“பேசாம அமேசான்ல நல்ல நேரம் பார்த்து ஆடர் போட்டுடுவோமா?…” என கிண்டலாக கேட்கவும் கண்ணில் கண்ணீருடன் வாய்விட்டு சிரித்துவிட்டார் காந்திமதி.
பேசவே முடியாமல் உணர்ச்சி பெருக்கெடுப்பில் பெரிய மனுஷிக்கு தொண்டை எல்லாம் அடைத்தது.
அந்த நிமிடம் மதுராவின் அதட்டலையும், கண்டிப்பையும் கண்டு அவள் தனக்கே தாயான தருணமாக அதனை உணர்ந்தார் காந்திமதி.
“இந்த குடும்பத்துக்கு எப்பவும் நீங்க ரெண்டுபேரும் தான் முன்னாடி. உங்க பேரன் என்னன்னா எங்க வீட்டோட ரெண்டு மீனாட்சிங்க என்னோட அம்மாவும், பாட்டியும்னு பெருமையா சொல்றாங்க. நிஜம் தானே?…” என்றவள், இருவரையும் கை பிடித்து சாமி அறைக்கு அழைத்து வந்தாள்.
“நேத்து அனுப்பும் போது மட்டும் தெரியலை. இந்த சடங்கு எல்லாம். இப்ப தெரியுதோ?…” என்ற கேள்வியில் வடிவின் பார்வை சோமுவை தன்னை போல தொட்டு மீள பாண்டியன் கண்டுகொண்டான் அதனை.
இரவு என்னவோ பேசியிருக்கிறார்கள் என்று புரிந்துபோக அமைதியாகிவிட்டான் அந்த சூழ்நிலையில் எதுவும் பேச வேண்டாம் என.
சோமு சொல்ல வடிவு திடுக்கிட்டு பார்த்தபடி நிற்க காந்திமதியும் கேட்டுவிட்டார் இதனை.
வேறொரு நேரமாக இருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். சோமு அங்குமிங்கும் முடிச்சிட்டு பேச சந்தோஷத்தில் திளைத்திருந்த அந்த பெண்மணிகள் நெஞ்சம் தீயிலிட்ட புழுவாய் துடித்து போனது.
“யாத்தே…” என நெஞ்சை பிடித்தபடி காந்திமதி உடைந்து நிற்க, அந்த சத்தத்தில் திரும்பி வடிவு,
“எத்தே, எத்தே இங்காருங்க…” என சொல்லி அழைக்க,
“நா சொன்னேமின்னு வெசனப்படாதீக. எம்மனசுல சுருக்குன்னுச்சு. அதேம் சொல்லிபோட்டேன். நாளைக்கு சந்தோசமா அந்த புள்ள வாரப்ப மொகத்த காட்டாம இருங்க. நெறஞ்ச பொம்பளைங்க நாங்க இருக்கோமில்ல. பாத்துக்கிடுதோம்…” என்று சொல்லிசென்றார்.
தேற்றுவார் இன்றி தனியே புலம்பிக்கொண்டிருந்த இருவரும் தங்களை தாங்களே தேற்றி,
“செரி, போயி ஒறங்கு. வேற ஆராச்சும் கேட்டு ஒம்மவேன்ட்ட சொல்லிட்டா அம்புட்டுத்தேம். நாம ஒதுங்கி இருப்போம்த்தா. செத்த நேரந்தான?…” என மருமகளை அனுப்பியவருக்கு கிஞ்சித்தும் உறக்கமில்லை.
விடிந்ததும் பரமேசிடம் எல்லாம் சொல்லி வடிவும், காந்திமதியும் உள்ளேயே இருந்துகொள்ள மதுரா வந்துவிடுவாள் என்று தெரியவில்லை.
“இங்க பாருங்க த்தை. நான் இங்க இவரை மட்டும் பிடிச்சு வரலை. உங்க எல்லாரையும் பிடிச்சு தான் வந்திருக்கேன். நீங்க எனக்கு பார்க்காம வேற யார் பார்ப்பாங்களாம்?…” என்று சத்தமாக மதுரா சொல்ல அத்தனைபேரும் வேடிக்கை பார்த்தனர்.
சோமுவுக்கு பொடுபொடுவென்று வந்தது அவர்களின் இந்த புரிதல் கலந்த அந்நியோன்னியத்தில்.
“சாப்பிட எதாச்சும் தாங்களேன். இவ்வளோ நேரம் பேசினதுல பசியே வந்திருச்சு…” மதுரா சிரித்துக்கொண்டே இடத்தை இலகுவாக்க,
“மதினிக்கு ஒரு ஆபாயில்…” என்று ஒரு கையை உயர்த்தியபடி ஜகா செல்ல,
“பரமேசு வா…” என வடிவு அழைக்கவும்,
“எனக்கு நீங்க தாங்க. இல்லைன்னா வேண்டாம்…” என்ற மதுரா பாண்டியனை பார்த்து கண் சிமிட்ட சொல்லொண்ணா மகிழ்ச்சியில் அத்தனை நிறைந்திருந்தது அவன் மனது.
வடிவுக்கு பெருமையும், சந்தோசமும் போட்டி போட்டாலும் உள்ளுக்குள் ஒரு அச்சம் வேறு.
அதனை அவரால் களைய முடியவில்லை. மருமகள் கேட்டதை போல வெந்தையக்கஞ்சியை மிதமான சூட்டில் எடுத்து வர,
“என்ன இது?…” என்றாள் மதுரா விழி விரித்து.
“இம்புட்டு நேரம் பேசினேலத்தா. அதுக்குத்தேம். குடி, மண்ட சூடு கொறையும்…” என கேலிக்கார பெண் அவளை கிண்டல் பேச,
“இதுவும் அதுக்கு தானா?…” என்று பாண்டியன் பக்கம் லேசாய் சாந்துகொண்டு மதுரா கேட்க,
“ஹ்ம்ம் ப்பா…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அதுவும் மதுராவின் முகம் போன போக்கில் இன்னுமே பெரிதாய் புன்னகை வெடிக்கவிருக்க,
“பேசிக்கிட்டிரு. ஒரு சோலி இருக்கு. இப்ப வாரேம்…” என்று வெளியே சென்றுவிட்டான்.
“சின்னம்மா வரும். பேசிக்கிடுவோம்…” என்ற தோரணையே அழகருக்கு தவறு நடந்திருப்பதை காட்டியது.
சோமுவும் நடுக்கத்துடன் அங்கே வந்து சேர்ந்தார். அழகர் முறைப்புடனும், கேள்வியாகவும் பார்த்துக்கொண்டிருக்க,
“எங்காத்தாட்ட என்ன சொன்னீய?…” என அடக்கப்பட்ட கோபத்துடன் பாண்டிய கேட்க,
“இல்லைய்யா, எல்லாரும் பேசிக்கிட்டாக. அதத்தேம்…”
“ஆராரு பேசுனாகன்னு கேக்கல. நீங்க என்ன சொன்னீய? அத்த மட்டும் சொல்லுங்க…” என்றவன் சோமு சொல்லவும் தனக்குள் உண்டான கோபத்தை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது பாண்டியனுக்கு.
“அடி கூறுகெட்ட கூவ…” என்று அடிக்க பாய்ந்துவிட்டார் அழகர்.
காந்திமதி வம்பிழுக்க, மதுரா பதில் கொடுக்க, துர்கா மதுராவிற்கு சப்போர்ட்டாக எடுத்து கொடுக்க என்று அவ்விடம் சந்தோஷமும் சிரிப்பும், கும்மாளமுமாக நிறைந்திருந்தது.