அவள் ஆவுடையப்பனின் அழைப்பிற்காக காத்திருப்புடன் அமர்ந்திருந்த தனிமையில் விழிகளில் மெல்லிய புன்னகையுடன் விரல் கொண்டு ரேகையின் வழியெல்லாம் பாதையமைத்தாள்.
“ப்ரூ என்னடி பன்ற?…” என சுளீரென யாரோ அடித்ததில் எரிச்சலுடன் திரும்ப அங்கே அவளின் தோழி அபிநயா.
“ப்ச், பிசாசே இப்படியா அடிப்ப?…” என தனது தோளை தேய்த்துக்கொண்டவள்,
“எப்ப வந்த?…” என கேட்டதும்,
“நீ உனக்கு ஜோசியம் பார்க்கும் போதே வந்துட்டேன்…” என்றாள் நக்கலாக. அதனை கண்டுகொள்ளாமல்,
“பாஸ் கூப்பிட்டாரா?…” என பிரனித்தா நன்றாக நிமிர்ந்தமர்ந்து.
“அவர் ஏன் உன்னை கூப்பிட போறார்?…”
“அப்ப ஏன்டி வந்த நீ? நிம்மதியா ஒரு வேலையை பார்க்க விடறியா?…” பிரனித்தா எரிந்துவிழ,
“நீ பார்த்திட்டிருந்தது ஐநா சபை வேலை பாரு. உன்னை தொந்தரவு செய்யாம இருக்க? லன்ச் ஹவர்ஸ் முடிய போகுதேன்னு உன்னை கூப்பிட வந்தேன்…” என்ற அபிநயா,
“அப்படி என்ன தெரியுதாம் உன் கையில? எங்க காமி?…” என்று பிரனித்தாவின் இரு கைகளையும் பிரித்து உள்ளங்கையை பார்க்க சிவந்துபோய் இருந்தது.
“இதை தான் உழைப்பின் சிவப்புன்னு சொல்லுவாங்களோ?…” என அபிநயா கிண்டல் பேச,
“உதை வாங்க போற. போடி. எனக்கு பசிக்கலை. நீயே சாப்பிடு…”
“எதுக்கு உன்னைவிட்டு சாப்பிடறேன்னு எனக்கு நீ முட்டை மந்திரிச்சு வைக்கவா? ஒரு ஆணியும் நீ அடிக்க வேண்டாம். உனக்கு பசிக்கும் போதே நானும் சாப்பிட்டுக்கறேன்…” என்று அவளருகே ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டாள்.
“உனக்கு வேலை இல்லையா? பாஸ் பார்த்தா காச்சு மூச்சுன்னு கத்த போறார்…” பிரனித்தா அவளை கிளப்பிவிடுவதிலேயே குறியாய் இருக்க,
“அதை எல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன். எங்க உன் முகத்தை காமி…” என கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பினாள் அபிநயா.
“என்ன என் மூஞ்சில புதுசா எழுதி ஒட்டிருக்கா எதாச்சும்? போவியா…” என்று அபிநயாவின் கையை தட்டிவிட்டாள்.
பார்வை கண்ணெதிரே இருந்த கணினியின் கடிகார நேரத்தில் இமை வீசி வெளிவந்துகொண்டிருந்தது.
அபிநயா இருக்கும் பொழுது எங்கே ஆவுடையப்பன் அழைத்துவிடுவானோ என்னும் பதற்றத்தில் நெற்றியில் பொட்டு பொட்டாய் வியர்வை துளிகள் வேறு அரும்பியது.
“என்னடா ப்ரூ, உனக்கு வேர்க்கவேல்லாம் செய்யுது? அதுவும் இந்த ஏசில கூட? உண்மையை சொல்லு. என்ன பன்ற நீ?…” என்று கண்ணடித்து கேட்க,
“என்ன ஒண்ணுமில்லை. ப்ரூ. நிஜமா நீ கொஞ்சம் அழகாகிட்ட. உன்கிட்ட பக்கவா வேற ஒரு பீலிங் தெரியுது. கூடுதலா என்னை பேசவே விடமாட்டேன்ற….”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அபி…”
“பார்ரா என் பேரை எல்லாம் சொல்லி பேசற? இங்க தான் ஜெர்க்காகுது. உண்மையை சொல்லு ப்ரூ…”
“என்ன உண்மை?…”
“வேறென்ன வயசு பொண்ணுக்கு இந்த வெட்கம், பதட்டம், படபடப்பு எல்லாம் வந்தா பர்ஸ்ட் லவ், அடுத்து கல்யாணம், அதுவும் இல்லைனா என் எட்டாம் அறிவுக்கு வேற ஒன்னும் தோணலைப்பா…” என்றாள் கிண்டலாக.
“போடி பிசாசே….” என டேபிளில் இருந்த பைலை எடுத்து அபிநயாவை சாற்றினாள் பிரனித்தா.
“நான் பிசாசுன்னா நீ மோகினி…” என அபியும் சளைக்காமல் அவளுடன் மல்லுக்கு நிற்க பிரனித்தா சட்டென கையை இறக்கி மொபைலை பார்த்துவிட்டு அபினயாவை பார்த்து,
“மோகினியா? யாராம்?…” பிரனித்தா திணற,
“ஆமா, நீ தானே சொன்ன அன்னைக்கு அவர் உன் பேரை கேட்கும் போது….” என்ற அபிநயா,
“நம்ம விமல்கிட்ட சொன்னேன் இப்படி கொஞ்ச நாள் முன்னாடி மகேஷ் பர்த்டேல தமிழ்நாட்டோட பினான்ஸ் மினிஸ்டரை பார்த்தோம்டா. எங்களை செம டோஸ் விட்டார்ன்னு. நம்பவே மாட்டேன்னுட்டான்…”
“உன்னை யார் அவன்கிட்ட சொல்ல சொன்னா?…” சட்டென கோபமாய் பிரனித்தா கேட்டதும்,
“எல்லாம் ஒரு செல்ப் பப்ளிசிட்டிக்கு தான். நாம பார்த்ததை நாம தான சொல்லனும்? நீ சொல்லுவியா? நீ தான் அங்க வச்சு நான் அவர் மினிஸ்டர்னு சொன்னதுக்கு கூட நம்பமாட்டேன்னு கலாய்ச்சிட்ட…” அபிநயா சொல்லவும் பிரனித்தாவின் முகம் அமைதியாகியது.
“சரி சரி, இப்ப ஏன் நாம திட்டு வாங்கினது, மொக்கை வாங்கினதுன்னு எல்லாம் பேசிக்கிட்டு? அதை விடு. யார் அது?…” அபிநயா ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க பிரனித்தாவிற்கு சொல்லும் மனநிலை சுத்தமாக இல்லை.
அதிலும் இப்போது இருக்கும் சூழ்நிலை அவளுக்கு உவப்பாக இல்லை. அபிநயா பேசும் பொழுதே சொல்லியிருக்கவேண்டும்.
கேட்டும் சொல்லாமல் மறைத்து இப்போது சொன்னால் என்ன நினைப்பாளோ என்றிருந்தது.
“பார்த்தியா, என்கிட்டே கூட சொல்லலை. கூடவே சுத்தற செவ்வாழைக்கு எவ்வளோ பெரிய அவமானம்?…” என நெற்றியில் அடித்துக்கொள்ளவும் பட்டென்று பிரனித்தா சிரித்துவிட்டாள்.
“ப்பா, உன்கிட்ட இவ்வளோ சேஞ்சஸ்? ஆனா இதை எப்படி நான் நோட் பண்ணாம போனேன்?…” என கிண்டலாய் அபி கேட்க,
“இப்ப மட்டும் எப்படி கண்டுபிடிச்சியாம்?…” என்றாள் பிரனித்தா.
“அதான் ரேகையே தேய்ஞ்சு போறளவுக்கு விரலை வச்சு உள்ளங்கையில படம் வரைஞ்சியே. அதை வச்சு தான். ரெண்டுதடவை கூப்பிட வந்தேன். நீ ம்ம்ன்னு கூட கேட்டுக்கலை. அதான் போட்டேன் ஒரு போடு. வலிச்சிருச்சா?…”
“வலிச்சதாவா? இன்னும் எரியுதுடி…” என பிரனித்தா தன் தோளை தடவிவிட்டாள்.
“உடனே பெர்பாமென்ஸ் பண்ணிடுவியே? பேச்சை மாத்தாத. யார் அந்த ஹீரோ? ஆனா பாவம் உன்கிட்ட மாட்டிக்க போறார்…” என்று சொல்லி மீண்டும் பிரனித்தாவிடம் அடி வாங்கிக்கொண்டாள்.
“ஏன்டி படுத்தற?…” என கையில் வைத்திருந்த பையிலை வைத்து தன் தலையில் தட்டிக்கொண்டாள்.
இன்னும் ஆவுடையப்பன் வேறு அழைக்கவில்லை. அழைப்பானா மாட்டானா என யோசித்துக்கொண்டே அபிநயாவை பார்க்க,
“சொல்ல போறியா இல்லையா? எவ்வளோ நேரம் கேட்கறேன். ஒரு பேரை சொல்ல இவ்வளவா? என்னவோ உன் ஆள் வீட்டு அட்ரஸ், ரேஷன் கார்ட், பேன் கார்ட், பேங்க் பேலன்ஸ், EMI எல்லாம் கேட்டுட்ட மாதிரி இவ்வளோ உஷாரா இருக்க?…” என்று இடுப்பில் கைவைத்து அபிநயா முறைக்க,
“ஆள் தானே? சொன்னியே மினிஸ்டர்ன்னு, அவர் தான். போதுமா?…” என்று சொல்லிவிட்டு தோழியை பார்க்க அபிநயா முகத்தில் மாற்றமில்லை.
“என்னடி?…” பிரனித்தா கேட்க,
“என்கிட்டயே பௌர்ணமி அன்னைக்கு நிலா நீட்டுவாக்குல இருக்கும்ன்னு கம்பி கட்டற கதை விடற பார்த்தியா?…” என்றதும் பிரனித்தா திகைத்தாள்.
“நிஜமாவே அபி…” அவள் சொல்ல அபிநயா நம்பவே இல்லை.
“எனக்கும் ஆசை தான். மினிஸ்டர் செம்ம ஹேண்ட்சம். நான் கூட நல்லா சைட்டடிப்பேன். அவரை சோஷியல் மீடியால நானும் ஃபாலோ பன்றேன். அதுக்குன்னு இதை நான் சொன்னா என்னை பைத்தியம்ன்னு சொல்லுவாங்கடி…” என சிரித்தாள் அபிநயா.
“நம்பலையா நீ?…” பிரனித்தா கேட்க,
“நான் உன்னை கிண்டல் பண்ணினதுக்கு ரிவெஞ்சா? மினிஸ்டர், அதுவும் அன்னைக்கு நம்மளை அந்த திட்டு திட்டின மினிஸ்டர்? காதுல பூக்கூடைய சுமக்க எனக்கு தெம்பில்லைம்மா…”
“அபி, உண்மையை தான் சொல்றேன். இன்னும் நாலு நாள்ல எங்களுக்கு எங்கேஜ்மென்ட்…” என சொல்ல,
“எப்பவும் நான் தான் வண்டி வண்டியா அவுத்துவிடுவேன். இப்ப என்ன உன் டர்னா? என்கூட சேர்ந்து கெட்டு போய்ட்டடி நீ. உன்னை எப்படி கெடுத்து வச்சிருக்கேன் பாரு நானு…” என நொந்து கொள்வதை போல தலையசைத்த அபிநயா,
அதுவரை வெட்கமும், சிரிப்புமாய் இருந்த பிரனித்தா முகம் மாறிவிட்டிருந்தது தோழியின் பேச்சில்.
“ஏன்? ஏன் நான் சொல்றதை நம்ப முடியலை?…” என்றாள் அமைதியாக.
“ஏன்டி நான் மட்டுமில்லை யாருமே நம்பமாட்டாங்க. அதுவும் மினிஸ்டரை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா இருந்தா இந்த வேலைக்கு ஏன் வர தேவையிருக்கும்? அப்பறம் இன்னொன்னு என்ன சொன்ன?…” என யோசித்தவள்,
“ஹாங், எங்கேஜ்மென்ட். நாலு நாள்ல நிச்சயம் வச்சுட்டு நீ இங்க வர போறியாக்கும்? அதுவும் இதுவரை இதைபத்தி எங்க யார்க்கிட்டயும் சொல்லாம இருப்பியா நீ? வேற ட்ரை பண்ணு செல்லம்…” என்று சொல்ல அப்படியே தான் அமர்ந்திருந்தாள் பிரனித்தா.
“பொய் கூட என் செல்லத்துக்கு சொல்ல வரலை. அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்டி. எல்லாரும் அபிநயாவாகிட முடியுமா?…” என்று பேசிக்கொண்டே அங்கிருந்த கணினியில் பென்ட்ரைவை புகுத்தியவள்,
“இந்த டாக்குமென்ட் காப்பி பண்ண தான் வந்தேன். வந்து உன்கூட அரட்டைல உக்கார்ந்தாச்சு…” என அவளுக்கு தேவையானதை காப்பி செய்துவிட்டு கிளம்பினாள்.
“சாப்பிடும் போது கூப்பிடு ப்ரூ…” என்று சென்றுவிட்டாள்.