காலை விழிப்பு தட்டவும் எழுந்தவள் தன் முகத்தை கைகளால் துடைத்து மிச்சமிருந்த உறக்கத்தை விரட்டினாள்.
அலைகழிப்புகள் எல்லாம் குறைந்ததை போலிருந்தது. இந்த இருநாட்களில் வெகுதூரம் யாரோ துரத்த ஓடிக்கொண்டிருப்பதை போலிருந்த பரபரப்பு தொய்வடைந்தது மனதளவில்.
படுக்கையை விட்டு எழுந்தவள் தன் வீட்டின் வழக்கம் போல அவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு தன்னுடைய பேக்கை தேடினாள்.
முதல்நாள் வைத்த இடத்தில் தான் பத்திரமாக இருந்தது. தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாஷ்ரூம் சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வர சோபாவின் அருகே அவளுக்கான காபி காத்துக்கொண்டிருந்தது.
“கீழே வந்து குடிக்க மாட்டேனா நான்?…” என சலித்தபடி அங்கே சென்று அமர்ந்தவள் நேரம் பார்த்தாள்.
இன்னும் ஏழு மணியாகவில்லை. இத்தனை சீக்கிரம் உறங்கியும் உறங்காமலும் என இரவு கழிந்துமே வேகமாக எழுந்துவிட்டதை எண்ணிக்கொண்டு காபியை எடுக்க அருகே பெரிய நோட்டும் அதற்குள் பென்சிலும்.
“மிஸ்டர். வொய்ட் எதையாச்சும் எழுதி வச்சிட்டு கிளம்பிருப்பாரோ?…” என சொல்லிக்கொண்டே அதனை பிரித்தாள்.
“ஓவிய தூரிகை வாசம்…” அதனையே ஓவியம் போல தீற்றியிருந்தான் ஆவுடையப்பன் தன் கைவண்ணத்தில்.
அந்த நோட்டின் முதல் பக்கத்திலேயே மயங்கி லயித்திருந்தாள். எல்லாம் மறந்து பறந்துவிட்டிருந்தது பிரனித்தா மனதிலிருந்து.
“குட்மார்னிங்…” என சொல்லிவிட்டு யார் என்று பார்க்க,
“என் பேர் குமாரசுவாமி மேம். நான் தான் இந்த வீட்டை மேனேஜ் பன்றேன்…” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“ஓஹ், ஓகே…” என அவருக்கு புன்னகையை கொடுத்தவள்,
“என்னோட அம்மா…”
“பெரியய்யா ரூம்ல இருக்காங்க மேம். வாங்க…”
“இல்லை நானே போய்ப்பேன்…” என்றவளுக்கு அப்போது தான் அசோகனின் ஞாபகமும் வந்தது.
“ம்ஹூம், ஒன்னும் சரியில்லை. என்ன இப்படியாக்கிட்டேன் நான்?…” என நொந்துகொண்டு மீண்டும் படியேற அசோகனின் அறைக்கு அருகில் செல்லும் பொழுதே இன்னொரு அறையை திறந்துகொண்டு வந்தான் ஆவுடையப்பன்.
“அம்மா…” என்ற அலறலுடன் திடுக்கிட்டவள் சட்டென வாயை பொத்தி தனது சத்தத்தை அடக்கினாள்.
நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது பதட்டத்தில். திடீரென அந்த அறை திறந்து வெளியே வருவான் என நினைத்தாளா என்ன?
அவளை பார்த்தவன் பார்வையில் அழுத்தம் கூடிய முறைப்பு. அவனோடு பின்னால் இன்னும் நான்குபேர் வெளியே வர வந்தவர்களும் அவளிடம் வணக்கத்தை தெரிவித்துவிட்டு தாண்டி சென்றனர்.
இன்னும் கண்களை அகல விரித்தபடி ஏறிய புருவமும், வாயில் வைத்த கையுமாக அப்படியே தான் நின்றிருந்தாள்.
“உள்ள வா…” என அவளின் இன்னொரு கையை பிடித்து அழைத்து சென்றவன் பிடியே வலிந்து இருந்தது.
“நிஜமாவே பூத் பங்களா தான்…” மூடிய இதழ்களுக்குள் அவள் மொழிந்துகொள்ள உள்ளே வந்தவன்,
“மனுஷங்க தானே இருக்கோம்? என்ன பயம்? அதுவும் யார் இருக்காங்க இல்லைன்னு கூட தெரியாம…” என அவளை குற்றம் சாட்ட பயமெல்லாம் அகன்று அவனை திகைப்புடன் பார்த்தாள்.
“உன்கிட்ட விளையாட்டுத்தனம் அதிகம்ன்னு தெரியும். கொஞ்சம் வாய் தான் நீ. ஆனா இனிமே அதை நம்ம ரூம்க்குள்ள மட்டும் வச்சுக்கோ. புரியுதா?…”
“ஹாங்…”
“என்ன ஹாங்? இனிமே உன்னோட இமேஜ் வேற. அதுக்கேத்த மாதிரி இருக்கனும். மினிஸ்டர் பொண்டாட்டி இப்படின்னு வர கூடாது…” என அவளுக்கு பாடம் எடுப்பதை போல சொல்ல,
“வர கூடாதுன்னா? என்ன சொல்றீங்க?…”
“இருக்கற இடத்துக்கு எத்த மாதிரி நடந்துக்கனும்னு சொல்றேன் பிரனித்தா. அது கூடவா புரியாது?…” என்றவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் வலித்தது.
“இப்ப என்ன நடந்துக்கலை? டக்குன்னு ஷாக்ல கத்திட்டேன். அது எதோ தெரியாம. அதுக்கு என்னென்னவோ பேசறீங்க? எனக்கும் மெச்சூரிட்டி இருக்கு. எங்க எப்படி நடந்துக்கனும்னு நல்லா தெரியும். அதுக்கு என்னை நீங்க…” என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு,