அத்தனை முறை முயன்றும் சிக்னல் சரியாக கிடைக்காததினால் அவள் முகத்தில் சற்று பரபரப்பு.
ஊரில் பேசப்பட்ட விஷயம் நல்லவிதத்தில் முடிந்திருக்க வேண்டுமே என மனதின் தவிப்பு அவளின் கண்களில் பிரதிபலித்தது.
அப்போது அங்கிருந்து எழுந்தும் செல்ல முடியாமல் தனது கையிலிருந்த அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தவளை அருகிலிருந்த அவள் அன்னை மடியில் தட்டி அழைத்தார்.
“மதுரா, இவங்க யாருன்னு தெரியுதா?…” என கேட்ட மகேஷ்வரி,
“என் பொண்ணு மதுரயாழினி…” என அவர் அருகிருந்த இரு பெண்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“நல்லா தெரியுமே. ஆனா உன் பொண்ணுக்கு தான் என்னை தெரியலை மகேஷ்…” என்று சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் சிரிக்க மதுரா தாயை கோபமாக பார்த்தாள்.
மகளின் பார்வை வெளிப்படுத்திய கண்டனத்தை அவள் முகம் காட்டவில்லை. ஆனால் தாய் அறியாததா மகளின் பார்வையை.
“நைஸ் காம்பினேஷன். அட்ராக்ட்டிவ். உன் பொண்ணுக்கு ட்ரெஸ் செலெக்ஷன் நீயா மகேஷ்?…” என்று வேறு கேட்டு சிரித்தனர்.
“அதிலெல்லாம் என்னை இன்வால்வ் பண்ணவே மாட்டா. எல்லாம் மதுரா தான். அவ செலெக்ஷன் தான் அவளோட காஸ்ட்யூம் எல்லாம்….” என பெருமையாக தனது தோழிகளிடம் மகேஷ் கூறவும்,
“அதான் இன்னும் பெட்டரா இருக்கு. இல்லைன்னா…” என்று அந்த இருவரின் ஒருவர் மகேஷ்வரியிடம் சொல்லி முடிக்கும் முன்,
“இல்லைன்னா நீங்க வந்து சூஸ் பண்ணிருவீங்களா? அவ்வளோ வேலை இல்லாம இருக்கீங்க போல?…” மதுராவும் சூடாக சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டாள்.
மகளை அடக்க தன்னால் முடியுமா? அதுவும் இப்படியான பேச்சுக்களில். அவள் தந்தையின் பார்வைக்கு கட்டுப்படுவதே அத்திபூத்தார் போன்று தான்.
“வாட் இஸ் திஸ் மகேஷ்? நாங்க விளையாட்டுக்கு தான் சொன்னோம். உன் பொண்ணு சீரியஸா எடுத்துக்கிட்டாளோ?…” என அவர்கள் கேட்க,
“உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி. என்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸை அப்ரிஷியேட் பன்ற வரை தான் உங்களோட லிமிட். எங்கம்மாவோட செலேக்ஷனை நீங்க அன்டர்எஸ்டிமேட் பண்ணினா நானும் யோசிக்கனும் போல?…”
“என்ன யோசிக்கனும்? சின்ன பொண்ணு நீ…” என்றவரை கையமர்த்தி நிறுத்தியவள்,
“எங்கம்மாவுக்கு ப்ரெண்ட்ஸ் தானே நீங்க?…” என்ற கேள்வியில் அவள் கேட்க வருவது புரிந்துபோக,
“திஸ் இஸ் டூ மச் மகேஷ். எவ்வளோ வருஷம் கழிச்சு இந்த வெடிங்ல மீட் பண்ணியிருக்கோம். உன் பொண்ணு என்னன்னா இவ்வளோ…” என்று அடுத்து சொல்ல வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு,
“போகலாம்…” என்று எழுந்துகொண்டார். அவருடன் இருந்த இன்னொரு தோழி,
“சொல்றேன்னு தப்பா நினைக்காத மகேஷ். கொஞ்சம் உன் பொண்ணை கண்டிச்சு வை. இல்லைன்னா போற இடத்துல நீ தான் பேச்சு வாங்கனும்…” என்று மதுராவை பார்க்காமல் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
“ஊஃப்…” என மகேஷ்வரி பெருமூச்சுடன் புடவை தலைப்பை நீவி விட்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
“நான் தப்பா பேசலையே மம்மி?…” என தாயிடம் கேட்க,
“நத்திங்டா. அவங்களாம் பேசினா அது சரின்னு ஆகிடுமா?….”
“நாளைக்கு அந்த பொறுப்பு உன்னோடது மதுரா. நம்ம கம்பெனியை நீ தான் பார்த்துக்க போற…” மகேஷ் மகளுக்கு அழுத்தமாய் புரியவைக்க,
“உங்க வீட்டுக்காரர் என்கிட்ட கம்பெனியை இந்தான்னு தூக்கி குடுத்திருவார் பாருங்க…” அதற்கும் குத்தலாக தான் பதில் வந்தது மதுராவிடமிருந்து.
“எங்களுக்கு அப்பறம் அதோட மொத்த பொறுப்பும் உன்னோடது தானே மது?…” என்ற தாயின் சொல்லில் தீர்க்கமாய் பார்த்தாள் மதுரா.
“எப்படி உங்கப்பா அவர் வளர்த்த கம்பெனியை எங்கப்பாவுக்கு தாரைவார்த்து குடுத்து உங்களை வெறும் சைனிங் அத்தாரிட்டியா வச்சிருக்காங்களே? அப்படியாம்மா?…” என்றாள் சுள்ளென.
“மது…” மகேஷ் ஆயாசமாய் பார்க்க,
“இதுக்கு தான் நான் கம்பெனிக்கும் போக வேண்டாம்ன்னு நினைக்கறேன்…” என்றவள் மனதிற்குள் அகிலன் மின்னி மறைந்தான் புன்னகையுடன்.
மகளின் முக இறுக்கம் சட்டென ஒளி பெற மகேஷ்வரியின் முகத்திலுமே புன்னகை தான்.
“அகிலன் உங்கப்பா எழில்மணி மாதிரி இல்லையே….” என்று சொல்ல மதுராவின் முகத்தில் சிறு வெட்கம் இழையோடியது.
“ப்ச், ம்மா…” என்று அதட்டிய மகள் மேடையை பார்த்தாள்.
“இது தான் சொல்ல வரேன். நான் ஆபீஸ் வரலை தான். ஆனா எனக்கு தெரியாம எதுவும் அங்க நடக்காது. என்னதான் உங்கப்பா எங்க கல்யாணத்துக்கப்பறம் மொத்த பொறுப்பையும் தானே சுமந்தாலும் என்கிட்ட சொல்லாம எந்த முடிவும் எடுக்கமாட்டாங்க. மறைக்காம எதுவும் செய்யவும் மாட்டாங்க…” என்றார் அவர்.
“ஹ்ம்ம், ஆனா அவரை மாதிரியே அவர் மருமகனும் வீட்டோட கிடைக்கனும்னு எதிர்பார்க்கறது மட்டும் சரியாக்கும்?…” என முணுமுணுத்தாள் மேடையை பார்த்துக்கொண்டே.
“சரி விடு. அதுக்குன்னு அவரை மாதிரியே இருப்பாங்களா? அகிலை பத்தி தெரிஞ்சா உங்கப்பாவே சந்தோஷப்படுவார். நீ தான் எப்ப பேசலாம்ன்னு சொல்லனும்…”
“இன்னும் எவ்வளோ நேரம் ம்மா? அகிலும், அங்கிளும் ஊர்ல இல்லை, அப்பாவும் அவுட் ஆஃப் ஸ்டேஷன். டைமாகுது. உங்களை வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நான் ஆபீஸ் போகனும்…” என்றாள்.
“போகலாம். அப்பா இல்லைன்னதும் தான் நாம வரவேண்டியதா போச்சு. நான் மட்டும் தனியா வந்தா அதுவும் நல்லா இருக்காதுன்னு சொல்லி உன்னையும் அழைச்சிட்டு போக சொல்லிட்டார்…”
“சொந்தக்காரங்கன்னா ஓகே. இதுக்கு எவ்வளோ நேரம்?…” என்றாள் அந்த கூட்டத்தை அலுப்பாய் பார்த்துக்கொண்டு.
“சரி கொஞ்சம் பொறுமை…” என சொல்லிய மகேஷ்வரியை தேடி இன்னொருவர் வர மதுராவின் பார்வை வேடிக்கையில் ஆழ்ந்தது.
அவ்வப்போது மேடையையும் தொட்டு மீள தலையை அசைத்தபடி திரும்பியவள் புடவை எதிலோ பட்டு இழுத்தது.
திரும்பி பார்க்க புடவை தலைப்பில் ஒரு இருக்கையை போட்டு யாரோ அமர்ந்திருந்தனர்.
“எக்ஸ்க்யூஸ்மீ…” என்றவள் சத்தத்தில் அதில் இருந்த பெண் திரும்பி பார்த்துவிட்டு மதுராவின் பார்வையிலேயே இருக்கையை நகர்த்தினாள்.
“ஸாரி…” என்றும் கேட்க தலையசைத்து ஏற்றுக்கொண்டவள் புடவை தலைப்பை இழுத்துக்கொண்டு மேடையை பார்க்க அவள் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
மீண்டும் கையிலிருந்த மொபைலை சுவிட்ச்ஆஃப் செய்து உயிர்ப்பித்தபடி நிமிர அங்கிருந்தவனை மீண்டும் யோசனையுடன் கூர்ந்து கவனித்தாள்.
மணமேடையில் மணமக்களுக்கு வணக்கத்தை தெரிவித்தவனின் ஆஜானுபாகுவான தோற்றமும், செழிப்பான தோரணையும், உருண்டு திரண்ட புஜங்களை இறுக்கமாய் பிடித்திருந்த வெளிர் நிற சட்டையும் என்று அவனை எங்கோ பார்த்திருப்பதாகவே தோன்றியது.
வந்தவர்களிடம் பேசிவிட்டு மகளிடம் திரும்பிய மகேஷ் அவள் பார்வையை கண்டுவிட்டு,
“பாருங்களேன், எவ்வளோ உயரம்? ஆர்ம்ஸ ஒட்டி பிடிச்சாப்ல டைட் ஷர்ட். பெரிய மீசையை முறுக்கிவிட்டு இந்த இடத்துலயே தனியா தெரியறதை. சின்ன பிள்ளைங்க பார்த்தா ஒரு நிமிஷம் பயந்துருவாங்க…” என்றாள் சிரித்தபடியே.
“மதுரா…” மகேஷ் அதட்ட,
“இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம். ஆனா பார்க்கவே செம்ம கெத்தா தெரியறார் பாருங்க. ஆளுமையான ஆளா தெரியறார். போலீஸா இருப்பார் போல?…” என வரிசையாக சொல்ல அதற்குள் அவன் கீழே இறங்கியிருந்தான் மேடையை விட்டு.
கையிலிருந்த அலைபேசியும் உயிர்த்திருக்க மீண்டும் சிக்னல் கிடைத்தது இப்போது. உடனே அகிலுக்கு அழைக்க அவனின் பெயரை எடுக்கும் முன்,
“சொக்கநாதபாண்டியன்…” என்றார் மகேஷ்வரி.
“யார்ம்மா?…” மதுரா கேட்க,
“நீ இப்போ சொன்னியே போலீஸா இருக்குமோன்னு. அவர் தான். அவர் பேர் தான் அது…” என்றார் அவர்.
“பார்ரா, உங்களுக்கு தெரியுதே?…” மதுரா சிரிக்க,
“உனக்கும் தெரியும். உன் பாட்டி ஊர் தான். அதான் பார்த்தமாதிரி இருந்திருக்கு…” என்றதும் தான் சட்டென ஞாபகமும் வந்தது.
“ஹ்ம்ம், ஆமா ம்மா. பார்த்திருக்கேன். ஊருக்கு போய் ஒன்றரை வருஷமாச்சே. அதான் டக்குன்னு தோணலை. பெருசா கவனிச்சு பார்த்ததும் இல்லையா…” என்று சொல்ல,
“உன்கிட்ட இன்னொன்னும் சொல்லனும்…” என்ற மகேஷ்வரி,
“இந்த பையனுக்கு உன்னை கேட்டாங்க மது…” என்றார்.
“ம்மா…” திகைப்புடன் மதுரா பார்க்க,
“ஹ்ம்ம், கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாசமிருக்கும். உங்கப்பா தான் ஒத்துக்கலை. அந்த பிள்ளை படிப்பில்லை, ஊர்ல பெரியாளா இருந்தா போதுமா? படிப்பு முக்கியம். முக்கியமா மருமகன் சிட்டில இருக்கனும். பொண்ணுக்கு பொருத்தமா இருக்கனும்னு சொல்லிட்டார்…”
“ஓஹ், இவ்வளோ நடந்துச்சா?…” மதுரா கதை போல கேட்க,
“இன்னும் நடந்துச்சு. உன் பாட்டிக்கு உன்னை அங்க குடுக்கனும்னு ரொம்ப பிரியம். உங்கப்பாட்ட மல்லுக்கு நின்னாங்க. உங்கப்பாவும் நிறைய பேசிட்டார், நாகரீகம் பெருசா தெரியாது. பொண்ணுக்கு மாப்பிள்ளை தான் பார்க்கறேன். பெரிய அடியாள் மாதிரி இருக்கு அவர் தோரணை, இப்படின்னு…”
“அது தப்பு தானேம்மா. நமக்கு இஷ்டம் இல்லைனா வேண்டாம்ன்னு சொல்லனும். மத்தவங்க அப்பியரன்ஸ பாஸிட்டிவா கூட சொல்லலாம். நெக்கட்டிவா இதென்ன பேச்சு? இதுல மட்டும் உங்க வீட்டுக்காரருக்கு நாகரீகம் இருக்காமா?…” என மதுரா கேட்கவும்,
“இந்த வருஷம் எங்களோட வெட்டிங் டேக்கு உன் பாட்டி ஏன் வரலைன்னு இப்ப புரியுதா? அவங்க கோவமா இருக்காங்க….” என்று கேட்க பெரிதாய் எந்தவித பாவனையும் இல்லை மதுராவின் முகத்தில்.
“ஓகே, லீவ் இட். அவ்வளோ தான். அடுத்து ஊருக்கு போறப்போ சாமதானம் செஞ்சுக்கலாம்…” என்று சொல்லியவள் கையிலிருந்த மொபைல் சிணுங்கவும் உடனே அட்டன் செய்தாள்.
“அகில்…” என்ற அழைப்பில் ஒட்டுமொத்த காதலையும் கொட்டினாள்.