“உங்க லாயரா? சொந்தக்காரன், அதுவும் கிராமத்தான். பேச்சு கூட தெளிவில்லாம இருக்கு. என்ன மணி உனக்கு புத்தி கித்தி பிசகிருச்சா?…” என நாராயணன் நக்கலாய் கேட்க,
“இப்ப யாருக்கு பிசகுதுன்னு பார்த்துடுவோமா நார் நார் ப்ச், பேர் வாய்ல நுழையல பாரேன்? என்ன பேர் உங்களோடது?…” என ஜகா கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தார் நாராயணன்.
எழில்மணியின் நெஞ்சமெல்லாம் குளிர்ந்து போனது ஜகாவின் இந்த பேச்சிலும், நாராயணனின் அதிர்விலும்.
“டேய் என்ன கிண்டலா?…” என ஜகாவிடம் நாராயணன் எகிற,
“யோவ் அடங்கறியா? நான் பேசற மரியாதையில நீயும் பேசினா ஒனக்கு மரியாதை. இந்த தெளிவு பேச்சு போதுமா? இல்ல உன்னை, உன் பேரை போல இன்னும் நார் நாரா கிழிக்கவா? லேடீஸ் இருக்காங்கன்னு பார்க்கிறேன். இல்லைன்னா வண்ணங்கள் வாரி இறைக்கப்படும்…” என்றான் ஜகா.
“என்ன பேச்சு இது?…” என்றவருக்கு அவனின் பேச்சும் தோரணையும், விட்டால் கழுத்தை பிடித்து இறுக்கிவிடுவான் போலிருந்த கத்திமுனையை ஒத்திருந்த பார்வையிலும் சற்று தணிந்தார்.
“மணி நாம பேசிப்போம், எதுவா இருந்தாலும் நமக்குள்ள இருக்கட்டும். மூணாவது மனுஷன் எதுக்கு இந்த விஷயத்துல?…” என எழில்மணியிடம் கேட்க,
“யோவ், இங்க பேசும்ய்யா. நீ என்ன ஒங்கூட பொறந்தவனத்தேன் ஒன்னோட லாயரா வெப்பியோ? அதுக்குன்னே பெத்துப்பீங்களாடா?…” என கேட்ட ஜகா,
“அச்சோ உனக்கு தான் தெளிவா பேசனுமே. நான் பேசினது புரிஞ்சதா? இல்லை டீட்டெய்ல்டா சொல்லவா?…” என்றான்.
நாராயணனின் நாவண்ணம் மேலே ஒட்டிக்கொண்டது ஜகாவின் பேச்சில். எச்சிலை விழுங்கியபடி அவனை பார்த்தவர் கண்கள் அகன்றது.
இப்படி ஒருவனை உள்ளே இறக்குவார்கள் என நினைத்தும் பார்க்கவில்லையே. அதுவும் அவன் பேச்சு கிலியை உண்டாக்க மணியை பார்த்தார் அவர்.
“எக்ஸ்க்யூஸ்மீ. இனி இது சம்பந்தமா நான் தான் பேசுவேன்…” என்ற ஜகா,
“தென் மிஸ்டர் நார், நீங்க எதை கேட்கறதா இருந்தா என்கிட்ட கேட்கனும்…” என்று சொடுக்கிட்டு சொல்ல மதுராவின் பார்வையில் அத்தனை சந்தோஷம்.
“இதெல்லாம் நான் ஒத்துக்க முடியாது. நான் என்ன கோர்ட்டுக்கோ, இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கோ பிரச்சனையை கொண்டு போனேனா? எதுக்கு மணி நீ இப்படி பன்ற?…” என ஜகாவிடம் பேச முடியாமல் மணியிடம் முறையிட,
“லீகலாவா? இப்ப என்ன நடந்துச்சு? அதுவும் லீகலா?…” என இன்னுமே அதிர்ந்தார் நாராயணன்.
நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒரே குடும்பம் அது இதுவென்று எத்தனை ஏமாற்றி இருப்பார் நாராயணன்.
எழில்மணியும் சில நேரங்களில் விட்டுக்கொடுத்திருக்க இப்போது லீகல் என்றால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் தானே என தொண்டையில் முள் சிக்கியதை போல உணர்ந்தார்.
“லீகலா தான். ஏன் உங்களுக்கு எதுக்கு இவ்வளோ டென்ஷன்? பிராப்பரா உங்களுக்கு சேர வேண்டியது உங்களை வந்து சேரும். எடுத்தது, வச்சது போக மிச்சமீதியை பார்த்து செட்டில் பண்ணுவோம். நீங்க கிளம்புங்க…” என்றான் ஜகா.
“இங்க பாரும்மா மகேஷ், பொம்பளைப்பிள்ளை, அதுவும் ஒத்தை பிள்ளையை வச்சிருக்க. கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சு அவளை பாழாக்க போறியா? உள்ளதை சத்தமில்லாம எடுத்து செட்டில் பண்ணிட்டு மிச்சத்தை வச்சு பொண்ணை கட்டிக்குடுப்பியா. பேரை கெடுத்துக்காத…” என நாராயணன் வியாக்கியானம் பேச,
சாப்பிட்டு முடிக்கையில் நாராயணன் வந்திருப்பதாக மதுரா சொல்ல அதே நேரம் பாண்டியனும் ஜகாவிற்கு அழைத்திருக்க,
“நா லையன்லையே இருக்கேன். நீ பேசு. அந்தாள் என்ன பேசுதியான்னு கேப்போம்…” என பாண்டியன் கூறவும் ஜகா தன் காதில் சிறிய பட்டன் ப்ளூட்டூத்தை மாட்டிக்கொண்டான்.
இவ்வளவு நேரம் நடந்த அத்தனை பேச்சு வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு நாராயணன் மேல் கொலைவெறியே கிளம்பியது.
“முனியாண்டிய கூப்புடு உள்ள…” என பாண்டியன் தம்பியிடம் சொல்லவும் மகேஷ்வரி நாராயணனுக்கு பதில் சொல்லும் முன்,
“உங்க வேலையை நீங்க பாருங்க. எனக்கு எப்ப கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு நீங்க கவலை படவேண்டாம். உங்க பையனுக்கு கல்யாணம், ரொம்ப கஷ்டப்பட்டு அவரை சம்மதிக்க வச்சிருக்கீங்க…” என மதுரா எள்ளலுடன் சொல்லும் பொழுதே நாராயணன் முகம் கறுத்தது.
“அதனால அதை சரியா செய்ய பாருங்க. இந்நேரம் நீங்க எவ்வளோ பிஸியா இருக்கனும்? இங்க வந்து ஏன் டைம் வேஸ்ட் பன்றீங்க? கிளம்புங்க…” என்றாள் மதுரா.
“இதெல்லாம் நல்லதுக்கே இல்லை. ஏன் எங்களுக்கு லாயர் தெரியாதா? நானும் பார்த்துக்கறேன். பழகினவங்களேன்னு கொஞ்சம் இறங்கி பாவம் பார்த்தா…” என்று நாராயணன் சொல்ல,
“ஜகா ரெண்டுவருஷம் இந்த கேஸ இழுத்தடிக்கனும். பணத்தை இப்ப குடுக்கவே கூடாது. முடியுமா?…” என்று சொல்லிவிட்டாள் மதுரா பட்டென்று.
“ஏய் ஏய்…” என நாராயணன் அதிர்ந்து பார்த்தார்.
“ஷ்ஷ்…” என்ற மதுரா,
“நீங்க சொல்லுங்க ஜகா…” என்றதும்,
“எல்லாமே லாஸ், எதை வச்சு குடுக்கன்னு இழுக்கற அளவுக்கு இழுத்தடிப்போமே. என்ன கெட்டு போச்சு? அதான் அவரும் லாயரை வச்சு பார்க்கறேன்னு சொல்றாரே?…” என்றான் ஜகாவும்.
“எம்மா மகேஷ், என்ன மணி சின்ன பிள்ளைங்களை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது தெரியாதா?…”
“இப்ப முழுசா வீடு போய் நீங்க சேரமாட்டீங்க போல?…” என்ற ஜகா,
“முனியாண்டி…” என்று சத்தமாய் அழைத்ததும் கடா மீசையுடன் உள்ளே வந்தான் முனியாண்டி.
“என்னங்க தம்பி?…” என்று வந்து பவ்யமாய் கேட்க அதிலுமே பயந்து போனார் நாராயணன்.
மணிக்கு இதில் இன்னுமே சந்தோஷம். முதல்நாள் தான் பயந்ததெல்லாம் போய் இப்போது முனியாண்டியை நன்றாக பார்த்தார்.
“இந்தாள் சலம்பல்…” என சொல்லி முடிக்கவில்லை ஜகா, தன் நெஞ்சை நிமிர்த்திவிட்டான் முனியாண்டி.
என்ன பேச முடியும்? இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் தவறில்லை என்றால் கூட இவர்களில் இந்த அச்சுறுத்தலில் பயந்திருப்பார் தான்.
ஆனால் தன்னிடமுமே பெருந்தவறு இருக்க, கூடுதலாக இவர்களின் இந்த புது உறவில் ஆடி போயிருந்தார்.
மதுராவிற்கு கணவன் என்று ஒருவன் வந்துவிட்டால் தங்களுக்கு அந்த நிறுவனத்திலும் பெரிதாய் தேறாது.
மதுராவே கெடுபிடி. இதில் அவள் கணவனும் அப்படி இருந்துவிட்டால் லாபம் என்று என்ன இருக்கும் என நினைத்திருந்தார்.
மணியை போல மதுராவை அவள் கணவனும் முடிவெடுப்பதில் தலையிடாமல் பார்த்துக்கொள்வான் என நினைக்க முடியாதே.
வருபவன் அவளுக்கு மேலிருந்தால் தங்களுக்கும் சிக்கல். பிரச்சனையும் அவர்களின் தலையை துளைக்க இதுதான் நேரம் என்று முடிந்தவரை லாபம் என கழன்றுகொள்ள பார்த்தார்.
கணிசமாக வருமானம் வருவதாக இருந்தாலும் பெரிதாய் முன்பை போல மணியை ஏமாற்றி பணத்தை பெற முடியாது என்று தான் மொத்தமாய் பிரித்து எடுத்துக்கொள்ள பார்க்க இப்போது அதற்கும் முட்டுக்கட்டை.
இதில் மணி வேறு மொத்தமாக மனைவி, மகள் பொறுப்பில் விட்டுவிட இப்படி ஒருவன் புதிதாய் குதிப்பான் என நினைக்கவில்லையே.
உள்ளுக்குள் கொதித்தபடி எழுந்துகொண்டவர் மீண்டும் மணியை திரும்பி பார்த்தார்.
“எங்களுக்கும் இந்த கல்யாண செலவுன்னு ரொம்ப கடனாகிருச்சு மணி. பார்த்து அந்த ஒருமாசம் முடியவும் குடுக்க பாரு. ஆமா…” என வேறு யாரையும் பார்க்காமல் சொல்லிவிட்டு நகர முனியாண்டி இன்னும் முறைத்துகொண்டு நின்றான்.
நாராயணன் நகர்ந்ததும் தான் எழில்மணி பெருமூச்சு விட்டார். மகேஷ்வரி தன் கையிலிருந்த பத்திரிக்கையை பார்த்தார்.
“வசுவுக்கு நமக்கு நேர்ல வந்து இன்வைட் பன்ற அளவுக்கு நேரமில்லையாம்…” என கசப்புடன் சிரிக்க,
“விடுங்கம்மா. இன்விடேஷன் பாருங்க. செம்ம கிரான்ட்…” என அதனை பிரித்து பார்க்க மகேஷ்வரி மனது தள்ளாடியது.