“என்னை தான் கூப்பிடறார் சம்பந்தி…” என வசுந்தராவிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கி அவர்களிடம் வந்தார் நாராயணன்.
“தம்பி உங்ககிட்ட என்னவோ முக்கியமா பேசனுமாம். பேசிட்டு வாங்க. நான் மேல இருக்கேன்…” என சொல்லியவர்,
“தம்பி கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும்…” என்றார் பாண்டியனிடம்.
“வெரதமுங்க. இன்னொருவாட்டி வாரேன்…” என்று சொல்லியவன்,
“வாங்க…” என்றான் நாராயணனிடம்.
“நீங்க புதுசா தொழில் தொடங்க போறீங்கன்னு சொல்லிட்டிருந்தேன். அதான் தம்பி பேசனும்ன்னு சொன்னார். அது விஷயமா தான் இருக்கும். பேசிட்டு வாங்க. நல்ல வாய்ப்பை விடாதீங்க…” என்று சொல்லி அந்த சம்பந்தி கிளம்ப,
பல்லை உடைப்பேன் என்பதை கேள்விப்பட்டிருக்கிறார். கடைந்தால் என்ன என்றால்? இவன் சொல்லியதும் பின்னே நகர போனவர் அவன் பார்வையில் நின்றுவிட்டார்.
பாண்டியன் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. சத்தம் கூட்டி பேசவில்லை. ஆனால் வார்த்தைகளில் வீரியமும், கண்கள் காட்டிய ரௌத்திரமும் ஆடிப்போகத்தான் செய்தது.
“வயசான கெழமாச்சே கம்மின்னு போவ பாக்குதேன். மீறி சலம்பல கூட்டின அம்புட்டுத்தேன்…” என்றான் ஒற்றை விரலை நீட்டி.
“என்ன சொல்றீங்க தம்பி? நான் யாருக்கு என்ன பிரச்சனை பண்ணேன்?…” என தவிப்புடன் கேட்டார்.
மதுரா, மகேஷ்வரியுடன் வரும் பொழுதே ஓரளவு யூகம் தான். அதிலும் பாண்டியனின் பார்வை உணர்த்தியிருக்க, இப்போது தெளிவாய் விளங்கியது அவன் யாருக்கு பேசுகிறான் என்று.
“இத்தனைபேர் எங்கருந்துடா வரீங்க? எனக்கு முன்னமே தெரியாம போச்சே?’ என உள்ளுக்குள் புழுங்கியவர் முகத்தில் காட்ட முடியவில்லை.
“இங்க பாருங்க தம்பி. நியாயமா எனக்கு சேரவேண்டிய பணத்தை தான் நான் கேட்டேன்….” என்று சொல்லவும் இடுப்போடு இழுத்து கையை வளைக்க வலியில் உயிர் போனது நாராயணனுக்கு.
“நாளப்பின்ன பேரப்பிள்ளைய கொஞ்ச கையிருக்காது பாத்துக்கிடு. எனக்கு மூஞ்சிக்கி நேர என்னிய எதுத்து நிக்கிதவன கூட ஒப்புக்கும். பசப்பி பேசின பல்லிருக்காது. விசேச வீட்டுல அசிங்கப்படாம இருக்கனுமின்னா…”
“சரிங்க தம்பி, கைய விடுங்க. கைய விடுங்க…” என்று அலறினார் நாராயணன்.
“இன்னும் நல்லா கத்தத்தான. ஒவீட்டம்மா வந்து பாக்கட்டும். உள்ளருக்கறவக எல்லா வரட்டும். கூப்புடுய்யா…” என்றான் பாண்டியன் கையை பிசைந்துகொண்டே.
“தெரியாம பேசிட்டேன். விட்டுடுங்க தம்பி….”
“இனிமேங்காட்டி மருவாதியா பேசுவியா?…”
“பேசறேன். பேசறேன்…”
“எங்க பேசுவ?…”
“எங்க? எங்க பேச? அவங்க பணத்தை குடுத்துட்டா பேசக்கூட மாட்டேன் தம்பி…”
‘இதுவே குறைந்த கோபமா? அப்போ அன்றிருந்திருந்தால்?’ நாராயணன் தப்பிக்க முடியாமல் பார்த்தார் அவனை.
முதுகோடு அந்த கையும் வலி எடுத்தது. அசைத்தாலே வலி உயிரை துளைக்க கண்ணீர் வரும் போலிருந்தது.
தனது மணிக்கட்டை திருகியபடி பார்த்த பாண்டியனின் முறுக்கிய மீசை கூட அவரை அச்சமூட்ட நின்றால் எங்கே மீண்டும் பிடித்து கையை உடைத்துவிடுவானோ என பயந்து நகர்ந்தார்.
“இந்தா நில்லு…” என நிறுத்திய பாண்டியனை மிரண்டு போய் திரும்பி பார்க்க,