“அது சரி. எல்லாரும் போய் காபி குடிங்க. மண்டபம் போய் தான் ப்ரேக்பாஸ்ட். அவங்களாம் அழைக்க வந்துட்டாங்கன்னா நேரம் போறதே தெரியாது…” என அந்த பெண்களை எல்லாம் அனுப்பியவர் மகள் நீட்டியதில் ஒன்றை காண்பித்து.
“இந்த நெக்லெஸ் போட்டுக்கோ. ஆனா இயரிங் மட்டும் இதை போடு…” என வேறு வேறை இணைத்து எடுத்து காண்பித்துவிட்டு செல்ல மதுராவின் முகத்தில் திருப்தி.
அலங்காரம் செய்ய வந்த பெண் அதனை எடுத்து காதில் பொறுத்த மதுராவின் போனில் அகிலனின் அழைப்பு.
“நீங்க பேசுங்க மேம்…” என அப்பெண் சொல்ல,
“நீங்க பண்ணுங்க. ப்ராப்ளம் இல்லை…” என்று சொல்லி அழைப்பை ஏற்றாள் மதுரா.
மணக்கோலத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் அழகோவியமாய் அமர்ந்திருந்தவளை பார்த்ததுமே பேச்சற்று போனான் அகிலன்.
தன்னருகே தன் மனைவி என உணர்வுள்ள ஒரு பெண் இருக்கிறாள் என்பதே மறந்துபோனது.
மதுரா மதுரா என அவளின் இழப்பு இந்த நிமிடம் கூட பெரிதாய் அவனை பாதிக்க பேச முடியாமல் தொண்டையை செருமிக்கொண்டன்.
“ஹாய் அகிலன், கால் பண்ணிட்டு சைலன்ட்டாகிட்டீங்க?…” என இலகுவாய் மதுரா கேட்க அது இன்னுமே வலி தான் அவனுக்கு.
“ஹாய் மது…” என்றவன்,
“கங்க்ராட்ஸ் மது….” என வாழ்த்தினான்.
“தேங்க்ஸ்….” என்று மட்டும் அவள் சொல்ல,
“ஹலோ மதுரா. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்க திருமணத்திற்கு…” என அழகிய தமிழில் அந்த பெண் சொல்ல,
“தேங்க் யூ சௌந்தர்யா…” என்றாள் மதுராவும் இன்முகத்துடன்.
அகிலனின் மனைவி வாழ்த்து சொல்லிவிட்டு அகிலனை பார்க்க அதற்குள் மகேஷ்வரி வந்துவிட்டார்.
“மது அவங்க பக்கத்து தெருவுக்கு வந்துட்டாங்க…” என்று சொல்லும் பொழுதே அகிலனை பார்த்தார்.
“ஓகே அகிலன். இன்னொரு நாள் பேசலாம். பை சௌந்தர்யா. எங்க வெட்டிங் **** சேனல்ல டெலிகாஸ்ட்டாகும். டைமிருந்தா பாருங்க. லிங்க் என்னோட இன்ஸ்டா ஸ்டோரில இருக்கும். பை..”என்று சொல்லி வைத்துவிட்டாள்.
அலங்காரம் செய்து முடித்த பெண்ணையும் அனுப்பிவிட்டு கதவை சாற்றிய மகேஷ்வரி,
“ஆனா இது தப்பு. அந்த பொண்ணும் பாவமா பார்க்குது. என்ன வாழறாங்க? கல்யாணம் செஞ்சு வச்சிட்டீங்கல்ல, என் வொய்பை நான் பார்த்துக்கறேன்னு சொல்லி அங்க ஒரு வேலையை தேடிட்டு கூட்டிட்டு போனா போதுமா? முழு மனசா அந்த பொண்ணுக்கு லாயலா இருக்க வேண்டாமா? ரிடிகுலஸ்…”
மதுராவின் முகத்தில் அகிலனின் பாவனைகள் எல்லாம் அதிருப்தியை தந்திருந்தது.
“இதுவே அவங்க அந்த பொண்ணோட சந்தோஷமா இருந்திருந்தா மதிப்பா தான் தெரிஞ்சிருக்கும். இப்ப ச்சேன்னு இருக்கு…” என்று சொல்ல சட்டென அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.
“ம்ஹூம். இன்னைக்கு நீ முதல்ல அவங்க வீட்டுல இருந்து வர சர்க்கரை பொங்கலை தான் சாப்பிடனும். அதுக்கப்பறம் பூஜையில இருக்கற பால்…”
“ஓஹ்…” என்றவள் தன் நெற்றி சுட்டியை சரி பார்த்துக்கொண்டாள்.
“எல்லாம் ஓகே தானே? ம்மா…” என மகேஷ்வரியிடம் கேட்க,
“அழகா இருக்குடாம்மா…” என்றவர்,
“சரி முதல்ல சாமியை கும்பிட்டு வந்து உட்கார்…” என்றார்.
வெளியே வந்த மதுரா பூஜை மாடத்தில் சென்று நின்றாள். சுவற்றை ஒட்டிய அலமாரி போன்ற அமைப்பில் இருந்த பூஜை மாடம் அது.
கை கூப்பி நின்றிருக்க உள்ளே வந்த எழில்மணிக்கு கண்கள் பனித்து போனது மகளை மணக்கோலத்தில் பார்த்தது.
சாமியை கும்பிட்டு கண்ணை திறக்க எழில்மணி தன் கண்களை தேய்த்துக்கொண்டார்.
“ப்பா…” என்று புன்னகைக்க அவளின் கன்னம் தட்டியவர் மனது நெகிழ்ந்திருந்தது.
இரு நாட்களாக நல்ல விதத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறார். பெரிதாக பாண்டியனிடம் பேசவில்லை என்றாலும் மனது ஓரளவு ஏற்றுக்கொண்டது இந்த திருமணத்தை.
அதிலும் மகளின் சந்தோஷம் என்னும் பொழுது புரிந்துகொண்டாலும் சட்டென மாற்றம் அவரிடம் இல்லை.
அவரால் முடியவில்லை. முடிந்தளவு இன்முகமாகவே தான் இருந்தார். எல்லாவற்றிலும் திருப்தியும் கூட.
இப்போது இந்த நிமிஷம் இனி தன் பெண் தங்களுடன் உடன் இருக்க போவதில்லை என்ற நினைப்பே ஒருவித வேதனையை தந்தது.
“மதும்மா, ம்மா…” என சொல்லியவருக்கு வேறு பேச முடியவில்லை.
“ப்ச், என்ன இது? இப்ப போய் கண் கலங்கிட்டு?…” மகேஷ்வரி கேட்க,
“மகேஷ் இனி நாம இங்கருந்து போறப்ப நம்ம மட்டும் தானே போவோம்? மது இங்க தான இருப்பா?…” என்று சின்ன பிள்ளை போல சொல்லியவர் அனைவரின் முன்பென்றும் நினையாமல் விசும்பிவிட,
“அட இவனே, புள்ளைய அதுக்குன்னு கெட்டிக்குடுக்காமையா வெச்சிருப்ப?…” என்று நாயகி அவரின் தோளில் ஒரு அடி போட்டுவிட மகேஷ்வரியும் அதை நினைத்து முறுவலித்து நின்றார்.
இப்படி ஒரு நிகழ்வு எல்லாம் தனக்கு நடக்கவில்லை. தன் பெற்றோரை பிரியவில்லை.
ஆனால் மகள் என்று வருகையில் இந்த நிதர்சனம் அவருக்கு அழுத்தத்தை தர தான் செய்தது.
“இந்தா முதல்ல உம்மகளுக்கு இதை பூசி விடு. வாசல்ல கொட்டுச்சத்தம் கேக்குது. போயி எல்லாரையும் வாங்கன்னு கூப்புடு. இந்தாடா சிரிச்ச மொகமா ரெண்டு கையையும் கூப்பி கூப்புடனும். அது தான் மருவாதி. சந்தோசமா போ…” என்றார் அவர்.
“சரி என்னவோ சொல்றீங்க. அப்பறம் அந்த வில்லேஜ்க்கு என்னால வர முடியாது. முடிஞ்சா இவரை மட்டும் அனுப்பறேன். இல்லைன்னா இங்க வந்தாங்கன்னா எனக்கு போன்ல சொல்லுங்க. வந்து பார்க்கறேன்…” என்று மிதப்பாய் சொல்ல,
“வில்லேஜ்ன்னா என்னம்மா நினைக்கிற? ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் எங்க ஊர். அலங்காநல்லூர்ன்னு சொன்னா தெரியாத மனுஷங்களே கிடையாது. பார்த்து பேசும்மா…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதுவேறு கோபத்தை தந்திருக்க அந்த கோபம், சென்ற இடமெல்லாம் மட்டமாக பேசிய கோபம் என்று அவரை ஒரு நிலையில் இருக்கவிடாமல் இருந்தது.
இப்போது அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல, தன்னால் இத்தனை பெரிதாய் செய்திருக்க முடியுமா என நினைக்கும் அளவில் விசேஷம் நடந்துகொண்டிருக்க நெஞ்சை முட்டியது பூரிப்பு.
மருமகனை பற்றி இன்னும் பெரிதாய் தான் தெரிந்து வைத்திருக்கவில்லையோ என அவ்வப்போது தோன்றிக்கொண்டே வேறு இருந்தது.
இதோ வந்தவர்கள் மதுராவிற்கு சர்க்கரை பொங்கலை வைத்து துர்காவின் கையால் தர சொல்லி உண்ண வைத்து பூஜை பாலை எடுத்து தந்தனர்.
குடித்துவிட்டு அவளை ஜமுக்காளத்தில் அமர வைக்க வந்தவர்களுக்கு டீயும், இனிப்பும், காரமும் வழங்கப்பட்டது. கூடவே சர்க்கரை பொங்கலும்.
பூஜையில் வைத்திருந்த பூக்களை துண்டு துண்டாய் நறுக்கி ஒவ்வொருவருக்கும் சந்தானம் குங்குமத்துடன் தாம்பாளத்தில் வைத்து தர பெண்கள் எடுத்துக்கொண்டனர்.
வெளியில் இருந்த ஆண்கள் சந்தானம் தொட்டு நெற்றியில் இட்டதோடு கையிலும் பூசிக்கொண்டனர்.
சிறிது நேரம் இருந்துவிட்டு அனைவரும் கிளம்ப ஆயத்தமாக மதுரா எழுந்துகொண்டாள்.
“இங்க வெடிங் டிபரென்ட்டா இருக்கே மது…” என அவளின் தோழி அந்த நிகழ்வுகளை படம் பிடித்துக்கொண்டே சொல்ல,
“நானே இப்ப தான் அட்டன் பன்றேன். அதுவும் என்னோட வெட்டிங்கே…” என சிரித்தாள் மதுரா.