அவனின் அணைப்பில் வெகுநேரம் நின்றவள் தன்னை நிதானித்துக்கொண்டு விலக முயன்றாள்.
“ஓகே வா நீ?…” என்றவன் கேள்வியில் தலையை அசைக்க,
“ஸ்மைல்…” என அவளின் புன்னகையை கேட்டான்.
“ஸ்மைல் பண்ணினா மினிஸ்டர் என்ன தருவீங்க?…” அவளின் வழக்கமான குரலில் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணீரை அவனின் சட்டையிலேயே துடைத்தாள்.
“அதான் இந்த ஷர்ட்டை எடுத்துக்கிட்டியே? வேற என்ன வேணுமாம் மோகினிக்கு? (www.napavalley.com) …” அவள் உயரத்திற்கு குனிந்து கேட்க சோபையாய் ஒரு புன்னகை அவள் முகத்தில்.
“வாவ், குட் குட்…” என்று அவனும் புன்னகைத்து,
“அழுகை எல்லாத்துக்கும் சொல்யூஷன் இல்லை மோகினி. சில விஷயங்களை நாம தான் சமாளிக்கனும். அதை கையாள நம்மை நாமே தைரியமா வச்சுக்கனும். ஸ்டே ஸ்ட்ராங்…” என்று அவளுக்கு சொல்ல,
“அட்வைஸ் பன்றது ஈஸி மினிஸ்டர் ஸார்…” என்றாள் கண்ணை இன்னும் நன்றாக துடைத்துக்கொண்டு.
“ஓகே, ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வா. முகத்தையும் அப்படியே கழுவிட்டு வா….” என்றதும் அவள் நகர சட்டையை கழற்றி வேறு சட்டை போட்டுக்கொண்டான்.
முகத்தில் மெல்லிய முறுவல் கொஞ்சமும் மறையாமல் இருந்தது. பிரனித்தா வெளியே வர அவளை பார்த்து அருகே அழைத்தவன்,
“நீயும் சரியா சாப்பிடலையே. உனக்கு எதாவது எடுத்துட்டு வர சொல்லட்டுமா?…”
“கவனிச்சீங்களா?…”
“ஹ்ம்ம்…”
“பசிக்கலை. பசி போயிருச்சு. வேண்டாம்…”
“ஏன்? இன்னும் இங்க இருந்து போகனும்னு எண்ணம் இருக்கா என்ன? அதான் பசி இல்லையா?…”
“ப்ச், அதெல்லாம் இல்லை. நான் ஒரு வேகத்துல சொல்லிட்டேன். யோசிக்காம பேசிட்டேன். தப்பு தான். ஆனா…”
“உன்னோட பேரன்ட்ஸ் இங்க தான் கொஞ்ச நாள் இருப்பாங்க. இப்ப போக கூடிய சூழல் இல்லை….”
“ஆனா அம்மா கேட்கிற நிலைமையில் இல்லையே?…” என்றதும் அவன் யோசித்தான்.
“அப்பாவோட வேலை இப்படி நிறைய காரணங்கள் இருக்கு. அவங்க இருக்க மாட்டாங்க…”
“ஹ்ம்ம், பார்ப்போம். இதை பத்தி யோசிப்போம்…” என்றவன் தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.
“ஓகே, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கீழ ஹாலுக்கு ரைட் சைட்ல ஒரு ரூம் இருக்கும். அது ஆபீஸ் ரூம். கூப்பிடனும்ன்னா…” என்றவன் அவள் முகம் பார்த்துவிட்டு,
“வேண்டாம், கால் பண்ணு. நானே வருவேன்…” என்றான்.
“அட்டன் பண்ணுவீங்களா?…” என்றவள் கேலியில்,
“வீட்டுல தானே இருக்கேன். கால் வந்தா வந்திருவேன்…” என சொல்லி அவளின் கன்னம் தட்டிவிட்டு அறையின் வாசலுக்கு சென்றான்.
குடுகுடுவென்று ஓடியவள் அறையிலிருந்த லேண்ட்லைனை எடுக்க அவள் ஓடிய சத்தத்தில் பட்டென்று திரும்பினான்.
“என்னாச்சும்மா?…” என கேட்க,
“இல்ல கால் பண்ணினா அட்டன் பன்றீங்களான்னு பார்க்கலாமேன்னு….” என்றதும் இடுப்பில் கை வைத்து நின்றவன் லேசாய் முறைக்க,
“நேத்து தான் கல்யாணமாகியிருக்கு. ஆனாலும் என்னவோ நீ லைஃப் லாங் என் கூடவே ட்ராவல் பண்ணிட்டு வந்த மாதிரி தோணுது மோகினி…”
“கீழே வேலை இருக்குன்னு சொன்னீங்க…” வேண்டுமென்றே அவனுக்கு அதனை ஞாபகப்படுத்த,
“என்ன என்னை இப்போ டைவர்ட் பன்றியா நீ?…”
“நான் ஒன்னும் பண்ணலை. ஐ மீன் நான் ஒண்ணுமே பண்ணலை…”
“வாட்?…” என கேட்டவனை நெருங்கியவள் வாசலை தாண்டி நின்று,
“உங்களை டைவர்ட்டாக சொல்லலை…” என்றதும் அவனுக்கு புரிந்துவிட,
“ஹேய் மோகினி…” என்றான் திகைத்து நம்ப முடியாமல்.
“இப்பத்தான் புரியுது போல. சரியான மங்குனி அமைச்சர்…” என்றுவிட்டு வேகமாய் நடக்க கடைசியில் அவள் சொல்லியது அவன் காதில் விழவில்லை.
“பிரனி…” என்ற அழைப்பில் திரும்பி பார்த்து சிரித்தவள்,
“என் மொபைல் அம்மாட்ட இருக்கு. அதான் போறேன்…” என சைகையில் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு செல்ல குறையாத சிரிப்புடன் தானும் கீழே சென்றான்.
அவன் அலுவலக அறைக்குள் சென்றதுமே பார்க்கவேண்டிய வேலைகள் வரிசைகட்ட முதலில் அவற்றை பிரித்தான்.
ஏகப்பட்ட மெயில்கள் வந்திருந்தது. அவற்றை பார்க்க நேரமின்றி யார் என மட்டும் பார்த்துவிட்டு அதனை புருஷோத்தமனிடம் அறிவுறுத்திவிட்டு பேசிக்கொண்டிருக்க மீண்டும் அழைப்பு.
“ஸார் சி.எம் பி.ஏ…” புருஷோத்தமன் போனை தர,
“மை குட்னஸ் இவ்வளோ சீக்கிரம் எதிர்பார்க்கலை…” என வாங்கிக்கொண்டவன் பேசி முடித்ததும் கொஞ்சம் நிம்மதியானான்.
“ரெண்டே விஷயம் தான். ஒன்னு மிஸ்டர்.மனோகரனுக்கு முழு விவரம் தெரியுமா தெரியாதான்னு தெரிஞ்சுக்கனும். அப்படி இன்னும் தெரியாதபட்சத்தில மேலும் என்ன பண்ண முடியும்ன்னு நோட் பண்ணனும்…”
“ஹ்ம்ம், புரியுது ஸார்…”
“ஓகே, வரட்டும். எப்படியும் வந்து பேசும் போது தெளிவாகிடும் தானே?…”
“அப்போ பண விவரமும் தெரிய வருமே எல்லாருக்கும். அதோட…”
“ஆல்மோஸ்ட் பணத்துக்காகன்னு பிரனித்தா ஃபேமிலிக்கு தெரியும். அது என்ன பணம்ன்னு இனி தான் தெரியும். தெரியட்டும். அடுத்தது ம்ஹூம், தெரியவருதான்னு பார்ப்போம்…” என்றவன்,
“எதுவும் ஹால்ல வச்சு இருக்க கூடாது புருஷோத்தமன். இது சிங்காரத்துக்கு பாஸிட்டிவா ஆகிட கூடாது. உள்ள வரவங்க எதையும் ரெக்கார்ட் பன்ற மாதிரி இருக்க கூடாது…”
“சூர் ஸார்…” புருஷோத்தமன் சொல்ல,
“என்ன சூர்? அப்படியே பேசினாலும் அது சிங்காரத்துக்கு தானே ஆப்பாகும். நான் சொன்னா நீயும் சூர் சொல்ற மேன்? கொஞ்சம் ஷார்ப்பா இரு…” என்றான் கூர்மையான விழிகளுடன்.
“ஸாரி ஸார்…”
“இன்னொரு தடவை இந்த ஸாரி என்கிட்ட நீ கேட்கிற மாதிரி இருக்க கூடாது. புரியுதா?…” என்று சொல்ல,
“ஸார் அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கேன்…” என்றான் தனது மொபைலை பார்த்துவிட்டு.
“எல்லாரையும் வெளில போக சொல்லு…” என்ற ஆவுடையப்பன்,
“ம்ஹூம், வேண்டாம். வந்தவங்க எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வர சொல்லு. நான் வரேன்…” என்று புருஷோத்தமனை அனுப்பினான் ஆவுடையப்பன்.
சிங்காரம் உள்ளே நுழைவதை அங்கிருந்தே பார்த்தபடி அவன் அமர்ந்திருக்க புருஷோத்தமன் என்னவோ பேசுவதும், அதற்கு சிங்காரம் அவனை முறைப்பதுமாக உள்ளே வர தனது மொபைலை எடுத்து பிரனித்தாவிற்கு அழைத்தான்.
“கீழே வா மோகினி. எல்லாரையும் கூட்டிட்டு…” என்று சொல்லிவிட்டு வைக்க அவளுக்கு புரிந்துபோனது.
சிங்காரம் அந்த அறைக்கு வரும் முன்னே ஆவுடையப்பன் அங்கே சென்றுவிட்டான்.
இருக்கையில் அமர்ந்தபடி அவர்களை தலையசைத்து பார்வையால் வரவேற்க பல்லை கடித்தபடி வந்த சிங்காரம் மற்றவர்கள் எங்கே என தேடினார்.
“உட்காருங்க ஸார்…” என ஆவுடையப்பன் சொல்லவும் மணிமேகலையும், நேகாவும் அங்கே ஏன் தங்களை அழைத்து வந்தனர் என யோசனையோடு பார்க்க,
“ப்ரூ குட்டி எங்க?…” என்றான் பத்ரி.
“உட்காருங்க பத்ரி. பேசலாம். நான் வர சொல்லிட்டேன். இப்ப வந்திருவாங்க…” என சொல்லவும் அமைதியாக அமர்ந்தான்.
“என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க? எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம?…” வருத்தம் தோய்ந்த குரலில் மணிமேகலை சொல்லும் பொழுதே கதவு திறக்கப்பட்டு மனோகரன் முதலில் வந்தார்.
“மாமா…” என பத்ரி அவரிடம் செல்ல சிங்காரம் அமைதியாக கவனித்தபடி இருந்தார்.
சட்டென எழுந்து சென்று எதையும் பேசவில்லை சிங்காரம். வருபவர்கள் முகபாவனையில் கவனமாக இருந்தார்.
பார்த்ததும் மனோகரன் முகத்தில் என்ன வந்து போகிறது என்பதை பொருத்து தான் தன்னுடைய பேச்சும், செயலும் என அவர் பார்த்திருக்க அவரின் யூகம் சரிதான்.
தெரிந்திருக்கும், தெரியாதிருக்கும் என நூற்றுக்கு ஐம்பது சதவீதம் இப்படியும், அப்படியும் தான் நினைத்து வைத்திருந்தார்.
“என்ன வாசுகி நீ கூட போன் பண்ணி சொல்லலை. என்னாச்சு? ஏன் எங்கட்ட சொல்லாம இப்படி ஒரு முடிவு?…” என கேட்க ஆவுடையப்பன் அங்கு நடப்பதை பார்க்கும் வேடிக்கையாளனானான்.