இல்லையே நான் வரும் போது என்னபத்தி வேற என்னவோ சொல்லிட்டுஇருந்தியே
சிங்கம் செல நேரம்தூங்கறது இல்லியாஅத சொன்னேன்.
உனக்குவர வர குசும்புஅதிகமாயிடுச்சுஇரு பாத்துக்கிறேன்
ராசா குமரா , உன் அத்தைக்கு சொன்னீங்களா
அருள் சொல்லிட்டான் அப்பத்தா, மலர் அண்ணியும் சொல்லியிருக்காங்கவருவாங்கனுநினைக்கிறேன்.
குமரா சாப்ட வாய்யா,
இதோ வர்றேன்மா
நீ சாப்படியா அப்பத்தா..
ம். ஆச்சுய்யா நீபோய் சாப்பிடு
உள்ளே வரவேற்பறையில் மலர் அமர்ந்திருக்க அண்ணி சாப்டீங்களா
ம் ஆச்சுதம்பி
அருள் எங்க
உள்ளே
டைனிங் டேபிளில்அமர்ந்து அருள் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நீயும் வாடா சாப்பிடலாம்.
ம்ம். அம்மா எனக்கு தோசை
இந்தா எடுதிட்டு வர்றேன்
ஆமா ஏதாவது வேலை இருக்கா இல்ல எல்லாம் முடிஞ்சதா.
என்ன வேலை கோயில்ல வளைகாப்பு அங்க மண்டபத்திலயே எல்லாருக்கும் சாப்பாடு, போகும் போது குடுக்க தாம்பூலபை அவ்வளவு தான என்றபடி தோசையுடன் வந்தார் பார்வதி
தட்டில்சட்னியுடன்தோசைவைத்து மகனின் புறம் நீட்ட
நல்ல மண்டபமாபுடிச்சிசெஞ்சிருக்கலாம்அருள்கூற
ஏன் உன் பொண்டாட்டி சீதனமா, வண்டி நிறைய கொண்டு வந்து இறக்கி இருக்காளா? அதிலிருந்து எடுத்து செய்ய வளைகாப்பே பொண்ணு வீட்லதான் செய்யனும்அதுவே இங்க நாமதான்செய்யுறோம்தெரியுமில்ல
தாயின் இந்த பேச்சு மகன்கள் இருவருக்கும்பிடிக்கவில்லை
இங்க பாரு குமரா
சொல்லுங்க சித்தி
மலரின் குரல் டைனிங் டேபிளை அடைய அனைவரின் கவனமும் அவளிடம்.
வந்துட்டீங்களா ?
ஹோட்டலா இங்க இவ்ளோ பெரிய வீடு அதுவும்உங்களது இருக்கும் போதுநீங்க ஏன் வெளியில தங்கனும்
இளா வந்திருக்காளா என கேட்க
எதிர் தரப்பு பதிலை கேட்க காதை கூர்மையாக்கினான் தமிழ்குமரன்
அப்படியா
இது என்ன ரியாக்க்ஷன் என்றிருந்தது அவனுக்கு
சரி சித்தி ம் காலையில பாக்கலாம்.
டங் டங் என பாத்திரம் உருட்டும் ஓசை அடுப்படியில் கேட்க. எதற்கும் அசரவில்லைமலர்
நான் தான் அவங்களுக்கு சொல்ல கூடாதுன்னுசொன்னேனே பார்வதி கோபத்துடன்மகனிடம்பாய
ஏன் சொல்ல கூடாது அவங்க என்னோட கெஸ்ட்வளைகாப்பு எனக்கு தானநடக்குது. நான் எனக்கு வேண்டியவங்களையும் கூப்பிடுவேன்
உன் வளைகாப்புஉங்க அப்பாவீட்ல இருந்து ஒன்னும் நடத்தல நாங்க நடத்துறது. நாங்க சொல்றத தான் நீ கேட்கணும்
அப்ப நிறுத்திடுங்க எனக்கு இந்தவிசேஷம் வேண்டாம்.
ஆத்தா மலரு இப்டி அச்சாணியமா பேசாதம்மா அப்பத்தா கூறிக்கொண்டே உள்ளே வர
வயித்து புள்ளக்காரி கோபபடாதத்தா. குழந்தைக்குஆகாது, நீ போய் ரெஸ்ட்எடு
சரி அம்மாச்சி,
பார்வதியை பார்த்து முகத்தை திருப்பி விட்டு இருவரும் நகர
பர்வதி உள்ளுக்குள் பொருமினாள்.
அவ்வளவுசொல்லியும் வர்றீங்களா வாங்க வாங்க அதுவும் நல்லதுக்கு தான் நீஎன்ன எண்ணத்தோட வர்றேன்னு தெரியும் பூரணி நாளைக்கு அந்த எண்ணத்தையே மொத்தமா அழிச்சுடுறேன்…..
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்………. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்………….