பின் பத்ரியுடன் சேர்ந்து அனைவரும் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
“போகலாம்…” என அபிநயா பிரனித்தாவை பிடிக்க,
“நாங்க எடுக்க வேண்டாமா? நீ போடி. வரோம்…” என விரட்டினாள் பிரனித்தா.
“என்ன பன்ற நீ?…” என்று ஆவுடையப்பன் சிரிக்க,
“ப்ளீஸ்…” என்றவள் நேகாவை பார்க்கவும்,
“சீக்கிரம் வந்திருங்க. கெஸ்ட் எல்லாம் வெய்ட் பண்ண போறாங்க…” என சொல்லிவிட்டு வெளியே சென்றதும் கதவை சாற்றி அதன் மீது சாய்ந்து நின்றாள்.
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக்கொண்டு அவன் நின்றிருந்த தோற்றம் பிரனித்தாவிற்கு தன் உயிரை கவ்வி பிடித்தது.
“நீங்க இவ்வளோ ஸ்மார்ட்டா மினிஸ்டர் வொய்ட்?…” என கண் சிமிட்ட அவளின் பாராட்டுதலில், பார்வையில் மனம் மயங்கித்தான் போனான் ஆவுடையப்பன்.
“அப்படியே நில்லுங்க. என்னோட ஸ்டோரேஜ்ல இந்த ஸ்டில் கண்டிப்பா இருக்கனும். அதுக்காக இந்த ஸ்நாப்…” என்று அவனை அங்குமிங்கும் நிற்க வைத்து போட்டோ எடுத்தவள்,
“கைல வச்சுகோங்க…” என கோட்டை கழற்றி அவன் கையில் தந்து நிற்க வைத்து என விதம் விதமாக புகைப்படங்களை எடுத்து சேமித்துக்கொண்டாள்.
அவளின் அட்டகாசங்களில் அவன் மனம் குளுமையாய் நனைய தன் மனமோகினி சொல்லியபடி எல்லாம் நின்றான். புன்னகைத்தான். பூரித்தான்.
ஒருகட்டத்தில் இவள் நிறுத்தமாட்டாள் என தோன்ற முகம் கொள்ளா புன்னகையுடன்,
“இங்க வா மோகினி….” என அருகே அழைக்கவும்,
“இப்ப சேர்ந்து போட்டோஸ்…” என எடுக்க ஆரம்பிக்க சிலது எடுத்ததும் மொபைலை பறித்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டவன் அவளை பார்க்க தனது கோட்டை தடவியபடி அவன் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹேய் என்னடா இது?…” என்றவனுக்கு அவளின் விழிகளின் பளபளப்பில் அப்படி ஒரு சிரிப்பு.
“நிஜமா ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. அழகா இருக்குது. சடனா பார்க்கவும் எப்டி சொல்ல, வாவ் கூட இல்லை. அதுக்கும் மேல. நான் சொன்னதெல்லாம் சும்மா ஒரு பாடர் பீலிங். ஆனா என்னோட சந்தோஷம்…” என்று இன்னும் அவள் அவனின் கோட்டை பிடித்து இழுக்க,
“லிப்ஸ்டிக் போய்டும் மோகினி. திரும்ப போட்டுட்டு கிளம்ப வேண்டியதாகும், பார்த்துக்கோ…” என அவன் குறுஞ்சிரிப்புடன் சொல்ல,
“அதெல்லாம் நோ இஷ்யூஸ்…” என்று கண்சிமிட்டினாள்.
“ஹேய்…” என வாயில் கைவைத்து சிரித்தான்.
“இப்ப நான் எப்டி எக்ஸ்ப்ரெஸ் பன்றதாம்? அச்சோ. உங்களை ம்ஹூம், உங்க கன்னத்தை கடிச்சுக்கவா?…” என கேட்க அடக்கமாட்டாமல் ஒரு ஆர்ப்பாட்ட புன்னகையுடன் அவள் கன்னம் பற்றினான்.
“ம்ஹூம், இல்லை. இல்லை…” என்றவள் அவனின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்த டாலரை பிடித்து கடித்தாள்.
“டேய் என்ன பன்ற?…” என அவளை அப்படியே கழுத்தோடு கட்டிக்கொண்டான் ஆவுடையப்பன்.
“முடியலைடி மோகினி. இப்படி பண்ணாத…” என்று அவள் ஆர்ப்பரிப்பில் பொங்கிக்கொண்டிருந்தான்.
“ஏற்கனவே டாலர் நெளிஞ்சு போச்சு. இப்ப இன்னுமா?…” என்று அவளை அமைதிப்படுத்த முயல,
“வேற டாலர் வாங்கிக்கலாம். நான் எவ்வளோ ஹேப்பியா இருக்கேன். நீங்க என்னடான்னா. சும்மா ஒரு முத்தம் கூட இல்லை…” என்று உதட்டை பிதுக்க அவளின் கன்னத்தில் ஒற்றி எடுத்தான்.
“இப்ப என்ன, இதுமாதிரி இன்னும் ட்ரெஸ் நான் நம்ம ரூம்ல போடுவேனாம். ஓகே வா?…”
“எது அந்த டிஷர்ட்ஸ், ட்ராக் சூட்ஸா? அது எப்ப ட்ரெஸ் கேட்டகிரில வந்துச்சாம்?…” என முறைத்தவள் கன்னத்தை கிள்ளியவன்,
“ஓகே டி, மோகினிம்மா. உனக்கு எப்படி நான் போட்டுக்கனும்னு சொல்லு. வாங்கிடலாம். போடலாம். ஆனா நமக்கு மட்டும். நமக்குள்ள மட்டும்….”
“ரகசியமாக்கும். ஊரறிய கல்யாணம் பண்ணிட்டு…” என்றவள் மேலும் என்ன சொல்லியிருப்பாளோ வாயை பொத்திவிட்டான் ஆவுடையப்பன்.
“சத்தியமா முடியாதுடி. தாங்கமாட்டேன். நீ வா…” என சிரித்துக்கொண்டே அழைத்து வந்தான்.
மேடைக்கு வரவும் அவ்வளவு கூட்டம். உறவுகள் துவங்கி நண்பர்கள், முக்கிய புள்ளி என்று ஆட்கள் வந்தவண்ணம் இருக்க பிரனித்தா முகத்தில் அத்தனை நிறைவும் சந்தோஷமும்.
இடையே சிறிது நேரம் ஓய்வு போல நின்றிருக்க ஒளிர்ந்த பிரனித்தாவின் முகத்தை பார்த்தவன் என்னவென கேட்டான்.
“தெரியலை. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என தோளை குலுக்கினாள்.