“எழுப்பி திரும்ப இதை பார்த்துட்டு அவ மயங்கி விழறதுக்கா? நான் மேல ரூம்க்கு போய் எழுப்பிக்கறேன். நீ அங்க பாரு மேன்…” என்றவன் பிரனித்தாவை தூக்கிக்கொண்டான்.
அங்கே பக்கவாட்டில் இருந்த படிக்கட்டின் வழியாக மாடிக்கு செல்ல புருஷோத்தமன் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“இங்க வா…” என அவனை அழைத்தவன்,
“நீ ஹாஸ்பிட்டல் போ. அங்க பிரனித்தாவை கேட்டாங்கன்னா நான் வந்து கூட்டிட்டு போனேன் சொல்லு. வீட்டுல நான் பேசிக்கறேன். புரியுதா?…”
“ஓகே ஸார்…” என்றான் புருஷோத்தமன்.
“இனிமே கொஞ்சம் கவனமா இருக்கனும். இப்படி கூட்டிட்டு வர கூடாது. நான் கால் பன்ற வரை எதுவா இருந்தாலும் எனக்கு டெக்ஸ்ட் மட்டும் பண்ணினா போதும்…”
“ஓகே ஸார்…”
“கிளம்பு…” என சொல்லி அவனை அனுப்பியவன் மாடிக்கு செல்ல கீழே இருந்த பேஸ்மட்டம் யாருக்குமே தெரியாத விதமாக இருந்தது.
மயக்கம் தெளிந்து கண் விழித்த பிரனித்தா தான் இருக்கும் இடத்தை புதிதாய் பார்த்தவள் திடுக்கிடும் மனதுடன் ஆவுடையப்பனை தேடினாள்.
“இங்க இருக்கேன்…” என தலையை துவட்டியபடி அவளின் பின்னிருந்து முன்னே வர படக்கென்று எழுந்து நின்றாள்.
“என்ன பண்ணிட்டிருக்கீங்க நீங்க?…” என சத்தமாக கேட்க நினைத்து குரல் அத்தனை மெதுவாய் நடுங்கியபடி வந்தது.
“பார்த்தா தெரியலையா? உன்னோட தனியா டைம் ஸ்பென்ட் பன்றேன்…” என்றான் அவளிடம் கண்சிமிட்டி.
அருகே வந்துவிட்டவனின் கைகள் அவளின் கன்னத்தை தீண்ட நெருங்க மெல்ல பின்வாங்கியவள் கண்களுக்குள் அந்த கைகளை சற்றுமுன் குருதி படிந்து பார்த்த ஞாபகம்.
கணவன் தான். அரசியலில் இதுவும் இருக்கலாம். இது எதுவும் கேள்விப்படாத ஒன்றில்லை.
ஆனால் அதனை நேரில் பார்க்க, அதுவும் யாரோவாக இல்லாமல் கணவனானவன் அவ்விடத்தில் அதனை செய்ததில் மனதிற்குள் பயப்பந்து அச்சத்துடன் சுழன்று தொண்டையை அடைத்தது.
“உங்களை இப்படி பார்ப்பேன்னு நினைக்கலை…” என்றாள் கலங்கிவிட்ட விழிகளுடன்.
“பார்த்ததால என்ன கேட்டு போச்சு?…” என்றவன் அவளின் முகத்தை பற்றினான்.
“நெத்தில வலி எதுவும் இருக்கா மோகினி? இப்ப நீ ஓகே வா?…” என்று நெற்றியை வருடிக்கொண்டே கேட்க அவனின் கையை விலக்க முயன்றாள்.
அவளின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. அவள் இடையை அழுந்த பற்றிய ஒரு கையும், கன்னத்தை பிடித்திருந்த கரமும் அவளை வளைத்திருக்க நகர முடியவில்லை.
“விடுங்க ப்ளீஸ்…” என முகத்தை திருப்ப முயல இழுத்து முத்தமிட்டான்.
“நோ நோ. என்கிட்டே இருந்து விலக நினைச்சா அதுக்கு நான் ஒரு பர்சன்ட் கூட வாய்ப்பு தர மாட்டேன் மோகினி…” என இன்னும் வலிக்க அணைக்க கண்ணீர் பெருங்கியது பிரனித்தாவிற்கு.
“பயந்து பார்க்காதடி. எனக்குள்ள இன்னும் கோபம் கூடுது. எதாச்சும் செஞ்சிட போறேன் கீழ இருக்கறவங்களை…” என்றதும் அவனை விட்டு விலகுவதை விட்டுவிட்டாள்.
“உனக்கு அடிபட்டதுல இருந்து சரியா பக்கத்தில இருக்க முடியலை. ஆனா உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் மோகினி…” என்றான் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து.
“அன்னைக்கு ரிசப்ஷன்ல அவ்வளோ சிரிப்போட எவ்வளோ சந்தோஷமா இருந்த. சத்தியமா இன்னும் கண்ணை விட்டு மறையலை. அந்த சிரிப்பை குடேன். நாலு நாளா கொஞ்சமும் தூங்கவே இல்லை நான்…”
“தேடுவீங்களான்னு எவ்வளோ கேட்ட நீ. அன்னைக்கு உனக்கு ஒண்ணுன்னா என் உயிரே போயிருக்கும்டி. அவ்வளோ தேடிட்டேன். இப்ப நீ இருக்க, உனக்கு ஒண்ணுமில்லை தான். ஆனா சூழ்நிலை உன் பக்கத்துல நான் இருக்க முடியலை…”
“பெரிய வேலை. இத்தனை நாள் பட்ட கஷ்டம். என்னால முடியலை. ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கு மோகினி. என்னோட நீட் இப்ப சரியா தப்பான்னு தெரியலை. ஆனா உன்னை ஹர்ட் பண்ணினா ஸாரி…” என்றவன் அவளை கையோடு அள்ளிக்கொண்டான்.
என்ன கூறினான் என முழுதாய் அவள் அனுமானிக்கும் முன் இருளில் அவளுள் தொலைய ஆரம்பித்திருந்தான் ஆவுடையப்பன்.
பிரனித்தாவின் மெல்லிய பேச்சுக்கள் எல்லாம் அவனின் சுவாசப்பையில் சென்று கலந்தது.
மனதின் தேடலை வார்த்தைகளில் அவன் விவரிக்க கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை மறந்து அவனின் பேச்சுக்களை கிரகித்தவள் விழிகள் தாமாக மூடியது.
சற்று முன் பார்த்ததை மறக்க செய்தான். பேசுவதை தவிர்க்க செய்தான். பயத்தை விலக்க செய்தான்.
செயல்பாடுகள் எல்லாம் அவனதாகி போக பேச்சுக்களின் எதிர்வினையை அவளிடம் பெற்று முற்றாய் கலந்து விலக சோர்வோடு தலையணையில் முகம் புதைத்தாள் பிரனித்தா.
“எதாச்சும் சாப்பிடறியா மோகினி?…” என அவள் தலையை கோதியவனின் பேச்சுக்கு பதிலில்லை.
இங்கே இத்தனை கலவரத்திலும், இவ்வளவு நடந்திருந்தும் கொஞ்சமும் பதட்டமின்றி காதலாய் தன்னோடு கூடியவனை புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடி போனாள்.
“ஹேய் என்ன மோகினி?…” என அவளை திருப்ப மீண்டும் முகத்தில் குழப்பமும், பயமும்.
“இதுக்கு வேற என்ன சொல்லுவாங்க? நான்… ப்ச், எனக்கு என்ன பயம்ன்னு புரியலையா உங்களுக்கு?…” என அவனிடம் திரும்பி பார்த்து கேட்க,
“அவ்வளோ பயம்ன்னா வந்து என்னை அணைச்சிக்கோ. தள்ளி நின்னா பயமா தான் இருக்கும்…” என்றவன் அவளை தோளில் சாய்த்துக்கொள்ள,
“திரும்ப கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க…”
“யூ மீன் ஒன்ஸ்மோர். நான் ரெடி…” என்றான் சீண்டலுடன் சிருங்கார புன்னகையோடு.
“பேசுவீங்களா, இப்படி பேசுவீங்களா?…” என அவனின் வாயில் நான்கு அடி போட,
“இருக்கற மைன்ட்செட்க்கு நான் வேற மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவேன். என்னை நீ தான் டெம்ப்ட் பன்ற…”
“அமைச்சர் மாதிரியா பேசறீங்க?…”
“அமைச்சருக்கு குடும்பம் இருக்காதா? கல்யாணம் பண்ணினா இப்படி இருக்கமாட்டாங்களா? இல்லைன்னாலும் பரவாயில்லை. நான் இப்படியே இருந்துட்டு போறேன்…” என்றவன் சிரிப்பு அந்த அறையில் பலமாய் ஒலித்தது.
“சத்தமா சிரிக்காதீங்க. எப்படி இங்க இந்த இடத்துல வச்சும் உங்களால என்னோட…” என்றவள் மேலும் பேச முடியாமல் விழிகளை நகர்த்த,
“ப்ச், இங்க பார்…” என்று அவளின் முகம் பற்றி திருப்பினான்.
“இது நம்ம வீடு தான். இதுவும் நம்ம வீடு. நீ இவ்வளோ எம்பேரிஸிங்கா ஃபீல் பண்ண வேண்டாம்…”
“ஈஸியா சொல்றீங்க? கீழே ரெண்டுபேர் கிட்டத்தட்ட சாகற நிலமையில இருக்காங்க…”
“சாகடிக்க நினைச்சவங்களுக்கான சரியான தண்டனை தான். சொல்ல போனா அதுல இன்னும் என் சந்தோஷம் கூடிருச்சு…” என்றான் அசால்ட்டாக.
“உங்களை…” என்றவள் மேலும் கேட்கும் முன் அவளின் பேச்சுக்களுக்கு ஓய்வளித்தவன் மூச்சுவாங்க அவள் விலகியதும் தலையை கோதியபடி பின்னால் சாய்ந்தான்.