“நிரஞ்சன் எப்படி இருக்கார்?…” என ஷேஷா ஆவுடையப்பனிடம் பேச ஆரம்பிக்க அதன் பின்னான பேச்சுக்கள் நிரஞ்சனின் உடல்நிலை பற்றி நடந்து கொண்டிருந்தது.
பிரனித்தா சிலநிமிடம் கவனித்தவள் அவள் கவனம் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த டிவியில் பதிந்தது.
சிங்காரம் பற்றிய முக்கிய செய்திகளும் அவர் எப்படி பிடிபட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
ஹவாலா மோசடியில் தேடப்பட்ட குற்றவாளியான முன்னாள் நிதியமைச்சர் சிங்காரத்தின் உடல்நிலை கவலைக்கிடம்.
பிடிபட்ட இடத்தில் உடன் இருந்த அவரின் உறவினரும், பணத்தை கடத்த துணையாய் இருந்தவருமான வெங்கடேசன் அப்ரூவராக மாறினார்.
காவல்துறையினர் சுற்றி வளைத்த பொழுது தப்பிக்க முயன்றதில் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியாக செய்திகள் வந்துகொண்டிருக்க அந்த வெங்கடேசனை பார்த்ததுமே பிரனித்தாவிற்கு புரிந்துபோனது அது தங்களை திருப்பதிக்கு அழைத்து சென்ற வெங்கடேசன் என்று.
உடனே ஆவுடையப்பனை திரும்பி பார்க்க அவன் பிரனித்தாவின் பார்வையில் தொனித்த கேள்வியில் ஆமாம் என கண்சிமிட்டி புன்னகைத்தான்.
“அம்மாடியோவ், இவர் மினிஸ்டர் இல்லை. வில்லாதி வில்லன்….” என சத்தமின்றி அவள் முணுமுணுக்க,
“வா ஷக்தி…” என்றான் ஷேஷா.
“ஹாய் மேம்…” என ஆவுடையப்பன் எழுந்து புன்னகைக்க,
“ஹலோ ஸார், ஹவ் ஆர் யூ?…” என்றாள் ஷக்தி ஆதிஷேஷன்.
“பைன், இவங்க…” என ஆவுடையப்பன் பிரனித்தாவை அறிமுகப்படுத்த முயல,
“இதென்ன பார்மாலிட்டீஸ்? எனக்கு தெரியுமே. இவங்க உங்க வொய்ப்ன்னு…” என்றவள் அவளிடமும் புன்னகைத்து,
“எப்படி போகுது மேரேஜ் லைஃப்? ஆரம்பிச்சதில டென்ஷன் தான் இல்லையா?…” என்றாள் ஷக்தி ஷேஷாவின் எதிரே நின்று பிரனித்தாவிடம்.
“பணம், இங்க அதுதான் எல்லாத்தையும் முடிவு பண்ணுது. நல்லது செய்ய மனசிருந்தா போதும்ன்றது எல்லாம் எப்பவோ மலையேறி போச்சு. பணம் மட்டுமில்லைன்னா எதையும் செய்ய முடியாது மோகினி…” என்றவன்,
“இப்ப இதுவா பேசவேண்டிய நேரம்?…” என்றான்.
“ப்ச், எனக்கு தெரியனும். சொல்லுங்க ப்ளீஸ்….” என்றவள்,
“நியூஸ்ல சிங்காரம் யாரையோ கொலை செஞ்சிட்டதா சொல்றாங்களே? அது யார்?…”
“தப்புக்கு தப்பு தான் தண்டனை. அந்த ட்ரைவரும் சும்மா இல்லை. பக்கா கிரிமினல். சிங்காரத்தோட செல்வாக்குல வெளில வந்தவனை சிங்காரத்தை வைச்சே அனுப்பியாச்சு…” என்றவன்,
“இன்னும் என்னடி?…” என்றான் சற்று கடுப்புடன்.
“ம்கூம், அவங்க எல்லாரையும் விட நீங்க தான் பக்கா…”
“கிரிமினலா?…” என கேட்டவன் அவளின் பார்வையில் அதை தான் சொல்ல வருகிறாள் என்று கண்டுகொண்டதில் புன்னகைத்து தன்மீது மனைவியை சரித்துக்கொண்டவன்,
“பரவாயில்லை. இங்க கிரிமினலா இருந்தா தான் நல்லதே செய்யமுடியும்ன்னா இருந்துக்கறேன். பர்சனலா எனக்கு இங்க நல்லது செய்யவிடாம முட்டுக்கட்டை போடற நீயும் எனக்கேத்த வில்லி தான்…” என்றான் அவள் மீது சாய்ந்து.
“மோகினி, மந்திரம் சொல்லட்டுமா?…” என்று கிசுகிசுப்பாய் கேட்க அவனின் கழுத்தை வளைத்துக்கொண்டாள் பிரனித்தா.
அவனின் நியாயங்கள் சரியான இடத்தில் இருக்க அதிலிருந்து அவன் தவற போவதில்லை என புரிந்துபோனது.
கலியுகத்தில் நல்லவர்களும் வெறும் நல்லவர்களாக இருத்தல் போதாது. வல்லவர்களாகவும் இருக்க தேவை என்பதை அவளின் கணவனானவன் அன்றாடம் அவளுக்கு படித்துக்கொண்டிருந்தான்.
வருடம் ஒன்றான பின்பு…
சுவிசர்லாந்தில் நட்சத்திர விடுதியில் லேப்டாப்பின் முன்னமர்ந்திருந்தாள் பிரனித்தா.
வீடியோ காலில் அசோகன் இருக்க அவரிடம் பேசிக்கொண்டிருந்தவள் இங்கிருந்தே அந்த மீட்டிங்கை கவனித்தபடி இருந்தாள்.
மீட்டிங் முடிந்து மற்றவர்கள் கிளம்பியதும் பைலை எல்லாம் எடுத்துக்கொண்ட அசோகன்,
“சரிம்மா, நான் கிளம்பறேன். நீ சைனவுட் பண்ணிரு. அப்பறம் ஹேப்பி வெடிங் அனிவெர்சரி…” என்று வாழ்த்திவிட்டு புன்னகையுடன் செல்லவும் லேப்டாப்பை ஷட்டவுன் செய்தவள் தலையை பின்னால் சாய்த்து பெருமூச்சு விட்டாள்.
பக்கத்தில் கேலியாய் உடல் குலுங்க அவன் சிரிக்க சட்டென நேராக அமர்ந்தவள் அவனை முறைத்து அருகிருந்த பில்லோவை எடுத்து அவன் மீது வரிசையாய் எரிய ஆரம்பித்தாள்.
“பக்கத்துல வந்து கையால அடிச்சுக்கோவேன் மோகினி…” என்றான் தலைகீழாய் கட்டிலில் சாய்ந்தபடி ஆவுடையப்பன்.
கையால் அந்த பில்லோக்களை உதைத்து தள்ளிக்கொண்டிருந்தவன் சிரிப்பு அறையெங்கும் எதிரொலித்தது.
“எதுக்கு? பக்கம் வந்ததும் மந்திரம் படிக்கவா? எனக்கு டயர்டா இருக்கு…” என்றாள் முறைப்புடன்.
“உன்னை யார் மீட்டிங் அட்டன் பண்ண சொன்னா? ரெண்டுவருஷம் கழிச்சு பொறுப்பெடுத்திருக்கலாம் நீ…” என சலிப்பாய் அவன் சொல்ல,
“சத்தியமா கொலை வெறியாகிடுவேன்…” என்று எழுந்து நின்று பிரனித்தா மூச்சுவாங்க,
“ஹ்ம்ம், இம்ப்ரெஸ்ஸிவ். இன்னும் கிட்ட வா, பார்ப்போம்…” என்றான் அவளை விழிகளால் உள்ளிழுத்து சில்மிஷமாய்.
“சும்மா இருந்தேன். போரடிக்கும்ன்னு சொல்லி சொல்லியே பேக்டரிக்கு அனுப்பியாச்சு. இப்ப என்னடான்னா உங்க சித்தப்பா சீக்கிரம் அவர் இடத்துக்கு நான் வரனும்ன்னு எனக்கு கத்து குடுக்கறேன்னு ரொம்ப டம்ப் பன்றாங்க என் தலைக்குள்ள…”
“ஹேய் என்னடா?…” என்றான் அவளை அருகே சென்று தன் தோளில் சாய்த்து.
“பின்ன என்ன? நீங்க என்னடான்னா என்னை இன்னும் படுத்தறீங்க…” என்றாள் சலுகையாய்.
“உன்னை என்ன சொன்னேன் நான்?…”
“என்ன சொல்லலை? இங்க வரவும் சொன்னது எல்லாம் மறந்து போச்சா?…” என எழுந்து நின்று முறைக்க அவனும் எழுந்துகொண்டான்.
“ஏன் மறக்கனும்? நல்லா ஞாபகம் இருக்கே? நான் தூங்கும் போது நீயும் தூங்கி ரெஸ்ட் எடுன்னு சொன்னேன். நான் முளிச்ஸ்ருக்கும் போது தூங்காதன்னு சொன்னேன். இதுல எங்க உன்னை நான் படுத்தறேன் சொல்லு சொல்லு…”
“அப்படின்னு இல்லை. ஆனா இருக்கு…” என்றாள் கண் சிமிட்டி அவன் கன்னத்தை வலிக்க கடித்து வைத்து.
“ஹ்ம்ம், வேலை வேலைன்னு ஹனிமூனுக்கே பர்ஸ்ட் அனிவர்சரிக்கு தான் வந்திருக்கோம். இங்க இருக்கற வரைக்கும் மத்ததை ஒதுக்கி வச்சு நம்மளை மட்டுமே பார்ப்போமே?…”
“எப்படின்னாலும் உங்க பேச்சு தான் பைனலைஸாகும். என்னவோ பண்ணுங்க…”
“குட், குட்…” என்றவன்,
“இப்ப என்ன? சித்தப்பா திரும்ப கால் பண்ணாம நான் பார்த்துக்கறேன். உன் அப்பா இருக்காங்களே. சேர்ந்து பார்க்க சொல்லிடலாம். ஓகே…”
இன்றளவும் வாசுகியும், மனோகரனும் அவர்களுடனே தான். ஆரம்பத்தில் காரண காரியங்கள் காண்பித்து உடன் வைத்துக்கொண்டவன் அதனை நிரந்தரமாக்கிவிட்டான்.
“ஓகே…” என்றவள்,
“கொஞ்ச நேரம் தூங்கட்டா?…” என அவனை தாஜா செய்ய,
“ஹனிமூனுக்கு தூங்கவா வந்திருக்கோம் மோகினி? அதுவும் என்னோட சொந்த சம்பாத்தியத்துல இவ்வளோ தூரம் உன்னை நான் கூட்டிட்டு வந்தது தாலாட்டு பாடவா?…” என கேட்டவன்,
“மந்திரம் வேணும்னா படிக்கறேன். கேளு…” என்றான் அவளின் கூந்தலில் முகம் புதைத்து.