அதுவரை இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட அவளின் அருகாமை அவனை வசீகரித்தது.
“கெளம்பறப்ப சொல்லாம போமாட்டேன்…” அவனும் பதில் மொழிய,
“ஆனா தேட மட்டும் வைப்பீங்க…” என்றாள் மதுரா.
“தேடுனீங்களா?…” என்ற கேள்வியின் பொருளை மதுரா உணரும் முன் அவன் முகபாவனைகள் மாறிவிட,
“என்ன இது? உங்களை விட வயசுல சின்ன பொண்ணு தானே நான். ரொம்ப மரியாதை எல்லாம் குடுக்கறீங்க? முன்னாடியே சொல்லனும்னு நினைச்சேன்…”
“மருவாதி குடுக்கறது நல்லதுங்க. கேட்டா கூட செல நேரம் நெசத்துல கெடைக்காது. கெடைக்கறப்ப ஏன்னு கேக்கறீங்களே?…” என்றவன் புன்னகை இன்று மதுராவை கொஞ்சம் கொஞ்சமாய் அசைத்துக்கொண்டிருந்தது.
அவன் பேச்சுக்களை பின்னர்த்தம் இருக்குமோ என்ற எண்ணம் துளியளவு வேரூன்ற அது மறுநொடியில் பெருமளவு விருட்சமானது.
ஆழ்ந்த பார்வை, கவனமாய் அதனை மறைத்து வேறு திக்கில் பயணிக்கும் அவன் பாவனை என அவனிடம் மதுராவை புதிதாய் பார்க்க செய்தது.
அதன் கனம் சட்டென அவளை பதம் பார்க்க இதென்னடா என்றானது அவளுக்கே.
“ஓகே, உங்க விருப்பம் போல கூப்பிடுங்க. உள்ள அத்தை பொண்ணுன்னு சொல்லிட்டு இப்படி என்கிட்ட பேசறப்ப தள்ளி நிறுத்தற மாதிரி இருக்கேன்னு தான் கேட்டேன். யூர் விஷ்…” என்றாள் தோளை குலுக்கி.
“அப்படி சொல்லுங்கம்மா. கொஞ்சம் முன்னாடி மரியாதைக்கு இல்ல இல்ல மருவாதிக்கு ஒரு விளக்கம் குடுத்தார் பார்க்கனும். வேற லெவல்…” என்றாள் மதுரா கண்கள் சிரிக்க.
“மது சும்மா இரு. கிண்டல் பண்ணிட்டு…” என்று அதட்டியவர்,
“நீங்க இன்னும் சாப்பிட கூட இல்லை. நாங்களும் சாப்பிடலை. வாங்களேன் வெளில வேணா லஞ்ச முடிச்சிட்டு கிளம்பலாம். வீட்டுக்கு வர நீங்க விரும்பலைன்னு புரியுது. அதான்…” என்றதும்,
“அதெல்லாம் வேணாங்க. இப்ப கெளம்பினாத்தேன் ரவைக்கு ஊரு போயி சேர முடியும்…” என்று சொல்ல,