்…” என்று திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க,
“எனித்திங் சீரியஸ்?…” என்றான் அக்கறையாக.
அந்த அக்கறையே அத்தனை சுட்டது அவளை. அத்தனை கீழாக பார்த்தாளே? எவ்வளவு அலட்சியமாக அவனின் கையை பிடித்து குலுக்காமல் கூட பார்வையாலே அவனை நகர்த்தினாள்.
இப்போது அவனிடமே உதவி கேட்டு நிற்பதா? ஏற்கனவே அவன் செய்த மாபெரும் உதவியில் இன்றளவும் குன்றிப்போய் வாழ்கிறாள்.
மீண்டும் அப்படி சென்று நிற்க மனதளவிலும், உடலளவிலும் சுத்தமாக திராணியில்லை.
“ஷக்தி…” என்று அவன் மீண்டும் அழைக்க,
“இல்லை, எதுவுமே இல்லை…” என்றவள்,
“எனக்கு ஹெல்ப் பன்றேன்னு சொன்னீங்க தானே?…”
“ஹ்ம்ம்…”
“அப்போ இனிமே இந்த பேரை மறந்திருங்க. என்னை அப்படி கூப்பிடாதீங்க…” என்று சொல்லிவிட்டு அவனை திரும்பி பார்க்காமல் செல்ல தன் பாதுகாவலர்களில் ஒருவனை அழைத்து அவளை கொண்டுபோய் ஸ்டூடியோவில் விட சொன்னான்.
“நானே போய்ப்பேன்…” என்றாள் அவன் பக்கம் திரும்பாமல்.
“இதை மட்டும் செய்ய விடு ஷக்தி. இந்த ஷக்தி கூட லாஸ்ட்…” என ஷேஷா பேசினான்.
“நானும் தேங்க்ஸ்…” என்று அவனை பார்த்தவள்,
“ரொம்ப வருஷத்துக்கு பின்னால தமிழ்ல பேசறேன். அதுக்கும் தேங்க்ஸ்…” என்று சொல்லியவள் அங்கே இருந்தால் அவனின் பேச்சை கேட்கவேண்டி வருமோ என்று விடுவிடுவென்று காரில் ஏறிவிட்டாள்.
சென்றது மட்டுமே அவளுக்கு தெரியும். உடன் வந்தவன் அவளுடன் அவளுக்கு பாதுகாப்பாக வருகிறான் என்பதை அவள் அறியவில்லை.
மீண்டும் ஸ்டூடியோவிற்கு வந்தவள் இன்னுமே ஆட்கள் வராமல், டெக்னீஷியன்ஸ் என்றும் கூட ஒருவரும் இல்லாமல் இருக்க யோசனையானாள்.
“வாம்மா நக்ஷத்ரா, பெரிய இடமா பிடிச்சுட்ட போல? தேடி வராரு…” என்று நக்கலாக கேட்டுக்கொண்டே கதவையும் சாற்றிவிட இப்போது ஆபீஸ் பையன் கூட இல்லை.
“பையா…” என்றாள் அதிர்ச்சியுடன்.
“சொல்லிக்கோ, உன் வாய் தான? சொல்லிக்கோ. எத்தனை பையா வேணா போட்டுக்கோ. ஆனா அதெல்லாம் எனக்கு கேட்காதே…” என்று காதை குடைந்துகொண்டே அவன் நெருங்க கையில் இருந்த ஹேண்ட்பேக் கொண்டு அவனை ஓங்கி அடித்தவள்,
“என்னை வெளில விடு. இல்ல அடிச்சே கொன்னுடுவேன்…” என்று மிரட்டினாள்.
“என்ன கோவம்? என்ன கோவம்?…” என சிரித்துக்கொண்டே அவளின் கைப்பையை பறித்த வேகத்தில் பளாரென நக்ஷத்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைய அம்மா என்று சுருண்டு விழுந்தவள் அங்கிருந்த டேபிளில் முட்டி நெற்றியில் வீக்கம் ஆரம்பித்தது.
“என்கிட்டையே ஆட்டம் காட்டறியா? நானும் இப்ப அப்பன்னு புரிஞ்சு புத்திசாலித்தனமா நடந்துப்பன்னு பார்த்தா என்னையே போட்டு பார்க்கற?…” என்றவன்,
“விட்டு பிடிச்சிருப்பேன். ஆனா எப்ப அந்த ஷேஷா வந்தானோ இனி உன்னை கை நழுவ விடுவேனா?…” என்றபடி அவளின் தலைமுடியை பிடித்து தூக்கினான்.
“என்கிட்டே இருந்து அத்தனை சீக்கிரம் தப்பிச்சிருவியா? நீ என்ன பெரிய இவளா? அட்ஜஸ்ட் பண்ணி போனா உனக்கு தேவையானதை நான் செஞ்சிட்டு போறேன். அதை விட்டுட்டு துள்ளுற?…” என்ற நேரம் அவனின் போன் அடிக்க கத்த போனவளின் கழுத்தை பிடித்தவன் எடுத்து பேசிவிட்டு வைத்தான்.
“முக்கியமான டீலிங். போய்ட்டு வந்து உன்னை பார்த்துக்கறேன்…” என அவளை உள்ளே ஒரு தனி அறையில் அடைத்தவன்,
“இந்த ரூம் என்னை தவிர வேற ஒருத்தனுக்கும் தெரியாது. பத்து நாள் ஆனாலும் நானா வந்து திறந்தா தான் உண்டு. கிட இங்கயே…” என்று சொல்லிவிட்டு பூட்டிவிட்டு சென்றான் தன்ராஜ்.
“எங்க போனாலும் எனக்கு மட்டும் ஏன்ம்மா இந்த கஷ்டம்? பேசாம உன் கூடவே வந்திருக்கலாம் போல? என்னால முடியலைம்மா…” என அழுதபடி உள்ளே அந்த அறையிலேயே மயங்கி சரிந்திருந்தாள் அவள்.
நக்ஷத்ராவிற்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. தான் காப்பாற்றப்பட போவதும் இல்லை என்ற உணர்வே உயிரை பறித்ததை போல துவண்டு சாய்ந்திருந்தாள்.