“இது உனக்கே சிரிப்பா இல்லையா? சின்ன பையனா? எனக்கு எதுவும் புரியாதா என்ன?…” என்றார் வருத்தத்துடன்.
“சரி த்தை, நீங்க முதல்ல இதைவிட்டு வெளில வாங்க. நான் திரும்ப முகிலனுக்கு ட்ரை பன்றேன்…” என சொல்லி வீட்டில் இருந்து வெளியே பார்க்கிங்கில் வந்து நின்றான் சஞ்சய்.
“பிக்கப் பன்றா முகி…” என முணங்கிக்கொண்டே நடந்துகொண்டிருந்தான் அதற்குள்ளேயே.
“இந்தா டீ எடுத்துக்கோ சஞ்சு…” என ஷோபா வர அவர் பின்னே வேதாவும் வந்தார்.
“என்ன வேதா? டீ குடிக்கலை?…” ஷோபா கேட்க,
“இல்லண்ணி, குடிக்கனும். நீங்களும் வாங்க…”
“சஞ்சு முகிலுக்கு ட்ரை பன்றான்…”
“ஹ்ம்ம், அப்பாவும் இன்னும் முகில் வீடு வந்து சேரலைன்னு சொல்லிட்டு இருந்தார். அவன் கிளம்பின நேரத்துக்கு இப்போ ரீச் ஆகிருக்கனுமே? இன்னும் போகலை போல…”
“நல்லது தான். இல்லன்னா இந்த மனுஷன் கோவத்துக்கு போன்லயே சண்டை ஆகியிருக்கும்….” வேதாவும் கவலையுடன் பேச இவர்களை கவனித்துக்கொண்டே சஞ்சய் முகிலனுக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தான்.
“என்னடா எடுக்கலையா?…” சஞ்சய் மெசேஜ் டைப் பண்ணுவதை பார்த்து இருவரும் கேட்க,
“ஹ்ம்ம், அவன் எடுக்கல. அதான் மெசேஜ் பன்றேன்…” என்றவன்,
“முதல்ல உள்ள போங்க. ஏற்கனவே அவங்க ரெண்டுபேரும் சரியில்லை. இப்போ இங்க வந்து நின்னு அந்த நேரம் ஆர்க்யூமென்ட் ஆகிட போகுது உள்ள. போங்க போங்க…” என விரட்டினான் சஞ்சய்.
“அதுவும் சரிதான்…” என இருவரும் உள்ளே செல்ல சஞ்சய்க்கு அப்போது தான் நிம்மதியானது.
“இவன் வேற எடுப்பேனான்றான், மனுஷன் அவஸ்தை புரியாம. இந்த நேரம் பார்த்தா பஞ்சாயத்தாகனும்?…”
புலம்பிக்கொண்டே மீண்டும் அவனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்க செய்தி சென்ற குறியீட்டை காட்டியது, இப்போது முகிலன் பார்த்துவிட்ட குறியீட்டையும் காட்ட சஞ்சய்க்கு நிம்மதியானது.
சஞ்சய் அழைக்கும் முன்னரே முகிலன் அவனுக்கு அழைத்துவிட இன்னும் நிம்மதியுடன் வீட்டிற்குள் எட்டிப்பார்த்த சஞ்சய் காலை அட்டன் செய்து கேட்டை திறந்து வெளியே வந்தான்.
“ட்ரைவ் பண்ணிட்டு இருப்பாங்க. போன் அட்டன் பண்ணினா டென்ஷன் ஆகும்ன்னு எடுக்காம இருந்திருக்கலாம்…” ஓவியா சொல்ல இங்கே முகிலன் முகத்தில் புன்னகை.
“அப்படி என்னவாம் போன் கூட எடுக்காம?…” வேண்டுமென்றே சஞ்சய் பேச,
“ப்ச், நீவேற ஏன் ண்ணா? ஏற்கனவே ஆபீஸ்ல பிரச்சனை. அப்பா சொன்னாங்க தானே வேலையை விட்டுடாங்கன்னு. அங்க என்ன பிரச்சனையோ? சும்மா தெரியாம பேசாத…”
“நீ தான் தெரியாம பேசற ஓவி. அட்லீஸ்ட் உன்கிட்டையாச்சும் சொல்லிருக்கலாமே?…” இருவருக்கும் சேர்த்தே தான் கேட்டான் சஞ்சய்.
“சொல்லிருக்கலாம் தான். ஆனா அவங்க சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கே…” என சொல்லும் பொழுதே தொண்டை கமறியது ஓவியாவிற்கு.
ஏன் சொல்லவில்லை? தன்னை ஏன் அப்படி பார்க்கவில்லை முகிலன் என மனது அடித்துக்கொண்டது அவளுக்கு.
“அதை விடுண்ணா, அப்பா என்ன பேசினார்? எனக்கு பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. இங்க சொன்னாரே அம்மா பேசினதுக்கு இன்னும் என்ன நம்ம முகில்ன்னு. இந்த வார்த்தை திரும்ப திரும்ப என்னவோ பண்ணுது. ண்ணா, ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?…”
ஓவியா வெகுவாய் உடைந்துபோய் இருப்பது இருவருக்குமே புரிந்தது. முகிலனுக்கு அவளின் தவிப்பு புரிய உடனே அழைப்பை கட் செய்துவிட்டான்.
மீண்டும் அவள் வீட்டின் லேண்ட் லைனுக்கு அழைக்க சஞ்சய்யிடம் பேசிக்கொண்டிருந்தவள் அவனை காத்திருக்க சொல்லிவிட்டு வந்து போனை எடுத்தாள்.
“ஓவி…” என்றவனின் அழைப்பு அவளின் மொத்த செல்களையும் ஆக்கிரமித்தது.
“அத்தான்…” அவளின் மெல்லிய சத்தமும், தொடர்ந்த விசும்பலும் முகிலனை புரட்ட,
“ப்ச், எதுக்கு அழற? உங்கப்பா என்ன செய்வாராம்? நீ பயப்படுவியா? என் மேல நம்பிக்கை இல்லை?…” என்றான் கேள்வியாக.
“தெரியலை. யார் எப்போ எப்படி இருப்பாங்கன்னு எதுவும் தெரியலை. ஆனா நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பேன்…” சற்றே தலைதூக்கிய கோபத்துடன் அவள் பேசினாள்.
“ஒன்னு சொல்லவா ஓவி. ஐ கான்ட் லிவ் வித் அவுட் யூ. இதை மனசுல வச்சுக்கோ. பார்க்கலாம். எப்படியும் உன்னோட அப்பா வரத்தான செய்வார். வரட்டும். பேசட்டும்…” என்றான் முகிலன் ஸ்திரமாய்.
ஓவியாவிற்கு அவனின் பேச்சு மனதளவில் மலையளவு தைரியம் கொடுத்தது. ஆனால் அனலரசுவின் குணத்திற்கு முன்னே அவை எல்லாம் செல்லுபடி ஆகுமா?
இதோ வார இறுதியில் கிராமத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்துடன்.
ஓவியா வர கூடாது என்று அனலரசு சொல்ல வயது பெண்ணை வீட்டில் தனியே விட்டு வரமுடியாதென வேதா மறுத்துவிட்டார்.
என்னவோ நடக்கவிருக்கிறது. அது அவளின் கண்முன்னே நடக்கட்டும். முடிவு மகள் கையில் என வேதா அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் பிடிவாதமாக.
ஓவியாவும் சேர்ந்தே வருகிறாள் என வேதாவின் மூலம் அறிந்துகொண்ட முகிலனுமே அவர்கள் வரவிற்கான காத்திருந்தான் மன உறுதியுடன்.