என்று காதில் மெல்ல வந்து பாய்ந்த பாடல் வரிகளில் தூக்கம் களைந்து கண் விழித்தான் மாதவன். நன்றாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவன் பக்கவாட்டில் இருந்த கிட்சனில் இருந்து பாடல் ஒலி வந்ததும் “இவனை….” என்று பல்லைக் கடித்துக்கொண்டு எழுந்து அடுக்களைக்குள் சென்றான்.
அங்கே அருண்மொழி அலெக்ஸா ஒலி பரப்பிக் கொண்டிருந்த பாடலை தானும் சுவாரஸ்யத்துடன் பாடியபடி தோசை வார்த்துக் கொண்டிருக்க, பக்கத்தில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது மாதவனுக்கு நிகராக!
நண்பன் தன்னை கொலைவெறியோடு முறைப்பது தெரியாமல் பாடலோடு ஒன்றியபடி தோசையை அழகாய் வட்டமாய் வார்த்து கொண்டிருந்தான் அருண்மொழி.
இதழ்கள் ரசனையான புன்னகையை தாங்கி இருக்க, பாடல் வரிகளும் ரசனை குறையாமல் வெளி வந்து கொண்டிருந்தது அவனின் இனிய குரலில்.
“அது பாட்டுடா” என்று சிரித்த அருண்மொழி, “எழுந்தாச்சா.. பிரஷ் பண்ணிட்டு வா. காஃபி போடுறேன்” என்றபடி சாம்பாரின் தலையில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை தலைகளை மழைச் சாரலாய் தூவியவன், சாம்பாரை இறக்கி விட்டு பாலை கொதிக்க வைத்தான்.
“என்னடா இன்னும் என்னை முறைச்சிட்டே இருக்க. சீக்கிரம் போய் பிரஷ் பண்ணிட்டு வா. மணி ஏழு ஆகப் போகுது இப்பவே” என்க,
அவனை முறைத்த மாதவன், “அலெக்சாவை எப்படா எடுத்த..” என்றான்.
“நைட் தூங்கும் போது தான் கேட்க விடல. மார்னிங் என்னால அலெக்ஸா இல்லேன்னா டேவே ஸ்டார்ட் பண்ண முடியாதுடா” என்றவன் அவனுக்கு காஃபியை கலந்தபடி “பிரஷ் பண்ணாம காஃபி நான் தர மாட்டேன் மேடி. ஒழுங்கா போய் பிரஷ் பண்ணிட்டு வா” என்றான் மிரட்டும் த்வனியில்!
“உனக்கும் அம்மாக்கும் வேற வேலை இல்ல. எப்பப்பாரு எல்லாத்துலயும் சுத்தம் பாக்க வேண்டியது. இதுக்கு தான் டாக்டருங்க சகவாசமே வச்சுக்க கூடாதுன்னு சொல்றது” என்று முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர,
“எங்க கூட சகவாசம் வச்சுக்க கூடாதாமா…! உனக்குன்னு ஒயிஃப் வந்த பின்னாடி அவுங்களும் பிரஷ் பண்ணிட்டு தான் காஃபி குடிக்கணும்னா என்ன பண்ணுவ?” என்று கேட்க,
பேத் ரூமில் இருந்த மாதவன் வாயில் இருந்த பிரஷை எடுத்து விட்டு “அப்படிப் பட்ட ஒயிஃபே வேணாம்னு டிவோர்ஸ் பண்ணிடுவேன்டா” என்று நண்பனுக்கு கேட்கும் படி சத்தமாக சொல்ல,
“அடப்பாவி” என்றான் அருண்மொழி.
“நல்ல வேளை.. உங்களை மாதிரி வெள்ளைக் கோட்டும் அந்த ஸ்டெத்தஸ்கோப்பையும் போட்டுட்டு நம்மளால பொழப்பை ஓட்டி இருக்க முடியாது. அதனால தான் அம்மா கெஞ்சி கொஞ்சி மிரட்டி கேட்டும் கூட மெடிசன் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். ஸ்வப்னாவும் சிக்கலையே… விவரமா ஃபேஷன் டெக்னாலஜி எடுத்திட்டா” என்று தானும் தங்கையும் மருத்துவப் படிப்பில் இருந்து தப்பித்ததை சொல்லி சிரித்தவன்,
“நான் மிஸ்டர் அனுஜா என்கிற கிச்சினமூர்த்திக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு அவரோட ஃபேக்டரிய கையில எடுத்தது தான் எனக்கு நல்லது” என்று சொல்லி விட்டு மீண்டும் ப்ரஷை வாயில் வைத்து கொள்ள,
“உனக்கு நல்லதோ இல்லயோ… நீ டாக்டர் ஆகமையே ஏகப் பட்ட உயிரை காப்பாத்தி இருக்க பாரு.. அவுங்களுக்கு தான்டா நல்லது” என்ற அருண்மொழி,
“கிச்சினமூர்த்தின்னு கிண்டலா பண்ற.. இரு அப்பாக்கு கூப்பிட்டு சொல்றேன்” என்றான்.
“சின்ன பையன் மாதிரி பண்ணாத. அப்படியே நீ போன் பண்ணி சொல்லி அவரும் என்னைய குச்சி வச்சு அடிக்க வர மாதிரி தான்” என்று லகுவாய் சொல்லியவன், “காஃபிய கொடு” என்றபடி அவனிடம் இருந்து வாங்கிக் கொள்ள,
“உன்னை எல்லாம் குச்சிய வச்சு அடிச்சு தான்டா வளத்து இருக்கணும்! நீ ஸ்ட்ரிக்ட் அனும்மாவையே தூக்கி சாப்பிடுற ஆளா இருக்க” என்று நண்பனை பொய் கோபத்தோடு முறைக்க,
“என்னை அப்புறம் முறைக்கலாம்.. முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.. ஒரு வேளை உனக்கு பிரஷ் பண்ணாம காஃபி குடிக்கிற பொண்டாட்டி அமைஞ்சா என்ன பண்ணுவ?” என்ற கேள்வியில்,
“வாட்….” என்று சிரித்த அருண்மொழி, “மேரேஜ் எல்லாம் நான் யோசிக்க கூட இல்ல மேடி” என்றான் அமைதியான புன்னகையுடன்.
“அதெப்படிடா நீ யோசிக்காம இருக்கலாம்! நீயும் வயசு பையன் தான. சொல்லு அப்படிப் பட்ட பொண்டாட்டி வந்தா சார் என்ன பண்ணுவீங்க?” என்று மீண்டும் கேட்க,
“வயசு பையனா…. அடேய்..” என்று சிரித்த அருண்மொழி, “யோசிக்காத ஒரு விஷயத்தை பத்தி கேட்டா எப்படி பதில் சொல்லுவேன்” என்றான் தோசையை தனக்கு தட்டில் வைத்தபடி.
“அது சரி.. இனி யோசிக்க தான் வேணும்” என்று மாதவன் நண்பனை ஆராயும் பார்வை பார்க்க,
“நீ இப்படி குறுகுறுன்னு பாக்குற அளவுக்கு எல்லாம் இங்க ஒன்னும் இல்ல மச்சான். ரியல்லி… பிலீவ் மீ மேன்.. ” என்று லகுவாய் சொல்லி விட்டு தோசையை உண்ணத் துவங்கினான்.
“ஏன் நான் மட்டும் காவிய கட்டிக்க? நீயும் வா..சேந்து கட்டிக்கிட்டு ஒன்னா போவோம்” என்றான் அருண்மொழி சிரிப்புடன்.
“யூ கோ மேன்!! வொய் மீ? ” என்றவன்,
“உன்னை பாத்து காவி வேட்டின்னு தப்பா சொல்லிட்டேன் மச்சான். உனக்கு எதுக்கு காவி வேட்டி.. உன்னோட டாக்டர் அங்கியான அந்த வெள்ளை கோட்டே போதும்!” என்றானே பாக்கலாம்!!!
“டேய்…” நண்பனின் கலாட்டாவில் அருண்மொழிக்கு அப்படி ஒரு சிரிப்பு!
“போதும். போய் ரெடி ஆகிட்டு வாடா” என்று பேச்சை மாற்ற,
“நீ டாப்பிக்கை மாத்தலாம்! ஆனா, அம்மா கனடால இருந்து வந்ததும் உனக்கு பொண்ணு பாக்குறதா இருக்காங்க. அவுங்க கிட்ட பேசிக்க எனக்கு ஐடியா இல்ல.. ஜியோ இல்லைன்னு… அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு” என்றான் மாதவன் சாதாரண இயல்புடன்!
ஆனால், அவன் சொன்னதில் அருண்மொழியிடம் தான் அசைவில்லை. உண்பதை நிறுத்தி விட்டு ஒரு நொடி உறைந்து தான் போனான்.
சொந்த மகன் இருக்க, தனக்கு பெண் பார்க்கும் எண்ணத்தில் இருக்கும் அனுஜாவின் அன்பில் மனம் எப்போதும் போல் திக்கு முக்காடி கலங்கிப் போனது.
சொல்லப் போனால் மாதவனுக்கும் அருணுக்கும் ஒரே வயது தான்.
அப்படி என்ன இவர்களுக்கு நான் செய்து விட்டேன்.. மொத்த குடும்பமும் தன் மீது எவ்வித வேறுபாடும் இன்றி இவ்வளவு அன்பை பொழியும் அளவிற்கு?
அதுவும் அனுஜா….
தன்னை பெற்றெடுத்த அன்னையை இழந்த தினத்தில் இருந்து தனக்கு அன்னையாய், அரவணைப்பாய், அனைத்துமாய் நிற்கும் அனுஜாவின் அன்பில் நெக்குருகி விட்டது அவனுக்கு.
“என்னடா பதிலே காணோம்…” என்று நண்பனிடம் கேட்க, “ஒன்னுமில்ல மேடி. அனும்மா வரட்டும். பேசிக்கலாம்” என்று அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டு அவனுக்கு பதில் கூறியவன்,
“உனக்கு ஹாட் பேக்ல எடுத்து வைக்கவா.. இல்ல சாப்பிடுறியா?” என்று பேச்சை மாற்றினான். மாதவன் கவனித்தாலும் மேலும் அதனைச் சுற்றி பேச்சை நகர்த்தவில்லை. நண்பனின் மாற்றம் புரிந்தது. எனவே அமைதியாக தானும் பேச்சை மாற்றும் விதமாக,
“குளிச்சிட்டு வரேன். சாப்பிட்டே கிளம்பலாம்” என்றவன் சாம்பாரை எட்டி நுகர்ந்து பார்த்து “வாசனையா சமைக்கிறடா மச்சான். அப்படியே தக்காளி சட்னியயும் ரெடி பண்ணி வைப்பியாம். நான் போய் குளிச்சிட்டு வந்திருவேனாம்” என்க,
“அதெல்லாம் செஞ்சு வச்சாச்சு.. சாருக்கு தான் வெறும் சாம்பார் உள்ள இறங்காதே” என்று அங்கிருந்த ஒரு கின்னத்தை காட்டினான்.
அவனருகில் வந்து தோளோடு அருண்மொழியை அணைத்துக் கொண்ட மாதவன், “நண்பேன்டா!!!” என்றான் சந்தானம் பாணியில்!
அவன் சொல்லிய விதத்தில் இருவருக்குமே புன்னகை கிளம்ப, இருவரின் முகத்திலும் புன்னகை பூத்தது.
அருண்மொழியின் போனை எடுத்த மாதவன் கேமராவை ஓபன் செய்து “சீக்ஸ்….” என்று நண்பனை கழுத்தோடு கட்டிக் கொண்டு செல்ஃபியை எடுத்தான்.
அந்தக் காலை நேரத்து புகைப்படம் நண்பர்களின் சிரிப்பை அதன் சுகமான சுவடுகள் மாறாமல் உள்வாங்கி இருந்தது.
“அம்மாக்கு அனுப்புறேன்” என்று சொல்லி விட்டு கையோடு அவருக்கு “மார்னிங் ஸ்மைல் ஃப்ரம் யுவர் போத் ‘Son’shines” எனும் குறுஞ்செய்தியுடன் இரண்டு கண்ணடிக்கும் ஸ்மைலிகளை அனுப்பி விட்டு தான் குளிக்க சென்றான்.
அவன் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை கண்ட அருண்மொழியின் இதழ்களில் ஆத்மார்த்தமான புன்னகை!
ஒரு வழியாக மாதவன் குளித்து வந்து உண்டு முடித்ததும் “நீ பைக் எடுக்க வேண்டாம் அருண். நானே உன்னை ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணிட்டு ஃபேக்டரி கிளம்புறேன். ஈவ்னிங் நானே வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். உனக்கு எத்தன மணிக்கு டியூட்டி முடியும்?” என்று நண்பனிடம் கேட்க,
“உனக்கு எதுக்கு அலைச்சல். சும்மாவே ஃபேக்டரில எதோ மெட்டீரியல் இஷ்ஷுன்னு சொல்லிட்டு இருந்த. அதை சார்ட் அவுட் பண்ணியாச்சா?” என்று கேட்க,
“இல்லடா. மெட்டீரியல் எல்லாம் ரிட்டர்ன் அனுப்பியாச்சு. இன்னும் ஒன் வீக் ஆகும் நியூ மெட்டீரியல்ஸ் வர. அது வரை செக்கன்ட் பிளேண்ட்ல ப்ரடக்ஷன் ஸ்டாப்ல தான் இருக்கும். பாத்துக்கலாம்” என்றவன்,
“எனக்கு அலைச்சல் எல்லாம் இல்ல. நானே வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். பெசன்ட் நகர் பீச் போகலாம்” என்றான்.
இது நண்பர்களின் வழக்கம். அவ்வப்போது ஒன்றாக கடற்கரை சென்று காலாற நடந்து, மணலில் அமர்ந்து, கதை பேசி, அவர்களின் உள்ளத்தை பகிர்ந்து, நட்பை வளர்த்து என எதுவாக இருந்தாலும் கடற்கரைக்கு செல்வது இருவரின் பதின் வயதிலிருந்தே பழக்கமும் வழக்கமுமென ஆகிப் போனது!
“பீச்சுக்கா… இன்னைக்கு முடியாது மேடி… இந்த வீக் சண்டே வேணும்னா பாக்கலாம்” என்றான் அருண்மொழி.
“அப்ப சண்டே உன் ஃப்ரீ டைம் சொல்லு. நானே வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றவனிடம்,
“சரிடா. இப்ப எனக்கு டைம் ஆச்சு. நீ பொறுமையா சாப்பிட்டு வீட்டை லாக் பண்ணிட்டு கிளம்பு. நான் இன்னொரு கீ எடுத்திட்டு போறேன்” என்ற அருண்மொழி கிளம்ப,
நேரத்தை பார்த்த மாதவன், “ஆமா… சரி நீ கிளம்பு. ஈவ்னிங் நம்ம ஹாஸ்பிட்டல் வருவ தானே. நான் அங்க வந்து கீயை கொடுக்கிறேன்” என்றான்.
“ஓகே மச்சான். ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு. அவசர அவசரமா முழுங்காத” என்றவன் கிளம்பி விட, நண்பனின் அக்கறையான அதட்டலில் “Male version ஆஃப் அனுஜா” என சொல்லி சிரித்துக் கொண்டான் மாதவன்!