“மருமகனே, நீங்க ரெண்டுபேரும் அமைதியா இருங்க. நான் பேசிக்கறேன். நான் மட்டும் பேசறேன்….” அகத்தியன் அவர்கள் இருவரையும் வாயை மூட செய்துவிட்டு ஷேஷாவின் பக்கம் திரும்பி பார்த்தான் அகத்தியன்.
“பேசலாமே…” என்றான் ஷேஷாவும் அலட்டிக்கொள்ளாமல்.
“இந்தா போதும் உன் விளையாட்டு. நாங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னு உனக்கும் தெரியும்…”
“அமைச்சர் நீங்க சொன்னா சரி…” என ஷேஷா சொல்ல அவனின் முன்னால் இருந்த சேரில் வந்து அமர போன அகத்தியனை,
“ஹலோ நில்லுங்க…” என்று நிறுத்திய ஷேஷா,
“நான் உங்களை உட்கார சொல்லவே இல்லையே? இதென்ன உங்க அரசியல் நாற்காலியா? யாரோட அனுமதியும் இல்லாம வந்து உட்கார? பேச வந்ததை பேசிட்டு கிளம்பி போகலாம்….”
“ஷேஷா, யார்க்கிட்ட பேசறோம்ன்னு தெரிஞ்சு…”
“நீங்க தானே அமைச்சர் அகத்தியன். உங்களை தான் சொன்னேன்…” என்றவனை ஒன்றும் செய்ய முடியாமல் பவன் அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருப்பதை கண்டு தலையை சொரிந்தபடி எழிலையும், இளவேந்தனையும் திரும்பி பார்த்தான் அகத்தியன்.
“என்னை பார்க்க வந்துட்டு இப்படி நின்னா எப்படி?…” என்ற ஷேஷா அகத்தியனை தாண்டி,
“என்ன எழில்? நான் நீங்க வந்தது உங்களோட பொறுப்பை ஹேன்டோவர் பன்றதுக்குன்னு நினைச்சேன். ஆனா?…” என்று சுழன்றபடி கேட்க எழிலுக்கு ஆத்திரம் கூடியது.
“என்கிட்டே பேசு ஷேஷா. அங்க என்ன பேச்சு?…” என்ற அகத்தியனிடம்,
“நீங்க ஏன் வந்திருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க அமைச்சர். எனக்கு வேலை நிறைய இருக்கு…”
எழுந்த வேகத்தில் ஷேஷா அமர்ந்திருந்த நாற்காலி பின்னால் சென்றிருக்க அவனின் முகத்தில் தெரிந்த ரௌவுத்திரம் வந்தவர்கள் மூவரையும் ஆடிப்போக செய்தது.
எப்போதும் அழுத்தமான பாவனையுடனோ, இல்லை மிதமான வலிய ஒட்டவைத்த புன்னகையுடனோ மட்டுமே பேசி பழகி இருந்தவன் இன்று இத்தனை ஆவேசம் கொண்டு பேசியதால் வெலவெலத்து நின்றார்கள்.
சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவன் ஷேஷாவிற்கு ஷக்தியை பற்றி பேசும் பொழுது அகத்தியனின் கண்ணில் தெரிந்த அந்த உணர்வும், கண்ணின் பளபளப்பும் எதையோ உணர்த்த கொதித்து போனான்.
இத்தனை ஆண்டுகள் தொழில் செய்பவன். பலதரப்பட்ட மனிதர்களையும் கவனித்து வருபவன். இன்று அப்பட்டமாய் அகத்தியனை கண்டுகொண்டான்.
“இங்க என்னை கேள்வி கேட்கற எந்த அருகதையும் யாருக்கும் இல்லை. அதுக்கான ரைட்ஸும் இல்லை. எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு இடத்தை காலி பண்ணுங்க. அவுட்…” என்று அவன் கத்திய கத்தலில் நின்ற இடத்தை விட்டு ஒருவரும் அசையவில்லை.
“அப்ப ஷக்தி…” என்ற எழிலிடம்,
“உரிமைப்பட்டவ வந்துட்டா. இங்க உங்களுக்கு என்ன வேலை? ஆமா ஷக்தி என்கூட என் பாதுகாப்புல தான் இருக்கா. என்ன பண்ணிட முடியும்?…” என்றான் மூவரையும் பார்த்து.
“என்ன என்ன மிரட்டுறியா? ஷேஷா என் பவர் தெரியாம பேசிட்ட…” அகத்தியன் சவால் விட,
“உங்க பவர் எனக்கு என்னைக்கோ தெரிஞ்சிருச்சு. எப்போ என்னை கொல்ல ஏற்பாடு பண்ணுனீங்களோ, அதுவும் மும்பையில பிரபஷனல் கில்லர் வச்சு கொலை செய்யனும்னு ப்ளான் பண்ணுனீங்களோ அத்தனையும் எனக்கு தெரியும்…”
இப்படி வெட்டவெளிச்சமாய் தான் பண்ணியதை சொல்லிகாண்பித்து தன் முன்னால் சிங்கமென சீறிக்கொண்டு நிற்பவனை மிரண்டுபோய் பார்த்தான் அகத்தியன்.
“ஷேஷா?…”
“ஹ்ம்ம், டெல் மீ…” என்ற ஷேஷா பார்வையில் அகத்தியன் திணற,
“நான் அதெல்லாம் செய்யலைன்னு சொல்ல தோணுதா? தோணாதே. ஏனா ஷேஷா ஆதாரம் இல்லாம பேசமாட்டான்னு தெரிஞ்சு வச்சிருப்பீங்களே….” என்று புன்னகைத்தவனின் புன்னகை கொடிய விஷத்திற்கு சமம் போலவே தோன்றியது அகத்தியனுக்கு.
இவனை விட்டால் முதலுக்கே மோசம் என்பதை போல தன் ஆணிவேரையே ஆட்டிவிடுவான் என்று மீண்டும் வழக்கமான முயற்சியாய் ஷேஷாவிடம் குழைந்தான் அகத்தியன்.
“இங்க பார் ஷேஷா. அது ஏதோ கோவத்துல. நாம எல்லாம் தொழில் பன்றவங்க. நாம சமரசமா போய்டலாம். அதுதான் ரெண்டுபேருக்குமே நல்லது…” உடனே அகத்தியன் தனது நரி வேலையை காண்பிக்க,
“நான் பன்ற தொழிலும் நீங்க பன்ற தொழிலும் ஒண்ணா? அதுவும் என் நல்லதெல்லாம் யோசிக்கறீங்க. பெரிய மனசு தான்…”
“ஷேஷா நான் சொல்ல வரதை புரிஞ்சுக்கனும். நீ இளரத்தம். அதனால இப்படி வேகத்தோட இருக்கற. ஆனா நான் அனுபவசாலி. உனக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கறேன்…” அகத்தியன் மீண்டும் ஷேஷாவை வலைக்குள் இழுக்க முயன்றான்.
“ஆதாரம் இருக்குன்னதும் உடனே காலை சுத்த ஆரம்பிச்சுட்டீங்க அகத்தியன்…” என்று கேட்டதும் அகத்தியனை விட இளவேந்தனுக்கு சுருக்கென்றது.
இப்போது ஷேஷாவின் வாயில் இருந்து அமைச்சர் அகத்தியனில் அமைச்சர் காணாமல் போயிருப்பதை கவனித்துவிட்டான்.
இத்தனை வருடம் போனால் போகிறதென்பதை போல நக்கலாய், எள்ளலாய் அமைச்சரையும் அகத்தியன் பெயருடன் சேர்த்து சொல்லிக்கொண்டிருந்தவன் இப்போது அதை விடுத்து வெறும் அகத்தியன் என்றதில் இளா முகம் வெளுத்தது.
“எழில் போகலாம். இனி இங்க இருக்கறதுல நோ யூஸ். வேற என்ன பண்ண முடியும்ன்னு யோசிப்போம்…” இளவேந்தன் சொல்லவும் அவனை உற்சாகமின்றி பார்த்தான் எழில்.
“எழில் சொன்னா புரிஞ்சுக்கோ. இங்க வச்சு பேசறது வேஸ்ட். இதுவே அவனுக்கு ஒரு எவிடன்ஸ் தான். போகலாம்…” என அவனை அழைத்தான்.
“மாமா வாங்க கிளம்புவோம்…” என எழில் சொல்லவும்,
“மருமகனே என்னன்னு பேச வேண்டாமா?…”
“வேண்டாம். பேசின வரை போதும். இனி பேச எதுவும் இல்லை…” எழில் சொல்லவும் அவனுடன் இளா வெளியேற திரும்ப,
“டாக்குமெண்ட்ஸ்ல சைன் பண்ணி இத்தனை வருஷம் நீங்க பார்த்த பொறுப்பை எப்போ கிளியர் கட்டா ஒப்படைக்க போறீங்க எழில்?…” என்றான் ஷேஷா.
“ஷேஷா…” என பல்லை கடித்துக்கொண்டு கோபமாய் அவனின் முன்னே வந்து நின்றவன்,
“இது நல்லா இல்லை. இது எங்கப்பாவோடது…” என எழில் சொல்ல,
“ம்ஹூம், அவர் உங்களுக்கு மட்டுமில்லை அப்பா. ஷக்திக்கும் தான். அதுவும் இந்த உரிமை அவர் ஷக்திக்காக ஒப்படைச்சது…”
“இதுவரைக்கும் நீங்க ஷக்திக்கு கார்டியன்ற பேர்ல தான் எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணுனீங்க. மறந்துட்டு பேச வேண்டாம் எழில். அப்போ உங்களுக்கு ஷக்தி யாரா இருந்தா?…” என்ற ஷேஷாவின் கேள்வியில் எழிலின் முகம் அவமானத்தில் கன்றியது.
“பணம்ன்னா…” என ஆரம்பித்து படுநக்கலாய் பார்த்த ஷேஷாவின் பார்வையில் குறுகி போனான் எழில்.
“திஸ் இஸ் டூ மச்…” என்றவனின் விழிகள் சிவந்தது.
“இல்லை, இதுதான் கரெக்ட். அதுதான் லாயலும் கூட. முதல்ல ஒருத்தருக்கு லாயலா இருக்க பழகுங்க. இதை சொல்ல நான் யாரோ தான். ஆனா சொல்லுற இடத்துக்கு என்னை கொண்டுவந்துட்டீங்க…”
“ப்ளீஸ் ஸ்டாப் இட்…” என காதை மூடினான் எழில்.
“அந்த பொண்ணை இத்தனை படுத்தறதுக்கு பதில் இந்த கோபத்தை எல்லாம் நீங்க முதல்லையே உங்கப்பாக்கிட்ட காமிச்சிருக்கனும். அப்போ அதை விட்டு இப்போ வந்து மறுப்பு சொல்ல நீங்க யார்? இன்னைக்கு ஷக்தியை விரட்ட நினைக்கிற நீங்க ஏன் உங்கப்பா இருக்கும் போது அதை பண்ண முடியலை?…”
“இதை எல்லாம் பேச நீங்க யார்? நீங்க ஜஸ்ட் ஒரு பாட்னர் தான். ஷேர் பர்சன். அந்த லிமிட்ல இருங்க…” என்றான் இளவேந்தன்.
“என் லிமிட்டை நீங்க யாரும் முடிவு பண்ண கூடாது மிஸ்டர். ஷக்திக்காக நான் பேசுவேன். எப்பவும் அவளுக்கு லாயலா இருப்பேன். கூடவே இருப்பேன்…” என ஷேஷா சொல்லும் பொழுதே அவனின் விழிகளில் ஒரு தேஜஸ்.
இளவேந்தனுக்கு மனதின் ஓரத்தில் ஒரு முள் குத்திய வலி. முயன்று தன்னை மீட்டுக்கொண்டான்.
“இப்போ நீங்க கிளம்பலாம். நான் ஏற்கனவே டாக்குமென்ட் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணிட்டேன். உங்களுக்கு ரெண்டு நாள் டைம். அதுக்குள்ளே நீங்களே வந்து முடிச்சு குடுக்கனும்…”
ஷேஷா உத்தரவை போல சொல்லியவன் அவர்கள் அங்கிருப்பதை தெரியாதவன் போலவே வேலையில் ஆழ்ந்துவிட மூவரும் கரி பூசிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினார்கள்.
வானம் அறக்கட்டளை. இனி அவர்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போன்றொரு தோற்றம் மனதில் எழ அசிங்கப்பட்டதோடு அதை வெறித்து பார்த்தான் எழில்.
கையெழுத்தை போட்டுவிட்டு கை கழுவிவிடு என்று எழிலிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.
‘நமக்கு இல்லாததா? இவை எதுவும் வேண்டாம் விட்டுவிடு’ என எடுத்துரைத்தான்.
ஆனால் அப்படி அல்ல என ஷேஷாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அடிப்படையே பெயர்ந்துவிடும் போல இருந்தது.
உண்மை அறியாத பொழுதே ஷக்திக்காக இத்தனை பார்த்தவன் நடந்ததை அறிந்த பின்பு அவர்களை விட்டுவைக்க அவன் விரும்பவில்லை.
‘ஏன் தான் அவனை சீண்டினோம்?’ என யோசிக்க கூட விடாமல் அகத்தியனின் இருட்டு வாழ்க்கை வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்க அவரின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல அவரின் சராசரி வாழ்க்கையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.
வெறும் ஷேஷாவாக அவனை சமாளிக்கமுடியாமல் தள்ளாடியவர்கள் முன் ஆதிஷேஷனாய் நின்று நடுநடுங்கவைத்தான்.