“நீயெல்லாம் மனுஷனாய்யா…” என பிடித்து சிங்காரத்தை உலுக்க ஆவுடையப்பன் எழுந்து வந்துவிட்டான் உடனே.
“மாமா விடுங்க…” என ஆவுடையப்பனும், பத்ரியும் அவரை பிடிக்க,
“நீ போடா. உங்கப்பனுக்கு நீ என்ன காவலா? என் பொண்ணை காவு குடுத்தாச்சும் நினைச்சத நடத்திப்பேன்னு சொன்னவன்கிட்ட இதுக்கு மேல எனக்கு என்ன பொறுமை?…” என மனோகரன் சொல்ல,
“மனோகரா, தப்பு பன்ற. என்னமோ போனா போகுதுன்னு உன்னை விட்டு வச்சிருக்கேன். என் சட்டையை பிடிக்கிற அளவுக்கு துணிச்சலா உனக்கு? உன் தகுதியை அறிஞ்சு நட…” என சிங்காரம் மனோகரனை எச்சரித்தார்.
“உங்களுக்கு இதை சொல்ல தகுதி இருக்கா சிங்காரம்?…” என்றான் ஆவுடையப்பன்.
“ஏய்…” சிங்காரம் அவனிடம் கத்த,
“நிறுத்துய்யா. அடுத்த வீட்டு பொண்ணு வாழ்க்கையில முடிவெடுக்க நீ யார்? இதுவே உன் பொண்ணுன்னா இதை பண்ணிருப்பியா நீ?..” என அவன் கேட்க,
“நினைச்சதை சாதிச்சிட்டோம்ன்னு இறுமாப்பா ஆவுடை?…” என்ற சிங்காரம் கோபத்தை அடக்கிக்கொண்டு,
“இங்க பார் ஆவுடை, என் விஷயத்துல நீ தலையிடறது எனக்கு புடிக்கலை. பதவிக்கு வந்தோமா அதை மட்டும் பார்த்தோமான்னு போகாம முன்னால அந்த பதிவில இருந்த என்னை இப்ப ஏன் நோண்டிட்டு இருக்க நீ?…” என்றார்.
“காரணம் உங்களுக்கே தெரியுமே?…”
“அது என் டைம்ல நான் செஞ்சது. அது உனக்கு தேவையில்லாத விஷயம்…” சிங்காரம் மிக பொறுமையுடன் பேச,
“நீ புடுங்கி வச்சிருக்கறது மட்டும் என்ன உன் அப்பன் வீட்டு காசாடா?…” என்ற காட்டு கத்தலில் அத்தனைபேரும் திடுக்கிட்டு பார்த்தனர்.
“அது உன் அப்பன் வீட்டிதும் இல்லையே சிங்காரம்…” என அமர்த்தலாக ஆவுடையப்பன்.
மற்றவர்களுக்கு விஷயம் என்ன என முழுதாய் விளங்கவில்லை. அதுவரை வாசுகி அழுதுகொண்டே மணிமேகலையிடம் நடந்ததை சொல்லியபடி இருக்க அதில் கவனம் கலைந்து இங்கே திரும்பியது பார்வை.
“அப்பா என்ன பேச்சு இது?…” என பத்ரி சொல்ல,
“பின்ன என்னடா? எவன் தான் கையாடல் செய்யாம இருக்கான்? நானும் செஞ்சேன். எவ்வளோ பொறுமையா நானும் சொல்லி சொல்லி பார்த்துட்டு இருக்கேன். கேட்கமாட்டேன்றான்…” சிங்காரம் கொந்தளிக்க அசராத பார்வையுடன் நின்றான் ஆவுடையப்பன்.
“இங்க பாரு, அந்த டொனேஷன் அமௌண்ட் கூட என்னவோ பண்ணு. ஆனா மத்த பணம் வேணும். சும்மா இல்லை. அஞ்சு வருஷம் நான் படாத பாடுபட்டு….” என கெஞ்சிக்கொண்டிருக்க வெறித்த பார்வையுடன் பார்த்தாள் பிரனித்தா.
“என்ன சொல்றார்? என்ன நடந்துச்சு நீங்களாச்சும் சொல்லுங்களேன்…” பத்ரி ஆவுடையப்பனிடம் கேட்க,
“நிறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு போற டொனேஷனை விட இங்க அரசாங்கத்துக்கு வர பணத்தோட அளவு அதிகம். நன்கொடைகள், மருத்துவத்துக்கான பண பரிவர்த்தனைன்னு இங்க நிறையவே…”
“அப்படி வர டொனேஷன் வெறும் காசு மட்டுமில்லை. நிறையபேரோட வாழ்வாதாரம், படிப்பு, உயிர் காப்பு, அடிப்படை வசதிக்கான உத்திரவாதம், இலவச மருத்துவ காப்பீட்டு தொகை. ஆதரவற்றவங்களுக்கான வாழ்க்கை. இப்படி சொல்லிட்டே போகலாம்….”
“உங்கப்பா அதுல பெருமளவு பணத்தை சுருட்டிருக்கார். அதோட அவர்…” என்றவன் பார்வை சிங்காரத்தை பார்க்க நடுக்கத்துடன் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் நின்றார் சிங்காரம்.
“தெரியும் போது தெரியவரும். இப்போதைக்கு இது தான்…” என்றான் ஆவுடையப்பன்.
“என்னடா என்ன பெருசா பேசற? பிசாத்து காசு. எவன் செய்யலை இதை? நான் செஞ்சதுன்னு நிரூபிக்க முடிஞ்சா கோர்ட்டுக்கு போ. நான் பார்த்துக்கறேன்…” என சிங்காரம் பேச,
“ஆஹாங், குட் குட்…” என்றான் நக்கலாக.
ஆனால் விழிகள் சிவந்துபோயிருந்தது ஆவுடையப்பனுக்கு. கொஞ்சமும் வெறும் பணம் தானே என்று அத்தனை பேசும் சிங்காரத்தின் மேல் உள்ளார்ந்த வெறி பெரிதாகியது.
“அப்பா என்ன இதெல்லாம்?…” பத்ரி கேட்க,
“என்னடா புதுசா கேள்வி கேட்கிற நீ? இத்தனை மாசமா இவன்கிட்ட சிக்கிட்டு என்னலாம் ஆட்டம் காட்டறான் இவன்…” என்று மகனை பேசிக்கொண்டிருந்தார்.
“உங்களுக்கு வந்தா ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா?…” என அதுவரை அமைதியாக இருந்த பிரனித்தா சிங்காரத்திடம் நக்கலாக கேட்க,
“ஏய்…” என விரலை நீட்டினார் சிங்காரம்.
“உன்னால இந்த சில்வண்டு எல்லாம் என்கிட்ட எதிர்த்து பேசுது. எல்லாம் உன்னால. என் கஷ்டம் எவ்வளோனு தெரியுமா?..” என ஆவுடையப்பனிடம் சிங்காரம் சீறிக்கொண்டிருக்க,
“நேகாக்கா இந்த ஆஸ்ர்டிச் தெரியுமான்னு சிங் கிட்ட கேட்கட்டா?…” என பிரனித்தா கேட்டதும் அவளருகே நின்ற ஆவுடையப்பன் சட்டென அவளை தன்னருகே இழுத்து வாயை கை கொண்டு பொத்தினான்.
அத்தனைபேரும் இதனை கவனிக்க மற்றவர்களுக்கு கேட்கவில்லை. நேகாவிற்கு புரையேறிவிட்டது பிரனித்தா கேட்டதும்.
நேகா சொல்லும் முன் ஆவுடையப்பன் அவளை இழுத்து வாயை மூடியிருக்க மற்றவர்கள் என்ன இது என வாய்பிளந்து பார்த்தனர்.
“கேட்டுடுச்சா?…” மெல்லிய குரலில் மூடிய விரல்களுக்கிடையே அவளின் பேச்சு அவனை எட்ட,
“அந்த ஒண்ணை பறிச்சதுல தான நீ என் கிட்ட கதறிட்டு இருக்க சிங்காரம்…” என்றவன் கண்களில் அக்னி ஜுவாலை.
தள்ளி நின்றவர்களுக்கு விஷயம் என்னவென கேட்கவில்லை. ஆனால் ஆவுடையப்பன் அருகில் நின்றிருந்தவளுக்கு இதில் என்னவோ இருக்கிறது என புரிந்தது.
“ஆவுடையப்பா என் பொறுமையும் ரொம்ப சீக்கிரம் கரைஞ்சிரும்…”
“அதுக்காக தான் வெய்ட் பன்றேன். பண்ணி தான் பாரேன். அப்பறம் நான் யாருன்னு உனக்கு புரியும்…” என்றவன் மிடுக்கில் இன்னுமே எரியும் தீயில் எண்ணையை ஊற்றிய விதமாய் இருந்தது சிங்காரத்திற்கு.
“மனோகரா தப்பு பண்ணிட்ட நீ…” என்று அவரிடம் திரும்ப,
“உங்களை நம்பினது என் தப்பு தான். போதும். எங்களை இதோட விட்டுடுங்க…” என்றார் மனோகரன்.
“ம்ஹூம், அதெப்படி விட முடியும்? இனி தான் இருக்கு எல்லாருக்கும்…” என்ற சிங்காரம்,
“இன்னும் என்ன? இந்த உறவை இங்கயே தலை முழுகிட்டு வாங்க. கருமாதிக்கு போய்க்கலாம். அவ்வளோ தான்…” என வேகமாக சிங்காரம் கதவை திறந்துகொண்டு சென்றுவிட்டார்.
“பிரனிம்மா…” என்று மணிமேகலை கண்ணீருடன் அவளை பார்க்க,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அத்தை. உங்க மேல கோபம் அப்படிலாம் இல்லை. ஆனா அவரை தாண்டி தான் உங்கக்கிட்ட வர முடியும்ன்னா வேண்டாம். இப்படியே இருந்துடுவோம்…” என பிரனித்தா சொல்லவும்,
“ரொம்ப பெரிய பொண்ணாகிட்டடா ப்ரூ குட்டி…” என்றான் பத்ரி.
“ண்ணா உன்னை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்….” என்று அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“நான்? என்னை மிஸ் பண்ணமாட்டியா?…” என்றாள் நேகா.
“தனி தனியா எல்லாம் சொல்ல முடியாது. என்னை மிஸ் பண்ணினா நானும் பண்ணுவேன். அவ்வளோ தான்…” என்றவள் கண்ணீருடன் புன்னகைக்க,