வீட்டிற்குள் வந்ததும் கண்கள் தென்றலைத் தேட அறைக்குள் சென்றவன் அங்கே ஏற்பாடாகி இருந்த அலங்காரத்தை கண்டு தலை அசைத்து புன்னகைத்து மனைவி எங்கே எனப் பார்க்க அவள் அறையில் இல்லை.
வெளியே வந்து பார்க்க பால்கனி கதவு திறந்திருப்பதை கண்டு புன்னகையுடன் அங்கே செல்ல தாமரை வர்ண புடவையில் அளவான அலங்காரத்துடன் மல்லிகைப் பூவின் வாசத்துடன் கம்பிகளில் சாய்ந்து இவனுக்கு முதுகை காட்டியவாறு நின்றிருந்தவள் வானத்து நிலவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெள்ளை நிலவினை ரசித்தவளின் கொள்ளை அழகில் கொள்ளை போனது மொழியின் மனம்!
சத்தமின்றி அவளை நெருங்கியவன் அவளை மெல்ல உரசியபடி பின்னே வந்து நிற்க, கணவனின் வாசம் நாசியை தொட்டதும் பட்டென்று திரும்பியவள் தடுமாறி விழுகப் பார்க்க, அவளின் கைப் பற்றி தன் புறம் இழுத்து நிறுத்தியவன், “நான் தான்டா தென்றல்..” என்றான் மெல்லிய குரலில்!
“ஊஃப்… கூப்பிட்டு இருக்கலாம் தானே மொழி” என்று முயன்று சாதாரண தொனியில் பேசியவளை கண்டு சிரித்தவன்,
“கூப்பிட்டு இருந்தா தென்றலை இப்படி பிடிச்சு இருக்க முடியாதே” என்றான் அவள் தாடையில் ஐவிரல் குவித்து ஆட்டியபடி.
“ஹ்ம்ம்…” என்றவள் பார்வை அவனைத் தவிர்த்து பால்கனி சுவரைத் தொட, “நீ ஏன்டா கீழ வரல?” என்று அவன் சாதாரணமாக பேசியதும் அவளும் இயல்பானாள்.
“பாட்டி தான் மொழி. இங்கேயே இருக்க சொல்லிட்டாங்க” என்று கூறியவள் அவன் பார்வையில் சிரிப்பில் அசைவில் நெளிந்து “பால் கிட்சன்ல இருக்கு. எடுத்துட்டு வரேன்” என்றவள் நகர எத்தனிக்க,
“இங்கயா?” என்று அவன் விஷமமாகக் கேட்டதும், “அச்சோ மொழி பிளீஸ்…” என்று அவள் சிணுங்க “ஓகே வா உள்ள போகலாம்” என்றவன் அவளோடு கிட்சன் வரை வர,
“நானே எடுத்திட்டு வரேன் மொழி” என்றவளை அவன் கண்டு கொள்ளவில்லை.
பாலை எடுத்து இரு டம்ளரில் ஊற்றியவன் அவளுக்கொன்றை நீட்ட சிரிப்புடன் அவனைப் பார்த்தவள் “நான் தானே கொடுக்கணும்” என்று வேறு சொல்ல,
“ஹஸ்பண்டும் கொடுக்கலாம். குடி தென்றல்” என்றவன் தன்னிதை குடிக்கத் துவங்க,
“மொழி… நீங்க ஏன் இந்தப் பால்ல எனக்கு காஃபி போட்டு தரக் கூடாது” என்றதும் புரையேறிவிட்டது மொழிக்கு.
“அச்சோ பாத்து குடிங்க” என்று அவன் தலை தட்டியவள் கையை பற்றியவன், “என்ன தென்றல் கேட்ட? காஃபியா?” என்று அவன் மெல்லிய திகைப்புடன் கேட்க,
“ஆமா ஏன்?” என்றவள்,
“வெறும் பால் குடிக்க ரொம்ப பிடிக்காது மொழி. அதான். அதுவும் உங்க காஃபி வேணும் போல இருக்கு. எப்பக் குடிச்சது?” என்று அவள் ஏக்கமாய் கேட்டதும் புன்னகையுடன் அவளின் நெற்றியில் முட்டியவன்,
“சரி இருடா” என்றவன் ஃப்ரிட்ஜில் இருந்து வேறு பாலை எடுத்து காய்ச்சி காஃபியை தயாரிக்க அவன் நேர்த்தியாய் செய்யும் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் அவன் பார்த்ததும் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாள்.
காஃபியை கண் மூடி ரசித்து குடித்தவள் கணவனின் பார்வையை வெகு கவனமாய் தவிர்த்தாள்.
குடித்து முடித்ததும் கப்பை கழுவி வைத்தவள் அடுத்து என்று யோசிக்கும் போதே நெஞ்சில் குறுகுறுப்பு கூட கணவனைப் பார்க்காமல் நகர்ந்து விட எண்ணி வேக வேகமாக கிச்சனில் இருந்து நடக்க, செல்லும் மனைவியின் இடக்கரம் பற்றி இழுத்து கைகளில் அள்ளிக் கொண்டவன்,
“என்னை நிமிர்ந்து பாக்குறதுக்கு எவ்வளவு வெட்கம் தென்றலுக்கு” என்றவன் குரலில் அத்தனை துள்ளல்!
“அச்சோ மொழி” என்றவள் அவன் தூக்கியதில் தடுமாறி அவன் கழுத்தில் கைகளை கோர்த்துக் கொள்ள, “ஹ்ம்ம் போகலாமா…” என்றான் அறையை கண்ணால் காண்பித்து!
“மத்தியானம் என் தென்றல் எப்படி தைரியமா ஸ்வீட் கிஸ் கேட்டா? இப்ப என்ன வெட்கம்?” என்று அவன் பேசியபடி அறைக்குள் அவளை சுமந்தபடி வந்து விட்டான்.
கண்களை திறக்காமல் அவன் மார்பில் சாய்ந்து இருந்தவள் அவன் அறைக்குள் வந்தது உணர்ந்ததும் கண் திறக்கவில்லை.
“என்னைப் பாருடா தென்றல்” என்றான் ஹஸ்கி குரலில் அவள் முகமருகே!
விழி திறந்தவள் அவன் முகத்தில் மின்னிய புன்னகையில் கழுத்தில் இருந்த இடக் கரத்தை எடுத்து அவன் கன்னம் வருட, தென்றல் வருடியதும் மொழியின் மொழியும் மயங்கியதோ!
“கீழ இறக்கி விடுங்க மொழி” என்றாள் மெல்லிய குரலில்.
“தென்றல் என் கைக்குள்ள” என்றவன் புன்னகை ஆளைக் கொள்ள பார்வை அள்ளிக் கொண்டது அவளை!
பார்வையால் பாஷையால் ஸ்பரிசத்தால் தீண்டலால் என எல்லா விதத்திலும் தென்றலை சிலிர்க்க வைத்தான்! சிவக்கவும் வைத்தான்!
“மொழி..” என்றவள் குரல் காற்றாக வர அவளை கட்டிலில் கிடத்தியவன் அவளருகே அமர்ந்து அவள் மடி சாய்ந்து கண் மூடிக் கொள்ள முழுமையான உணர்வு இருவருக்குள்ளும்!
அவள் கை தானாக அவன் தலை கோத கண்கள் திறவாமல் மனைவியிடம் முற்றிலும் சரணடைந்திருந்தான் மொழி!
இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தென்றலோடு தான்! ஜீவன் முற்றிலும் தென்றலே ஆட்சி புரிய வேண்டும்! தென்றலன்றி மொழியேது எனும் விதமாய் சரணாகதி நிலை!
அவன் தலை கோதியவள் அவன் அமைதியில் அவன் கன்னம் வருடி “என்னாச்சு மொழி” என்று கேட்க, “தென்றலாச்சு தென்றல்” என்றான் எதிலும் தென்றலை உணர்பவன் போல்!
அவன் குரலில் தான் எத்தனை எத்தனை சந்தோஷம்! நிறைவு! ஆனந்தம்! பேருவகை!
கணவனை காதலோடு பார்த்தவள் “அப்புறம்?” என்று அவன் நெஞ்சில் முழங்கை கையூன்றி கன்னத்தில் விரல் வைத்து அடுத்து என்னும் விதமாய் கேட்க,
“மொழி தென்றலாகனும்..” என்றதும் அவன் சொன்னதன் பொருள் உணர்ந்து மீண்டும் வெட்கம் அவளிடம்.
எழுந்து அவள் கன்னங்களை பற்றிக் கொண்டவன் “என்னடா?” என்று கேட்க, “ரொம்ப ஷையா ஃபீல் ஆகுது மொழி. ஐயம் ப்ளஷிங் நியர் யூ(I’m blushing near you!)” என்றாள் நாணம் கூத்தாடிய குரலில்!
அவள் சொன்னதில் அட்டகாச புன்னகை அவனிடம்! அவளைப் போல அவனும் இப்போது கன்னத்தில் ஐவிரல் வைத்து “அப்புறம்?” என்று கேட்க,
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் நாணம் விலகாத குரலில் “தென்றலும் மொழியாகனும்” என்று விட்டு முகத்தை அவன் நெஞ்சில் முட்டிக் கொள்ள ரகசிய சிரிப்பு சங்கீதமாய் வந்தது அவனிடம்!
அவள் முகம் நிமிர்த்தி குட்டி குட்டி மென் முத்தங்கள் வைத்தவன், “தென்றல்” என்றான் மயக்கம் மேலிட!
பதிலுக்கு மொழி என்றவளின் அழைப்பு அவனிதழில் முடிந்திருந்தது.
வெகு நேரம் கழித்து பிரிந்ததும் இருவரிடமும் பேச்சில்லை! அறையின் வெளிச்சத்தை அணைத்தவன் தென்றலை நெருங்கி இருந்தான்.
நெருங்கி வந்தவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள் “கேட்கணும்னு நினைச்சேன்.. அந்த ரூம்லயே இதெல்லாம் அரேன்ஜ் பண்ணி இருந்திருக்கலாமே?” என்றவள்,
தாங்கள் இருந்த மற்றொரு பெரிய அறையை சுட்டிக் காட்டி “இங்க ஏன்? அதுவும் பெரிய பெட் வேற” என்று தாங்கள் அமர்ந்திருக்கும் கட்டிலை பார்த்தபடி கேட்க,
அவன் உள்ளங்கையை எடுத்து வருடிக் கொடுத்தவன் “நான் மட்டும்ன்றதால அந்த ரூம்ல சிங்கிள் காட் மட்டும் போட்டு யூஸ் பண்ணேன்டா தென்றல். இப்ப தென்றலும் வந்தாச்சே! அதான் டென் டேஸ் முன்னாடியே இந்த ரூம்ல எல்லாம் ரெடி பண்ணியாச்சு” என்றவன் அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் அச்சாரமிட்டான்!
மின்னலாய் அவனிட்ட முத்தம் மேனி எங்கும் பரவ மெல்லிய நடுக்கம் பரவியது தென்றலுக்கு!
அதை உணர்ந்தவன் முன்னேறாமல் அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு “ஏன்டா இந்த ரூம் ஓகே இல்லையா?” என்று கேட்க,
“அப்படின்னு இல்ல மொழி” என்றவள்,
“சிங்கிள் காட்னா என்ன? அதுல என்னைத் தாங்கிக்க மாட்டீங்களா?” என்று கேட்டதும் “தென்றல்” என்றவன் ஆனந்த அதிர்வுடன் அவளை நோக்கினான்.
“ஹ்ம்ம் பதில் சொல்லணும்” என்றவள் அதிக வெளிச்சமில்லாததில் நாணத்தை கலைத்தவளாய் கேட்க,
“தென்றலை தாங்காம என்னடா?” என்று ஒற்றை விரலால் அவள் கன்னம் வருடியவன், அந்தக் கன்னத்தில் மீசை உராய முத்தமிட கண்களை இறுக மூடிக் கொண்டாள் தென்றல் மீனா.
“தென்றல் இஷ்டம் தான். தென்றலுக்கு சம்மதம்னா தூக்கிட்டு போய்டுவேன்” என்றவன் கண் சிமிட்டியதை அவளால் உணர முடிந்தது.
“இன்னிக்கு ஒரு நாள்.. இங்கேயே..” என்றவள் குரல் அளவுக்கு அதிகமாக இறங்கி ஒலிக்க அவளின் கன்னத்தோடு கன்னம் உரசியவன் தென்றலை தன் மடிமாற்றி இருந்தான்.
கன்னத்து ஸ்பரிசங்களுடன் கழுத்தோர முத்தங்கள் உயிர்பெற்று மெய் சிலிர்ப்புடன் ஓர் மாய உலகின் அனுபவத்தை தூண்டிய மெல்லிய சப்தங்கள் மட்டுமே அறையில் நிறையத் துவங்கியது.
இதுவரை தீண்டிராத மெய் தீண்டல் இருவரையும் தீண்டச் சொல்லி தூண்டி இருக்க மோகங்கள் கவி பாடத் துவங்கியது!
அறையை சூழ்ந்திருந்த குளிர் தென்றலோடு வெப்பமாய் தகிக்கும் தன் தென்றலையும் உணர்ந்தவனுள் ரகசிய சிரிப்பு உதயமானது.
“தென்றல் சுடுதே..” என்று அவள் செவியில் ரகசியமாய் அவன் சொல்லி சிரித்ததும்,
“அடி விழும் மொழி” என்று சிணுங்களாய் மொழிந்தவள் கைகள் மாறாக அவனை இன்னும் ஆரத் தழுவி தன்னுள் அடக்கிக் கொண்டதும் கூடலில் பேரின்பக் கவிதையாய்!
“யூ ஷூட் டெல் மீ இஃப் ஐயம் ஹர்ட்டிங் யூடா தென்றல்” என்றதும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் உணர்ந்தவளின் வலிகள் கூட அவனின் மென்மையான அனுசரணையான முறையில் தொலைந்து போனது.
மொழி அவளுள் புதைந்தான்! அவளில் திளைத்தான்! அவளை உணர்ந்தான்! அவளுள் உயிர்த்தான்!
தென்றல் தள்ளாடியது! திண்டாடியது! இறுதியாக தாலாட்டியது!
தென்றலெங்கும் மொழியின் வாசம்!
அவளின் மல்லிகை மலர் வாசம் மொத்தமும் அதன் வாசனை குன்றாமல் மொழியின் நெஞ்சத்தில் ஆலாபனையோடு சேர்ந்திருந்தது.
உறவின் நிறைவில் இதழ்களில் இதமான புன்னகை குடிபெயர்ந்தது இருவரிடத்திலும்.
கிறக்கங்களின் முடிவில் மயக்கங்கள் பூத்திருக்க, மோகனப் புன்னகையுடன் மோதிக் கொண்டன இருவரின் நெற்றியும்!
“ஆர் யூ ஓகே தென்றல்?” என்றவன் அவள் முகத்தின் ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கூந்தல் இழைகளை விலக்கி விட்டபடி கேட்க,
அவன் கரத்தினை கன்னத்தோடு அழுத்திக் கொண்டவள் “ம்ம்ம்..” என்றாள் அவனின் முகத்தை பார்த்துக் கொண்டே முணங்களாய்.
அவளின் முகத்தையே அவன் புன்னகையுடன் மொய்க்க அவளும் அவனைத் தான் பார்த்தாள்.
“என்னடா தென்றல்?” என்று தலை கோத,
“உங்களை இப்படி பாத்திட்டே இருக்கலாம் போல இருக்கு மொழி”
அவள் சொன்னதும் மென் புன்னகை அவனிடம். “சரி பாத்திட்டே இரு” என்றான் அவனும் கண் சிமிட்டி அழகாய் புன்னகைத்து.