“இல்ல நீங்க இவ்வளோ நேரம் என்கிட்டே பேசறது இது தான் முதல் தடவை. அதான்…” என்று மெல்லிய குரலில் சொல்ல அதில் தொனித்த ஏக்கத்தை கண்டுகொண்டவன் மனது குலுங்கியது.
சாதாரணமான பேச்சுக்களை கூட அவளுக்கு தான் தரவில்லை என உணர்ந்தவன் இதயம் அவளுக்காக தவிக்க,
“இங்க வா…” என கை நீட்டினான்.
“உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணலைன்னு வருத்தமா உனக்கு?…”
“ம்ஹூம், இல்லைன்னு இல்லை. ஆனாலும் தோணும்…”
“என்ன தோணுமாம்? சொல்லேன் கேட்போம்…” என இலகுவாய் சிரித்தபடி கேட்க,
“ஹ்ம்ம், பெரிய பொண்ணு தான். அவ்வளோ குட்டி பொண்ணில்லை…” என ஆவுடையப்பன் விஷமமாய் கண் சிமிட்ட,
“யப்பா, அமைச்சருக்கு இதெல்லாம் தெரியுதாமா?…” என்றாள் சலுகையாய் அவனை கலாய்த்துக்கொண்டு.
“என்ன தெரியலை. இவ்வளோ நேரம் தெரியலையா எனக்கு என்ன தெரியும்ன்னு? உனக்கு தெரிஞ்சா சொல்லு. கத்துப்போம்…” என அவளின் கூந்தலை பிடித்து அருகே இழுத்தான்.
“ஸ்ஸ்ப்பா வலிக்குது…” அவன் கையிலிருந்த ஜடையை இழுத்து தலையை தடவிக்கொண்டே அவள் சொல்ல,
“பரவாயில்லை. வலிக்கட்டும்….” என சிரித்தவன்,
“நாளைக்கு உனக்கு வேலை இருக்கும் தானே?…”
“ம்ஹூம், இல்லை. லீவ் சொல்லிட்டேன். அம்மா ரெண்டு நாள் நல்லா தூங்கி எழுந்துக்கனும்னு சொல்லியிருக்காங்க…”
“எதுக்காம்?…”
“ரிசப்ஷன்ல இன்னும் கொஞ்சம் நல்லா தெரிய. வொர்க் பண்ணிட்டே இருந்தா அந்த டயர்ட் முகத்துல தெரியுமாம். டல்லா இருக்குமாம் போட்டோ ஷூட்க்கு…” என்றதும் அவன் புன்னகைக்க,
“என்ன சிரிக்கறீங்க? நாள் முழுக்க பேசிட்டே இருப்பேன். வேலை பார்த்துட்டே கூட இருப்பேன். ஆனா பகல்ல தூங்கறதெல்லாம் எப்பவாச்சும் முடியலைன்னா மட்டும் தான்…” என்றதும் இன்னும் சிரித்தான்.
“இன்னைக்கு நல்லா தூங்குவ டே டைம்…” ஆவுடையப்பன் கை கொண்டு காலை தட்டிக்கொண்டு சொல்ல,
“ஆமா, நான் ரொம்ப டீப் ஸ்லீப் போய் பல மாசமாச்சு. அதுவும் மினிஸ்டர் போஸ்டிங் கிடைச்சதுல இருந்து இன்னும் தூக்கம் கம்மி…”
“ஏன்?…”
“ஏன்னா? அதுக்கு முன்ன நாலு நாள் தூங்காம இருக்கறதா இருந்தாலும் இருப்பேன். ஒருமணி நேரம் தூக்கம் போதும்ன்ற அளவுக்கு இருந்தேன். அதுக்கப்பறம் தூங்கனும்னு நினைச்சாலும் தூக்கம் வரதில்லை…”
ஆழ்ந்த குரலில் அவன் சொல்லியதன் பின்னிருந்த வேதனை எதனால் என அவளால் உணர முடியாது போக,
“உங்கப்பாம்மாவை ரொம்ப மிஸ் பன்றீங்க தானே?…” என்றாள் தானாக ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு.
அதில் மென்மையாக புன்னகைத்தவன் பார்வை பிரனித்தாவின் முகத்தையே வட்டமிட்டது.
“இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா அவங்க ஒரு நிறைவான வாழ்க்கையை தான் வாழ்ந்துட்டு போயிருக்காங்க. இப்ப அங்க அவங்க நல்லா தான் இருப்பாங்க…”
“புரியலை….” என்றாள் அவள்.
“அப்பா இல்லாம அம்மாவோ, அம்மா இல்லாம அப்பாவோ இருந்திருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. யாருமே எதிர்பார்க்காத மரணம் அவங்களுக்கு. எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தா அப்பா ஹார்ட் அட்டாக் நியூஸ் கேட்டு அம்மாவும் ஷாக்ல அப்பாவோடவே தன் வாழ்நாளை முடிச்சிருந்திருப்பாங்க…”
அவன் சொல்லியது என்னவோ வெகு சாதாரணம். இத்தனை வருடத்தில் இழப்பில் இருந்து மீண்டிருந்தான்.
கேட்டவளுக்கு தான் அதனை அப்படி எடுத்துக்கொள்ள முடியாமல் மனதை துளைத்தது.
“கைல ரிசீவரை வச்சிட்டிருந்தவங்க அப்படியே உட்கார்ந்ததை தான் பார்த்தேன். நான் என்னன்னு கேட்க பக்கத்தில போக எனக்கு பதில் சொல்ல அவங்க இல்லை. அதை ஜீரணிக்கிற அளவுக்கு பெரிய பையன் தான் நானும். ஆனாலும் அம்மாப்பான்னு நினைக்கும் போது…”
பேச்சை நிறுத்தி துக்கத்தை விழுங்கிக்கொண்டவன் மனதில் இன்னும் திடம் கூடியது.
“கொஞ்ச நாள் கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்பறம் எனக்கே தோணிடுச்சு. ஒருவேளை ஒருத்தரை பிரிஞ்சு இன்னொருத்தர் இருந்திருந்தா அவங்களுக்கும் நரகம். பார்க்கற எனக்கும் வேதனை. ரெண்டுபேரும் ஒண்ணா தானே போயிருக்காங்கன்னு தேத்திப்பேன்…”
இதில் லேசாய் விழிகள் கலங்கி இருக்க அவன் முகத்தை துடைத்துவிட்டாள் பிரனித்தா.
“ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க. எனக்கு தான்…” என்றவள் மனதிற்குள் அவை எல்லாம் பெரும் தாக்கத்தை உண்டு செய்திருந்தது.
“என்னவாம்?…” என்றான் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி.
“ஹ்ம்ம், தெரியலை. எவ்வளோ பெருமையும், கர்வமும் உங்க அப்பாம்மாவை சொல்லும் போது. என்னோட உங்க லைஃப் எப்படி இருக்குமோ? அதான் யோசிச்சேன்….”
“ஹேய் மோகினி? என்னாச்சு?…” நிஜமாய் ஒரு சிரிப்பு வந்துவிட்டது அவளின் இந்த பேச்சில்.
“ஹ்ம்ம், ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இருந்தா கஷ்டம், அதுக்கு கூடவே போனது மேலன்னு சொல்றீங்க. இப்படி என்னை நினைக்க வைப்பேனா நான்?…” என்ற பேச்சின் திசையில்,
“என்னம்மா? என்ன பேசற நீ?…” பதறி போனான் ஆவுடையப்பன்.
தான் ஒன்று சொல்ல அவளின் எண்ணங்கள் அதில் எங்கோ முடிச்சிட்டு நின்றதில் துணுக்குற்றான்.
“நான் அவ்வளோ சீரியஸ் கிடையாது. எதையும் பொறுப்பா எடுத்துப்பேனான்னா எனக்கே தெரியலை. அப்படி ஒரு எண்ணத்தை உங்களுக்கு தருவேனா?…” என்று அவள் கேட்க கேட்க திக் திக் என்றது அவனுக்கு.
“ரிசப்ஷன் முடியவும் இதை எல்லாம் ஏற்பாடு பண்ணலாம்ன்னு இருந்தேன் பிரனித்தா. ஆனா உன்னை விட்டு அவ்வளோ தள்ளியிருக்க முடியலை என்னால. பார்த்த தானே? உன்னை என்ன பண்ணி வச்சிருக்கேன் நான். உன்னால உணர முடியலையா?…” என கடுமையாய் கேட்க,
“நான் இல்லைன்னா நீங்க இருப்பீங்க தானே?…” மீண்டும் அதிலேயே அவள் சுழல,
“பேசாத பிரனித்தா…” என்றான் அவளின் கூந்தலை ஒரு கையால் வலிக்க பற்றி தன்னை நோக்கி இழுத்து.
“என்னை தேடுவீங்களா? எனக்கு தெரிஞ்சுக்கனும், சொல்லுங்களேன்….” என கேட்க இழுத்து அணைத்துக்கொண்டான் ஆவுடையப்பன்.
இன்று இப்படி இதனை பேசியிருக்க கூடாதோ என மனது அலைபாய்ந்து கொண்டிருக்க மனைவியின் மனதோ தன்னால் கணவனிற்கு இத்தனை காதலை தர முடியுமா என்பதிலேயே இருந்தது.
“நீ இல்லைன்னா அப்படின்னு நான் யோசிச்சதே இல்லையே பிரனி. உன்னை விட முடியாம தான் இவ்வளோ செஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். புரியலையா உனக்கு?…”
“புரிஞ்சது. ஆனா…” என்றவளை மேலும் பேச அனுமதிக்கவில்லை அவன்.
லேசாய் கண்ணீர் அவளின் கன்னம் நனைப்பதை உணர்ந்தவன் அதன் பின்பே விலக மௌனமாய் அவனின் கைகளுக்குள் கண் மூடினாள்.
“ஸாரி பிரனி…” என்றவன் இதழ்களை கை கொண்டு தடுத்தவள் மனதை அமைதிப்படுத்தினாள்.
அவள் நன்றாக உறங்கும் வரை அவளருகே இருந்தவன் உறங்கிவிட்டதன் சீரான சுவாசத்தில் அவளை மெல்ல தலையணையில் சாய்த்துவிட்டு எழுந்து முகம் கழுவி வந்தான்.
“வெளில கிளம்பிட்டீங்களா?…” அரை கண்ணில் அவனை பார்க்க விழித்துவிட்டாளா என ஆயாசத்துடன் பார்த்தான் ஆவுடையப்பன்.
“இம்சைடி. தூங்கு ஒழுங்கா…” என்று அவளின் தலையில் தட்ட நிறைவாய் ஒரு புன்னகை பிரனித்தாவிடம்.
“போகலைன்னா பக்கத்துல இருங்களேன். ப்ளீஸ்…” என்று தன் கையை நீட்ட,
“வரேன்…” என்றவன் தனது ஓவிய நோட்டை எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தான்.
“நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பன்றேனா?…” இன்னும் அரை உறக்கத்தில் தான் கேள்விகள்.
“உதை வாங்குவ நீ…”
“ப்ச், கேட்டா பதில் சொல்லனும்…” அவள் அதட்ட,
“பார்ரா?…” என்றவன்,
“இங்க தான் இருக்கேன். மேபி இன்னைக்கு ப்ரீ தான். பார்க்கலாம். நீ ரிலாக்ஸா தூங்குவியாம்…” என்று அவன் லைட் லேம்ப்பை போட்டுவிட்டு வரைய துவங்க சட்டென தலை தூக்கியவள்,
“அச்சோ, முழுசா வரைஞ்சிடாதீங்க…” என்று கத்தினாள்.
“என்ன?…” திகைத்து அவளிடம் திரும்ப,
“இல்ல அப்பப்ப என்னை, இல்லை நம்மளை வரைவீங்க. இப்ப இதையும் வரைஞ்சிடாம…” என்று சொல்லி அசடு வழிய அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சிக்கொண்டவன்,
“தூங்கு, வரைஞ்சு முடிக்கவும் காமிக்கறேன்…”
“நீங்க?…”
“வரேன்ம்மா….” என்று சற்றே அலுப்பாய் சொல்லவும்,
“ஓகே, ஓகே கூல்…” என்று இன்னும் வாகாய் அமர்ந்திருந்தவன் நீட்டியிருந்த கால் மேல் தன் கையை போட்டுக்கொண்டு தூங்க அவளின் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையையும் தனதாக்கிக்கொண்டான் ஆவுடையப்பன்.