“நோ, இது ஈஸியா? நோ வே. என்னோட ரெஸ்பெக்ட் அன்ட் ரெபுடேஷனை விட்டுக்குடுத்து இங்க நான் வொர்க் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை…” என கொந்தளித்துக்கொண்டு இருந்தான் முகிலன்.
“பர்ஸ்ட் போய் ஹெட்கிட்ட பேசு. அவர் ஹேண்டில் பண்ணிக்கட்டும் உமேஷை…” என்றதும் எழுந்து வேகமாய் சென்றான் முகிலன்.
செய்த வேலைக்கு பாராட்டு இல்லை என்றாலும் அவமதிக்காமலேனும் இருக்கலாமே?
என்றைக்கு தனக்கு கீழ் உள்ளவன் ரெகமண்டேஷனில் உயர்பதவிக்கு சென்றானோ அன்றிலிருந்தே சோதனைகள் முகிலனுக்கு.
நன்றாகவே வேலை செய்தாலும் ஆயிரம் குறைகள். ஏற்கனவே விருப்பமற்ற வேலை.
ஏதோ குடும்பத்தினருக்காக என முகிலனின் மனது சமாதானம் செய்துகொண்டிருக்க அவனோ மீண்டும் மீண்டும் முகிலனையும், அவனை போன்ற சிலரையும் உமேஷ் தனது அதிகாரத்தால் வதைத்துக்கொண்டு இருந்தான்.
உழைப்பு வீணாவது என்பது வேறு. ஆனால் உழைக்கவே இல்லை என்பதை போன்ற பேச்சுக்கள் என்பது இன்னும் காயத்தை தர முகிலன் எதிர்த்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்க அங்கே இன்னுமே மட்டம் தட்டப்பட்டான் முகிலன்.
தனது மேலதிகாரியை தேடி செல்ல அங்கேயும் உமேஷின் ஆளுமை. முகிலனின் பேச்சுக்கள் எடுபடவில்லை.
“தேங்க்ஸ் ஃபார் எவ்ரித்திங்…” என்ற பேச்சோடு வேலையையும் ராஜினாமா செய்ய,
“இது உங்களுக்கான சாய்ஸ் இல்லை முகிலன். நீங்க அவ்வளவு ஈஸியா தூக்கி போட முடியாது. பேப்பர் போட்டு ப்ராப்பர் பிரசிஜர் இல்லாம நீங்க ரிசைன் பண்ண முடியாது…”
“வெல், என்னாலையும் வொர்க் பண்ண முடியாது. அவ்வளோ தான். அந்த பேப்பர் டைம்க்கு நான் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கறேன். தட்ஸ் இட்…” என்று அவனின் பிடியிலேயே நின்றான்.
“அமைதியா இருங்க முகிலன். பேசலாம். நீங்க அவசரப்படறீங்க…” என்ற தலைமை அதிகாரி சொல்ல,
“நோ, நான் டிஸைட் பண்ணிட்டேன். அஃப்கோர்ஸ் நான் இதை முதல்லயே எடுத்திருக்கனும். லேட் டிசிஷன் என்னோடது….” என சொல்லியவனை அதன் பின் நிறுத்தமுடியவில்லை.
வேலையை எழுதிக்கொடுத்து வெளியே வர உமேஷ் அவனை எதிர்கொண்டான்.
“பயந்து ஓடிட்ட போல முகில்?…”
“மை காட். நீ இப்படி கூட நினைச்சுட்டு இருக்கியா உமேஷ்? பட் அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. நினைச்சுக்கோ…”
“வேலையை விட்டு நின்னுட்ட. அடுத்த வேலை இப்படி ஒரு சேலரில உனக்கு கிடைச்சிடுமா?…” உமேஷின் நக்கலில் முகிலனுக்கு அத்தனை சிரிப்பு.
“என்னை நீ என்னன்னு நினைச்சுட்டு இருக்க? வேலை தேடி அலைவேன்னா? இப்ப நினைச்சாலும் உனக்கு வேலை இல்லைன்னா என்னால உனக்கு வேலை தர முடியும்டா…” என்றான் அவனின் மூக்கை உடைப்பதற்கு.
“இங்க வேலை பார்க்கனும்னு எனக்கு அவசியமிலைன்னு சொல்றேன். ஜஸ்ட் ஒரு எக்ஸ்பீரியன்ஸ். அவ்வளோ தான். என்னோட உலகம் வேற. அங்க போக போறேன். முதலாளியா…” என்று உமேஷிற்கு நன்கு திருப்பி கொடுத்துவிட்டு தான் கிளம்பினான் முகிலன்.
உண்மையில் மனதிற்கு அத்தனை இலகுவாய் இருந்தது முகிலனுக்கு. என்றோ ஒருநாள் வரும். அது இன்று.
ஆனாலும் கோபம் மட்டும் குறையவில்லை அவனுக்கு. இவர்களுக்கு உழைத்து என்ன பயன் என தோன்றாமல் இல்லை.
அப்படியே அங்கிருந்தே கிளம்பிவிட்டான். சென்னையை விட்டே கிளம்பியிருந்தான்.
வீட்டில் தாய்க்கு மட்டும் அழைத்து கிராமத்திற்கு செல்வதாக சொல்ல ஷோபாவுக்கு அதிர்ச்சி.
“என்ன முகிலா? இன்னைக்கு ஓவியா டான்ஸ் ப்ரோக்ராம் வேற இருக்கே? நீ ஏன் இப்படி பன்ற?…” என்றார்.
“ம்மா நான் பார்த்துக்கறேன். எப்படியும் உங்க புருஷனும், அண்ணனும் தாண்டவமாடுவாங்க. அதுக்கு முன்ன நான் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன் அங்க போய்…”
“என்னடா சொல்ல வர? அவங்க ஏன் அப்படி பண்ணனும்?…” என்றவருக்கு படபடப்பு குறையவில்லை.
“என்னை எதுவும் கேட்காதீங்க. இப்போ தான் நிம்மதியா இருக்கேன். இனி என்னோட லைப் என்னன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்…”
“என்ன முகிலா இது உன் லைப், எங்க லைப்ன்னு பிரிச்சு பேசிட்டு?…”
“உண்மைதானம்மா, பொய் ஒன்னும் சொல்லலையே? இதுவரைக்கும் உங்களோட லைப், அதாவது அப்பா, மாமா சொல்ற வாழ்க்கையை தானே வாழ்ந்தேன். எனக்கு முடியலை. இனியும் அங்க இருக்க முடியும்ன்னு தோணலை…”
“என்னப்பா நீ? இப்ப அப்பாவை எப்படி சாமாளிக்க? அப்பாவை விடு. மாமா, ஓவியா?…”
“மனுஷனுக்கு செல்ப் ரெஸ்பெக்ட் வேணும் ம்மா. இங்க வேண்டாம். எல்லாருக்கும் அது தான்னு சொல்ல வரலை. எனக்கு ஒத்துவரலை. இன்னொன்னு எனக்கு முதல்ல இருந்தே இதுல நாட்டமில்லை…”
“அப்போ இத்தனை நாளா இதுதான் உன்னை போட்டு அழுத்திட்டு இருந்ததா?…”
“ம்மா, நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன். அப்பாட்ட சொல்லிருங்க. ம்ஹூம் வேண்டாம். நான் கிராமத்துக்கு போயிருக்கேன்னு மட்டும் அப்பாட்ட சொல்லுங்க. வேலையை விட்டதை சொல்ல வேண்டாம். இங்க வருவாங்க. தெரிஞ்சுக்கட்டும்…” என்றவன்,
“நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நம்பறேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டான்.
இந்த நேரம் ஓவியா நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு சென்றிருப்பாள் என்று மனதில் எண்ணங்கள் தோன்ற காரின் வேகத்தை குறைத்தான்.
தன்னை தேடுவாள், என்ன பதில் சொல்லவாம்? எப்போதும் அவளின் நிகழ்ச்சி நடக்கிறதென்றால் தவிர்க்காமல் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுபவன்.
இன்று இப்படி ஒரு நாளாக இருக்குமென அவன் நினைக்கவில்லை. மனதில் அடுத்து என்ன என்ற யோசனைகளை வலம் வர ஆரம்பித்திருந்தது.
முதலில் குடும்பத்தினரை சாமாளிக்க வேண்டும். தந்தை, அதற்கும் மேல் அனலரசு. பேச்சுக்கள் எப்படி இருக்குமோ?
எந்த சூழ்நிலையிலும் தனது நிதானத்தை கைவிட கூடாதென நினைத்துக்கொண்டே வழியில் கவனம் வைத்திருந்தான்.
———————————————————–
அலங்காரம் எல்லாம் முடிந்து தன்னுடையின் நேர்த்தியை சரிபார்த்துக்கொண்டு இருந்தாள் ஓவியா.
“இன்னும் எவ்வளவு நேரம் கரெக்ஷன்ல இருப்ப? எல்லாமே பர்பெக்ட். திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்காத ஓவி…”
தாய் வேதவல்லி கண்டிப்புடன் மகளை சொல்ல அடுத்ததாக அவளின் பார்வை தன்னறைக்கு வெளியே தெரிந்த திரை இடுக்கின் வழியே முன் வரிசை இருக்கையில் இருப்பவர்களை நோட்டம் விட்டாள்.
“ப்ச் ஓவி, இன்னும் எவ்வளவு நேரம்டா இப்படியே பார்த்துட்டு இருப்ப? வந்து உட்கார். உன்னோட மேம் வந்தாங்கன்னா நீ டென்ஷனா இருக்கறதை பார்த்துட்டு அவங்க டென்ஷன் ஆகிடுவாங்க….”
“ஹ்ம்ம் ம்மா. நான் ஓகே தான்…” என்ற குரலில் சுரத்தில்லை.
ஏன் இன்னும் வரவில்லை என்பதிலேயே தான் இருந்தது. மனது அவளின் எதிர்பார்ப்பிற்கும் மேல் தள்ளாடியது.
“ஓவியா…” என்று வந்த அவளின் நடன ஆசிரியை அவளை பார்த்துவிட்டு எப்போது என்னவென்ற விவரங்களை சொல்லியவர் வேதவல்லியிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
என்னவோ சரியில்லை. சரியில்லை. என மனது சொல்லிக்கொண்டே இருக்க இப்போது முகிலன் வரவில்லை.
அதற்கும் மேல் என்னவோ அவன் சொல்ல வருவதை போல குரல் இருக்க கேட்கமுடியுமெனவும் தோன்றவில்லை.
இப்போது இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவனிடம் பேசலாம் என போனை வைத்துவிட்டாள் ஓவியா.
அடுத்த பத்து நிமிடத்தில் ஓவியாவின் பெயர் மைக்கில் சொல்லப்பட அத்தனை உணர்வுகளையும் ஒப்பனை முகத்தின் பின்னால் மறைத்துக்கொண்டவள் எழுந்து சென்று பார்வையாளர்களையும் நிகழ்ச்சி நடத்துபவர்களையும் கை கூப்பி வணங்கியவள் அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள்.
பரதநாட்டியம். அவளாக ஆசைப்பட்டு கற்றுக்கொண்டதில்லை. அதுவுமே அலங்காரமென்று அவளின் மேல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று தான்.
ஆனாலும் திறன்பட கற்று அதில் தனக்கென ஒரு புள்ளியாய் தனது பெயரை அதில் பதித்திருந்தாள் ஓவியா.
இப்போது இந்த நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிய அறைக்குள் நுழைந்தவனை அவளின் நடன ஆசிரியை அணைத்து வாழ்த்து தெரிவிக்கவும் சிரிப்புடன் ஏற்றுக்கொண்டாள்.
இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும். அனலரசு, இல்லை என்றால் சஞ்சய் யாரேனும் அழைக்க வருவார்கள்.
இன்று சஞ்சய் வந்திருக்க அவனின் முகத்தில் அத்தனை பரபரப்பு. என்ன விஷயம் எதுவும் சொல்லவில்லை. கச்சேரி முடிந்ததுமே கிளம்பிவிட வீட்டில் உக்கித்திலும் உக்கிரமாக அனலரசு.
“விஷயம் தெரியுமா? உன் அண்ணன் மகன் வேலையை விட்டு நின்னுட்டானாம்…” என்று வேதாவிடம் குண்டை தூக்கி போட்டார் அனலரசு.
“என்ன சொல்றீங்க? நம்ம முகிலனா?…”
“இன்னும் என்ன நம்ம முகிலன்?…” என்ற வார்த்தையில் சுக்கு நூறாய் உடைந்து போனது வேதவல்லி மட்டுமல்ல ஓவியாவுமே.