அலங்காரம் எல்லாம் முடிந்து தன்னுடையின் நேர்த்தியை சரிபார்த்துக்கொண்டு இருந்தாள் ஓவியா.
“இன்னும் எவ்வளவு நேரம் கரெக்ஷன்ல இருப்ப? எல்லாமே பர்பெக்ட். திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்காத ஓவி…”
தாய் வேதவல்லி கண்டிப்புடன் மகளை சொல்ல அடுத்ததாக அவளின் பார்வை தன்னறைக்கு வெளியே தெரிந்த திரை இடுக்கின் வழியே முன் வரிசை இருக்கையில் இருப்பவர்களை நோட்டம் விட்டாள்.
“ப்ச் ஓவி, இன்னும் எவ்வளவு நேரம்டா இப்படியே பார்த்துட்டு இருப்ப? வந்து உட்கார். உன்னோட மேம் வந்தாங்கன்னா நீ டென்ஷனா இருக்கறதை பார்த்துட்டு அவங்க டென்ஷன் ஆகிடுவாங்க….”
“ஹ்ம்ம் ம்மா. நான் ஓகே தான்…” என்ற குரலில் சுரத்தில்லை.
ஏன் இன்னும் வரவில்லை என்பதிலேயே தான் இருந்தது. மனது அவளின் எதிர்பார்ப்பிற்கும் மேல் தள்ளாடியது.
“ஓவியா…” என்று வந்த அவளின் நடன ஆசிரியை அவளை பார்த்துவிட்டு எப்போது என்னவென்ற விவரங்களை சொல்லியவர் வேதவல்லியிடம் பேசிவிட்டு கிளம்பினார்.