அவள் விழி மூடியிருந்த பொழுதில் முகத்தில் தன் இதழ்களை பட்டுவிடாமல் நகர்த்தியத்தை போல காண்பிக்க இதற்கு கொடுத்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது மதுராவிற்கு.
“இப்பவும் நீ அதையே தான் சொல்லிவியாப்பா?…” என கேட்க ‘ஆமாம்’ என தலையசைத்தாள்.
“பொறவு ஏன் நடுங்குதியாம்?…”
“கொஞ்சம் குளிருது…”
“கிட்ட நில்லுப்பா. குளிராது…” என்றவன் இரு கைகளும் அவளை இன்னும் வளைக்க விலக முடியாமல் பேரவஸ்தை அவளை சுருட்டியது.
“ஏன்? நான் எங்க பதட்டப்பட்டேன்? அதெல்லாம் இல்லையே? இதோ உங்களை நேரா தானே பார்க்கறேன்?…” என்று சொல்ல,
“எனக்கு தெரியுதே? பார்வை, பேச்சு மட்டும் போதுமா? இது சொல்லுது….” என சொல்லியவன் பெருவிரல்கள் ஏறி இறங்கும் அவளின் தொண்டைக்குழியை தொட்டு அழுத்தமாய் வருட விழி விரித்தாள்.
“சமாளிக்கிதத்தா. ஆனா கண்ணாடியா இது காட்டுதே. அன்னிக்கு நீயி தண்ணிய குடிச்சப்பவும் இப்படி த்தான்…” என சொல்ல மதுராவின் பேச்சுக்களும் தடைபட்டது.
அதற்கு மேல் பேச்சை நிறுத்தியவன் அவளின் தொண்டைக்குழியில் அழுத்தமாய் மீசைகள் உராய மதுரா உறைய இதழ் பதிக்க கால்களை ஊன்றி தன்னை சமன் செய்தாள் மதுரா.
மெல்ல முகம் உயர்ந்து அவளின் நெற்றி காயத்தில் ஒரு அச்சாரத்தை பதிக்க மூடிய விழிகள் மலர்ந்தது.
அவள் கூந்தல் இருளில் முகம் புதைத்தவன் தன் விரல் இறுக்கத்தில் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை அவளுள் கடத்தினான்.
களைத்த கணங்கள் மீண்டும் சேமிப்பாய் ஆயுட்காலங்களில் அடுத்து என காத்திருக்க சென்று சேர்ந்தது.
மெல்ல அயர்ந்து விழிகளை இறுக்கமாய் மூடி திறந்து இலகு நிலை அடைய நிறைவில் தலையணையை சுவற்றி சாய்த்து சாய்ந்து அமர்ந்திருந்தவன் கைகள் மடியில் தலை சாய்ந்திருந்தவள் சிகையை வருடியது.
“ஒறக்கம் வரலையாக்கும்?…” என்றதற்கு திரும்பி அவன் முகம் பார்த்தவளுக்கு அத்தனை நிறைவு.
“இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா தூங்க தோணலை…” என்று எழுந்தவள் அவனின் தோளில் தலை சாய்ந்துகொண்டாள்.
“உங்களை பர்ஸ்ட் டைம் பார்த்ததை யோசிச்சு பார்த்தேன். முதல்ல எவ்வளோ சாஃப்ட்டா அடி பட்டிருச்சான்னு கேட்டுட்டு திரும்ப நான் பேசறப்போ பதிலே சொல்லாம ஜீப்பை கிளப்பிட்டு போனீங்க?…” என கேட்க,
“ஆமா அது எதுக்காம் இப்ப?…”
“அந்த மிஸ்டர் ஜென்டில் மேன் பார்க்கற வேலையா இது? பாருங்க என்னை என்னலாம் பண்ணிருக்கீங்கன்னு?…” என்று காண்பிக்க சிரிப்பு பொங்கியது சொக்கநாதபாண்டியனுக்கு.
அந்த கையை பிடித்து இலேசாய் வருடியவன் தொடுகை மாற ஆரம்பிக்க மதுரா முறைத்து பார்த்தாள்.
“எங்கப்பா பார்த்தா இதுக்கா உனக்கு பொண்ணை கட்டி குடுத்தேன்னு கேட்பார்…” என்றவள்,
“ஏன் பதில் கூட சொல்லாம போனீங்க?…” என கேட்க,
“நின்னு பேசிருந்தா ஒன்னிய அப்பவே கட்டிக்கனுமின்னு தூக்கிருப்பேன். அது தோணிக்கிட்டே இருந்துச்சு. அதேம் விட்டு தூரமா ஓடுனேம். ஆனா எங்க?…” என பெருமூச்சு விட,
“இப்ப ரொம்ப கவலை போல?…” என்று அவனின் மீசையை பிடித்து வலிக்க இழுத்தாள்.
“கையால இழுக்காதப்பா வலிக்குமில்ல…” என விஷமமாக சொல்லி,