“அதெல்லாம் விட்டிருக்கமாட்டேன் சித்தப்பா. பாண்டிச்சேரில இருந்து இவங்க கிளம்பவுமே எனக்கு நியூஸ் வந்திருச்சு. அதான் ஃபாலோ பண்ண சொன்னேன். போற ரூட் ஓரளவு தெரிஞ்சதுமே நான் இங்க இருந்து கிளம்பி ஜாயின் பண்ணிட்டேன்…”
“ஹ்ம்ம், நல்லதா போச்சு…”
“நான் போறப்ப அந்த வெங்கடேசன் போன்ல பேசிட்டு இருந்தான். லாலை வச்சு மடக்கிட்டேன். அதான் சிங்காரத்துக்கிட்ட அவனும் எதுவும் சொல்லலை. சிங்காரம் கால் பன்றப்பவும் எதுவும் சொல்லலை…”
“ஹ்ம்ம், சரிப்பா. அந்த வெங்கடேசன் அவன் எங்க?…” அசோகன் கேட்க,
“இன்னும் சில வேண்டுதல்கள் இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு மலையிறங்குவான்….” ஆவுடையப்பன் கேலியாக சொல்ல வாசுகி, மனோகரன் முகத்திலும் புன்னகை.
“நீ இருக்கியே…” என சிரித்த அசோகன்,
“இன்னுமா சிங்காரம் உனக்கு கால் பண்ணலை?…” என கேட்க,
“பண்ணினாரே. பண்ணாம இருக்கமாட்டாரே…” என்ற பொழுதே ஆவுடையப்பனுக்கு போன் கால்.
“சி.எம் கால். பேசிட்டு வரேன்…” என்று எழுந்துகொண்டவன்,
“நீங்க ரூம்ல வெய்ட் பண்ணுங்க. வரேன்…” என்றான்.
“இல்லை, நாங்க ஊருக்கு…” மனோகரன் சொல்ல,
“இப்ப பேச டைமில்லை. ஆனா ஊருக்கு இப்போ நீங்க போகலை. அது சேஃப் இல்லை…” என சொல்லிவிட்டு வெளியேறியிருந்தான்.
“என்ன வாசுகி?…” மனோகரன் மனைவியிடம் திரும்ப,
“இங்க பாருங்கப்பா, ராஜா சொல்றது சரி தான். நீங்க இங்கயே இருங்க. எல்லாம் சரியாகட்டும். அதுவும் அந்த சிங்காரம் இப்ப அடிபட்ட நச்சு பாம்பு. என்னடா செய்யன்னு வெறிபிடிச்சு சுத்துவான். புரிஞ்சுக்கோங்க…” என்றார்.
மறுக்கமுடியாமல் தலையசைத்து பார்க்க அதற்குள் புருஷோத்தமன் உள்ளே வந்தான்.
“ஸார், உங்களுக்கு ரூமை காட்ட சொன்னார் ஸார். நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க…” என்றதும் அவர்கள் கிளம்ப,
“நீ உட்காரும்மா…” என்றார் அசோகன் பிரனித்தாவிடம்.
“நீ பேசிட்டிரு…” என்று வாசுகியும் சொல்லிவிட்டு செல்ல பொம்மை போல அமர்ந்திருந்தார்.
“மருமகளுக்கு கொஞ்சம் கோவம் போல?…” அசோகன் கேட்கவும் வியப்பாய் அவரை பார்த்தாள்.
“என்ன சரித்தானா? அதானே பார்த்தேன்…” என்று சிரிக்க,
“கொஞ்சம் தான். ஆனா ரொம்ப கொஞ்சமில்லை…” மூக்கை விடைத்துக்கொண்டு அவள் சொல்ல,
“இருக்கட்டும். கொஞ்சம் என்ன ரொம்பவே இருக்கலாம். உன் புருஷன். நீ கோவிக்காம யார் கோவிக்க?…” இலகுவாய் அவர் சொல்லவும் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
“சரி அதிருக்கட்டும், உன் மாமன் போன் பண்ணினா…” என்னும் பொழுதே ஆவுடையப்பன் வந்துவிட்டான்.
“என்ன ரகசியமா?…” அவர்கள் பேச்சை நிறுத்தி அவனை பார்க்கவும் அவன் கேட்க,
“ஆமான்னா என்னவாம்? தெரிஞ்சு என்ன செய்ய போற?…” அசோகன் கேட்க,
“எனக்கு தெரியாம ரகசியமா?…” என பிரனித்தாவை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“ஆமா, ரகசியம் தான். உங்ககிட்ட சொல்ல முடியாது…” என்றவள்,
“ஓஹ், குட். குட். இந்த பூத் பங்களா மோகினிக்கான சரியான இடம் தான்…” என்று தண்ணீரை எடுத்து பருக,
“அப்ப உங்களை நானும் ஆவின்னு ஷார்ட்டா கூப்பிடட்டுமா?…” என்றதும் புரையேற திரும்பி பார்த்தான்.
“இன்னும் பொருத்தமா இருக்குமே? மோகினி, ஆவி இருக்க பூத் பங்களா…” சிரிக்காமல் அவள் சொல்ல அவன் சிரித்தான்.
“மிக பொருத்தம்…” என்றான் கண்கள் மின்ன.
“அப்ப எனக்கும் பிடிச்சிருக்கு…”
“ஹ்ம்ம், நார்மல்க்கு வந்துட்ட போல?…” என தண்ணீர் பாட்டிலை நீட்டினான் அவளுக்கு.
பதட்டத்தை, பயத்தை மறைத்துக்கொண்டு இயல்பு போல அவள் இருப்பதை அவனுக்கு காட்டவில்லை என்றாலும் அவள் முயற்சியை கண்டுகொண்டான்.
“உட்கார், உன்னோட ட்ரெஸ் இருந்த பேக் கொண்டுவர சொல்லிட்டேன். அங்க இருக்கு…”
“நீங்க அதுக்குள்ளே எனக்கு ட்ரெஸ் வாங்கி வச்சுட்டீங்களா?…”
“ம்ஹூம், அதெப்படி முடியும்? நான் சொன்னது நீ ட்ரிப்க்கு கிளம்பும் போது எடுத்துட்டு போன ட்ரெஸ்ஸை. அவ்வளோ சீக்கிரம் உனக்கு ட்ரெஸ் எல்லாம் அரேஞ்ச் பன்ற அளவுக்கு நான் ஆள் இல்லைம்மா…” என கூற,
“ப்ச், ஒரு வேகத்துல இருக்குமோன்னு கேட்டுட்டேன்…” பிரனித்தாவும் சொல்ல,
“உனக்கு ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணனும் தான். எப்போ போகலாம்ன்னு சொல்லு. இல்லையா இங்க வரவழைப்போம். அவ்வளோ தானே?…” எனும் பொழுதே மீண்டும் அவன் போன் சத்தம் எழுப்பியது.
“ப்ச்…” சலித்துக்கொண்டே எடுத்து பார்க்க சிங்காரம் தான்.
“சிங்காரம்…” என பிரனித்தாவிடம் காண்பித்தான் ஆவுடையப்பன்.
அதனை பார்த்ததுமே முகமெல்லாம் ஜிவுஜிவுத்தது அவளுக்கு. அவ்வளவு கோவம்.