அறக்கட்டளைக்குள் நுழைந்த வாகனம் நேராக மருத்துவமனை வளாகத்தின் முன்னின்றது.
‘இங்க யார் இருக்காங்க?’ என்ற யோசனையுடன் பிரனித்தா இறங்கவும் அங்கே ஒருவன் வந்தான் வேகமாய்.
“ஹாய் பவன்…” என ஆவுடையப்பன் சொல்லவும் அவன் கை குலுக்கிவிட்டு,
“பாஸ் உங்களை ரிசீவ் பண்ணி கூட்டிட்டு போக சொன்னாங்க ஸார்…” என்றான் பவன்,
“வித் ப்ளஷர்…” என்று ஆவுடையப்பனும் தலையசைத்துவிட்டு,
“புருஷோத்தமன் இங்கயே வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்லியவன் பிரனித்தாவை பார்க்க அவள் அந்த வளாகத்தை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் சுவாரஸியமாக.
“பிரனித்தா…” என்றதும் கணவனின் பக்கம் கவனம் திரும்ப,
“வா உள்ள போகலாம்…” என்றான்.
அவனுக்கு தலையசைத்தவள் அந்த இடத்தை கவனமாக கவனித்துக்கொண்டே வந்தாள்.
வானம் பற்றி அவளும் அறிந்திருக்கிறாள். பெயரளவில் மட்டுமே. மற்ற அறக்கட்டளை போல அதுவும் ஒன்று என்று ஒரு சாதாரண கண்ணோட்டம்.
ஆனால் இங்கே இதனை பார்க்கையில் ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் ஒன்று தானாக தோன்ற மனதில் பதிந்தபடி நடந்தாள்.
ஒரு தனி ஊரை போன்று இருந்தது. அவள் பார்த்தவரை மருத்துவமனை, அதற்கும் கூட தனி தனி பிரிவுகள்.
அதுவே உயர்தரத்தில் இருந்தது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது பிரனித்தாவிற்கு.
நான்காம் தளம் வந்தடைய அங்கே நேராக சென்று இடது பக்கம் திரும்பவும் ஒரு அறையின் முன் நின்ற பவன்,
“இங்க தான் நிரஞ்சன் இருக்கார்…” என்று காண்பித்து கதவை இருமுறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“யார் நிரஞ்சன்?…” என பிரனித்தா கேட்க பவன் வரவேற்பன்று ஆவுடையப்பனிடம் சொல்லியதும் ஞாபகம் வந்தது.
கூடவே ஆவுடையப்பனும் அதற்கு அத்தனை நெகிழ்ந்து மகிழ்ந்ததும் ஞாபகம் வர அவனின் முகம் பார்த்தாள்.
தன்னுடன் காரில் வம்பளந்துகொண்டிருந்த கலாட்டா பாவனை எதுவுமில்லை அவள் கணவனின் முகத்தில்.
கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் முகம் கனிந்து, கண்கள் சிவந்து போய் இருந்தது.
“நிரஞ்சா…” என்றவன் சத்தத்தின் அவனும் திரும்பி பார்க்க பயத்தில் தன்னைப்போல பின்னால் நகர்ந்து நின்றாள் பிரனித்தா.
ஒருமாதிரி மூச்சுக்கு தவிக்கும் நிலை அதனை பார்த்தது உடலில் நடுக்கம் வெகுவாய் பரவ கைகள் எல்லாம் உதற கதவில் பொத்தென்று முட்டி நிற்கவும் தான் ஆவுடையப்பன் பிரனித்தாவை கவனித்தான்.
பார்த்ததும் கிறுகிறுவென்று தலைசுற்றி நிற்க முடியாமல் அவளின் முகம் சோர்ந்து ஒருவிதமாய் சாயவிருக்க சட்டென பிடித்துக்கொண்டான் ஆவுடையப்பன்.
“நர்ஸ் தண்ணி குடுங்க…” என பவன் உத்தரவிடவும் பிரனித்தாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
“நிறைய அநியாயங்களை வெளிக்கொண்டுவரதுல துடிப்பா இருப்பான். நான் மினிஸ்டர் போஸ்டிங் வந்தப்போ தான் அங்க நிறைய விஷயங்கள் முன்னுக்கு பின் முரணா தெரிஞ்சது. நிரஞ்சன்ட்ட நான் தான் ஹெல்ப் கேட்டேன்…”
“என்னால அப்ப உள்ள இருக்கற யாரையும் நம்ப முடியலை. முதல்ல என்ன நடந்திருக்குன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும். நான் தேடறதை கூட சிங்காரம் கண்டுபிடிச்சு சுதாரிச்சிட கூடாதுன்னு தான் நிரஞ்சனை தேர்ந்தெடுத்தேன்…”
“ஆனா என்னாலையே நிரஞ்சனுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்ன்னு நான் நினைக்கவே இல்லை பிரனி…” என்றான் தழுதழுப்புடன்.
தைரியமாக இருக்குமாறு கையுயர்த்தி காண்பித்து அவனை புன்னகைக்க சொல்ல உடைந்துவிட்டான் ஆவுடையப்பன்.
“அன்னைக்கு மட்டும் ஷேஷா இல்லைன்னா நிரஞ்சனை காப்பாத்தியிருக்கவே முடியாது. சிங்காரத்தை பத்தி எவிடன்ஸ் கலெக்ட் பண்ண சிங்காரம் இடத்துக்கே போய் மாட்டிக்கிட்டான்….”
“அங்க இருந்து எனக்கு மெயில் அனுப்பினவன் நெக்ஸ்ட் நேம் இருந்த ஷேஷாவோட மெயிலுக்கும் இதை அனுப்பி வைக்க அவர் உடனே கவனிச்சு நிரஞ்சனை தேடும் போது பாதி எரிஞ்ச நிலையில தான் அவனை மீட்க முடிஞ்சது…”
“விஷயம் பெருசு. சிங்காரத்தை அத்தனை சுலபமா தண்டிச்சிட முடியாது. எத்தனை முயற்சி பண்ணினாலும் பணத்தை குடுத்து நினைச்சதை சாதிக்கிற ஆள். முதல்ல அதை சிங்காரத்துட்ட இருந்து கைப்பத்தினேன்…”
“நேகாவோட அப்பா பேக்டரில பதுக்கி வச்சேன். சிங்காரத்தோட பார்வை எங்க வராதோ அதுதான் பாதுகாப்பான இடம். எனக்கும் அது தான் வேணும். இப்படி சிங்காரத்தை வளைக்க நிறைய விஷயங்கள்…” என்று பெருமூச்சுடன் நடந்ததை சொல்ல திகைப்பிலிருந்து மீளவில்லை பிரனித்தா.
பதவியில் இருந்தாலும் பதவியில் இல்லாத குற்றவாளியை அதுவும் பின்புலம் இருக்கும் ஒரு குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கத்தான் எத்தனை போராட்டங்கள்?
இதில் சாதாரண மனிதர்கள் என்ன? இருக்கப்பட்டவர்கள் என்ன? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நியாயங்கள், துரோகங்கள்.
இடத்திற்கு தகுந்து அதன் அளவும், ஆட்களும் மாறுபடுகிறதே தவிர்த்து அது என்றும் மாறுவதில்லை என புரிந்தது.
“என்னால இப்ப இவன் வாழ்க்கையே போச்சு. உயிரை பிடிச்சு காப்பாத்த முயற்சி பண்ணினது பாதிநா, மூச்சடக்கி அவன் வைராக்கியமா தன்னை மீட்டு கொண்டுவந்திருக்கான் அவனையே…”
நண்பனை பற்றி புகழ்ந்து சொல்ல சொல்ல நிரஞ்சன் ஆவுடையப்பன் கையை எங்கும் விடவில்லை.
நிரஞ்சன் சைகையில் என்னவோ கேட்க ஆவுடையப்பனுக்கு முதலில் புரியவில்லை. மீண்டும் நிதானமாக கேட்கவும் புன்னகைத்தவன்,
கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பி பார்க்க பவன் உள்ளே வந்தான் இன்னொருவருடன்.
“இவங்க நிரஞ்சனுக்கான பிசியோதெரபிஸ்ட். இது அந்த டைம்…” என பவன் சொல்லவும் தலையசைத்தவன்,
“இனிமே உன்னை நான் நினைச்சப்போலாம் பார்க்க வருவேன்டா…” என்றான் ஆவுடையப்பன்.