“அங்க எல்லாம் பேசி முடிச்சு முடிவு பண்ணின பின்னாடி சொல்றது நல்லதில்லை….”
“அங்கயே சொன்னா மட்டும் கேட்டிருப்பீங்களா?…” என்ற எழில்மணி,
“இங்க பார் மகேஷ், நம்ம சரவுண்டிங் எல்லாம் ரிச் பீப்பிள்ஸ். பிஸ்னஸ் பன்றவங்க. அவங்களை அங்க போய் நிப்பாட்ட முடியுமா? அதுவும் அங்க இருக்கற மண்டபம் எல்லாம் சின்ன சின்னதா?…” என முகம் சுளித்தார் எழில்மணி.
“இது இன்னும் மோசம். இதென்ன ஊர் கோவில் திருவிழாவா? பந்தல் போட்டு கறிவிருந்து போட? கல்யாணம். அதுவும் என் ஒரே பொண்ணு கல்யாணம். அங்க அவங்க சொல்றபடி நடந்தா இங்க இருக்கற ஒருத்தரும் என்னை மதிக்க மாட்டாங்க. அதுக்கப்பறம் எப்படி இங்க நான் தலைநிமிர்ந்து இருப்பேன்?…”
“இதுவே நாம சிட்டில மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் கல்யாணம் உங்க நேட்டிவ்ல, அந்த கிராமத்துல தான் நடத்தியிருக்கனும். அதுதான் முறை. இந்த சென்னை ஒன்னும் உங்க சொந்த ஊர் கிடையாது. புரிஞ்சு பேசுங்க…” என மகேஷ்வரி எடுத்து சொல்ல,
“இந்த வீட்டையும் சேர்த்தே சொல்லேன். என் வீடு இல்லைன்னு…” எழில்மணிக்கு ஆத்திரமான ஆத்திரம்.
“இவ்வளோ பேசறவர் எப்படி அன்னைக்கு அமைதியா இருந்தீங்க. அவங்க செஞ்ச சீரை பார்த்து வாயடைச்சு போனீங்க?…”
“ஆமா செஞ்சு தானே ஆகனும். என் பொண்ணு படிச்ச, அழகா பொண்ணு. நாகரீகம் தெரிஞ்ச பொண்ணு. அவங்களுக்கு எட்டாத பொண்ணாச்சே. கொட்டி குடுத்து கல்யாணம் செஞ்சு தான் ஆகனும்…” என்றார் எள்ளலுடன்.
“உங்க புத்தி இப்படித்தானே போகும். அதுதான் தெரியுமே…” என சொல்லிக்கொண்டிருக்க மதுரா வந்துவிட்டாள் கையில் பத்திரிக்கையுடன்.
“ம்மா இன்விடேஷன் ப்ரூப் ப்ரிண்ட்ஸ் வந்திருக்கு. என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு இன்வைட் பண்ண நான் ஒரு டிஸைன் சூஸ் பண்ணிட்டேன்…” என்று மதுரா சொல்ல,
“இன்விடேஷன்ல கல்யாணம் நடக்கற இடம் கூகுள் மேப்போட பிரிண்ட் பண்ண சொல்லியிருக்கேன். ஜகா அனுப்பிட்டாங்க. அதோட அலங்காநல்லூர் ரீச்சானதும் மண்டபத்துக்கு கூட்டிட்டு வர அங்கயே வீகிள்ஸ் நிப்பாட்டி வச்சிருக்க ஏற்பாடு செஞ்சிருக்காங்களாம்….” என்றாள்.
எழில்மணி முகமெல்லாம் பிடித்தமின்மை. இன்னும் முப்பது நாள் இருக்க அதற்குள் இதனை பேசி முடித்துவிட பார்க்க பத்திரிக்கையே அடித்தாகிற்று என்றால்?
பல்லை கடித்துக்கொண்டு மகளையும், மனைவியையும் பார்த்தார் அவர். அவரின் அருகே வந்த மதுரா,
“இதுல உங்க சர்க்கிள் ப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க எந்த டிஸைன் இன்விடேஷன் வேணும்னு செலெக்ட் பண்ணுங்கப்பா…” என்று நீட்டினாள்.
“மது அப்பா சொல்றதை கேளு…”
“உங்க ஆசையை நான் தப்புன்னு சொல்லவே மாட்டேன். ஆனா தான் நினைக்கிறது மட்டும் தான் சரின்னு பிடிவாதம் பன்றது ரொம்ப தப்பு ப்பா. அதை செய்யாதீங்க…”
“என்ன பேசற மது? நான் நம்ம சொஸைட்டில நம்மோட மதிப்பையும் காப்பாத்தனும்னு சொல்றேன்…”
எழில்மணி சொல்ல மகேஷ்வரி இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று பத்திரிக்கைகளை பார்க்க ஆரம்பித்தார்.
“எதுப்பா சொஸைட்டி? நம்மோட கஷ்டத்துல எட்டி நின்னவங்களுக்காக நீங்க என் கல்யாணத்தை இங்க நடத்த நினைப்பீங்களா? ஏன் உங்க ஹை சொஸைட்டி ப்ரெண்ட்ஸ் தான் ஒருதடவை அந்த அழகான கிராமம் எப்படி இருக்குன்னு வந்து பார்க்கட்டுமே?…” என்றாள்.
“மது…”
“நான் சொல்ற மாதிரி யோசிங்களேன். கிராமத்து மனுஷங்கள, அங்க உள்ள வழக்கங்களை நம்மளை வச்சாவது உங்க சொஸைட்டி ப்ரெண்ட்ஸ் தெரிஞ்சுக்கட்டும்….” என்றவள்,
“உங்களை மாதிரி வில்லேஜ்ல பிறந்தாலும் எத்தனை பேர் மொத்தமா அதை தலைமுழுகிட்டு பார்ன் இன் சிட்டின்னு சுத்தறாங்களோ? அவங்களுக்கெல்லாம் நீங்க ஒரு எக்ஸாம்பிள் பர்சனாலிட்டியா இருங்களேன்…” என முடித்தாள்.
“வெல்டன் மது. ஓகே, லீவ் த டாப்பிக். இவ்வளோ ப்ரஷர் வேண்டாம். கொஞ்சமாச்சும் இந்த கல்யாணம் அமைதியா, சந்தோஷமா நடக்கனும்னு நினைக்கறேன்…” என மகளிடம் சொல்லிய மகேஷ்வரி,
“இங்க பாருங்க, பைனலா ஒன்னு சொல்றேன். நம்ம பொண்ணோட சந்தோஷத்தை தாண்டி தான் நமக்கு மத்தது. எனக்கு அதுதான் பர்ஸ்ட் ப்ரையாரிட்டி. உங்களுக்கு என்னன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க…” என்றுவிட்டார்.
இந்த முறையும் எழில்மணி பின்வாங்கவேண்டியதாக போக மனதிற்குள் அத்தனை குமுறல்.
திருமணத்திற்கு அழைப்பு வைக்காமல் இருக்க முடியாது. பத்திரிகை அத்தனை பிரமாண்டமாக அடிக்க நினைத்திருந்தவர் எளிமையாக எடுத்தார்.
“ஏன், இன்னும் க்ராண்டாவே எடுக்கலாமே?…” மகேஷ்வரி கேட்க,
“போதும், போதும். கிராமத்துல நடக்கறதுக்கு காஸ்ட்லியா அடிச்சு என்ன செய்ய? சிரிக்க போறாங்க இதுக்கா இவ்வளோ கிரான்ட் இன்விடேஷன்னு. அதுமட்டும் ஹைடெக்கா இருந்தா போதுமா?…” என ஒவ்வொன்றிலும் தன்னுடைய விருப்பமின்மையை காண்பித்துக்கொண்டிருந்தார்.
“ம்மா ஏன் நீங்க பீல் பன்றீங்க? அவரை மாத்த முடியாது. விடுங்க….” என மதுரா தாயை தேற்றினாள்.
ஒருவழியாய் பத்திரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தாகிற்று. வீடு திருமண களை கொண்டிருக்க வேலையில் எந்தவித பின்னடைவும் இல்லை.
ஜகாவிடம் சொல்லி எழில்மணிக்கு உதவியாய் நம்பிக்கையான ஆளாக பார்த்து மதுரா தங்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டாள்.
அந்த மாதம் பாண்டியனுக்கு அனுப்பவேண்டிய வட்டி தொகையையும் மகேஷ்வரி, எழில்மணியிடம் சொல்லிவிட்டு அனுப்பியாகிற்று.
“அடுத்த மாசம் சேர்த்து அனுப்பலாம்ன்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு உனக்கு இன்னும் நகை எல்லாம் எடுத்துட்டு…” என எழில்மணி சொல்ல,
“அது மட்டும் வேண்டாம் ப்பா. இருக்கற நகை போதும். இதெல்லாம் முடிஞ்சா எனக்கு தானே செய்ய போறீங்க? ஆனா ஒரு மாசம் தவறினாலும் அது சரியில்லை ப்பா…” என்றாள் மகள்.
வட்டி பணத்தை அனுப்பிவிட்டு பாண்டியனுக்கும் அழைத்து மதுரா தகவலை சொல்ல,
“பார்த்துட்டேன் ப்பா…” என்று மட்டும் கூறினான்.
வேண்டாம் என்று சொன்னாலும் அவள் கேட்கபோவதில்லை. இந்த சில சொற்ப நாட்களுக்குள்ளேயே இருவருக்குள்ளும் புரிதல் இன்னுமே வலுத்திருந்தது.
அதில் தான் மறுத்தால் அதுவுமே மதுராவை சங்கடம் கொள்ள வைக்கும் என்று அவள் சொல்லியதை ஆமோதித்துக்கொண்டான்.
முகூர்த்த கால் ஊன்ற இருக்கும் இரு நாட்களுக்கு முன்னரே மகேஷ்வரி, மதுரா தயாராகிவிட கிளம்பும் நேரம் முறுக்கிக்கொண்டு நின்றார்.
“நாளைக்கு நீங்க ரெண்டுபேரும் முன்னாடி போங்க, வந்திடறேன்…” என ஒரு பேச்சுக்கு தான் கூறினார்.